Mayakkathirkuriya Manthirame
By R.Sumathi
4.5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Theeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsSinnakkili Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Kathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsInimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5En Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Sirukathai Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsPaarththaal Kathal Varum Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsSinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Ennam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mayakkathirkuriya Manthirame
Related ebooks
Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Sollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Pasumai Niraintha Ninaivugal Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Vendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Aattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Yaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Ennuyir Neethaney Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Nyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsEllaam Penne Unnaale Rating: 5 out of 5 stars5/5Kana Kanden Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsMupathu Naalum Nilavu Rating: 4 out of 5 stars4/5Kaayam Patta Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsPenn Vannam Kandean Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malarae Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mayakkathirkuriya Manthirame
3 ratings0 reviews
Book preview
Mayakkathirkuriya Manthirame - R.Sumathi
14
1
"அவசியம் நீ போய்த்தான் ஆகணுமா?" என்றபடி வந்து நின்ற அம்மாவை நிமிர்ந்து பார்த்தான் கபிலன்.
அம்மாவின் கண்களில் வண்டி வண்டியாய் ஏக்கம்,
ரெயில் டிக்கெட்டை எடுத்து ஒரு முறை சரி பார்த்துக் கொண்டிருந்த கபிலன் அதை சூட்கேஸில் வைத்து மூடிவிட்டு அம்மாவைப் பார்த்துச் சிரித்தான்.
அம்மா... என்னம்மா நீ? என்னைப் பெரிய படிப்பு படிக்க வச்சதெல்லாம் எதுக்கு? பக்கத்திலே உட்கார் வச்சுக்கவா? நான் வேலைக்குப் போக வேண்டாமா?
யார் வேண்டாம்னு சொன்னது? இங்கயே சென்னைலேயே இருந்துடறேன்னு மேலிடத்துல சொல்லி பாரேன்.
அட... என்னம்மா நீ? ரெண்டு வருஷம் ட்ரெயினிங்க்காக வெளிநாடு போயிருந்தேன். அப்பக்கூட நல்லாத் நானே இருந்தே! இப்போ இந்தியாவுக்குள்ள தானே இருக்கப் போறேன். இதுக்குப் போய் வருத்தப்படறே?
அம்சவேணி கண்கள் கலங்கிவிடும் நிலைக்கு வந்தாள்.
‘நீ வெளிநாட்டுல இருக்கும்போது ட்ரெயினிங் முடிஞ்சு வந்து சென்னையிலேயே இருப்பேன்னு பொறுமையா இருந்தேன். ஆனா... நீ என்னடான்னா வந்ததும் வராததுமா... நாக்பூர் கிளைக்கு மாத்திட்டாங்கன்னு குண்டைத் தூக்கிப் போட்டுட்டே... சரி... என் கூட ஒரு பதது இருபது நாளாவது இருந்துட்டுப் போவேன்னு பாத்தா இப்படி உடனே கிளம்பிப் போறே..."
"அம்மா... என்னம்மா நீ? சின்னப் பிள்ளை மாதிரி.
இந்த தேதியில ஜாயின் பண்ணணும்னு மேலிடத்திலேர்ந்து உத்தரவு. அங்கே எனக்காக வேலைகள் காத்துக்கிட்டிருக்கு. நான் போய்தான் புதுப் புது வேலைசுளை ஆரம்பிக்கணும். இங்கே உனக்கு பக்கத்திலேயே அண்ணன் இருக்கான். அப்பா இருக்கார். கூப்பிடற துரத்துல அக்கா இருக்கா. என்னமோ யாருமே இல்லாத மாதிரி பேசறே?"
ஆமா! உன் அக்காக்காரிதானே! அவ தன் புருஷனை விட்டு ஒரு நிமிஷம் கூட அங்க இங்க நகர மாட்டா. வந்தா சுடு தண்ணிய கால்ல கொட்டிக்கிட்ட மாதிரி ஓடுவா.
இப்படி ஒரு பதிபக்தியான பெண்ணைப் பெத்ததுக்கு நீ பெருமைப்பட வேண்டாமா? எத்தனைப் பொண்ணுங்க அம்மா வீட்ல வந்து மாசக்கணக்கா டேரா போடுறாங்க.
"ஆமாடா... நீதான் மெச்சிக்கணும். இவ இப்படின்ன வீட்ல இருக்கானே உன் அண்ணன் அவன் சுத்த மோசம் நல்ல காலத்திலேயே பேசமாட்டான். அதிலும் இப்பவெல்லாம் ரொம்ப மோசம். வீடே சூன்யமாயிருக்குற மாதிரி இருக்கு. நீ இருந்தா வீடு கலகலப்பாயிருக்கும்.
அதுக்காக நான் வேலைக்குப் போகாம வீட்லயே இருக்க முடியுமா? அதான் டி.வி. இருக்கே. பார்த்தா பொழுது ஓடிடப் போகுது.
அவன் சொன்ன அதே நேரம் அப்பா கணேசன் கையில் அர்ச்சனைக் கூடையுடன் உள்ளே வந்தார்.
கபிலா... எல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கிட்டியா? டிக்கெட்டும் பணமும் பத்திரம்.
எடுத்து வச்சுக்கிட்டேம்பா.
இந்தா விபூதி பூசிக்க. உன் பேர்ல அர்ச்சனை பண்ணிட்டு வந்தேன்.
கணேசன் விபூதியை எடுத்து பயபக்தியுடன் மகனுடைய நெற்றியில் பூசினார்.
பிரயாணம் நல்லபடியா அமையணும்.
அப்பா... அண்ணன் எங்கே?
