Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalathai Vendravan Nee
Kaalathai Vendravan Nee
Kaalathai Vendravan Nee
Ebook87 pages30 minutes

Kaalathai Vendravan Nee

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இவ்வுலகில் யாரும் அனாதையாக பிறப்பதில்லை காலச் சூழ்நிலையால் சிலபேர் அனாதைகளாக ஆக்கப்படுகிறார்கள்.

தனக்கென்று உறவுகள் யாரும் இல்லாத நிலையில் உலக வாழ்க்கையை வெறுக்கும் ஒருவனுக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லித் தருகிறார் பெரியவர் ஒருவர்...

அவர் மூலம் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஏக்கங்கள், ஆசைகள் இவற்றையெல்லாம் பாசமும் காதலும் கலந்து... எடுத்து சொல்லப்பட்ட கதை தான் ‘காலத்தை வென்றவன் நீ’

இக்கதையின் கதாநாயகன் நிச்சயம் எல்லாருடைய மனதிலும் நிறைந்து இருப்பான் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137806160
Kaalathai Vendravan Nee

Read more from Parimala Rajendran

Related to Kaalathai Vendravan Nee

Related ebooks

Reviews for Kaalathai Vendravan Nee

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalathai Vendravan Nee - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    காலத்தை வென்றவன் நீ

    Kaalathai Vendravan Nee

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மலைகளின் ராணி என செல்லமாக அழைக்கப்படும் கொடைக்கானல் மலையில், பசுமை நிறைந்த மரங்கள் அடர்ந்திருக்க, அந்த மலை ரோட்டில் சீரான வேகத்தில் இன்னோவா கார் சென்று கொண்டிருந்தது.

    சுந்தரம், இந்த கொடைக்கானல் டூரே உன்னாலதான்பா. நீங்களாவது குடும்பத்தோடு வந்திருக்கலாம்!

    கணபதி, தன்னருகில் அமர்ந்திருந்த சுந்தரத்தையும், டேவிட்டையும் பார்த்தார்.

    நாம மூணு பேரும் பழைய நாட்களை நினைவுப்படுத்தி, நிகழ்வுகளை பகிர்ந்துகிட்டு நாலுநாள் தொடைக்கானல் வீட்டில் இருந்துட்டு போகலாம்னுதான் புறப்பட்டு வந்திருக்கோம். சின்னஞ்சிறுசுகள்... நினைச்சா தான் கிளம்பி வருவாங்களே... அப்புறம் என்னப்பா

    டேவிட் நண்பனைப் பார்த்து புன்னகைத்தார்.

    காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. மூன்று நண்பர்களும் பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த நட்பை விடாமல் தொடர்ந்து... பேரன் பேத்தி எடுத்து விட்ட பிறகும்... ஒரே இடத்தில் பக்கத்து, பக்கத்து வீட்டில் இருந்து... நட்பைத் தொடருவது ஆச்சரியமான விஷயம் தானே.

    நம்ப வாழ்க்கையில் எத்தனை வருஷங்கள் ஓடிப்போச்சு பார்த்தியா?

    புத்தகப் பையை மாட்டிக்கிட்டு மூணு பேரும், கழனிவாசல் ரோட்டில் கைகோர்த்து நடந்தது இன்னும் மனசில் நிழலாடுது

    பழைய நினைவுகளின் ஈர்ப்போடு சுந்தரம் பேச,

    அது மட்டுமா... வாழ்க்கையில் நாம் இழந்தது பெற்றதுன்னு எத்தனையோ விஷயங்கள் நடந்துடுச்சே

    ***

    கணபதியின் செல்போன் அடிக்க,

    சொல்லும்மா சுனந்தா

    அப்பா கொடைக்கானல் போய் சேர்ந்தாச்சா

    இன்னும் இல்லம்மா... கொடைக்கானல் மலையில்தான் கார் போய்ட்டிருக்கு, போய்ச் சேர்ந்ததும் நானே கூப்பிடறேன்

    சரிப்பா உடம்பைப் பார்த்துக்குங்க... ப்ரஷர் மாத்திரை மறக்காம போட்டுக்குங்கப்பா... டேவிட் அங்கிள், சுந்தரம் அங்கிளை கேட்டதாகச் சொல்லுங்க

    ***

    யாரு கணபதி, சுனந்தவா... அந்தப் பொண்ணுக்கு உன் மேலே அக்கறை ஜாஸ்தி, என்னவோ அநாதை பொண்ணு. உங்களை அடைக்கலம் தேடி வந்ததாலே இன்னைக்கு நிம்மதியா இருக்கா

    அது கடவுளோட விருப்பம். என் கையில் எதுவுமில்லை. அது பாட்டியோட, எட்டு வயசிலே என்கிட்டே வேலைக்கு வந்தவங்க, பாட்டி வீட்டு வேலை பார்க்க, அவளை ப்ளஸ்ட்டு வரை படிக்க வச்சேன். இன்னைக்கு எனக்கு துணையே அவதானே. என் மகன் பிரபு அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டான்

    வாஸ்தவம்தான் கணபதி, பிள்ளைங்க பொழப்பைத் தேடிப் போயிடறாங்க. நீயும் நானும் ஓரளவு கடமையை முடிச்சுட்டோம். சுந்தரம்தான் இன்னும் மகளை கட்டிக் கொடுக்கணும்.

    அவளுக்கென்ன, ராஜாத்தி மாதிரி இருக்கா. இந்த வருஷம் படிப்பு முடிஞ்சதும் மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை ஜாம், ஜாம்னு நடத்திடலாம்

    நண்பனைப் பார்த்து சிரிக்கிறார் கணபதி.

    ***

    கணபதி, டேவிட், சுந்தரம் மூன்று பேரும் இணைபிரியாத தோழர்கள்.

    படித்து முடித்து, அரசு அதிகாரியாக மூன்று பேருமே வேலை பார்த்து, ஒன்றாக ரிடையர்ட் ஆனார்கள்.

    வேலையில் இருக்கும் போது வேளச்சேரியில் அருகருகே விலைக்கு வந்த மூன்று ப்ளாட்களை விலைக்கு வாங்கி, ஒரே மாதிரியில் மூன்று வீடுகளையும் கட்டி, ஆளுக்கொரு இடத்தில் வேலை நிமித்தமாய் இருந்ததால் வாடகைக்கு விட்டார்கள்.

    கணபதிக்கு பிறந்தவன் பிரபு. ஒரே மகன், படித்து, திருமணம் முடிய, கணபதியின் மனைவி, மகனின் திருமணம் நடப்பதற்கு காத்திருந்தாற்போல, ஜுரத்தில் படுத்தவள் உலகை பிரிய, தனித்து விடப்பட்டார் சேதுபதி.

    மகனின் நல்வாழ்க்கையை நினைத்து, அவன் மனைவியோடு அமெரிக்கா புறப்பட்டபோது சந்தோஷமாக அனுப்பி வைத்தார்.

    டேவிட்டிற்கு எஸ்தருடன் திருமணம்,

    Enjoying the preview?
    Page 1 of 1