Pesu Thendrale!
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Aayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vizhigal Urangidumo…? Rating: 0 out of 5 stars0 ratingsThanga Kappal Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsKangal Seitha Mayam Enna Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thee! Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Suduginrathe! Rating: 0 out of 5 stars0 ratingsThalaattu Maari Ponatho? Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsMaranthu Poguma Kaadhal Mugam? Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pesu Thendrale!
Related ebooks
Nanban Endroru Puththagam Rating: 0 out of 5 stars0 ratingsVaaththiyaaramma Rating: 0 out of 5 stars0 ratingsVakkiniley Inimai Vendum Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கேயோ உன் முகம்... Rating: 0 out of 5 stars0 ratingsEngeyo Un Mugam Rating: 0 out of 5 stars0 ratingsNeethane En Vasantham...! Rating: 4 out of 5 stars4/5Ammavin Meesai Rating: 0 out of 5 stars0 ratingsThavari Podum Thalam Rating: 0 out of 5 stars0 ratingsKaiyil Oru Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Arputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsVithaiyin Pirathipalan Rating: 0 out of 5 stars0 ratingsOru Thalai Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னை நானறிவேன்… Rating: 0 out of 5 stars0 ratingsThulasithalam Rating: 5 out of 5 stars5/5En Thoorigaiyin Vannangal Rating: 0 out of 5 stars0 ratingsMallikavin Veedu Rating: 5 out of 5 stars5/5Marakkumo Kaadhal Nenjam…! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Mithantha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsVaalgal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsஇதயம் ஒன்றாகிப் போனதே... Rating: 0 out of 5 stars0 ratingsPaarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsபார்வைகள் புதிதா? Rating: 0 out of 5 stars0 ratingsஎன் மனம்... உன் வசமே..! Rating: 0 out of 5 stars0 ratingsGnanathin Vaayil Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pesu Thendrale!
0 ratings0 reviews
Book preview
Pesu Thendrale! - Maheshwaran
http://www.pustaka.co.in
பேசு தென்றலே!
Pesu Thendrale!
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
என்னைப் பற்றி...
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம். உங்களின் அன்பான ஆதரவினால் இதோ... 'பேசு... தென்றலே...' மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இதயத்தை நெகிழச் செய்யும் கதை இது.
குடும்பத்தலைவன் சரியில்லை என்றால் அந்த குடும்பமே சிதைந்து சிதறிப் போய்விடும்… என்பதை தான் இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.
வேதனைகளையும், சோதனைகளையும், அவமானங்களையும் கண்டு பயந்துவிடாமல், அவைகளையெல்லாம் புன்னகையோடு ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடும் 'சந்தியா'தான் இக்கதையின் நாயகி. மலர்களில் அபூர்வமான மலர் குறிஞ்சி. பெண்களில் அபூர்வமான பெண் சந்தியா. சுயநலமிக்க ஆனந்தன்... உழைத்து முன்னேறும் ரமணன்... இந்த இருவராலும் நேசிக்கப்பட்ட சந்தியா, கடைசியில் என்னவாகிறாள் என்பதை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
நாயகி சந்தியாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நாவலை வாசித்தபிறகும். வெகுகாலம் வரை உங்கள் இதயத்திற்குள்ளேயே இருக்கப் போகிறாள் இந்த சந்தியா.
குறிப்பிட்ட சில அத்தியாயங்களை எழுதுகிற போது எனது கண்கள் கலங்கியது: இதயம் விம்மியது. அதை நீங்களும் உணருங்கள். அவசியம் விமர்சனங்களை எழுதுங்கள்.
நன்றி! மீண்டும் சந்திப்போம்.
மகேஷ்வரன்.
1
நீ நினைக்காவிட்டால் என்ன?
நான் தான்...
நிதமும் உன்னையே
நினைத்துக் கொண்டிருக்கிறேனே!
நீ எனது பெயரை
உச்சரிக்காவிட்டால் என்ன?
நான் தான்
நிதமும் உன் பெயரையே
உச்சரித்துக் கொண்டிருக்கிறேனே!
நீ என்னை எண்ணி
ஏங்காவிட்டால் என்ன?
நான்தான்
நிதமும் உனக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேனே!
மகிழம்பூ மரங்கள் இரண்டு மதில் சுவரையொட்டி நுழைவாயிலுக்குள் இருபுறமும் அழகாய் குட்டையாய் அடர்த்தியாய் கமகமக்கும் வாசனையோடு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்க ஆங்காங்கே வேப்பமரங்களும், புங்கை மரங்களும் குளிர்ச்சியாய் நிழலைப் பரப்பியபடி செழித்து வளர்ந்திருந்தன.
