Marakkumo Kaadhal Nenjam…!
By Maheshwaran
()
About this ebook
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்
Read more from Maheshwaran
Kuyil Thoppu Marmam Rating: 5 out of 5 stars5/5Linga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Kodi Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsVaruvean Naan Rating: 5 out of 5 stars5/5Karuppu Kuthirai Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Kili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5Mayanginean Solla Thayanginean Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kobam Varum! Rating: 0 out of 5 stars0 ratingsThappithu Vidu... Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsUn Manasula Naan Irukkena? Rating: 0 out of 5 stars0 ratingsThik Thik Thilothi Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nagam Rating: 0 out of 5 stars0 ratingsIravum Pagalum Un Uruvam Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Naanuranga Rating: 0 out of 5 stars0 ratingsMullil Vizhuntha Pattampoochi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyavillai...! - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsElla Muthangalum Enakke! Rating: 0 out of 5 stars0 ratingsMayanguthu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsPovom Ini Kaadhal Desam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Poovai Maarivida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Poi Pesuma? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Vizhuntha Thirumana Maalai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsMudhalai Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marakkumo Kaadhal Nenjam…!
Related ebooks
Yengi Thavikkum Idhayam Saatchi! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nenjin Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Pirikka Mudiyuma? Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikku Nandhini Rating: 0 out of 5 stars0 ratingsதீர்க்க சுமங்கலி Rating: 0 out of 5 stars0 ratingsTheerkka Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ்சிறு கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsChinnajchiru Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Malargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Kanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Aayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsThoongum Maanaviyai Sight Adippathu Thappa? Rating: 0 out of 5 stars0 ratingsUravum Pirivum Rating: 0 out of 5 stars0 ratingsVaa! Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vandhaal… Rating: 5 out of 5 stars5/5Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Nadu Nisi Neram Rating: 0 out of 5 stars0 ratingsThoorangal Nagarkindrana Rating: 5 out of 5 stars5/5காதலால் தவிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsKaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5Kanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsVaalgal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsThaalattum Megangal Rating: 0 out of 5 stars0 ratingsThol Serum Poomaalai Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Vaa... Nillathey Vaa... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Marakkumo Kaadhal Nenjam…!
0 ratings0 reviews
Book preview
Marakkumo Kaadhal Nenjam…! - Maheshwaran
http://www.pustaka.co.in
மறக்குமோ காதல் நெஞ்சம்...!
Marakkumo Kaadhal Nenjam…!
Author:
மகேஷ்வரன்
Maheshwaran
For more books
http://www.pustaka.co.in/home/author/maheshwaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
பூங்கனியின் கையை உருவிக்கொண்டு ஓடினான் உதய்.
பூங்கனியால் கத்தமுடியவில்லை. தொண்டை வறண்டுப்போயிருந்தது. எரிச்சலும் கோபமுமாய் உதய்யின் பின்னாலேயே ஓடி அவனைப் பிடித்தாள்.
என்னை விடும்மா... நான் வரமாட்டேன்
கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிய உதடுகளைப் பிதுக்கி அடம் பண்ணினான் உதய்.
உதை வாங்கப்போறே..
அடிப்பதற்காக கையை ஓங்கினாள்.
ஓங்கிய கை பாதியிலேயே நின்றது. ஏனோ அடிப்பதற்கு மனம் வரவில்லை. உதய்க்கு ஐந்து வயதாகிறது. அவனை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு கூட்டிப்போய்க் கொண்டிருந்தாள்.
அரசாங்கப் பள்ளிகளிலேயே சகல வசதிகளும் இருக்கிறது. தரமானக் கல்வியைத் தான் போதிக்கிறார்கள். தமிழ்வழியில் அரசாங்கப் பள்ளிகளில் படித்து இன்றைக்கு எல்லாதுறைகளிலும் உயர்ந்த பதவிகளில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
வசதிப்படைத்தவர்களுக்கு ஏனோ அதெல்லாம் புரிவதில்லை.
பணத்தை மூட்டையாக கட்டிக்கொண்டு தனியார் பள்ளிகளை நோக்கி ஓடுகிறார்கள். அவர்களுக்கு இணையாக வாழத்துடிக்கும் நடுத்தரவர்க்கம் மூச்சு திணறுகிறது.
பூங்கனியின் வீடு இருக்கும் தெருவில் நிறைய குழந்தைகள் நகரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் போய் படித்தார்கள். தினமும் அதிகாலையிலேயே வாகனம் வந்துவிடும்.
