About this ebook
ராஜேஸ்வரியை ஒரு இண்டர்வியூ- வில் சந்திரன் சந்திக்கிறான். பார்த்ததும் கவர்ந்துவிட்ட அவள் அழகு அவனை காதலிக்க வைக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வீட்டிற்கு வரும்படி செய்கிறான். இருவரும் புத்தகம் வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தால் அவள் அவனிடமிருந்து புத்தகம் எடுத்துச்செல்கிறாள். மீண்டும் அவள் கேட்கும் புத்தகத்தை காதல் தூதாக மாற்ற எண்ணுகிறான். அது அவனுக்கு என்ன கொடுத்தது? அவனது காதலை ராஜேஸ்வரி ஏற்று கொண்டளா? இல்லையா? என்ன அறிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
Read more from R. Sumathi
Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsIvalallava Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Roja Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Nee Enakku... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Sirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThaazhampoove Kannurangu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsThaamarai Thottil! Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsIlaiya Manathu Inaiyum Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsAlli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsKannethirey Oru Kanavulagam! Rating: 0 out of 5 stars0 ratingsMeeravin Kannan Meeravidamey! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkoru Kaadhali Irukkindral Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsAngum Ingum Paathai Undu! Rating: 0 out of 5 stars0 ratingsKovil Purakkal! Rating: 0 out of 5 stars0 ratingsThedi Vantha Deivam Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsNenjiniley Ninaivu Mugam Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Panthal Rating: 0 out of 5 stars0 ratingsAngeyum Kadhal Undu Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ennuyir Kaadhaliye!
Related ebooks
Innila Venugaanam Rating: 0 out of 5 stars0 ratingsAndha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Thedinen Vanthathu Rating: 5 out of 5 stars5/5Thaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsகஸ்தூரி மானே... Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Yenada... Rating: 5 out of 5 stars5/5கடவுள் அமைத்த மேடை..! Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Kaadhalagi Rating: 0 out of 5 stars0 ratingsஎன்றென்றும் அன்புடன்... Rating: 0 out of 5 stars0 ratingsஇமையாக நானிருப்பேன்… Rating: 0 out of 5 stars0 ratingsவிடியலைத் தேடும் பூபாளம்... Rating: 0 out of 5 stars0 ratingsஅன்புள்ள மன்னவனே... Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuven Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsMalarukku Thendral Pagaiyaanaal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 0 out of 5 stars0 ratingsOru Gangaiyin Kadhai Rating: 0 out of 5 stars0 ratingsKanniyakumari Mattrum Onbathu Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsThanga Vizhi Thaara Rating: 0 out of 5 stars0 ratingsPani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Azhage Unnai Aaraathikkiren Rating: 4 out of 5 stars4/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsKaruppatti Rating: 0 out of 5 stars0 ratingsபிரியாத வரம் வேண்டும்… Rating: 0 out of 5 stars0 ratingsThen Sinthum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிலவு வரும் வேளை... Rating: 0 out of 5 stars0 ratingsManjal Maththaappu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ennuyir Kaadhaliye!
0 ratings0 reviews
Book preview
Ennuyir Kaadhaliye! - R. Sumathi
http://www.pustaka.co.in
என்னுயிர் காதலியே!
Ennuyir Kaadhaliye!
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
முன்னுரை
ராஜேஸ்வரியை ஒரு இண்டர்வியூ- வில் சந்திரன் சந்திக்கிறான். பார்த்ததும் கவர்ந்துவிட்ட அவள் அழகு அவனை காதலிக்க வைக்கிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வீட்டிற்கு வரும்படி செய்கிறான். இருவரும் புத்தகம் வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தால் அவள் அவனிடமிருந்து புத்தகம் எடுத்துச்செல்கிறாள். மீண்டும் அவள் கேட்கும் புத்தகத்தை காதல் தூதாக மாற்ற எண்ணுகிறான். அது அவனுக்கு என்ன கொடுத்தது? அவனது காதலை ராஜேஸ்வரி ஏற்று கொண்டளா? இல்லையா? என்ன அறிந்துகொள்ள இந்த நாவலை தொடர்ந்து படியுங்கள்!
