Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Kaadhalikkirean Please...
Amma Kaadhalikkirean Please...
Amma Kaadhalikkirean Please...
Ebook93 pages36 minutes

Amma Kaadhalikkirean Please...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.

Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).

Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"

Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation

Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.

Married to Priya Kalyanaraman , also a journalist

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126003892
Amma Kaadhalikkirean Please...

Read more from Rajashyamala

Related to Amma Kaadhalikkirean Please...

Related ebooks

Reviews for Amma Kaadhalikkirean Please...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Kaadhalikkirean Please... - Rajashyamala

    http://www.pustaka.co.in

    அம்மா காதலிக்கிறேன் ப்ளீஸ்...

    Amma Kaadhalikkirean Please…

    Author:

    ராஜசியாமளா

    Rajashyamala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajashyamala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    சாந்தி பஸ்ஸில் ஏறும்போது இருந்த வெயில் அவள் இறங்கும்போது விடைபெற்றுப் போயிருந்தது. கைப்பையை இறுக்கிக்கொண்டு அடித்துப் பிடித்து இறங்கியவள், பிளாட் பார்மில் ஏறி அப்படியே ஒரு நிமிடம் நின்றாள். முகத்தில் சில்லென்று வீசிய காற்றை சுகமாய் அனுபவித்தாள். அதுவரை பேருந்துக்குள் புளிமூட்டையாய் அடைபட்டுக் கிடந்தவளுக்கு இந்த மாலைநேரக் காற்று புத்துயிர் தந்தது. மெல்ல அதை அனுபவித்தபடி நடந்தாள். வழியில் புடலங்காயும், வெண்டையும் பிஞ்சாய் இருப்பதைப் பார்த்து அரை அரைக் கிலோ வாங்கிக் கொண்டாள்.

    வீட்டில் செருப்பை உதறும் போதே அத்தையின் கணீர்க் குரல் வாசல்வரை கேட்டது. எப்போது வந்தார்? மதியம் வந்திருப்பார்கள்! பையை தன் அறையில் வைத்துவிட்டுப் பின் பக்கம் போய் சில்லென்ற தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள். பாதி அலுவலக டென்ஷன் குறைந்தது போல் இருந்தது. சந்தன சோப்பை குழைத்து மணக்க மணக்க முகத்தில் தேய்த்துக் கழுவினாள். முழு புத்துணர்வு பெற்றவளாய் முகத்தைத் துடைத்துக் கொண்டு பவுடர் ஒத்தடமும் புதுப்பொட்டுமாய் சமையலறை நோக்கிப் போனாள்.

    அத்தை, அம்மாவிடம் ஏதோ சூடாய் வம்பு பேசிக் கொண்டிருந்தாள்.

    பாரேன், என்ன தைர்யம் இருந்தா அந்தப் பொண்ணு இப்படி செஞ்சிருக்கும்! என்கிட்டயே 'பையைத் தைச்சுண்டு வரேன் ஆன்ட்டி'னு சொல்லிட்டுப் போச்சு. சாயந்திரம் பார்த்தா அவ வீட்ல ஒரே அழுகைச் சப்தம். என்னனு கேட்டா, லெட்டர் எழுதி வச்சுட்டு, அந்தப் பொண்ணு எவன் கூடவோ ஓடிப் போயிருக்காம். பட்டப் பகல்ல, என் கண் முன்னாடி பையோட போயிருக்கா.

    அத்தை நீட்டி முழக்கிச் சொல்ல, அம்மா ஒரு நிமிடம் பில்டர் தட்டுவதையும் மறந்து அத்தையைப் பார்த்தாள்.

    நிஜமாவா?

    பின்ன, இல்லையா?

    அதுக்கு இல்ல, கேட்டாலே பகீர்ங்கறது

    அப்படித்தான் இருக்கும். ரெண்டு பெண்ணைப் பெத்தவ. ஆனா, கவலையே படாதே. உன் மூத்த பெண் ராஜிக்கு நல்லபடி கல்யாணம் நடக்கலையா? குழந்தை ஒருத்தரை நிமிர்ந்து பார்த்திருப்பாளா, அதே மாதிரிதான் சாந்தியும். நீ ஏன் அனாவஸ்யமா கலங்கறே?

    பெண்ணைப் பெத்துட்டு கலங்காம, கவலைப்படாம இருக்க முடியுமா? இதைக் கேட்டுக் கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்த சாந்திக்கு சற்றே அலுப்பாய் இருந்தது. அம்மா எப்போதும் இப்படித்தான்.

    'பெண்களைப் பெத்து வச்சிருக்கேனே. வயித்துல நெருப்பைக் கட்டிண்டிருக்கேனே. காலம் கலிகாலமாச்சே. எவனாவது எம் பெண்களை இழுத்துட்டு ஓடாம இருக்கணுமே' என்ற புலம்பல் இரு பெண்களில் மனதையும் ரணமாக்கும்!

    ராஜி தனக்குத் திருமணம் நிச்சயமானவுடன் நிஜமாகவே நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். இவளைப் பார்த்துப் பரிதாபப் படவும் அவள் தயங்கவில்லை.

    கிடைத்த தனிமையில் வாய் திறந்து தங்கையிடம் புலம்பி விட்டாள். ஆச்சு அடுத்த மாசத்தோட - என் கல்யாணத்தோட - எனக்கு விடுதலை கிடைச்சுடும் சாந்திமா, பாவம். நீ தான் அம்மாட்ட தனியா மாட்டி அவதிப்படப்போறே.

    அக்கா அக்கறையாய்ச் சொன்னதுகூட அவளுக்கு உண்மையாகவே பட்டது. இரு பெண்களும் அந்த வீட்டில் எத்தனை தடைகளை அனுபவித்து விட்டார்கள். பாவாடை - தாவணி, புடவை தவிர சுரிதார் கூடப் போடக்கூடாது. ஒற்றைப் பின்னல் தான், அதுவும் பின்னல் முன்பக்கம் வந்து விழக் கூடாது. வாசலில் நிற்கக் கூடாது. ஜன்னலருகே உட்காரக் கூடாது. கலகலவென்று சிரிக்கக் கூடாது. தோழிகளுடன் பார்க், சினிமா, பீச் என்று சுற்றக் கூடாது... இன்னும், இன்னும்... கூடாது... கூடாது... கூடாது...

    இப்படி எத்தனை கூடாதுகள்! அதுவும் இந்தக் காலத்தில்.

    இவள் கல்லூரி படிக்கும்போது தோழிகள் கூட, உங்கம்மா நல்லா இருக்காங்களா? என்று கேட்க மாட்டார்கள். ஜெயில் சூப்பிரிண்டென்டன்ட் நல்லா இருக்காங்களா? என்றுதான் கேட்பார்கள்.

    இதே ராஜி திருமணமான பின் தாய்வீடு வந்தால், அவள் வரை நிலைமையே தலைகீழா மாறியது. ஒரே உபசாரம்தான்.

    ராஜி ஒருமுறை அம்மாவிடம் பொறுமியே விட்டாள்.

    "கல்யாணத்துக்குப் பிறகு நான் ஜன்னலடியில நிக்கலாம், சுரிதார் போடலாம், சிரிக்கலாம், உரக்கப் பேசலாம் இன்னும் இதுவரை எதெல்லாம் செய்யக் கூடாதுன்னு

    Enjoying the preview?
    Page 1 of 1