Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayanginean Solla Thayanginean
Mayanginean Solla Thayanginean
Mayanginean Solla Thayanginean
Ebook145 pages48 minutes

Mayanginean Solla Thayanginean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்லூரி படிப்பை முடித்துவிடும் தருவாயில் தன் காதலை தெரியப்படுத்த துடிக்கும் இனியன், காவியா இவர்களின் வாழ்க்கையில் விதி எவ்வாறு விளையாடியது? இனியனை வெறுப்பேற்ற காவியா எடுத்த முடிவு என்ன? சொல்லாதக் காதலால் சேர முடியாமல் தவிக்கும் இரு உள்ளங்கள். காதல் இணைந்ததா? சொல்ல தயங்கிய காதல் கைகூடியதா?

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580128308592
Mayanginean Solla Thayanginean

Read more from Maheshwaran

Related to Mayanginean Solla Thayanginean

Related ebooks

Reviews for Mayanginean Solla Thayanginean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayanginean Solla Thayanginean - Maheshwaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

    Mayanginean Solla Thayanginean

    Author:

    மகேஷ்வரன்

    Maheshwaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/maheshwaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    வானத்தில் ஆசைக்கு கூட ஒரு விண்மீனை காணவில்லை. எங்கும் இருள் படர்ந்திருந்தது.

    நேற்றைக்கு மிதந்த நிலவு இன்றைக்கு காணவில்லை. முரட்டு கறுப்பு மேகத்தின் பிடியில் சிக்கியிருந்தது.

    நிலா

    வெண்மேகம்.

    நட்சத்திர குவியல்கள் என ஒளிமயமாக காட்சியளிக்கும் வானம்தான் எப்போதுமே அழகு.

    பிரகாசிக்கும் வானத்தைப் பார்க்கும்போதுதான் மனசு குதூகலமாகும்.

    காவியாவிற்கு கறுப்பு வானத்தை பார்க்க பார்க்க வெறுப்பு படிந்தது.

    திரைச் சேலையால் ஜன்னலை மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

    படுக்கையில் வந்து விழுந்தாள்.

    இமைகளை மூடினாள்.

    உறக்கம் வர மறுத்தது. புரண்டு புரண்டு படுத்தாள். ஊஹூம்... உறக்கம் வருவேனா என்றது. காதலிக்கிற கண்களாலும், காதல் சூழ்ந்த இதயத்தாலும் உறங்கவே முடியாது என்பது உண்மைதானே?

    இத்தனை நாட்களாய் எந்த கவலையும் இல்லாமல் இருந்தாயிற்று.

    காலேஜுக்கு போவதும், தோழிகளோடு ஊரை சுற்றுவதும் ஹோட்டலிலேயே சாப்பிடுவதும் நேரம் கழித்து வீட்டிற்கு வருவதும் வாடிக்கையான விஷயம்தான். அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோ யாரும் எந்த கேள்வியும் கேட்டதில்லை.

    சுதந்திரப் பறவையாகத்தான் திரிந்தாள்!

    இனியனை காதலிக்கத் தொடங்கிய பிறகுதான் தொல்லையே.

    தூக்கம் போயிற்று.

    நிம்மதி போயிற்று.

    சந்தோஷம் போயிற்று.

    தன் துள்ளல் துடிப்பு பரவசம் உற்சாகம் எல்லாமே போயிற்று.

    இனியன் தனக்கு கிடைப்பானா? மாட்டானா?

    காவியாவின் பிரச்சனையே அதுதான்.

    இனியனை பார்க்காமல் இருந்திருக்கலாம். பேசாமல் இருந்திருக்கலாம். பழகாமல் இருந்திருக்கலாம்.

    பார்த்தது தப்பில்லை.

    பேசியது தப்பில்லை.

    பழகியது தப்பில்லை.

    மனதைப் பறிகொடுத்ததுதான் தப்பு. மனசுக்குள் குபுகுபுக்கிற காதலை இனியனிடம் வெளிக்காட்டாததுதான் தப்பு.

