Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anandha Alaigal
Anandha Alaigal
Anandha Alaigal
Ebook95 pages47 minutes

Anandha Alaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateOct 4, 2016
ISBN6580105701560
Anandha Alaigal

Read more from Vidhya Subramaniam

Related to Anandha Alaigal

Related ebooks

Reviews for Anandha Alaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anandha Alaigal - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    ஆனந்த அலைகள்

    Anandha Alaigal

    Author :

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    ஆனந்த அலைகள்

    1

    கிறீச்சென்று வினோத ஒலியெழுப் பியபடி அந்த ஸ்கூட்டர், சாலையைக் கடக்க முயன்ற அந்த இளம் பெண்ணை சாலையோரம் இடித்துத் தள்ளிவிட்டு தட்டுத் தடுமாறி நின்றது.

    நந்தகுமார் முகம் சிவக்க அந்தப் பெண்ணை கோபத்தோடு பார்த்தான். பயத்திலும் விழுந்து விட்ட அவமானத்திலும் அவள் கண்களில் நீர் பளபளத்தது.

    மூளையிருக்கா? இப்படியா கண்ணை மூடிக்கிட்டு கிராஸ் பண்ணுவாங்க? நல்ல காலம் நா கவனிச்சதால லேசா இடிச்சதோடபோச்சு. இதே பஸ்ஸோகாராகவோ இருந்திருந்தா இந்நேரம் சட்னியாகி இருப்ப.

    அவள் உதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள். கை முட்டியில் சிராய்த்து ரத்தத்துளிகள் எட்டிப் பார்த்தன. ஆட்கள் இரண்டு மூன்று பேர் அருகில் வந்து என்னாச்சு ஸ்கூட்டர்லேர்ந்து விழுந்துட்ட்யாம்மா? ஏன் சார் பார்த்து கூட்டிட்டு போவக்கூடாது? என்று கேட்க அவன் இன்னும் எரிச்சலடைந்தான்.

    சாரி என் மேலதான் தப்பு. நீங்க போங்க அவள் கூட்டம் சேர்ந்து விட்ட கூச்சத்தில் அவனிடம் சொல்லி விட்டு துப்பட்டாவை சரியாக போட்டுக் கொண்டு பிளாட்பாரத்தில் ஏற முயல, முடியவில்லை. கணுக்கால் நன்கு சுளுக்கிக் கொண்டிருந்தது. வலி உயிர் போயிற்று. முழங்கை வேறு சிராய்ப்பில் எரிந்தது.

    என்னம்மா அடி பட்டுடுச்சா..? ஏன் சார் நீ பாட்டுக்கு தள்ளி விட்டுட்டு பேசாம போவப் பாக்கறயே. இவங்களை உன் ஸ்கூட்டர்லயே ஏத்திக்கிட்டு டாக்டர் கிட்ட காட்டி சரி பண்ணிட்டு போவக் கூடாதா..?

    அவன் ஆத்திரமும் தர்மசங்கடமுமாகப் பார்த்தான். அவள் கண்ணீர், அவனை திட்டவிடாமல் தடுத்தது.

    வண்டில ஏறு... எங்க போகணுமோ இறக்கி விட்டுட்டுப் போறேன் வண்டியோடு சேர்ந்து அவனும் உறுமினான்.

    வேண்டாம் பரவால்ல அவள் முனக, எதுக்கு? எல்லாரும் என்னைத் திட்டவா..? ஏர்றதுன்னா ஏறு. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு.

    அவள் வலிதாங்காமல் வேறு வழியின்றி ஸ்கூட்டரின் பின் இருக்கையில் ஏறியமர்ந்தாள். கையில் காசிருந்தால் ஆட்டோவில் போகலாம். அதற்கும் வழியில்லை.

    ஸ்கூட்டர் கடற்கரை சாலையில் விரைந்தது.

    எங்க போகணும்...?

    மைலாப்பூர் சாயிபாபா கோயில்கிட்ட...