மத்தியான சாப்பாடு முடிந்ததும் மாணவ மாணவியர்கள் சாப்பிட்டு விட்டு கீழே கொட்டப் போகிற மிச்சமீதி சோற்றுப் பருக்கைகளைக் கொத்தி தின்பதற்காக காகங்கள் கூட்டம் கட்டமாக மரக்கிளைகளில் பசியோடு காத்திருந்தன.
வெய்யிலின் உக்கிரம் தெரியாத அளவுக்கு குளுகுளுவென்ற சூழலில் மரங்களுக்கு மத்தியில் அமைந்திருந்தது அந்த உயர்நிலைப்பள்ளி கட்டிடம். எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் அங்கே படித்துக் கொண்டிருந்தார்கள். தலைமையாசிரியர் உட்பட மொத்தம் பதினேழு பேர் அங்கே பணிபுரிந்தார்கள். ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் தரமான கல்விக்கும் பெயர் போன பள்ளிகூடம் அது.
அங்கே தான் தமிழாசிரியை ஆக பணிபுரிந்து கொண்டிருந்தாள் சந்தியா. நான்காவது பாடவேளை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பில் பகுபத உறுப்பிலக்கணம் நடத்திக் கொண்டிருந்தாள் சந்தியா.
இனிமையாக பேசுவதிலும், தோழமை உணர்வோடு பழகுவதிலும் சந்தியா கெட்டிக்காரி. இலக்கணத்தை கடினமாக எண்ணி கசப்பாக நினைக்கின்ற மாணவர்கள் கூட சந்தியா நடத்தும் போது கற்கண்டாக பாவித்து ருசிப்பார்கள், ரசிப்பார்கள்.
எத்தகைய கடினப்பகுதியையும் எளிமைப்படுத்தி போதித்து விடுவாள். வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களையே உதாரணமாக காட்டி பாடப்பகுதிகளை அவள் கற்பிக்கும் விதமே தனிதான்.
அங்கே கல்வி கற்கிற அத்தனை மாணவ மாணவியருக்கும் சந்தியா வைத்தான் ரொம்ப பிடிக்கும். மாணவிகளுக்கு சந்தியா என்றால் உயிர். ஓய்வு நேரத்தில் சந்தியாவைச் சுற்றி மாணவிகளின் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கும்.
படிப்பில் நாட்டமில்லாமல் குறும்புத்தனம் பண்ணியபடி திரிகிற, யாருக்கும் அடங்காத மாணவர்களைக் கூட, கோபமில்லாத, அன்பான அறிவுரைகளால் திருத்தி விடுகிற சக்தி சந்தியாவுக்கு மட்டுமே உண்டு.
அந்தப் பள்ளிக்கூடத்தில் தனி நிலவாக பிரகாசித்துக் கொண்டிருந்தாள் சந்தியா.
அன்பாக பழகுவதும், பணிவாக நடந்து கொள்வதும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பை அளிப்பதும் சந்தியாவின் பிறவிக்குணம். அந்த நல்ல குணம், சக ஆசிரியர், ஆசிரியைகளிடம் நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தது. வயதில் மூத்த ஆசிரியைகள் கூட சந்தியா மீது மரியாதை வைத்திருந்தார்கள்.
சந்தியா வகுப்பறைக்குள் நுழைந்து விட்டால் சலசலப்பே இருக்காது. எல்லோரும் அவளையேதான் ஆர்வமாக கவனிப்பார்கள். அவள் சொல்லப் போகிற புதுபுது விஷயங்களைக் கேட்க அவர்களது காதுகள் தயாராக இருக்கும். செய்யுள் பகுதியை நடத்தும் போது வரிகளின் பொருளை மட்டும் சொல்லி வகுப்பு முடித்து விடாமல் செய்யுளை இயற்றியவர்களின் வரலாற்றையும் சுவைபட ஒப்பிப்பாள். இதற்காகவே நூலகத்தில் மணிக்கணக்கில் பழைய நூல்களைப் புரட்டி செய்திகளைத் திரட்டுவாள்.