    சொல்லலாமா வேண்டாமா?

    சொன்னால் ஏற்றுக் கொள்வானா? மாட்டானா?

    மனசுக்குள்ளேயே தயங்கித் தயங்கி மூடி வைத்திருப்பதுதான் தப்பு.

    தலையணைக்கு அடியில் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது.

    கைவிரல்களால் துழாவி செல்போனை வெளியே எடுத்தாள்.

    திரையில் அபர்ணாவின் எண்கள் ஒளிர்ந்தன. பச்சைப் பொத்தானை அழுத்தி காதில் வைத்தாள்.

    சொல்லுடி அபர்ணா, என்ன இந்த நேரத்துல போன் பண்றே?

    உங்கூட பேசணும்போல தோணுச்சுடி.

    வீட்ல எதாவது பிரச்சனையா?

    பிரச்சனை எம்மனசுல காவியா.

    செல்போனின் மறுமுனையிலிருந்த அபர்ணா குலுங்கினாள்.

    காவியாவும், அபர்ணாவும் ஒரே காலேஜில் படிக்கிறார்கள்.

    இருவருமே பைனல் இயர் எம்.சி.ஏ. நெருங்கிய தோழிகள்.

    எதாக இருந்தாலும் காவியாவிடம்தான் பகிர்ந்து கொள்வாள் அபர்ணா.

    அபர்ணா காவியா மாதிரி வசதியான குடும்பம் கிடையாது.

    நடுத்தர வர்க்கம்.

    அம்மா மட்டும்தான்.

    அப்பா அரசு ஊழியராக இருந்து பணியில் இருக்கும்போதே தேவியின் மாரடைப்பில் காலமாகிவிட்டார்.

    அம்மாவுக்கு மாதா மாதம் பென்ஷன் வருகிறது. அதைக் கொண்டுதான் இவ்வளவு வருஷம் அபர்ணாவை வளர்த்து, ஆளாக்கி படிக்கவும் வைத்திருந்தாள்.

    ஏண்டி அழறே?

    கவலையாய் கரிசனமாய் கேட்டாள் காவியா.

    நாளைக்கு பொழுது விடிஞ்சா எனக்கு நிச்சயதார்த்தம்டி.

    நிச்சயதார்த்தமா? மாப்ளை யாருடி?

    என்னோட அத்தைப்பையன் சுரேந்திரன்.

    நீ நிச்சயதார்த்தத்துக்கு சம்மதிச்சுட்டியா அபர்ணா?

    முடியாதுன்னுதான் சொன்னேன். ஆனா எங்கம்மா காதுலயே வாங்க மாட்டேங்கிறாங்கடி. சுரேந்திரன் சிங்கப்பூருல சாப்ட்வேர் என்ஜினீயரா இருக்கார். மூணு மாச லீவுல இந்தியா வந்திருக்கார். சின்ன வயசிலேர்ந்தே சுரேந்திரனுக்கு என்னை நல்லா தெரியும். அதனாலதான் எங்கத்தை அபர்ணாவை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்டதுமே சந்தோஷமா தலையை ஆட்டிட்டார். நாளைக்கு நிச்சயதார்த்தம். இந்த மாசக்கடைசியில் கல்யாணம். உடனடியா எனக்கும் பாஸ்போர்ட் விசா எல்லாம் எடுத்து தன் கூடவே சிங்கப்பூருக்கு கூட்டிப் போக போறாராம். நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலைன்னா உயிரைவிட்டுடுவேன்னு எங்கம்மா மிரட்டுறாங்க. வேற வழியே இல்லாம சம்மதிச்சு தொலைச்சுட்டேன் காவ்யா.

    அபர்ணாவின் குரல் உடைந்திருந்தது.

    பேசவே முடியாமல் விம்மினாள்.

    சுரேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?

    தெரியும்.

    என்ன சொன்னான்?

