Ullamengum Alli Thelithean
By V. Usha
()
About this ebook
அருணிமாவைத் திருமணம் செய்துகொள்ள கார்ப்பரேட் கம்பெனி எம்.டி கோடீஸ்வர் எஸ்.எஸ் விரும்புகிறார். வறுமையில் வாழும் இளங்கோ அவள்மீது கொண்ட காதலில் உருகுகிறான். அருணிமா யாரைக் காதலிக்கிறாள்? இளங்கோவின் காதல் நிறைவேறியதா? எது நன்றிக்கடன் எது காதல்? அறிந்து கொள்ள வாசிப்போம் இந்நாவலை!
Read more from V. Usha
Poo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsEthanai Kodi Inbam Rating: 0 out of 5 stars0 ratingsSevvanathil Oru Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsMele Oruthi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ullamengum Alli Thelithean
Related ebooks
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsPoo Viluntha Saththam Rating: 4 out of 5 stars4/5Paavam, Malukutti Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Yarum Kettal Rating: 5 out of 5 stars5/5Neruppuden Uravu Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Vizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKoottupuzhukkal Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Nilavoliyil Pattaam Poochigal Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Osaiyilla Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsPoo Vaasam Purappadum Penney Rating: 4 out of 5 stars4/5Pennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsPichipoove Mella Vanthu Killi Po Rating: 4 out of 5 stars4/5Ivala En Magal? Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thodarkirathu Rating: 0 out of 5 stars0 ratingsNyabagangal Thee Mootum Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Vaazhthi Paadukirean! Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Un Kaiyil Ennai Koduthean Rating: 4 out of 5 stars4/5Aayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Manushigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthamitta Soppanangal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Partha Nilavu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ullamengum Alli Thelithean
0 ratings0 reviews
Book preview
Ullamengum Alli Thelithean - V. Usha
https://www.pustaka.co.in
உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
Ullamengum Alli Thelithean
Author:
வி. உஷா
V. Usha
For more books
https://www.pustaka.co.in/home/author/v-usha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
மாடியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு அருணிமா கீழே இறங்கி வந்தாள்.
அப்பா தினசரியின் நடுப்பக்கங்களுக்கு வந்திருந்தார்.
குட் மார்னிங் அப்பா... இன்னிக்கு பத்து நிமிடம் முன்னாடியே முழிப்பு வந்துவிட்டது... அஞ்சரைக்கே நான் காபி குடிச்சுட்டேன்... நீங்கப்பா?
என்றாள்.
கவனிச்சேன்மா... புது டிகாஷன், புது பால்... குட் பிகினிங் ஆஃப்தி டே...
என்று சிரித்தார் அப்பா.
எக்ஸாக்ட்லி அப்பா... சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் வாழ்க்கையை ரொம்ப உற்சாகமா வைக்குது இல்லையாப்பா?
ஆமாம்டா... இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷல் இருக்கா ஆபீஸ்ல?
ம்...
என்று ஒரு நொடி அவள் யோசித்துவிட்டுச் சொன்னாள்.
ரெண்டு ப்ரபோசல்ஸ் என் டேபிளுக்கு வந்திருக்கு அப்பா... ஒண்ணு கல்வி உதவி, அடுத்தது முதியோர் இல்ல உதவி... நேரில் விசிட் பண்ண வேண்டியது இருக்கலாம்... இன்னொரு காபி அப்பா?
இரு நான் போட்டுக் கொண்டுவரேன்...
தாங்க் யூ அப்பா...
அப்பா எழுந்து போனார்.
முகம் துடைத்து, காற்றுக்குக் கீழே உட்கார்ந்து, வியர்வை உலர்ந்ததும், கொஞ்சம் கடலைமாவு எடுத்து மாஸ்க் போட்டுக்கொண்டாள் அவள்.
வேப்பமரக் கிளைகளிலிருந்து கூவிக் கொண்டிருந்த காகங்களின் பாடல் நின்றுபோய், இப்போது அணில்களின் தொடர் சங்கீதம் ஆரம்பித்திருந்தது. தண்ணீர் கேன்கள் சுமந்த குட்டி யானை ஒன்று பொறுமையாக தெருவைக் கடக்கும் சப்தம் கேட்டது. சைக்கிள் மணி சப்தங்களும் இனிமையான சிரிப்பொலிகளும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் டியூஷன் பயணங்களை அறிவித்தன.
இந்தாம்மா... உனக்குப் பிடிச்ச மாதிரி நல்ல நுரை, நல்ல சூடு
தாங்க் யூ அப்பா...
கண்களை மூடிக்கொண்டு ரசித்து அவள் காபியை அருந்தியபடியே அப்பாவை லேசாகக் கண் திறந்து பார்த்தாள். அவரும் அதே போல கண்களை மூடியபடியே காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். நிறைய விஷயங்களில் அவள் அப்பாவைத்தான் கொண்டிருப்பதாக அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள். தோளை லேசாகக் குலுக்குவதில், எதிராளியின் கண்களை கனிவாகப் பார்த்து கவனிப்பதில், நடக்கும்போது கம்பீரமாக நிமிர்ந்து செல்வதில், சிரிக்கும்போது நாசியோரங்கள் லேசாக சிவப்பதில் என்று அப்பாவும் அவளும் ஒரே ரகம்.
நானும் இன்னிக்கு கம்பெனி வரை போய்ட்டு வரணும் அருணி... ரிடயரீஸ் யூனியன்ல சின்ன மீட்டிங்... பரந்தாமன் வரான் பூனால இருந்து…
ஓ. உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்... இல்லையாப்பா
?