தேடிதேடி திரட்டிய செய்திகளை அழகிய பூமாலையாகத் தொடுத்து மாணவ-மாணவியர்களிடம் சமர்ப்பித்து விடுவாள். அந்தப் பள்ளியில் சந்தியா வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது. இந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தமிழ் பாடத்தில் நூறு சதவீத தேர்ச்சி கிடைத்து வருகிறது. எல்லோருமே எண்பதுக்கும் மேல்தான் மதிப்பெண்களை எடுக்கிறார்கள். இதுதான் சந்தியாவின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
காலை பாட வேளைகள் நிறைவு பெற்றது.
கடகடவென்று மணி அடிக்கப்பட்டது.
டீச்சர் நாங்க சாப்பிட போகலாமா?
மாணவர்கள் கோரஸாய்க் கேட்டார்கள். பகுபத உறுப்பிலக்கணத்தை நடத்தி முடித்து வீட்டுப்பாடத்தை கரும்பலகையில் எழுதிப்போட்டுக் கொண்டிருந்த சந்தியா புன்முறுவலுடன் திரும்பினாள்.
வீட்டுப்பாடத்தை எழுதிக்கிட்டீங்கன்னா போகலாம்
சரி டீச்சர்
மாணவர்கள் அவசர அவசரமாய் வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டு வகுப்பறையைக் காலி செய்தார்கள். மதிய உணவு சாப்பிடுகிற மாணவிகள் சாப்பாட்டு தட்டை கையிலெடுத்துக் கொண்டு உணவு பரிமாறப்படும் இடத்தை நோக்கி ஓடினார்கள்.
ஆசிரியர், ஆசிரியைகளுக்கென ஓய்வெடுக்க தனியறை இருந்தது. மத்தியான சாப்பாட்டை எல்லோரும் அங்கே அமர்ந்துதான் சாப்பிடுவார்கள். அவரவர் கொண்டு வருகிற சாப்பாட்டை ஒருவருக்கொருவர் பகிர்ந்து சாப்பிடுவது தனி சுகம்.
அன்றைக்கு சந்தியா.... சங்கட சதுர்த்தி விரதம். எதுவும் சாப்பிட மாட்டாள்.
இரவு விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வானத்தில் நிலவு கிளம்பும் வரை காத்திருந்து நிலவை தரிசித்து விட்டுதான், சாப்பிடுவாள்.
சாப்பிட மாட்டோம்
என்பதால் ஓய்வறைக்கு போகாமல் வகுப்பறையிலேயே அமர்ந்து விட்டாள்.
வீட்டு சாப்பாடு கொண்டு வந்த மாணவியர்கள் டிபன்பாக்லை திறந்து சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.
மாணவி ஒருத்தி மெல்ல கூப்பிட்டாள்.
என்ன வெண்ணிலா
நீங்க சாப்பிடலையா டீச்சர்?
கரிசனமாய்க் கேட்டாள் வெண்ணிலா என்ற பெயர் கொண்ட மாணவி.
இல்ல...
ஏன் டீச்சர்? உங்கம்மா நேரத்துக்கு சமைச்சு தரலியா?
என்றாள் இன்னொரு மாணவி.
அதெல்லாம் இல்ல. நா... இன்னைக்கு சங்கட சதுர்த்தி விரதம். எதுவும் சாப்பிட மாட்டேன். அதான் சாப்பாடு கொண்டு வாலை
.
சந்தியா கையிலிருந்த 'ஆண்டாள் வாலாறு' புத்தகத்தில் கவனத்தை செலுத்த முயன்றாள். மாணவிகள் விடாமல் துளைத்தெடுத்தனர்.
டீச்சர் விரதமெல்லாம் எதுக்கு இருக்குறீங்க...
விரதம் இருக்கிறது. மனசுக்கும், உடம்புக்கும் நல்லது. அதனால தான் இருக்கறேன். மனசை ஒரு நிலைப்படுத்தி கடவுளை நெனைச்சுகிட்டே இருக்கறதால, மனசு சுத்தமாகுது. வயிறைக் காயப்போடறதால வயிறும் சுத்தமாகுது. இதைத்தவிர சங்கடசதுர்த்தி அன்னைக்கு விரதமிருந்தா நம்மளோட சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து போகும்ங்கற... நம்பிக்கையும் ஒரு காரணம்
.
சந்தியா கணீரென்று பதிலுரைக்க, மாணவிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
டீச்சர்
என்ன வேணி?
உங்ககிட்டே ஒண்ணு கேக்கலாமா...?
தயக்கமாய் பார்த்தாள்