    சுரேஷ் சொன்ன பதிலைக் கேட்டுதாண்டி நான் வயிறு எரிஞ்சு கிடக்கிறேன்.

    நீ உங்க அத்தைப் பையனை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவிக்கிறானா?

    எதிர்ப்பு தெரிவிச்சிருந்தாதான் சந்தோஷப்பட்டிருப்பேனே.

    பின்னே?

    நீ இந்த வார்த்தையை எப்ப சொல்வேன்னுதான் காத்திருந்தேன். ஆல்ரெடி, எனக்கு கிராமத்துல இருக்கிற சொந்தக்காரப் பொண்ணைமே மேரேஜ்பிக்ஸ் பண்ணியாச்சு. இதை சொன்னா நீ அழுவே ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்னுதான் பயந்துகிட்டிருந்தேன். இனி அந்த பயம் தேவையில்லை. ஐ ஆம் வெரி ஹேப்பி அபர்ணா கங்கிராஜுலேசன் அபர்ணாங்கிறான்.

    அப்படியா?

    அதுமட்டுமில்லை காவியா. நீயும் நானும் உயிருக்குயிரா காதலிச்சுட்டோம். இப்ப ரெண்டு பேருக்குமே வேறவேற நபர்களோட கல்யாணமாகப் போகுது. இந்த ஏமாற்றமும் வலியும் வேதனையும் கடைசிவரைக்கும் நமக்குள்ளே இருந்துகிட்டே இருக்கும். அப்படி இருக்கவே கூடாது. ஸோ நீயும், நானும் எங்காவது ஒரு நாள் வெளியில் போய் சந்தோஷமாக இருந்துட்டு, பிரிஞ்சுடலாம். ஓகேயான்னு வாய் கூசாம கேட்கிறான். எனக்கு ஆத்திரமாயிடுச்சு. இவ்வளவு கேவலமா பேசறியே. உன்னைப் போய் இத்தனை நாளும் உருகி உருகி காதலிச்சிருக்கேனே வெய்டா போனை இல்லாட்டி செருப்பை கழட்டி அடிப்பேன்னு கோபமா திட்டிட்டேன். எனக்கு அழுகை அழுகையா வருது காவியா. உன்கிட்டே ஷேர்பண்ணிகிட்டா. அழுகை கொஞ்சம் கொறையும்போல தோணிச்சு. அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் ஸாரிடி.

    பரவாயில்லை. மொதல்ல கண்ணை தொடைச்சுக்க. இனி சுரேஷ் நெனைப்பே உனக்கு தேவையில்லை. அவன் மொகத்துலயே முழிக்க கூடாது. நிச்சயம் ஆகப்போற உன் அத்தைப் பையனோட சந்தோஷமா பேசி பழகிக்கடி, பெஸ்ட் ஆப் லக்.

    தேங்க்ஸ் காவியா.

    வெச்சுடவா போனை?

    இன்னொரு விஷயம் காவியா.

    சொல்லு.

    "காலேஜில நமக்கு இன்னும் ஒன் வீக்ல எக்ஸாம் ஆரம்பமாகப்போகுது. எக்ஸாம் முடிஞ்ச மறுநாள் பிரிவுவிழா கொண்டாட்டம் நடக்கப்போகுது. அதுக்குள்ளே உன்னோட காதலை இனியன்கிட்டே சொல்லிடு காவியா. இந்த சான்சை விட்டுட்டேன்னா அப்புறம். இனியனை சந்திக்கிறது சிரமம். ரிசல்ட் வந்த பிறகு எல்லாரும் ஒரே நாள் வந்து மார்க்‌ஷீட்டை வாங்குவான்னு சொல்ல முடியாது. கான்வெகேஷனுக்கு கூட நிறைய பேரு வரவே மாட்டாங்க. அதனாலதான் சொல்றேன். இப்பவே இனியன்கிட்டே உன் மனசை

    Enjoying the preview?
    Page 1 of 1