Kaadhal Vaibogame
By GA Prabha
2/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5Maya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Vaibogame
Related ebooks
Vennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsNishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Aazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Krishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Nenjam Rating: 5 out of 5 stars5/5Vaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Punnagai Pothum Rating: 5 out of 5 stars5/5Ullamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsVaigairai Deepangal Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsNeela Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Kanavugal Rating: 5 out of 5 stars5/5Kankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Ennuyiril Kalandhaai Rating: 5 out of 5 stars5/5Kaana Vendum Seekiram...! Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsMaavilai Thoranam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Vaibogame
1 rating0 reviews
Book preview
Kaadhal Vaibogame - GA Prabha
http://www.pustaka.co.in
காதல் வைபோகமே!
Kaadhal Vaibogamey!
Author:
ஜி.ஏ.பிரபா
G.A.Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
‘ஆழிசூழ் உலகெலாம் அரவணைத்துக் காக்கும் அன்பனே! முதல்வனே! கணபதியே சரணம்’
பவானி கரம் கூப்பி, கண்மூடி தியானித்தாள். எதிர்சுவரில் நர்த்தன விநாயகர் நின்று சிரித்தார். பதில் வணக்கம் தெரிவித்தார். ‘இந்த நாள் இனிதாகட்டும்’ என்று வாழ்த்தினார்.
இன்னும் சுற்றுப்புறம் விழிக்கவில்லை. மின்விசிறி சுற்றும் டடக், டடக் ஒலி மட்டும் நிதானமாக. அறைக்குள், மஞ்சள் நிற விடிவிளக்கின் ஒளியில், பொருட்கள் நிழல் உருவமாக நின்றது. முழுதாகத் திறந்திருந்த ஜன்னலுக்கு வெளியே பால்கனி கம்பிச் சுவரும், தாண்டி பொட்டல்வெளியும், விமான நிலையத்தின் ஒளி விளக்குகளும் தெரிந்தது.
செந்நிற விளக்கொளியுடன் ஒரு விமானம் தாழப் பறந்தது. விமானம், யானை, ரெயில் பார்க்கப் பார்க்க திகட்டாத விஷயம். முதலில் இங்கு குடி வர சிறிது தயக்கம்தான். வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே விமான நிலையத்தின் பின்பக்க இரும்பு வேலி. எந்நேரமும் விமானத்தின் ஓசை. ஆனால் இப்போது அது பழகி விட்டது.
அதிகாலை நேரத்தில் இருள் விலகாத நேரத்தில் கைப்பிடிச் சுவரருகே நின்று, எதிரில் கிடக்கும் காலி மைதானம், தாண்டி விமான நிலையத்தின் ஓடுபாதையை, இறங்கும் எழும் விமானத்தை ரசித்தபடி நிற்பது மனதுக்கு பிடித்த விஷயமாகி விட்டது.
அதிகாலைக் காற்று குளுமையாக இருந்தது. ஆடிக்காற்று என்றாலும், இன்னும் புகை மண்டலம் சூழாமல், மாசு இன்றி இருந்தது. எதிரே தெரிந்த காலியான நிலத்தில் இன்னும் கட்டிடங்கள் எழவில்லை. பரந்த மைதானமும் விளிம்பு வட்டமாய் ஆகாயமும் மனதை நிறைத்தது.
பவானி கண்மூடி நின்று மனதை அமைதியாக்கினாள். ராமா, ராமா என்று நூற்றி எட்டு முறை சொல்லி, மூச்சை இழுத்துவிட்டு நின்றதும் மனதுக்குள் குதூகலம் பிறந்தது. வந்து புகுந்த கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு சுறுசுறுப்பாய் அன்றைய தினத்துக்கு தயாரானாள்.
படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு, கதவுகளைத் திறந்து வைத்தாள். இரண்டாவது மாடியில் வீடு. தளத்துக்கு நான்கு வீடுகள் என்று மொத்தமாய் இருபது வீடுகள். ஏ.பி.சி.டி.ஈ. என்று நான்கு நான்கு வீடுகளாய் ஐந்து கட்டிடங்கள். சிலர் வாடகைக்கு. சிலர் சொந்தமாய். தண்ணீர், மின்சாரம் என்று அனைத்து வசதிகள். எல்லாவற்றையும் எடுத்துச் செய்ய சிவராமன் என்ற காரியதரிசி. நிம்மதி என்பதால் இந்த வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தார்கள் பவானி வீடு.
பவானியின் அக்காவுக்கு இங்குதான் திருமணம். பவானி பிளஸ்டூ முடித்து, டிகிரி முடித்து, இதோ இன்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் என்ற ஒரு படிப்புக்காக சேரப் போகிறாள். தங்கை ராஜி பத்தாவது.
சென்னையில் அத்தனை வீடுகளும் தனித்தனி தீவுகள் என்றாலும் இந்த விநாயகா காம்ப்ளக்ஸ் ஒரே குடும்பம். கலகலப்பும் சிரிப்பும், தோழமைக்கும் பஞ்சமில்லாத இடம்.
நாலு எட்டு நடந்தால் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வாசலிலேயே டவுன்பஸ். வீட்டுக் கதவைத் திறந்தால் அள்ளிப்போகும் காற்று. நிம்மதியாகத்தான் இருக்கிறது.
