Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Naanariven
Unnai Naanariven
Unnai Naanariven
Ebook91 pages50 minutes

Unnai Naanariven

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465988
Unnai Naanariven

Read more from Parimala Rajendran

Related to Unnai Naanariven

Related ebooks

Reviews for Unnai Naanariven

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Naanariven - Parimala Rajendran

    18

    1

    மனதின் இறுக்கத்துடன் நின்று கொண்டிருந்தான் பரணி. கோடீஸ்வரன், நம்பர் ஒன் தொழிலதிபர், பிஸினஸ் மேக்னெட் என புகழப்படும் சடகோபன், அவனையே பார்த்தபடி இருந்தார்.

    இதுதான் உங்க முடிவா?

    "இப்பவும் சொல்றேன்… நீ தேவையில்லாம என் பர்சனலில் தலையிடாதே...’’

    எது பர்சனல், எங்கம்மா இருந்த இடத்தில், உங்களுக்கு அறுபது வயசுக்கு மேலே, ஒருத்தியை கொண்டு வருவீங்க, அதுவும் பத்து வயசு பையனோட அதை நான் ஏத்துக்கணும் அப்படித்தானே...

    திரும்பவும் சொல்றேன்... நீ என் மகனாக இருந்தாலும் என் அந்தரங்க விஷயத்தில் நுழைறயதை நான் அனுமதிக்க மாட்டேன்...

    புரியுது. கடவுள் தெரியாதனமாக உங்ககிட்டே காசை அள்ளி இறைச்சுட்டாரு. எத்தனையோ தப்புகள், திரைமறைவில் நீங்க நடத்திட்டுதான் இருக்கீங்க. அது எல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம்னுதான் இதுவரைக்கும் வாய்மூடிட்டு இருந்தேன்...

    இப்ப கல்யாணமே பண்ணிக்க முடிவு பண்ணின பிறகு என்னால பேசாம இருக்கமுடியாது.

    என்ன செய்வே?

    வீட்டை விட்டு வெளியே போவேன்...

    "தாராளமாக போ... நீ என் மகனே இல்லைன்னு அறிவிச்சுட்டு போறேன்... நான் சுயமாக சம்பாதிச்சு சேர்த்து வைத்த சொத்திலும் சல்லி காசு தரமாட்டேன்...’’

    நீங்க சம்பாதித்த பணத்தில் எதுவும் எனக்கு வேண்டாம். ஆனா எங்கம்மாவுக்கு தாத்தா சீதனமாக கொடுத்த ஊட்டி டீ எஸ்டேட்... அதை எடுத்துக்க உரிமை எனக்கு இருக்கு. அதை மட்டும் என் பெயருக்கு எழுதி கொடுங்க. உங்க சங்காத்தமே வேண்டாம்னு நான் ஒதுங்கி போறேன்...

    நிஜமாகத்தான் சொல்றியா?

    நீங்க உங்க முடிவில் உறுதியாக இருக்கிறவரை என் முடிவும் இதுதான்...

    தாராளமாக அதை எடுத்துக்க ஆனா அதுக்கு பிறகு எந்த காரணம் கொண்டும் சொத்தில் பங்கு கேட்டு என் முன்னால் வந்து நிக்கக் கூடாது...

    இப்பச் சொல்றேன். உங்களுக்கு பிள்ளையாக பிறந்ததுக்கு வெட்கப்படறேன். உங்க பிள்ளையாக இருந்தும், உங்ககிட்டே இருக்கிற கெட்ட குணநலன் எதுவுமில்லாமல் எங்கம்மாவை கொண்டு பிறந்ததுக்கு பெருமைப்படறேன். இனி எந்த காலத்திலும் உங்களை தேடி வரமாட்டேன். இது சத்தியம். நான் ஊட்டிக்கு கிளம்பறேன். முறைப்படி அதற்கான டாகுமெண்ட் எல்லாம் அனுப்பி வைங்க...

