Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Vasantham
Meendum Vasantham
Meendum Vasantham
Ebook115 pages35 minutes

Meendum Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அக்கா தங்கை உறவு என்பது, பந்த பாசத்தால் கடைசி வரை தொடரும். அக்காவின் காதல் நிறைவேற தங்கை துணை போகிறாள். அவள் காதல் கைகூடியதா...

கதாநாயகியான தங்கை, அக்காவிற்காக போராடி வெற்றி பெற்றாளா. அவள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன என்பதை காதல், பாசம், அன்பு, கலந்து குடும்ப பின்னணியுடன் இக்காதல் கதையை ‘மீண்டும் வசந்தம்’ என்ற பெயரில் எழுதியுள்ளேன்.

இந்த நாவல் உங்கள் மனதில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806314
Meendum Vasantham

Read more from Parimala Rajendran

Related to Meendum Vasantham

Related ebooks

Reviews for Meendum Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Vasantham - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    மீண்டும் வசந்தம்

    Meendum Vasantham

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author//parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    ஓட்டு வீட்டின் கதவு ஒருக்களித்து இருக்க, அதன் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வந்தது.

    அசந்து தூங்கும் அக்காவை பார்த்தாள் அமுதா. கனவு கண்டு கண்மூடி இதழ் விரிக்கும் அவளை பார்க்க சிரிப்பு வந்தது அமுதாவுக்கு.

    அக்கா... விடியற்காலை பொழுது எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா... இருட்டு தெரியாத காலைபொழுது. இரை தேடி புறப்படும் பறவைகளின் சப்தம். எங்கோ கேட்கும் கோவில் மணி ஓசை மனதில் ஏற்படுத்தும் பரவசம். சலக் சலக்கென்று வாசலில் தண்ணீர் தெளிக்கும் ஓசை...

    இது எல்லாத்தையும்விட, அந்த காலை நேரத்தில் நம் அம்மா அழகாக புள்ளி வைத்து போடும் இழை கோலம்.

    மனதில் உற்சாக பூக்கள் பூக்கும் தெரியுமா...

    போதுமே அமுதா இதையெல்லாம் என் அருமை தங்கை அனுபவிச்சா நான் அனுபவிச்ச மாதிரி. தயவு செய்து காலையில் மட்டும் என்னை எழுப்பிடாதே. விடியற்காலை தூக்கம் எவ்வளவு சுகம் தெரியுமா அப்பதான் கனவுகள் வரும். அதுவும் தினமும் ஒரு ராஜகுமாரன் என் கனவில் வருவான். அவனை பார்க்காமல் எழுந்தா அன்னையே பொழுதே எனக்கு சோகமாக இருக்கும்.

    ஐயோ... என் மக்கு அக்கா கனவில் வர ராஜகுமாரனை எவ்வளவு காலம் ரசிக்க போறே.

    உனக்குன்னு ஒருத்தன் வர்ற வரைக்குமா.

    உதடு சுழித்து சிரித்து கேட்பாள் அமுதா

    எதுக்குடி வேறு ஒருத்தன் வரபோறான். என் மனதில் பதிந்த அந்த அழகிய உருவம், என் இனிய ராஜகுமாரன் ஒரு நாள் என்னை தேடி நேரில் வந்து என் கைபிடித்து அழைத்து போவான்.

    அந்த நாள் வரும் வரை காத்திருப்பேன் அமுதா.

    நீ பார்க்க தான் போறே...

    நம்பிக்கையாய் சொல்லும் அக்காவை, மனவருத்தப்பட வைக்க மனது வராமல்,

    சரிக்கா, உன் நம்பிக்கை ஜெயிக்கட்டும். நேரில் பார்த்தால் என்கிட்டே சொல்லு.

    சொல்லும் தங்கையை நெஞ்சோடு தழுவுவாள் அகிலா.

    மணி ஏழாக போகுது. அகிலா எழுந்திருக்கிறாளா பாரு. கராக்டா எட்டு மணிக்கு எழுந்து, அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி ஓடுவா...

    உன்னை மாதிரி அவளுக்கு பொறுப்பில்லை அமுதா. நீ என்னோடு ஐந்து மணிக்கே எழுந்து எனக்கு எவ்வளவு உதவியாக இருக்கே. பார்வதி சொல்ல,

    அதனாலென்னம்மா. அதான் நீயே சொல்லிட்டியே நான் உனக்கு உதவியாக இருக்கேன்னு... அக்கா தூங்கட்டுமே வேலைக்கு போற இடத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கு அவளை ஒண்ணும் சொல்லாதே.