ரிடையர் ஆன அப்பாவுக்கு குறைந்த பென்ஷன். அருகில் உள்ள கம்பெனியில் கணக்கு எழுதுகிறார். வந்த பணத்தில் அக்கா கல்யாணக் கடனை அடைத்து விட்டு, கை தூசி தட்டி உட்கார்ந்தார். கல்லூரி படிப்புடன், மாலை நேரத்தில் வேலைக்குப் போய் தன் படிப்புச் செலவை, ராஜிக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்கிறாள் பவானி. அந்த காம்ப்ளக்ஸில் உள்ளவர்களுக்கு துணி தைத்துத் தருகிறாள் அம்மா. குறைந்த வருமானம். நிறைந்த மனம். ஆனந்தமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை.
அவ்வப்போது அக்கா கணவன் குமார் புயல் வீசிப் போவான். ஆறு வருஷமாய் குழந்தை இல்லை. அவ்வப்போது சீர் என்று தீனி போட்டு, எழும் புயலை அடக்குவார் அப்பா.
இப்போதும் அதற்காகத்தான் சென்றிருக்கிறார் அப்பா. போரும், அமைதியுமாகத்தான் செல்கிறது வாழ்க்கை.
பவானி அன்று கல்லூரிக்குப் போக வேண்டியதை நினைத்தாள்.
புதுக் கல்லூரி. கோர்ஸ். சின்ன பட்டாம்பூச்சி வயிற்றில். இதுவரை படித்தது பெண்கள் கல்லூரி. இது கோ எஜுகேஷன். என்ன பிரச்சினைகளோ? எது வந்தாலும் சமாளிக்கலாம்.
மனதில் தைரியம் வலுப்பெற மீண்டும் விநாயகரை வணங்கி, கீழே இறங்கி வந்தாள். வாசல் கேட்டில் துணிப்பையில் பால் பாக்கெட் இருந்தது. லெட்டர் பாக்ஸில் ஒரு பத்திரிகை கிடந்தது. சிவராமனுக்கு வந்த பத்திரிகை.
குட்மார்னிங் பவானி
சிவராமனே வந்துவிட்டார்.
குட்மார்னிங் அங்கிள். நேத்து தபால் எடுத்துக்கலையா?
நைட் வரவே ஒரு மணி. ஸோ டயர்ட். படுத்துட்டேன்
பரணியும் இல்லையா?
தூங்குமூஞ்சி இன்னும் எழுந்துக்கலை...
யார் தூங்குமூஞ்சி. இதோ ஐ’ம் ரெடி
பரணியின் குரல் பின்னால் கேட்டது. என்ன பத்திரிகை?
கல்யாணம். யாரோ கபாலகிருஷ்ணனுக்கு
-பவானி.
என்னது!
பரணி அதிர்ந்தான். க.பாலகிருஷ்ணன் அது
ஓஹோ! மாத்திட்டீங்களா?
சித்தப்பா! தேவையா இது. தமிழ் தெரியாதவங்களை குடி வைக்காதீங்கன்னா கேக்கறீங்களா?
க பக்கத்துல புள்ளி சின்னதா இருக்கு
-பவானி.
கண்ணை டெஸ்ட் பண்ணு... வயசாகுதுல்ல
கடவுளே!
சிவராமன் சலித்துக் கொண்டார். எப்பப்பாரு சண்டைதான். ஒத்துமையா இருங்களேன்.
ஐ’ம் ரெடி
-பரணி.
பட்... ஐம் நாட்
- பவானி.
ஏன்?
தினமும் எதானும் சண்டை போட்டாத்தான் சுவாரசியமா இருக்கும் லைப். இல்லைன்னா அலுப்பா இருக்கு அங்கிள்.
எதுக்கு அலுப்பு
ஒரே மாதிரி தூங்கி எழுந்து, பல்லு தேய்ச்சு, குளிச்சு...ப்சு
எதுக்கு பல் தேய்க்கறே. ஒரு நாள் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா நிறுத்திட்டு இரேன்... என்ஜாய்
- சிவராமன்.
என்னைக்குன்னு சொல்லு. நம்ம காம்ப்ளக்ஸ் வாசிகளை வெளில அனுப்பிடலாம்
- பரணி.
பரணி!
பல்லைக் கடித்தாள் பவானி. நான் உனக்கு சாபம் தரப் போறேன்.
கொடு... தன்யனானேன்
பரணி குனிந்து வணங்கினான்.
உனக்கு ராட்சஸியாய் மனைவி அமையணும்
நன்றி
ப்சு... நேத்திக்கு பாத்த பொண்ணு சரி வரலைம்மா
சிவராமன் அலுத்துக் கொண்டார். பொண்ணு லட்சணமா இருக்கா. ஆனா குடும்பம் திருப்தியில்லை.
இருக்கட்டும் அங்கிள். இனியா பிறக்கப் போறா? எங்கியோ இருக்கா. தேடலாம்
சீக்கிரம் தேடுங்க.
பரணி முன்புறம் இருந்த அரளிப் பூக்களைப் பறிக்க ஆரம்பித்தான்.
வீட்டின் முன்புறம் சிவராமன் நிறைய பூச்செடிகளை வளர்த்திருந்தார். எல்லாவற்றையும் பறித்து கோவிலுக்கு, அங்குள்ள வீடுகளுக்கு தந்துவிடுவார். திருமணமே வேண்டாம் என்று, இறைபணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். சொந்த வீடு. கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று பென்ஷன் வருகிறது. சத்காரியங்களில் ஈடுபட்டு தன் நேரத்தை திருப்தியாக செலவழிக்கிறார்.
சிவராமனின் அண்ணன் பையன்தான் பரணி. அப்பா இல்லை. பரணி கைக்குழந்தையாக இருக்கும் போதே இறந்து