"என் கூடத்தான் கோவிலுக்கு வந்தான். அப்படியே கையோட டாக்ஸி கொண்டு வர்றேன்னு போயிருக்கான்
அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
என்னமோ டாக்ஸி கொண்டு வர்றான்னு சொன்னீங்க... ஆட்டோ கொண்டு வந்திருக்கான்.
அம்மா வாசலை எட்டிப் பார்த்தாள்.
ஆட்டோவிலிருந்து பத்மினி இறங்கினாள். கையிரண் டிலும் பெரிய, பெரிய பை.
ஆட்டோக்காரனுக்கு பணத்தைக் கொடுத்து விட்டு தூக்க முடியாமல் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினாள்.
கணேசனின் ஒரே மகள். எல்லோருக்கும் மூத்தவள். கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே நல்ல வரனாக வந்தான் சிவநேசன் என்று முடித்து விட்டார்.
சிவநேசனுக்கு கூட்டுறவு வங்கி ஒன்றில் வேலை. போதுமான சம்பளம். ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்.
பத்மினி சிவநேசனின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். அம்மா வீடு பக்கத்தில்தான் என்றாலும் பொசுக் பொசுக்கென வந்து நிற்க மாட்டாள்,
தூக்க முடியாமல் பைகளைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்த பத்மினியை அம்மா வரவேற்றாள்.
என்னடி இது? இவ்வளவு பெரிய பைகளைத் தூக்கிட்டு வந்திருக்கே
அம்மா கேட்கவும் பைகளை வைத்து விட்டு சோபாவில் அமர்ந்தாள் பத்மினி.
‘அப்பா... ஒரே டயர்டா இருக்கு. என்னடா கபி... கிளம்பிட்டியா?"
ஆமாக்கா... கிளம்பிட்டேன். ஏழரைக்கு ட்ரெயின். இளங்கோ டாக்ஸி கொண்டு வரப் போயிருக்கான்.
அதான் விழுந்தடிச்சுக்கிட்டு ஓடி வர்றேன். நான் போறதுக்குள்ள நீ பாட்டுக்குப் போய்ட்டின்னா... நான் ரெயில்வே ஸ்டேஷன் வரை ஓடி வந்திருக்கணும். இந்த மூட்டைகளைத் தூக்கிட்டு.
என்ன கொண்டு வந்திருக்கே?
என்ன கொண்டு வந்திருக்கேனா? எல்லாம் உனகுத்தான்.
அக்கா ஒவ்வொரு எவர்சில்வர் டப்பாவாக எடுத்து வெளியே வைக்க அம்மா அப்படியே தரையில் அமர்ந்து ஆசையாக ஒவ்வொன்றாகத் திறந்தாள்.
முறுக்கு... அதிரசம்... மைசூர்பாகு, தேங்காய் பர்பி ரவா லட்டு... என்னங்க இந்தப் பொண்ணைப் பாருங்க என்னன்னமோ பண்ணிக் கொண்டு வந்திருக்கு.
எல்லாம் கபிலனுக்குத்தான்.
அதிரசம் ரொம்ப அருமையாயிருக்குடி. எனக்கு கூட இவ்வளவு நல்லா பண்ண வராது. யாரு மாவு இடிச்சு கொடுத்தது? உன் மாமியாரா? இத்தனை பக்குவமா வந்திருக்கு.
ம்க்கும்! என் மாமியாருக்குத்தானே? ஒரு மண்ணும் வராது. நானே பார்த்துப் பார்த்து செய்தேன்.
அக்கா! நான் என்ன ட்ரெயின்ல முறுக்கும் அதிரசமும் விற்கப் போறேனா? இதையெல்லாம் எவன் எடுத்துட்டுப் போவான். உனக்கு வேற வேலையே இல்லையா?
கபிலன் கடுப்படிக்க,
"டேய்.. என்னடா நீ? பாவம் அவ உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்து எடுத்துட்டு வந்திருக்கா. அவளைப் போய் திட்டறே? அப்பா மகனை அதட்டினார்.
ராத்திரி பூரா தூங்காம இதையெல்லாம் நான் செய்து எடுத்துட்டு வந்தா எப்படிப் பேசறான் பாருங்க. வடநா டுப் பக்கம் போறான். நம்ம ஊரு முறுக்கு, அதிரசம் எல்லாம் அங்க கிடைக்குதோ என்னவோ... அதான் ஆசை ஆசையா செய்தேன்.
அக்கா... உன் பாச மழையில நனைஞ்சுட்டேன். போற வழியிலேயே காய்ச்சல்னு படுத்துடப் போறேன்.
வாசலில் டாக்ஸி சத்தம் கேட்டது. இளங்கோ டாக்ஸியிலிருந்து இறங்கினான்.
இளங்கோ அச்சு அசலாக அம்மாவைப் போல் இருந்தான். பெண்ணாகப் பிறந்திருந்தால் பலருடைய வாழ்க்கையைப் பந்தாடியிருப்பான்.
ஆனால் பெண்ணாகப் பிறந்த பத்மினியோ அப்பாவின் நிறம், ஜாடை, இதில் பத்மினிக்கு நிறையவே மனக்குறை உண்டு. கபிலனும் அப்பாவைப் போல்தான்.
அந்த வீட்டின் அழகன் என்றால் அது இளங்கோதான்.
கபிலா டாக்ஸி ரெடி. கிளம்பு... நேரமாயிடப் போகுது.
கபிலன் கிளம்பி விட்டான். பத்மினி கொண்டு வந்திருந்த டப்பாக்கள் ஒரு சிலவற்றிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும்