Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Then Sinthum Pookkal
Then Sinthum Pookkal
Then Sinthum Pookkal
Ebook113 pages48 minutes

Then Sinthum Pookkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Sumathi
Languageதமிழ்
Release dateMay 9, 2019
ISBN9781043466527
Then Sinthum Pookkal

Read more from R.Sumathi

Related to Then Sinthum Pookkal

Related ebooks

Related categories

Reviews for Then Sinthum Pookkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Then Sinthum Pookkal - R.Sumathi

    13

    1

    சந்தானம் அப்பொழுதுதான் அலுவலகத்திலிருந்து தன் அறைக்குத் திரும்பி இருந்தான்.

    உள்ளே நுழைந்தவன் சோபாவில் அமர்ந்து ஷூவைக் கழற்றும் போது அலைபேசி ஒலித்தது.

    எடுத்துப் பார்த்தபோது ‘அம்மா’ என்றிருந்தது.

    உற்சாகமாக அம்மா... என்றான்.

    என்னடா எப்படி இருக்கே? - மறுமுனையில் அம்மாவின் குரல் அன்பும் அக்கறையும் சுமந்து ஒலித்தது.

    நல்லாயிருக்கேன்ம்மா. சொல்லு என்ன விஷயம்?

    ஏன்டா... நீ நல்லாயிருக்கியான்னு நான் கேட்டேனே... நீ பதிலுக்கு எப்படிம்மா இருக்கேன்னு கேட்க மாட்டியா? பெத்த தாய்டா நான்...

    என்னம்மா நீ? சரி... எப்படி இருக்கே?

    நல்லா இல்லேடா!

    ஏம்மா உடம்பு சரியில்லையா?

    உடம்பு நல்லாத்தான்டா இருக்கு. மனசுதான்டா சரியில்லை.

    அட... உன் மனசுக்கு என்னம்மா ஆச்சு?

    சந்தோஷம் இல்லைடா.

    அதான் மாசா மாசம் என் சம்பளப் பணத்தை அப்படியே அனுப்பிடறேனே... அப்புறம் என்ன?

    பணம் மட்டுமே சந்தோஷம் இல்லைடா!

    தெரியும்மா. சுத்தி வளைச்சுப் பேசாதே. தரகர் ஏதாவது வரன் கொண்டு வந்தாரா?

    சரியாக் கண்டுபிடிச்சுட்டியே... தஞ்சாவூர்லயிருந்து ஒரு ஜாதகம் வந்திருக்குடா. பொண்ணு லட்சணமாயிருக்கா. படிச்சிருக்கா. வேலை கூடப் பார்க்கிறா. நல்ல இடமாம். நீ எப்ப வர்றே சொல்லு. போய்ப் பார்த்துட்டு வந்திடலாம்.

    அம்மா... ப்ச்! இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?

    வயசு முப்பதைத் தொடப் போகுதுப்பா... ம்

    முப்பதுதானே!

    என்ன விளையாடறியா?

    அம்மா... சொன்னாக் கேளு. கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ரெண்டு வருஷம் போகட்டும்.

    இதையே இன்னும் எத்தனை வருஷத்துக்குடா சொல்லுவே?

    இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு...

    அடி வாங்கப் போறே! நானும் ஒவ்வொரு பொண்ணாப் பார்க்கிறேன். நீ தட்டிக் கழிச்சுக்கிட்டே வர்றே. உன் ஃப்ரெண்ட் மதி இருக்கானா? இருந்தா அவன்கிட்டக் கொடு.

    அவன் இன்னும் வரலைம்மா...

    எப்ப வருவான்?

    யாருக்குத் தெரியும்? அவன் என்ன உன் புள்ளை மாதிரியா? ஆபீஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வர? சரியான ஊர் சுத்திம்மா... ஊரையெல்லாம் சுத்திட்டு ஆற அமரத்தான் வருவான்.

    சரி! அவன் எத்தனை மணிக்கு வந்தாலும் எனக்குப் போன் பண்ணச் சொல்லு.

    உத்தரவு!

    அம்மா சட்டென்று தொடர்பைத் துண்டித்தாள்.

    ‘இந்த அம்மாக்களே இப்படித்தான்...’ - சிரித்துக் கொண்டவனாய் ஷூக்களைக் கழற்றி வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து வராண்டாவில் கிடந்த இருக்கையில் அமர்ந்து புரட்டினான்.

    சரியாய் அரை மணி நேரம் கழித்து மதிவாணன் தன் பைக்கில் சர்ரென உள்ளே நுழைந்தான்.

    என்ன மாப்ளே? சீக்கிரம் வந்துட்டியா? என்றபடியே பைக்கை நிறுத்தினான்.

    வழக்கம் போலத்தான் வந்தேன்.

    என்னமோ வீட்டில் கட்டின பொண்டாட்டி காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி ஆபீஸ் விட்டதும் தலைதெறிக்க ஓடி வர்றே?

    பின்னே உன்னை மாதிரி ஊரையெல்லாம் சுத்திட்டு வரணுமா?

    ஊரைச் சுத்திட்டு வர்றேனா? கொழுப்புடா உனக்கு? ஆபீஸ்ல எவ்வளவு வேலை தெரியுமா?

    இதை நீ வேற இடத்துல வேலை செய்து சொல்லியிருந்தா நம்பியிருப்பேன். ரெண்டு பேரும் வேலை செய்யறது ஒரே இடத்துல. என்கிட்ட கதை விடறியா?

    டேய்... போதும்டா! நான் உன்னை மாதிரி கூட்டுப் புழு இல்லை. என் வேலை நேரம் போக எல்லோருக்கும் என்னால முடிஞ்ச உதவியை வலியப் போய்ச் செய்துட்டு வர்றேன். அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும்டா!

    எஸ். அந்தப் பரந்த மனசுக்கு உனக்குக் கிடைச்ச பெயர் என்ன தெரியுமா? ஜொள்ளுப் பார்ட்டி.

    டேய் போதும்டா... பொது வாழ்க்கையில ஈடுபடறவன் இந்த மாதிரிக் கேலிப் பேச்சுக்கெல்லாம் கவலைப்படக்கூடாது.

    பொண்ணுங்ககிட்ட வழியறதும் பொது வாழ்க்கையா? என்று சிரித்த சந்தானத்தின் எதிரே அமர்ந்தான் மதிவாணன்.

    உனக்கெல்லாம் இது புரியாதுப்பா...

    சரி! அது போகட்டும். நீ வந்ததும் அம்மா உன்னைப் போன் பண்ணச் சொன்னாங்க. என்னன்னு கேளு... என்றபடியே எண்களை அழுத்தி அலைபேசியை அவனிடம் நீட்டினான். சில நிமிடங்களில் அம்மா தொடர்பில் வந்தாள்.

    ஹலோ... அம்மா, நான் மதி பேசறேன். என் கூடப் பேசணும்னு சொன்னீங்களாம். என்ன விஷயம்?

    மதி... அவன் என்னடா நினைச்சுக்கிட்டிருக்கான். அவனுக்கு இங்கே நான் சல்லடை போட்டுச் சலிச்சு ஒவ்வொரு பொண்ணா பார்க்கிறேன். அவன் என்னடான்னா கல்யாணம் இப்ப வேண்டாம், அப்படி இப்படின்னு சொல்றான். ஏதாவது காதல் கீதல்ன்னு பண்றானா சொல்லுடா?

    இதைக் கேட்டு மதிவாணன் பெரிதாகச் சிரித்தான்.

    அடப் போங்கம்மா... நீங்க வேற? அவனாவது காதலிக்கிறதாவது? ஆபீஸ்ல லட்டு லட்டா எவ்வளவு பொண்ணுங்க தெரியுமா? யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கமாட்டான். பேச மாட்டான்.

    டேய்... இப்படிப்பட்டவனுங்களைத்தான் நம்பவே கூடாது. மூடி வச்சுக் கழுத்தை அறுப்பானுங்க... இன்னையிலிருந்து உன் வேலை... அவன் யாரையாவது காதலிக்கிறானான்னு கண்டுபிடிக்க வேண்டியதுதான்...

    சரி... கண்டுபிடிச்சு... ஒரு வேளை அப்படி ஏதாவது இருந்தா...

    அந்தக் கழுதையையே கட்டி வைக்க வேண்டியதுதான்.

    இந்த ஜாதி...

    கண்றாவி! அதெல்லாம் யாருக்கு வேணும்?

    பாரதியார் மாதிரியே பேசறீங்க... இந்த மதம்?

    மண்ணாங்கட்டி!

    பெரியார் மாதிரியே பேசறீங்க! வசதி வாய்ப்பு?

    பிச்சைக்காரியாயிருந்தா கூடப் பரவாயில்லை.

    லெனின் மாதிரியே பேசறீங்க.

    டேய்... ரொம்பப் புகழாதே!

    உண்மையிலேயே பொறாமையா இருக்கு. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையேன்னு...

    ஏன்டா கவலைப்படறே? நீயும் ஒரு பொண்ணைப் பிடி. என்னோட செலவிலேயே ரெண்டு பேருக்கும் ஒண்ணாக் கல்யாணம் பண்ணி வச்சிடறேன்.

    ஐய்யோ... கர்ணவள்ளல் நீங்கம்மா...

    போடா... விட்டாக்க வரலாறு புத்தகத்துல உள்ள எல்லாரையும் நான்னு சொல்லுவே. நான் சொன்ன வேலையை முதல்ல செய். ஒரு வாரத்துல எனக்கு விவரம் தேவை. சரியா?

    சரிம்மா...

    அம்மா தொடர்பைத் துண்டித்தாள்.

    மதிவாணன் சந்தானத்தை ஏறிட்டான்.

    உங்கம்மா எனக்குப் பெரிய வேலை கொடுத்திருக்காங்க.

    என்ன வேலை? ஊருக்குப் புறப்பட்டு வந்து அங்க பண்ணையில உள்ள எருமையையெல்லாம் மேய்க்கச் சொல்றாங்களா?

    "அடிச்சேன்னா

    Enjoying the preview?
    Page 1 of 1