    உன் அஜாக்ரதையால உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம். இப்டியா கண்ணை மூடிட்டு ரோட் கிராஸ் பண்ணுவாங்க?

    இல்ல பார்த்துதான் வந்தேன். இருந்தாலும் திடீர்னு ஒரு பயம். தலை சுத்தறாப்பல இருந்தது. தடுமாறிட்டேன். போன மாசம் இதே ரோடுலதான் எங்கப்பா ஆக்ஸிடெண்ட்ல செத்துப்போனார். அந்த நினைவும், ரத்தமும் என்னமோ பண்ணிடுச்சு. சமாளிக்கறதுக்குள்ள உங்க வண்டி மோதி விழுந்துட்டேன்.

    அவன் ஸ்கூட்டரை சாலையோரம் சட்டென்று நிறுத்தி விட்டு அவளை நோக்கி திரும்பினான். அவன் கண்களில் ஒரு வித அதிர்ச்சியும் இரக்கமும் படர்ந்திருந்தது.

    ராமகிருஷ்ணன்னு கவர்ன்மென்ட் ஊழியர். அது உங்கப்பாதானா..?

    அவரைத் தெரியுமா உங்களுக்கு?

    இல்ல பேப்பர்ல படிச்ச நினைவு கால் ரொம்ப வலிக்குதா?

    சுளுக்கு தான். வீட்ல போய் மருந்து தடவி உருவி விட்டா சரியாய்டும்.

    எப்படி செத்தார் உங்கப்பா, தப்பு இவருதா இல்ல...

    தெரியல. ஆனா அப்பா ரொம்ப சாது. எதுலயும் அவசரப்பட மாட்டார். முப்பது கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு மேல எப்பவும் போகமாட்டார். டிராஃபிக் ரூல்ஸையும் ஸ்ட்ரிக்டா பாலோ பண்ணுவார். அன்னிக்கு அவரை இடிச்ச கார்தான் தாறுமாறா வந்ததா எல்லாரும் சொல்றாங்க. கார்ல வந்தவங்கள்ளாம் பெரிய இடத்து பிள்ளைங்களாம். பணம் எல்லா இடத்துலயும் விளையாடிடுச்சு. அப்பா மேலதான் தப்புன்னு கேஸ் பதிவாய்டுச்சு. எங்களுக்குன்னு சப்போர்ட் பண்ண யாரும் இல்ல. அவங்களோட் போராடி என்ன ஆகப்போறது. உங்கப்பா திரும்பியா வந்துடப்போறார்? விட்டுடுவோம். தெய்வம் குற்றவாளியைப் பார்த்துக் கும்னாங்க அம்மா. அப்பாவோட பணமெல்லாம் இன்னும் கிடைக்கல. அது விஷயமா பார்த்துட்டுப் போகத்தான் வந்தேன்.

    ஸ்கூட்டர் ஒரு டாக்டரின் கிளினிக் வாசலில் நின்றது.

    என்ன இங்க..?

    காலைக் காட்டிடுவோம்.

    சின்ன சுளுக்குதான் சரியாய்டும்.

    சின்னதுன்னு நாம அலட்சியப்படுத்தற விஷயங்கள்தான் பின்னால பூதாகரமாக வளர்ந்து நமக்கே வேட்டு வைக்கும்.

    அவன் சாவிக்கொத்தை சுழற்றியபடி உள்ளே செல்ல, அவள் மிக சிரமப்பட்டு பின்னால் நடந்தாள். அதைக் கூட கவனிக்காமல் நடந்தான் அவன். உள்ளே போய் அவன் அமர்ந்த பிறகு அவள் நடந்து வந்ததைப் பார்த்த பிறகு தான் அவளுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் தான் பாட்டுக்கு வந்து அமர்ந்து விட்டோமே என்பது உறைத்தது.

    ஆயின்மென்ட்டும், மாத்திரையும் எழுதிக் கொடுத்தார் டாக்டர். அருகிலிருந்த பார்மஸியில் அவற்றை வாங்கி அவளிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1