Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agayam Ullavarai
Agayam Ullavarai
Agayam Ullavarai
Ebook99 pages53 minutes

Agayam Ullavarai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateDec 9, 2016
ISBN6580105701704
Agayam Ullavarai

Read more from Vidhya Subramaniam

Related to Agayam Ullavarai

Related ebooks

Reviews for Agayam Ullavarai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agayam Ullavarai - Vidhya Subramaniam

    images/image.png

    https://www.pustaka.co.in

    ஆகாயம் உள்ளவரை

    Agayam Ullavarai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    தென்னைமரம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இளநீர்க் காய்கள் கீழே இறைந்து கிடந்தன. குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்த குழந்தை ஷைலுவின் கண்களில் கோபமும் கன்னங்களில் கண்ணீர்க் கோடுகளும் உறைந்திருந்தன. ஆகாஷ் புன்னகையோடு அதைப் பார்த்தான். இளநீர்க் காய்களை மாட்டித் தென்னை மரத்தை அதன் இருப்பிடத்தில் வைத்தான்.

    என்னடா கோவம்? குனிந்து குழந்தையைத் தூக்க, அது கைகால்களை உதைத்து முரண்டு பிடித்தது.

    அம்மா உன்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க. அதானே கோவம்? தூக்கிக் கொண்டு பால்கனிக்கு வந்தான். வெளி உலகம் கண்டதும் அது அழுகை நிறுத்தி வேடிக்கை பார்த்தது.

    தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் ஜூலாவில் அதை உட்கார வைத்துவிட்டு உள்ளே போய் பிரெட்டும் பாலும் கொண்டு வந்தான். வேடிக்கை காட்டியபடி அவற்றைச் சாப்பிட வைத்தான்.

    அம்மா எப்பொ வருவாங்க? கடைவாயில் பால் வழியக் கேட்டது.

    நாளைக்கு. அதன் வாய் துடைத்தபடி சொன்னான்.

    நேத்திக்கும் இதான் சொன்ன. நாளைக்குன்னா என்ன? அது எப்பொ வரும்ப்பா?

    ஆகாஷ் உதட்டைக் கடித்துக் கொண்டான். ஈரம் படர்ந்த கண்களால் குழந்தையைப் பார்த்தான். கனிவோடு அதைத் தூக்கி முத்தமிட்டுத் தோளில் சாய்த்து முதுகு தட்டினான்.

    நாளைக்குன்னா நம்பிக்கைன்னு அர்த்தம் மகளே! அதன் காதருகில் முணுமுணுத்தபடி டேபிளின் மீதிருந்த மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தான்.

    கீழே அழைப்புமணி ஒலிக்க, பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தான்.

    குட்மார்னிங் சார்! அவனுடைய பி.ஏ. வாசன் கை காட்டினான்.

    வெயிட் பண்ணு. வந்துட்டேன். ஆகாஷ் ஷைலஜாவைக் கிளப்பிக் கீழே அழைத்து வந்தான்.

    நீ போய் இவளை கிரீச்ல விட்டுட்டு வா. அதுக்குள்ள நான் ரெடியாயிடறேன். ஷைலுவையும் அவளது கூடையையும் வாசனிடம் ஒப்படைத்துவிட்டுக் குளிக்கப் போனான். வாசன் திரும்பி வருவதற்குள் தயாரானான். வீட்டைப் பூட்டி ப்ரீஃப்கேஸைக் காரில் வைத்த சமயம் வாசன் உள்ளே நுழைந்தான்.

    போகலாமா சார்?

    ம். குழந்தை அழுதாளா?

    இல்ல. ஆனா முகம் ரொம்ப வாடி இருந்துச்சு. பாவமா இருக்கு சார். காஞ்சனா மேடம்க்கு எப்பதான் எல்லாம் சரியாகுமாம்? டாக்டர் என்னதான் சொல்றார்?