குழந்தைகளைப் பொறுத்தவரை வாகனத்தில் போவது சுகமான விஷயம், உதய்யும் அதற்குதான் ஆசைப்பட்டான்.
சாக்ஸ் அணிந்து, ஷூ மாட்டி, டைகட்டி, அடையாள அட்டை அணிந்த, பொம்மை போட்ட புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு வாகனத்தில் சென்று படித்து வருகிற சககுழந்தைகளை ஏக்கமாய்ப் பார்ப்பான் உதய்.
நான் ஹேமாக்கா படிக்கற ஸ்கூல்ல படிக்கறேன்மா.
அதெல்லாம் நமக்கு சரியா வராது...
நானும் வேன்ல போவணும்மா...
ஹேமாவோட அப்பா ஆபீஸரா இருக்காரு. அதனால பணம் நெறையசெலவு பண்ணி... வேன்ல அனுப்பறாரு...! நம்ம அப்பாதான் சாமிகிட்ட போய்ட்டாரே..! சம்பாதிச்சு கொடுக்க யாருடா இருக்கா...? நீ இந்த பள்ளிக்கூடத்திலயே படிச்சுக்க..! டீச்சர்.. சாரு... எல்லோரும்.. நல்லாதான் படிச்சுக் கொடுக்கறாங்க... நீ ஹேமாக்காவை விட நல்லா படிச்சுக்காட்டு... டாக்டராவோ, என்ஜினீயராவோ ஆயிடலாம்.. அப்பத்தான் அம்மாவுக்கு பெருமையா இருக்கும்...
உதய்யை சமாதானப்படுத்தினாள் பூங்கனி.
உதய் அவளுடைய வார்த்தைகளைக் காதிலேயே வாங்கவில்லை.
அப்பா ஏம்மா சாமிகிட்டே போனாரு..?
இதயத்தை தைப்பது மாதிரி கேள்வியை எழுப்பினான். உதய்க்கு ஐந்து வயது ஆகிறது. மாசு மருவில்லாத உருண்டை முகம். சுருள்சுருளான கேசம். அழகான துறுதுறுவென்ற கண்கள், முழுக்கால் பேண்ட்டும் அரைக்கை சட்டையும் அணிந்து கொழு கொழுவென்ற இருந்த உதய்யைப் பார்க்கவே பூங்கனிக்கு பரிதாபமாக இருந்தது.
தன் அப்பாவைப் பார்த்ததேயில்லை உதய்.
பூங்கனியின் வயிற்றில் உதய் இருக்கும்போதே வானரசு செத்துப் போய்விட்டான்.
வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே ஊடுருவியிருந்த கொடிய மஞ்சள் காமாலை நோய்க்கு பலியாகியிருந்தான்.
வானரசுவைப் புகைப்படத்தில்தான் பார்த்திருக்கிறான் உதய்.
அப்பாவை சாமிகிட்டேர்ந்து கூட்டி வர முடியாதம்மா?
முதல் கேள்விக்கே பூங்கனியினால் பதில் சொல்லமுடியவில்லை.
அழுத்தமாய் இரண்டாவது கேள்வியையும் கேட்டான் உதய்.
முடியாதுடா...
ஏம்மா முடியாது..
சாமிகிட்டே போனவங்களை யாராலயும் திருப்பி கூட்டிவர முடியாது..
உதட்டைக் கடித்துக் கொண்டாள் பூங்கனி.
கண்ணீர் குபுக்கென எட்டிப்பார்த்தது.
அப்போ நாமளும் சாமிகிட்டயே போயிடலாமா?
போயிருக்கலாம்தான்.
வானரசு செத்ததுமே பூங்கனியும் போயிருக்கலாம்தான். அப்போது அவள் நிறைமாத கர்ப்பிணி வயிற்றுனுள் உருள்கிற குழந்தை. எட்டி எட்டி உதைக்கிற குழந்தை.. பூங்கனிக்கு மனசு வரவில்லை. தனக்கென்று ஆதரவு தர யாரும் இல்லாதபட்சத்திலும் கூட பிறக்கப்போகிற குழந்தைக்காகத்தான் வாழ நினைத்தாள்.
பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை நன்றாக வளர்த்து தன்னால் முடியாததை எல்லாம் சாதிக்க வைக்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்டாள். உதய் பிறந்தபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்திருந்த அத்தனை கசப்பான விஷயங்களையும் மறந்தே போயிருந்தாள்.