*****
அத்தியாயம் 1
ஆழ்கடலில் மூழ்கி, ஆழ்ந்து- ஆராய்ந்து எடுத்த முத்துச் சிப்பியை மெல்ல திறப்பதைப் போல் பொழுது விடிந்தது.
சூரியன் சிவப்பாய்ப் பளிச்சிட்டது.
தூரத்தில் பறவைகள், கூட்டம் கூட்டமாக ஒலியெழுப்பிப் பறந்தன. அது விடியலின் முதல் பிரவாகம் போலிருந்தது.
தொடர்ந்து பால்காரனின் சைக்கிள் மணியோசை காற்றோடு கலந்து வந்து காதில் மோதியது.
கண்ணாடியைக் கழற்றி மேசை மீது விரிந்து கிடந்த புத்தகத்தின் மீது வைத்தான், சந்திரன்.
விடியலால் மெல்ல மெல்ல உண்டான மஞ்சள் ஒளியில், அறை பளிச்சென காட்சியளித்தது.
கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தான். முகத்தில் இன்னும் தூக்கம் தெரிந்தது.
சந்திரன், கவர்ச்சியான ஆண்மகன், இறுக்கமான வெள்ளை பனியனால் மார்பு, கம்பீரமாகக் காட்சியளித்தது. சுருள்முடி, புற்களாய் பரவிக் கிடந்தது.
புத்தகம் படிப்பதற்காகவே நிறைய பொழுதுகளை ஒதுக்கிக்கொள்வான். இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் அலமாரியிலிருந்து ஏதாவது புத்தகம் எடுத்துப் படித்து விட்டுத்தான் உறங்குவான்.
அவனுடைய அலமாரியில் ஏகப்பட்ட புத்தகங்கள், ஒன்றின் முதுகில் ஒன்று ஒய்யாரமாய்ச் சாய்ந்துகொண்டிருந்தன.
இப்பொழுதெல்லாம் இரவு வெகுநேரம் வரை உறக்கம் வருவதில்லை. பெரும்பாலும் விடியும் முன்பே விழிப்பு வந்து விடுகிறது.
ஆழ்ந்து படித்ததால் உறக்கம் கலைந்த பிறகும் கண்கள், வலித்தன. சோர்ந்தன.
சூரியன் பூமிக்கு சோப்புப் போட்டு இருளழுக்கைச் சுத்தமாக்கிக்கொண்டிருந்தான்.
வாசல் தெளிக்கும் ஓசை கேட்டது. அம்மா எழுந்துவிட்டாள். இல்லமென்னும் வீணையின் முதல் நாதமாக தண்ணீர் ஓசை எழுந்தது.
இழுத்துக்கொண்டு சென்ற இமைகள், அந்த இசையால் திறந்தன. விருட்டென எழுந்து அம்மா இருந்த வாசலுக்கு வந்தான். பார்வையை வெளியே தந்தான். அம்மா சிரமத்துடன் குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். விழிகளை நிமிர்த்திப் பார்த்தாள்.
உம்... காலையில் எழுந்திரிக்கவே முடியலை... குனிந்து நிமிர்ந்து பெருக்க முடியலை... இடுப்பைச் சுத்தி பெல்ட்டால இறுக்கின மாதிரி வலி. கீழே காலை வைக்க முடியலை. பாதம் பூரா வலி. என்னால முடியுமா? ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கன்னா கேட்கிறானா?
என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கினாள்.
அம்மா... காலையிலேயே தொடங்கிட்டியா? உடம்புக்கு முடியலைன்னா ஒரு வேலைக்காரியை வச்சுக்கயேன். எதுக்கு கஷ்டப்படுறே?
என்றான், சந்திரன். கோலம், பாதியிலே நின்றது... நிமிர்ந்தாள்.