    ஆகாஷ் பதில் சொல்லாமல் பெருமூச்சு விட்டபடி காரைக் கிளப்பினான்.

    சென்னை நகரின் பல பிரதான வீதிகளில் வழுக்கிக் கொண்டு ஓடிய கார் புறநகரைக் கடந்து சற்று அமைதியாயிருந்த ஒரு கட்டடத்திற்குள் நுழைந்து நின்றது.

    கார்க்கதவைத் திறந்து இறங்கிய க்ஷணம் சொத்தென்று ஏதோ மேலே வந்து விழ பதறிப்போய் நிமிர்ந்தான். ரப்பர் பந்து.

    கண் முழுக்க மை பூசி, ரெட்டைப் பின்னல் தோளின் இருபக்கமும் வழிய பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டையையும் தூக்கி எறியக் குறி பார்த்துக் கொண்டிருந்தாள் காஞ்சனா.

    மேடம்! வேணாம் சார் பாவம். வாசன் கத்தினான். மட்டையும் எறியப்பட, ஆகாஷ் நகர்ந்து கொண்டான். குனிந்து பந்தையும் மட்டையையும் எடுத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.

    வாங்க ஆகாஷ். எதிரில் வந்த மதர் ஆனிக்குக் காலை வணக்கம் கூறினான்.

    நாலு நாளா நீங்க வரலன்னு காஞ்சனாக்கு ஒரே கோவம். எல்லாத்துக்கும் ரகளை. போய்ப் பாருங்க.

    ஆகாஷ் படி ஏறினான். எதிர்ப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்புகளும் முதியோர்களுக்கு அவர்கள் கேட்ட பொருட்களையும் கொடுத்து விட்டு, காஞ்சனா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

    உம் பேச்சு கா. நீ வர வேண்டாம் போய்டு! குரல் மட்டும் வந்தது. ஆளைக் காணவில்லை. கட்டிலுக்கடியில் ஒளிந்திருந்தாள். ஆகாஷ் தானும் தரையில் குப்புறப்படுத்து அவளைப் பார்த்தான்.

    சாரி...

    போடா, பூரி...

    சரி, வெளில வா.

    மாட்டேன்.

    அப்பொ நான் கிட்ட வரேன். அவன் நகர்ந்ததும், அவள் இன்னும் தள்ளி நகர்ந்தாள்.

    நாந்தான் சாரி சொல்லிட்டேன் இல்ல?

    நீயே வெச்சுக்க அதை. யாருக்கு வேணும். நாலு நாளா மாத்திரை எல்லாம் இதோ இப்படி வெளில துப்பிட்டேன், தெரியுமா?

    ஆபீஸ் வேலையா ஊருக்குப் போய்ட்டேன்டா செல்லம்.

    எந்த ஊருக்கு?

    கோவா.

    ஸ்வீட்டா இருக்குமே, அதுவா?

    அது ஸ்வீட். சாப்பிடறது. இது ஊர். ரொம்ப தூரத்துல இருக்கு.

    என்ன வாங்கிட்டு வந்த எனக்கு?

    டிரஸ், மாலை, ஹேண்ட்பேக்...

    காட்டு... அவள் நெருங்கி வந்து கட்டிலில் அமர்ந்தாள். அவன் பையை அவளிடம் கொடுத்தான். மெல்ல அவள் கேசம் கோதியபடி கனிவோடு பார்த்தான்.

    என்னை எப்பொ இங்கேர்ந்து கூட்டிட்டுப் போவ?

    நாளைக்கு.

    நீ ரொம்ப மோசம். எப்பொ கேட்டாலும் இதையே சொல்ற. நாளைக்குன்னா என்ன? அது எப்பொ வரும்? அவள் அவன் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.

    நாளைக்குன்னா நம்பிக்கைன்னு அர்த்தம்! அவன் கண்களில் ஈரம்

    Enjoying the preview?
    Page 1 of 1