Sila Nerangalil Sila Manushigal
By Rajashyamala
()
About this ebook
Inspired by mother Lakshmi Rajarathnam, started to write from the age of 10 in kids magazines and even won a prize in Balamitra.
Written more than 250 short stories, 30 novels and serials in all leading magazines like Kumudam, Kalki, Devi, Rani, Amuthasurabi, Penmani, Kanmani, Malaimadhi, Ranimuthu etc. Also, written many dramas for All India Radio (AIR).
Won Dinamalar short story prize for the story "Jeevanadigal Vatruvadillai"
Recent Kumudam short story Kalasam was a historical story which got lot of appreciation
Having given 100s of Bharathanatya performances, currently running a dance class and also interested in paintings.
Married to Priya Kalyanaraman , also a journalist
Read more from Rajashyamala
Kannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsIthanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Suriyan Theyumo? Rating: 0 out of 5 stars0 ratingsUyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsThalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Alli Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsMaya Pozhuthugal... Rating: 4 out of 5 stars4/5Annaparavai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsRajashyamalavin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sila Nerangalil Sila Manushigal
Related ebooks
Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Uthaya Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsItharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5Vanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsMalarndha Malarchudare! Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Ithu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsNesa Nadhikaraiyil Rating: 3 out of 5 stars3/5Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsIrai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsMuthamitta Soppanangal Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Anbirku Thalaivanangu Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Anbulla Alli Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sila Nerangalil Sila Manushigal
0 ratings0 reviews
Book preview
Sila Nerangalil Sila Manushigal - Rajashyamala
http://www.pustaka.co.in
சில நேரங்களில் சில மனுஷிகள்
Sila Nerangalil Sila Manushigal
Author:
ராஜசியாமளா
Rajashyamala
For more books
http://www.pustaka.co.in/home/author/rajashyamala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
*****
அத்தியாயம் 1
அபிநயாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. இதுவரை வாழ்வில் எத்தனை இனிமைகளைத் தொலைத்திருக்கிறாள்!
தரை முட்டிக் கிளம்பி நின்று பனி தாங்கி நிற்கும் புற்களின் மீது கைகளை அளையும் சுகம்…
சின்ன வாய் வைத்து பருக்கை சோறை அலகால் கொத்திக் கொத்தித் தின்னும் சின்னஞ்சிறு குருவி...
கிளை விட்டுக் கிளை சர்க்கஸ் வித்தைக்காரரைப் போல் தாவிக் குதிக்கும் அணில்.....
பூப்பந்தாய்த் துள்ளி ஓடும் பூனைக் குட்டி...
அரிசிப் பல்காட்டி சிரித்து மயக்கும் அடுத்த வீட்டுக் குழந்தை...
இதோ கறுப்பு வார்னிஷ் அடித்தது போல் கருநிறத்தில் இப்போது கரையும் காகம் வரை…
எத்தனை கோடி இன்பம் வைத்திருக்கிறான் இறைவன். மனிதனுக்கு இதை அனுபவிக்க கணநேரப் பொழுதிருக்கிறதா? வெந்ததையும் வேகாததையும் தின்றுவிட்டு அலுவலகம் ஓடி.... மாலை தொலைக்காட்சியில் தொலைந்து போகும் மனிதர்களால் சூரிய உதயத்தையும், நிலவின் வருகையையும், காற்றின் வருடலையும், பறவைகளின் இசையையும், மிருகங்களின் விளையாட்டுக்களையும், குழந்தைகளின் சில்மிஷங்களையும் ரசிக்க எங்கே முடிகிறது?
அபிநயா கடந்த ஐந்து வருடங்களாய் கணவன் வீட்டில் இத்தனை ரசனைகளையும் பூட்டி வைத்துத்தானே வாழ்ந்திருக்கிறாள்! மாமியார், மாமனார், மைத்துனர்கள், நாத்தனார் என்று ஒவ்வொருவர் தேவைகளையும் கவனித்து, சமைத்து, துவைத்து, வீடு பெருக்கி மெழுகி... அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும். இரவு படுக்க மணி பதினொன்று ஆகிவிடும். இதில் குருவியாவது அணிலாவது? இத்தனை செய்தும் அவர்களுக்குத் துளியாவது நன்றி இருந்ததா? பழத்தைத் தின்று சாற்றையெல்லாம் எடுத்துக் கொண்ட பின், கொட்டையை எறிந்துவிடுவது போலல்லவா தூக்கியெறிந்து விட்டார்கள்!
எதை மறக்க நினைத்து மொட்டை மாடி வந்து நின்றாளோ, அங்கேயே கடைசியில் நினைவு வந்து நிற்க, கண்கள் கலங்கி விட்டன.
ஏய், அபி... என்ன மாடிக்கு வந்து தனியா அழுதுகிட்டு இருக்கியா? சந்தேகப்பட்டுத்தான் பின்னாடியே வந்தேன்.
அக்கா சங்கீதா வந்து இதமாய்த் தங்கையைத் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்ட அபிநயா, அக்காவைப் பார்த்துச் சிரித்தாள்.
இல்லக்கா...
என்ன இல்லக்கா. கண் கலங்கி இருக்கே?
என்னக்கா செய்ய? என்னை நானே கட்டுப்படுத்திக்கத்தான் பார்க்கறேன். இயற்கையைப் பார்க்கும்போது மனசு லேசாகுது. ஆனா, திரும்ப பாரம் ஏறிடுதே
மதில்சுவர் மேல் அமர்ந்தாள் அபிநயா. அக்கா சற்று யோசித்தாள். தங்கை அருகே சென்று இதமாகக் கேட்டாள். மனசை திசைத் திருப்ப ஏதாவது வேலைக்குப் போறியா?