ஆமான்டா... வேலைக்காரி வச்சுக்கத் தெரியாமதான் உன்கிட்டே யோசனை கேட்கிறேன். என்னமோ என் தலையெழுத்து. ரெண்டையும் ஆணாப் பெத்துட்டேன். ஒரு பொண்ணைப் பெத்திருந்தா கை வேலைகளைச் செய்யும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்...
பொண்ணுங்களை வெறுக்கிற இந்தச் சமூகத்துல பொண்ணு பொறக்கலையேன்னு ஏங்குறியே... உண்மையிலேயே உனக்குப் பெரிய மனசும்மா...
எதுக்குடா பெண் குழந்தையை வெறுக்கணும். வளர்க்கிற விதத்துல வளர்த்து, படிக்க வைக்கிற விதத்துல படிக்க வச்சா ஆணைவிடப் பெண்தான்டா சிறப்பு. அக்கம் பக்கத்துல பார்க்கிறோமே தெரியலை... ஆம்பளைங்க வேலைக்குப் போய் சம்பாதிச்சுட்டு வர்றதோடு சரி... இந்தப் பொம்பளைங்களைப் பாரு... வேலைக்குப் போய் பணமும் கொண்டு வர்றாங்க... வீட்டையும் பார்த்துக்கிறாங்க...
அட...டா... பொழுது விடிஞ்சதுமே யார் பெண்ணின் பெருமையைப் பற்றி இப்படியொரு அற்புதமா பேசுறதுன்னு பார்த்தா நீதானாம்மா...
என்று கேட்டவாறே வந்தான், இளையவன், பார்த்திபன். சந்திரனின் தம்பி.
அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவன். அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கோலத்தை முடித்துவிட்டு படியேறினாள்.
பார்த்திபா... நம்மை ஏன்டா பெத்தோம்னு அம்மா வருத்தப்படத் தொடங்கிட்டாங்கடா...
சந்திரன் கிண்டலாகச் சொன்னான்.
என்ன?
என விழி விரித்து போலியாக அதிர்ச்சி காட்டிய பார்த்திபன், அம்மாவின் பக்கம் திரும்பி, தோள்களைக் குலுக்கி, இடுப்பில் கை பதித்து நின்றான்.
நாங்கள் சிகரெட்டு பிடித்தோமா? சீட்டாடினோமா? இல்லை... கடைவீதியில் கண்ணியமாக செல்லும் பெண்ணைக் கண்ணடித்தோமா? எதற்காக வெறுக்கிறாய்? உன் சிங்கக் குட்டிகளையா வெறுக்கிறாய்? சொல்லும்மா சொல்!
என்று நடிகர் விவேக் பாணியில் புதுமை வசனம் பேசி, அம்மாவின் இரு தோள்களிலும் கை பதித்து அவன் உலுக்க, குபீரெனச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே இருந்தாள்.
வாய்விட்டுச் சிரிக்கும் அம்மாவையும், சிரிக்க வைத்த தம்பியையும் பெருமையுடன் பார்த்தான், சந்திரன்.
அம்மா சிரிக்கிறாள். இது அதிசயம். அவள் சிரிக்காத நாட்கள் எத்தனையோ?
ஐந்து ஆண்டுக்கு முன் அப்பா அகால மரணமடைந்தபோது அம்மாவின் சிரிப்பு திருட்டு போயிற்று. இதோ, இப்பொழுதுதான் திரும்பி வந்திருக்கிறது.
அம்மா... எப்பொழுதும் நீ இப்படியே சிரிக்கணும்மா...
பார்த்திபன், அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டான்.
அம்மா சட்டென்று சிரிப்பை நிறுத்தினாள்.
"உம்... நீ மட்டும் என்னைச் சிரிக்க வச்சா போதுமா? இதோ... இருக்கானே இவன் என்னை அழ வைக்கிறானே... சீக்கிரம் ஒரு