    அவளை எதுவும் சொல்லிட கூடாதே. உடனே உன் அக்காவுக்கு பரிஞ்சுட்டு வருவியே... சரி சரி... நீ வந்து காபி குடி.

    இருக்கட்டுமா... குளிச்சுட்டு சாமி கும்பிட்டு வரேன். வேறு எதுவும் வேலை இருக்குமா...

    ஒண்ணும் இல்லைம்மா. டிபன் சமையல் முடிஞ்சாச்சு. இனி மூணு பேரும் ஆளுக்கொரு பக்கம் வேலைக்கு கிளம்ப வேண்டியதுதான். பார்வதியிடம் பெருமூச்சு வெளிப்படுகிறது.

    ***

    ப்ளஸ்டூ முடித்த பிறகு, எனக்கும் படிப்புக்கும் காது தூரம். ரொம்ப கஷ்டப்பட்டு ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டேன். எனக்காக தேவையில்லாமல் காலேஜில் சேர்ந்து காசை வீணாக்காதே...

    எவ்வளவு வற்புறுத்தியும் மேற்கொண்டு படிக்க அகிலா விரும்பாததால்,

    அவள் விருப்பப்பட்டபடி வேலைக்கு போக சம்மதித்தாள் பார்வதி.

    அந்த ஊரில் இருந்த பெரிய மசாலா கம்பெனியில் வேலை கிடைக்க, சந்தோஷமாக போக ஆரம்பித்தாள்.

    படிப்பில் கருத்தாக இருந்த அமுதா படிப்பை தொடர்ந்தாள். பார்வதி அப்பள கம்பெனியில் வேலை பார்த்து மகளை படிக்க வைத்தாள்.

    காலேஜில் பீஸ் கட்ட, பத்தாயிரம். இருபதாயிரம் என பணம் தேவைப்படும் போது,

    பாங்கில் எடுத்து வரும் அம்மாவை ஆச்சரியமாக பார்ப்பாள் அமுதா.

    ஏதும்மா, இவ்வளவு பணம். நீ சம்பாதிக்கிற பணம் வீட்டு செலவுக்கே சரியாயிடும். எப்படி சமாளிக்கிறே.

    நாம ஏழை தான். இருந்தாலும் அதை மட்டும் கேட்காதே அமுதா. உன் கல்யாணம் வரைக்கும் நல்லபடியாக செலவழிக்க என்கிட்டே பணம் இருக்கு. நீ கவலைப்படாமல் நல்லவிதமாக படி.

    அதற்கு மேல் எதுவும் சொல்லமாட்டாள் பார்வதி.

    அமுதா விஷயத்தில் எதுவாக இருந்தாலும் செலவழிக்க தாராளம் காட்டும் பார்வதி, அகிலா விஷயத்தில் கெடுபிடியாகவே இருப்பாள்.

    இப்ப இது தேவையா அகிலா, செலவை சமாளிக்க முடியலை அடுத்த மாசம் வாங்கி தரேன்.

    இருவரிடமும் பாசத்தை காட்டும் பார்வதி, அக்காவுக்கு செலவு செய்ய மட்டும் யோசிப்பது ஏன் என்பது அமுதாவுக்கு புரியாத புதிராக இருந்தது.

    நீ சின்னவ இல்லையா. அம்மாவுக்கு செல்லமகள். அதுவுமில்லாமல் அவங்க ஆசைப்பட்டபடி நல்லா படிக்கிறே. அதான் உனக்கு எது கேட்டாலும் வாங்கி தர்றாங்க.

    இனிமேல் எனக்கு எது தேவைன்னாலும் உன் மூலமாக தான் வாங்கிக்க போறேன்.

    அகிலா சொல்ல,

    ஆமாம்கா. அம்மா ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னு எனக்கும் புரியலை. நீ சொன்னது மாதிரி, உனக்கு எது வேணும்னாலும் என்கிட்டே சொல்லு, எனக்கு வேணும்னு கேட்டு வாங்கி தரேன்.

    என் செல்லம்... என் தங்கை இருக்கும் போது எனக்கென்ன கவலை.

    வெகுளியாக சிரிப்பாள் அகிலா.

    படிப்பு முடிந்து ஒரு தனியார் நிறுவனத்தில் அமுதா வேளைக்கு சேர வீட்டின் ஏழ்மை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று கொண்டிருந்தது.

    ***

    "அம்மா சீக்கிரம் டிபன்

    Enjoying the preview?
    Page 1 of 1