அக்கா சொல்லும் யோசனை சரியென்றே பட்டது. வேலைக்குப் போவதால் மனசும் சூழ்நிலையால் மாறும். வருமானமும் வரும். எத்தனை நாட்கள் சும்மா அக்கா வீட்டில் உட்கார்ந்து சாப்பிட முடியும்? அக்காவும் மாமாவும் நல்லவர்கள் தான். அதற்காக? அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறதல்லவா?
நல்ல யோசனைதான்க்கா. முயற்சி செய்யறேன். பக்கத்து ஸ்கூல்ல முதல்ல முயற்சி பண்ணட்டுமா?
பண்ணேன். கூடிய சீக்கிரம் என் பழைய அபியைப் பார்க்கணும். சரி கீழே போலாமா? மாமா வர்ற நேரம். விளக்கேத்தணும்...
போகலாம்
என்று மதில்சுவரின் மீதிருந்து தாவிக் குதித்தவள், அக்காவின் தோள் மீது கை போட்டுக் கொண்டு நடந்தாள். இருவரும் படி இறங்கினார்கள்.
அக்கா, சின்ன வயசுல நாம எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கோம். இப்படி எவ்வளவு சிரிச்சிருப்போம். மகிழ்ச்சியைத் தவிர ஏதாவது நமக்கு அப்பத் தெரியுமா?
எல்லாருக்குமே குழந்தைப்பருவம் வசந்தகாலம் அபி. நாம ரெண்டு பேருமே ஆங்கில இலக்கிய மாணவிகள்தானே? ஹென்ரி வாகன், வர்ட்ஸ்வர்த் எல்லாம் படிச்சதில்லையா? குழந்தைப் பருவத்துக்குத் தாவி ஓட எத்தனை ஏக்கம் தொனிக்கும் அவங்க கவிதையில்.
இப்படி இலக்கியம் பேசியெல்லாம் ரொம்ப வருஷமாச்சு அக்கா.
லைட்டைப் போட்டாள் அபிநயா. ஒரு நொடி தங்கையை ஆழ்ந்து நோக்கிவிட்டு, சங்கீதா போய் விளக்கேற்றினாள். ஊதுபத்தி கொளுத்திவிட்டு, நமஸ்கரித்தாள். குங்குமத்தை தன் நெற்றியில் இட்டுக் கொண்டு தங்கையின் நெற்றியில், தானே வைத்துவிட்டாள்.
எதுவுமே நிரந்தரம் இல்ல அபிம்மா, ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அது கடந்து, கல்யாணங்கற ஒரு கட்டத்துல காலெடுத்து வச்சோம். பொறுப்பு கூடிச்சு. சுமை கூடிச்சு. அதையும் மீறி இப்ப உனக்குப் போதாத காலம். இதுவும் மாறும். திரும்பச் சந்தோஷம் வரும். கவலைப்படாதே. உள்ள எத்தனையோ புத்தகங்கள் இருக்கு. போ... போய்ப் படி. மனசு லேசாகும். கவலை மறக்கும். போடாம்மா.
அபிநயா எழுந்து உள் அறைக்குச் சென்றாள். அவளையே பார்த்தபடி நின்றாள் சங்கீதா. துள்ளித் திரிந்த அபிநயாவா இது? எத்தனை அருமை பெருமையாய் மணம் முடிக்கப்பட்டாள்! இன்று இப்படி சிறகொடிந்த பறவையாய்... ஏன்? யாரை நோவது?
*****
அத்தியாயம் 2
பெயருக்குத் தகுந்தபடி அபிநயமும் சங்கீதமுமாய்த்தான் திகழ்ந்தது அவர்கள் குடும்பம்.
அப்பா லோகிநாதனுக்குக் காந்தியக் கொள்கைகளின் மீது அதீதப் பற்று. அதனால் வாழ்வை எளிமையாய் அமைத்துக் கொண்டார். அவர் மனம் புரிந்த மங்கையாய், மணம்புரிந்த காந்திமதி விளங்கினார். அன்பும் அறனும் உறைந்த வீட்டில், பிறந்த பயனாய் இரண்டு பெண் குழந்தைகளும் பண்புடன் வளர்ந்ததில் வியப்பில்லை. குழந்தைகள் புத்திசாலிகளாகவும் இருந்தார்கள். பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று வெளியேறினார்கள் இருவரும்.
சங்கீதா, ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. கடைசி வருடம் படிக்கும் போதுதான் தங்கை, பள்ளி இறுதியை முடித்திருந்தாள். அக்காவின் இலக்கியத் தாக்கம் இவளையும் தொற்றிக் கொள்ள, அபிநயாவும் ஆங்கில இலக்கியத்திலேயே சேர்ந்தாள்.
சங்கீதா பி.ஏ. முடித்தவுடன், ஒரு வங்கி ஊழியரை மகளுக்கு முடித்துவிட்டார் லோகிநாதன். மாப்பிள்ளை கண்ணன், இவர்களின் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டவனாய் நல்லவனாய் அமைந்திருந்தான். அந்த சந்தோஷமோ என்னவோ, நிம்மதியாய்க் கண்மூடிவிட்டார் லோகிநாதன்.
காந்திமதியால் கணவர் பிரிவைத் தாள முடியவில்லை. சின்ன மகள் வாழ்வுக்காக உயிரைக் கையில் பிடித்துக்