ஆமாம்மா... ரிடயர் ஆனதும் அவன் தன் மகன்கிட்டே போயிட்டான். போன்ல அப்பப்ப பேசிக்கறதோட சரி. நேர்ல பாக்கணும்னு ரெண்டு பேருக்கும் ஆசை ஒரே நாள் ரிடயர்மென்ட் ரெண்டு பேருக்கும். இல்லையா?
என்று ஆர்வத்துடன் சொன்னார் அப்பா.
சரி சரி அப்பா... ஆமாம்... நல்ல நண்பர்களைப் பிரிஞ்சு இருக்கறது உண்மையிலேயே கஷ்டமான விஷயம்தான்... சமையல் நான் பண்றேன்பா இன்னிக்கு
புளி ஊறப்போட்டுட்டேன். கீரை நறுக்கி வெச்சுட்டேன். வத்தக்குழம்பு, கீரை, அப்பளம்... போதும்தானேம்மா?
ஏராளம் தாராளம்ப்பா... அப்புறம் நாமளும் சில ரிப்பேர் பார்க்கணும் அப்பா வீட்டை.
சொல்லு...
மாடில சுற்றுச்சுவர் எல்லாம் இத்துப்போய் விரிசல் விட்டிருக்கு... மழைல வேப்பமர சருகு விழுந்ததெல்லாம் நனைஞ்சு சகதியா ஆகியிருக்கு... கைப்பிடிச் சுவர்கூட ரிஸ்க்கியா இருக்குப்பா கீழேயும் வாசல்பக்கம் லேசான மழைக்கே தண்ணி தேங்குது. மேடு ஏத்தணும் அப்பா...
"செய்யலாம்மா... கொஞ்சம் வெயில் வரட்டும். இப்போ கை வெச்சா ரொம்ப இழுத்துடும்... வட்டி வேற ரொம்ப குறைஞ்சுப் போச்சு பாங்க்ல... ஸோ, ஜஸ்ட் சொல்றேன். நீ கவலைப்படாதே, செஞ்சுடலாம்...
"சம்மர்லயே செய்யலாம்பா... இருபதுவருட பில்டிங் இல்லையா? அதான்... சரிப்பா... என்று அவள் அறைக்குப் போனாள்.
அம்மாவின் நினைவுகள் எழுந்தன.
பத்தாவது படிக்கும்போது அம்மா மறைந்து போனாள். நெஞ்சு வலிக்கு எத்தனை டெஸ்ட்டுகள், எத்தனை ஸ்கேன்கள், எத்தனை மருந்துகள்? பலகீனமான உடம்பாகி இருந்ததால் அறுவைசிகிச்சை வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். மருந்து, ஊசி, மாத்திரைகள், கவனிப்பு, அன்பு என்று பெற்ற தாய்போல அப்படி பார்த்துக் கொண்டார் அப்பா. அவரின் கைபற்றி கண்ணீர் மல்க நன்றி சொல்வது போல, நாடகக் காட்சி போல விடைபெற்றுப் போய்விட்டாள் அம்மா.
அம்மா! நீதான் எனக்கு இறைவி. எப்பொழுதும் கூடவே இரு என்னை நல்வழிப்படுத்து.
பகுத்தறிவுடன் எதையும் யோசித்துப் பார்த்து, எது சரியென்று படுகிறதோ, அதைச் செய்கிற வலிமை எப்போதும் எனக்கு இருக்கும்படி உதவி செய்.
மூடிய விழிகளுக்குள் அம்மா வந்தாள். எப்பொழுதும் போல் தலை தொட்டு ஆசீர்வாதம் செய்தாள்.
அணில்களுடன் இப்போது குருவிகளும் கிளிகளும் சேர்ந்துகொண்டு, கோஷ்டி கானங்களாக இசை கேட்டது. அப்பாவின் கைவண்ணத்தில் கீரை மசியலின் வாசனை உணவின் அருமையை சொல்லத் தொடங்கியது.
2
இளங்கோ, அந்தச் சிறு அறையை ஒட்டி இருந்த சிறு வராந்தாவிற்கு வந்து நின்றான்.
இரக்கமற்ற இரவு கொடுத்த உறக்கமற்ற எட்டு மணி நேரங்கள். விழிகளில் நெருப்பைப் பற்றவைத்தது போல இருந்தது.
‘விடியாத இரவென்று எதுவுமில்லை’
எவ்வளவு அழகான வரி?
உண்மைதான். எல்லா இரவுகளும் விடிகின்றன. ஆனால் எல்லோருக்கும் விடிகின்றனவா?
இந்தியாவில் ஏறக்குறைய முப்பது சதவிகித மக்கள், வயிற்றில் பசியுடன் இரவில் படுக்கச் செல்கிறார்கள் என்கிறது ஓர் அறிக்கை. அந்த முப்பது சதவிகிதத்திற்குள் தானும் வந்து எத்தனை காலமாகிறது என்று யோசித்துப் பார்த்தான். மூன்று வருடங்களில் மெல்ல மெல்ல அந்த இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டான். உணவில்லாத ஏழையைவிட மோசமாக, உறக்கமற்ற மனிதனாகவும் மாறிவிட்டான்.
தம்பி... இளங்கோ...
என்று மூதாட்டி அழைப்பது கேட்டது.
அறையின் சொந்தக்காரப் பாட்டி.
இங்கு இருக்கேன் பாட்டி... இதோ வரேன்...
என்று வாசல் பக்கம் வந்தான்.
"நைட்டெல்லாம் லைட்டு எரிஞ்சுக்கிட்டே இருந்துச்சே தம்பி...