    கோபமாக வெளியேறி, வாசலில் நின்ற மாருதியை, அதே வேகத்துடன் கிளப்புகிறான் பரணி. மனதின் கொந்தளிப்பு, அவன் கார் ஓட்டும் வேகத்தில் தெரிகிறது.

    ஊட்டியை ஒட்டிய மலை கிராமம்... பசுமை அழகுடன் கண்ணுக்கு குளிர்ச்சியை அள்ளி தந்தது.

    அந்த கழனிபேறு கிராமத்தின் ஜனத்தொகை மிகவும் குறைவு. ஐம்பது வீடுகளுக்குள்தான் இருக்கும்.

    எல்லாருமே, தோட்டத்தில், டீ எஸ்டேட்டில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்.

    பிள்ளைகள் தலையெடுத்து தான், இப்போது வேலைக்காக வெளியூருக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

    பவானி, வளைந்த தன் கால்களை இழுத்து நடந்தபடி, இடுப்பில் தண்ணீர் குடத்துடன் ஓட்டு வீட்டின் உள்ளே வந்தாள்.

    உலையில் அரிசியை போட்டுக் கொண்டிருந்த செண்பகம் மகளைப் பார்த்தாள். கண்களில் கவலை தெரிந்தது.

    "பதினாறு வயது முடிந்துவிட்டது. அழகு ரதியாக பார்க்க லட்சணமாக இருந்தாலும், இவளுடைய வளைந்த காலை பார்த்து நொண்டி, நொண்டி நடக்கும் இவளை, யார் கல்யாணம் பண்ணப் போகிறான்.

    இவளை நான் எப்படி கரை சேர்க்க போகிறேன்."

    தண்ணி நிக்க போகுது. இன்னொரு குடம் புடிச்சிட்டு வரட்டுமா

    வேண்டாம் பவானி, போதும். காலையில் வெறும் வயிறோடு இருக்கே சுடுகஞ்சி குடிக்கிறியா

    குளிருக்கு புடவை மேல் போட்டிருந்த ஸ்வெட்டரை அவிழ்த்து, ஆணியில் மாட்டியவள்.

    அண்ணன் இன்னைக்கு வருதா?

    ஆமாம். வந்துட்டு அரை மணியில் கிளம்பிடுவான். மேட்டுப் பாளையத்தில் வேலை இருக்காம்

    அண்ணன் வந்ததும் நான் காலேஜில் சேருவதை பத்தி கேட்கணும்

    "உனக்கு மனசில் அந்த ஆசை வேறு இருக்கா உன்னை அவன் படிக்க வைப்பான்னு நினைக்கிறியா... கனவு கணாதே பவானி அவனுக்கு நம் மேலே துளியளவு கூட அக்கறை இல்லை.

    உங்களைப் பெத்தவன், உலகத்தை விட்டு போன பிறகு, கூலி வேலை பார்த்து தான் நான் தனி மனுஷியா நின்னு வளர்த்தேன்.

    சொந்தபந்தம் ஆதரவு எதுவுமில்லை, கடனை வாங்கி மதனை, காலேஜ் படிப்பு படிக்க வச்சேன். நாலு வருஷமா, விற்பனை பிரதிநிதியா ஏதோ பெரிய கம்பெனியில் மேட்டுபாளையத்தில் வேலை பார்க்கிறான். வீட்டு செலவுக்கு கூட காசு தர்றதில்லை. புதுசா பைக், கலர், கலராக சட்டைன்னு பெரிய இடத்து பிள்ளை போல வளைய வர்றான்.

    நீயும், நானும் கிழிசலை தைச்சு தான் கட்டிக்கிட்டு மானத்தை மறைச்சு வாழ்ந்துட்டு இருக்கோம்.

    அவனை நம்பி எந்த பிரயோசனமுமில்லை பவானி நீ ஆசைப்பட்டு ஏமாந்து போகாதே..."

    "இல்லம்மா, அண்ணன் கிட்டே கெஞ்சி கூத்தாடியாவது

    Enjoying the preview?
    Page 1 of 1