Paravasam
By GA Prabha
()
About this ebook
Read more from Ga Prabha
Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Maya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Paravasam
Related ebooks
Vaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Vaanavil Kanavugal Rating: 5 out of 5 stars5/5Unnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Nallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsAmutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Uyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsVennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Neela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsArunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsNenjam Irandin Sangamam Rating: 5 out of 5 stars5/5Imayaga Naan Iruppean Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Krishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsKaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Un Vizhiyil Vizhunthen Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsAazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Maavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paravasam
0 ratings0 reviews
Book preview
Paravasam - GA Prabha
http://www.pustaka.co.in
பரவசம்
சிறுகதைகள்
Paravasam
Sirukadhaigal
Author :
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
https://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. இன்னொரு சுதந்திரம்
2. கண்ணாடிக் கூரை
3. கூடுகள் தேடி
4. டிப்ஸ்
5. தாய் முள்
6. தேர்வு
7. நாளை விடியும்
8. நீ எந்தன் தாயாகி
9. நீர்த் தாவரம்
10. பரவசம்
11. புண்
12. மத்தியானக் காகங்கள்
13. மரணம்
14. மானஸ சமுத்திரம்
15. வண்ணத்துப்பூச்சி கூண்டுகள்
1. இன்னொரு சுதந்திரம்
அவசரமாய் வந்ததில் மூச்சு இறைத்தது. பின் முதுகு, தலை என வேர்த்து வழிய, துடைக்கக்கூடத் தோணாமல் பூட்டிய கதவை வெறிக்கப் பார்த்தபடி நின்றார் முத்தையா. அவரைப் போலவே திக்பிரமை பிடித்து அதிர்ந்து ஓடி வந்தவர்கள் கடை முன் அமர்ந்திருந்தார்கள்.
போலீஸ் பிடிச்சிருச்சா?
அரெஸ்ட் பண்ணிட்டானா?
வேணும் பாவி… குடும்பம், மனைவி, குழந்தைன்னு இவனுக்கும் இல்லாமையா இருக்கும்?
அக்கிரமம்
ஆளாளுக்குப் பேசினாலும் அவர்கள் பேச்சில் ஏமாந்துபோன ஆதங்கம் தெரிந்தது. அவமானம் தெரிந்தது. வெளிநாட்டு மோகம் கண்ணைக் குருடாக்கியதில் இன்று ஏமாந்து நிற்கும் அவலம் நெஞ்சைக் குத்துவது புரிந்தது.
முத்தையாவுக்கு அழுகை வரும் போலிருந்தது.
நெஞ்சடைக்கப் படியில் உட்கார்ந்திருந்தார்.
நீங்களும் ஏமாந்துட்டீங்களா அய்யா?
–பக்கத்தில்.
ஆமாங்க.
எவ்வளவு பணம் தந்தீங்க?
முப்பதாயிரம்.
எங்க போவ?
குவைத்துன்னு சொன்னான். எம் பையனை அனுப்பறதுக்காகத் தந்தேன். இப்பிடிப் போயிருச்சே?
– முத்தையா தாங்கமுடியாமல் அழுதார். குருவியாய்ச் சேர்த்த பணம் பறிப்போன துக்கம். நெஞ்சடைக்கக் குலுங்கி அழுதார்.
அழாதீங்க பெரியவரே… வெளிநாட்டுக்குன்னு போய் அங்க கூலியா, கொத்தடிமையா கஷ்டப்படறதைவிட முன்னாடியே தெரிஞ்சு தப்பிச்சானே உங்க பையன்னு சந்தோஷப்படுங்க.
எல்லாம் சமாதானங்கள்தான்.
ஆசையும், நம்பிக்கையும் கலந்து சிறுகச்சிறுகச் சேர்த்த பணம். மொத்தமாய்க் கொண்டுவந்து கட்டினார். எத்தனை இனிக்க இனிக்கப் பேசினான்.
கவலைப்படாதீங்க பெரியவரே. உங்க பையன் குவைத் போக நான் ஆச்சு
என்றான். பாவி… இப்படி ஏமாற்றிவிட்டானே.