உதய்க்காகவே புதிதாய் வாழ ஆரம்பித்தாள்.
வயற்காட்டில் இறங்கி கூலி வேலைப்பார்த்துதான் உதய்யை வளர்த்து வந்தாள்.
பூங்கனியின் இருளான வாழ்க்கையின் வெளிச்ச மழை உதய்.
எந்த சாமிம்மா நம்ம அப்பாவைக் கூட்டிப்போச்சு...?
தப்போ, சரியோ ஏதேனும் ஒரு பதிலை குழந்தைகளின் கேள்விகளுக்கு விடையாக சொல்லியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளின் கேள்விகள் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.
தொணதொணன்னு.. பேசாம வர்றியா...
சுள்ளென்று உதய்யின் முதுகில் ஒன்று வைத்தாள்.
வீறிட்டு அலறினான் உதய்.
மாட்டியிருந்த தோள் பையை கீழே விட்டெறிந்துவிட்டு, மண்தரையில் விழுந்து புரண்டான்.
புது சிலேட்டும், குச்சி டப்பாவும் வெளியே சிதறியது.
எல்லாவற்றையும் நிதானமாய் பொறுக்கி தோள்பையினுள் திணித்தாள்.
உதய்... இன்னைக்கு உன்னை பள்ளிக்கூடத்துல பேரு சேர்க்கப்போறோம்..! அடம் புடிச்சு நல்ல நாளும் அதுவுமா... அடிவாங்கி கட்டிக்காதே..
உதய்யின் கையை இறுக்கமாய்ப் பற்றினாள். தரதரவென்று இழுத்துக் கொண்டு அருகில் இருந்த பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள் பூங்கனி.
பள்ளிக்கூட்டத்தில் தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சிக் காத்திருப்பதை அறியாமல்.
பள்ளி வளாகம் முழுவதும் வேப்பமரங்களும், வாத மரங்கள் நிழலைப் பரப்பிக்கொண்டிருந்தன. தலைமையாசிரியர் அறையை நோக்கி நடந்தாள் பூங்கனி.
உதய்யின் அழுகை இன்னும் ஓய்ந்தபாடில்லை.
தலைமையாசிரியர் அறையின் இருபுறமும் வகுப்பறைகள் இருந்தன. அமைதியான முறையில் கற்பித்தல் நடந்துக் கொண்டிருந்தது. 'காக்கைச்சிறகினிலே' பாடலை ஆசிரியை ஒருவர் இனிமையாய் பாடிக் கொண்டிருந்தாள். பாடலை காதில் வாங்கியபடியே தலைமையாசிரியர் அறையை நெருங்கினாள் பூங்கனி.
அங்கே யாருமில்லை.
தலைமையாசிரியர் இருக்கை காலியாக இருந்தது.
இருபுறமும் நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன.
ஹெச் எம் மேடம் இல்லையா...?
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடம் கேட்டாள் பூங்கினி.
ஹெச் எம் மேடம்.. டிரான்ஸ்பர்ல போய்ட்டாங்க. புதுசா ஒரு சார் வந்திருக்கார். இங்கே ஜாய்ன் பண்ணி ரெண்டுநாள்தான் ஆகுது..
என்றபடியே வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் அந்த ஆசிரியை.
இவன் என் மகன் உதய்..! முதல் வகுப்புல சேர்க்கணும்.. டீச்சர்.
அஞ்சு வயது ஆயிடுச்சுங்களாம்மா..?
ம்... பர்த் சர்ட்டிபிகேட் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். ஹெச் எம் சார் இன்னைக்கு வரலீங்களா?
என்றாள் ஆர்வமாய்.
வந்திருக்காரே! இங்கே புதுசா கட்டிடம் ஒண்ணு கட்டிகிட்டு இருக்காங்க. அதை மேற்பார்வை இடறதுக்காக வந்திருக்கற என்ஜினீயரோட பேசிக்கிட்டு நிக்கறார். வெயிட் பண்ணுங்க. நான் ஒரு பையனை அனுப்பி அவரை கூப்பிட்டு வரச்சொல்றேன்...
பூங்கனிக்கு ஒரு இருக்கையைக் காட்டினாள்.
உதய்யையும் அழைத்துக் கொண்டு அங்கே