Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nyabagangal Thee Mootum
Nyabagangal Thee Mootum
Nyabagangal Thee Mootum
Ebook90 pages25 minutes

Nyabagangal Thee Mootum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண்ணைப் பெற்றவர்கள் தன் மகள் சிறப்பாக வாழவேண்டும் என்ற கனவுகளோடு தான் மகளை சீர்வரிசைகள் தந்து திருமணம் செய்கிறார்கள்.

வாழ போன மகள்... எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் உலக வாழ்க்கையை விட்டு பிரிந்தாள் என்பது எவ்வளவு பெரிய துயரம்.

அக்காவின் மீது உயிரையே வைத்திருக்கும் சகோதரன் அக்காவின் மரணத்துக்காக காரணத்தைத் தேடும்போது அறிந்துகொள்ளும் உண்மைகள்...

உயிரோட்டமாக ‘ஞாபகங்கள் தீ மூட்டும்’ என்ற நாவலில் வலம் வருகிறது கதையை படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580137806134
Nyabagangal Thee Mootum

Read more from Parimala Rajendran

Related to Nyabagangal Thee Mootum

Related ebooks

Reviews for Nyabagangal Thee Mootum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nyabagangal Thee Mootum - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    ஞாபகங்கள் தீ மூட்டும்

    Nyabagangal Thee Mootum

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    மேக கூட்டங்கள் மின்னல் இடியுடன் பெருமழையைப் பொழிய, அந்தி பொழுது இருட்டி கொண்டு வர, வீட்டில் எந்த விளக்கும் போடப்படாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    முன் வராந்தாவில் மேஜையின் மேல் தலை கவிழ்த்து அமர்ந்திருந்தான் பரணி.

    பின்புறத்தில் கொடியில் உலர்த்தியிருந்த துணிகளை மடித்து வைத்த யசோதா... வீடு இருள் சூழ்ந்து கிடப்பதை பார்த்து...

    பரணி வீட்டில் தானே இருந்தான். ஏன் லைட்டை போடாமல் இருக்கான்.

    பரணி, பரணி எங்கப்பா இருக்கே

    அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் இருக்க, முன் ஹாலில் இருந்த விளக்கை எரியவிட்டவள், வராந்தாவிற்கு வருகிறாள். மேஜையில் தலை கவிழ்ந்து இருக்கும் பரணியை பார்த்ததும், அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

    அக்காவை உயிருக்கு உயிராய் நேசித்தவன் ஆயிற்றே... சந்தோஷமாக வாழவேண்டிய நேரத்தில் அல்பாயுசில் போய்விட்டாளே.

    சாகக்கூடிய வயதா அது?

    நீ போய் சேர்ந்து ஒரு மாதம் ஆகியும் உன் நினைப்பு எங்களை சுத்தி சுத்தி வருதே ஆர்த்தி. என் தங்கமே... மனம் புலம்ப, பரணியின் அருகில் வந்து, அவன் தோளில் கைவைக்கிறாள்.

    பரணி... என்னப்பா... எழுந்திரு.

    மெல்ல தலை தூக்கியவனின் கண்கள் சிவந்திருக்க, கன்னத்தில் கண்ணீர் கோடுகளாய் காய்ந்திருக்கிறது.

    என்னப்பா பரணி. நீ ஆண் மகன். நீயே இப்படி தளர்ந்து போனா... பெத்தவ நான் என்ன செய்வேன்.

    முடியலைமா. கண்ணை மூடினா... அக்காவின் மலர்ந்த முகம் தான் என் கண் முன்னே நிக்குது.

    பரணி நீ நல்லா படிக்கணும். நீ ஆசைப்பட்டதையெல்லாம் இந்த அக்கா நிறைவேத்துவேன்னு அக்கா என் காதில் சொல்ற மாதிரி இருக்கும்மா.

    மனசை தேத்திக்கப்பா. நாம் அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கலை.

    கல்யாணம் முடிச்சு ஒரு வருஷம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தா அவ மேல அவ மாமியார் உசுரையே வச்சிருந்தாங்க. எப்பேர்பட்ட புருஷன் அவளுக்கு கிடைச்சிருந்தான்.

    தரையில் நடக்க விடாம தாங்கினாரே... இதெல்லாம் ஒரேடியாக அவளை பறிகொடுக்கத் தானா...

    அந்த மனுஷன் துவண்டு போய் கிடக்கிறாரு.

    கஷ்டமாக தான் இருக்கு. அத்தானின் முகத்தை கண் கொண்டு பார்க்க முடியலை. அளவுக்கு மீறி பாசம் வைக்கிறது தப்பு தான்னு தோணுது.

    நமக்கு பிரியமானவங்க, பாசமும் பற்றும் வச்சவங்க... நம்மை விட்டு நிரந்தரமாக பிரியும் போது... அந்த இழப்பை, பிரிவை தாங்க முடியலையேமா

    சரி எழுந்திரு பரணி. முகம் அலம்பிட்டு வா. காபி போடறேன் குடி, மனசுக்கு கொஞ்சம் தெம்பு கிடைக்கும்.

    யசோதா உள்ளே போக,

    மழை பெய்து ஓய்ந்திருக்கிறது. மொட்டை மாடிப் படிகளில் ஏறினான் பரணி.

    மழை பெய்து ஈரமாக இருக்கும். ஏன்ப்பா மாடிக்கு போறே

    கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்மா

    கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. வானத்தை நிமிர்ந்து பார்த்தான். இன்னும் சிறிது நேரத்தில் மழை வந்தாலும் வரும்.

    ஒரு மழை நாளில் அக்காவுடன் மாடியில் நின்றது அவனுக்கு ஞாபகம் வந்தது.

    அக்கா மழை தூர ஆரம்பிச்சுடுச்சு. வா கீழே போகலாம்.

    இரு பரணி. மழை தானே பெய்யுது வேறொன்றும் இல்லையே. ஏன் பதட்டப்படறே.

    நிமிர்ந்து வானத்தை பார்க்கிறாள் ஆர்த்தி. அவள் நிலவு முகத்தில் மழை துளிகள் பட்டு தெறிக்கிறது.

    "எனக்கு வைரமுத்து எழுதிய கவிதை தான் ஞாபகம் வருது பரணி,

    வாருங்கள் மனிதர்களே

    சிந்தும் மழையோடு

    சிநேகமாவோம்.

    ஒரு துளி உதட்டில்

    ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1