முத்தையா துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். மெதுவாக எழ முயன்றார். தள்ளாடினார். மீண்டும் உட்கார்ந்தார். ஒருவர் போய் தண்ணீர் வாங்கிக்கொண்டு வந்தார்.
இவர் சுதந்திரப் போராட்ட தியாகிங்க!
ஏமாத்துறதுன்னு வந்துட்டா தியாகியாவது ஒண்ணாவது?
சுதந்திரத்துக்குப் போராடியவராம். போராடி எதை விரட்டி அடித்தோம். இன்னும் அதிகம் ஏமாற்றம், ஊழல், துரோகம், சுயநலம், வன்முறை, அரிவாள் கலாசாரம். எங்கே போகிறோம்?
தியாகி பென்ஷன் வாங்குவதைவிட வேறென்ன சாதித்தோம் இந்த எழுபது வயதில்.
வறுமை. கல்யாணத்திற்கு நிற்கும் மகள். படித்து முடித்து பத்து வருஷம் ஆகியும் வேலை இல்லாத மகன் மாதேஸ்வரன். அவனுக்கு அடுத்து பெண். அடுத்து காலேஜ் போகும் கடைசி மகள்.
முத்தையா மாதேஸ்வரனை நம்பியிருந்தார். மாதேஸ்வரன் எம்.ஏ முடித்தான். பத்து வருஷமாகியும் நிர்ந்தர வேலை இல்லை. நல்ல வருமானம் இல்லை. இதைவிட விரக்தியும் வேதனையுமாய் அலையும் மாதேஸ்வரனைப் பார்க்கச் சகிக்கவில்லை.
வாழ்க்கை வெறும் கனவுகளிலேயே கரைந்தது.
நிறைவேறாத கனவுகளில் அத்தியாயம்.
கனவுக் கூடாரங்களாய் அலைந்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் முத்தையாவின் நண்பர் ஒருவர் கூறினார்.
மாதேஸ்வரனை வேணா குவைத்துக்கு அனுப்பேன்.
யார் வாங்கித் தருவாங்க?
அதுக்குன்னு ஏஜெண்ட் இருக்கு
என்றவர் இவனிடம் அழைத்து வந்தார். தன் ஆபீஸ், செல்போன், ஏ.சி என்று ஏஜெண்ட் பந்தாவாக இருந்தான். தேன் ஒழுகும் பேச்சில் மயங்கி விழுந்தார். கேட்காத இடத்தில் கேட்டு, கை ஏந்தி, முப்பதாயிரம் தந்தார்.
இன்று காலை அந்த நண்பர் ஃபோன் செய்தார்.
ஏஜெண்ட் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வெளிநாட்டில் அடிமைகளாக விற்றிருப்பதாகவும் தப்பித் திரும்பி வந்தவன் தந்த புகாரின் பேரில் ஏஜெண்டைப் போலீஸ் கைது செய்திருப்பதாகத் தகவல் தந்தார்.
அலறிக் கலங்கி ஓடி வந்தால் ஆபிஸை சீல் வைத்து ஏஜென்டை கைது செய்திருந்தது போலீஸ்.
அக்ரமங்க… இங்க வேலை வாங்கித் தரேன்னு இவங்ககிட்ட பணம் வாங்க வேண்டியது… கூட்டிட்டு போனவன் செய்யாத கொடுமையெல்லாம் செஞ்சி, சோறு, தண்ணிகூட தராம வேலை வாங்கியிருக்கானுங்க. கட்டாயப்படுத்தி ஒரு கிட்னியைக்கூட எடுத்து வித்துருக்கானுங்க.
விஷயத்துக்கு கண், காது, மூக்கு வைத்து வதந்தி பரவியது. முத்தையா எழுந்திருக்கத் தோணாமல் ஆபிஸ் வாசல்படியிலேயே அமர்ந்திருந்தார். கலங்கித் தவித்த மனசு மேலும் சிந்திக்க மறுத்தது.
என்ன செய்வது என்று தோன்றவில்லை.
எதற்காகச் சுதந்திரம் வாங்கினோம்?
அடிமை இந்தியாவிலேயே இருந்திருக்கலாமே நம்பிக்கையோடு?
சுதந்திரம் வந்தால் நாட்டில் பாலும், தேனும் ஓடும் என்ற நம்பிக்கையோடு போராடிய அந்த வாழ்வில் உற்சாகம் இருந்தது. துணிச்சல் இருந்தது. உண்மை இருந்தது.
ஆனால் இன்று…? ஏக்கமும், வறுமையுமே மிச்சமுமாய்…"
முத்தையா தியாகிகள் பென்ஷன் வாங்குகிறார். வீட்டில் மனைவியுடன் பொடி வகையாறாக்கள் செய்து விற்கிறார். ஊரில் பலரின் மகன்கள் துபாய், அமெரிக்கா என்று போய் கை நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து இவருக்கும் ஆசை. மகனை உசுப்பிவிட்டார். சரியான வேலை கிடைக்காமல் தடுமாறிய மாதேஸ்வரனும் சம்மதித்தான். கடைசியில் இப்படியா?
கடவுளே! ஏன் புலம்பலும், விரக்தியும் வாழ்க்கையின் வரவுகளாகிவிட்டது.
முத்தையா வீட்டுக்குச் செல்ல பயந்தார்.
வீட்டை எதிர்கொள்ளத் தயங்கியது மனசு.
மனைவியின் அழுகை. மகள்களின் உற்சாகமிழந்த முகங்கள்.
இல்லை வீட்டுக்குப் போகப் போவதில்லை.
முத்தையா அப்படியே படியில் சாய்ந்து உட்கார்ந்தார்.
கூட்டம் மெதுவாக கலைந்து விலகியது. மன உளைச்சலும், அழுத்தமும் சேர்ந்து மயக்கம் வரும்போலிருந்தது.
கவலையும், வேதனையும், பசியும் சேர்ந்து அவரை வீழ்த்தின. படியில் சுருண்டு கிடந்தார். வெயில் ஏறியது படியில் இறங்கி அவரைத் தாண்டி இறங்கியது.
தொண்டை வறண்டு இருமல் வந்தது.
எழுந்தார்… தடுமாறியது…
அப்பா…
யாரைப் பார்க்கத் தயங்கினாரோ அவன் குரல். மாதேஸ்வரன் கூடவே அவரின் மூத்தபெண்.
என்னப்பா இது…? எழுந்திருங்க போகலாம்.
எங்க…
என்னப்பா கேள்வி இது?
எல்லாருமே போயிருச்சும்மா?
முத்தையா மீண்டும் முகத்தை துணியால் மூடி அழுதார். மகள் அருகில் உட்கார்ந்தாள். மாதேஸ்வரன் பக்கத்துக் கடைக்கு ஓடினான்.
அப்பா ப்ளீஸ் அழாதீங்க… மாதேஸ்வரனை நினைச்சுப் பாருங்க அவனுக்கு நீங்கதான் ஆறுதல் சொல்லணும்.
முடியலையேம்மா! எத்தனை கனவு! மாதேஸ்வரன் குவைத்துக்குப் போவான். பணம் அனுப்புவான். நம்ம குடும்பத்து வறுமை நீங்கும். உனக்குக் கல்யாணம் நடக்கும்னு அத்தனை கற்பனையில இருந்தேம்மா. இப்படி இடியைப் போட்டுட்டானே ஏஜெண்ட் பாவி.
சரிப்பா அழறதுனால பணம் வந்துடுமா?
…..
எழுந்திருங்க…
மாதேஸ்வரன் சோடா வாங்கித் தந்து குடிக்க வைத்தான். ஆட்டோ வைத்து வீட்டுக்கு வந்தார்கள்.
இயல்பாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் சகஜமாய் இருக்கமுடியவில்லை. ஒருத்தரை ஒருத்தர் ஏறிடக் கூசி, பேச ஒரு இறுக்கம். துக்கம் விசாரிக்க வந்து போகும் உறவு, நட்பு. அவர்களின் இலவச அட்வைஸ். பேராசை பெருநஷ்டம். அநாவசியமாய் வந்துபோகும் பழமொழிகள்.
வாழ்க்கை நெருப்பில் நிற்பதுபோல் உணரப்பட்டார்கள்.
அதே நேரத்தில் பணத்தை