Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Penmai Thorpathillai
Penmai Thorpathillai
Penmai Thorpathillai
Ebook93 pages34 minutes

Penmai Thorpathillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் என்றால் ஆண் வர்க்கத்திற்கு அடிமை என்ற மனப்பான்மையுடன் மனைவியை அவமானப்படுத்தும் கணவனுக்கு... இறுதியில் அந்தப் பெண் தரும் தண்டனை என்ன... அவள் குடும்பத்தில் நிம்மதியுடன் வாழ முடிந்ததா தன் பெண்களை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கினாளா என்பதை... பெண்மை தோற்பதில்லை என்ற நாவலில் சொல்லியிருக்கிறேன்.

குடும்பகதையாக எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் படிக்கும் வாசகர்களின் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806315
Penmai Thorpathillai

Read more from Parimala Rajendran

Related to Penmai Thorpathillai

Related ebooks

Reviews for Penmai Thorpathillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Penmai Thorpathillai - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    பெண்மை தோற்பதில்லை

    Penmai Thorpathillai

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    அந்த இன்னோவா கார் கல்யாண மண்டபத்தில் நுழைய அதிலிருந்து கரு நீல வஸ்தரகலா பட்டு புடவையில் அழகு தேவதையாக கணவனுடன் இறங்கினாள் வசந்தரா.

    வாங்க ராஜசேகர், வாங்க மேடம்

    அங்கே இருப்பவர்கள் ஓடி வந்து வரவேற்பதிலிருந்து அவர்கள் இருவரும் வி.ஜ.பி. அந்தஸ்த்தில் உள்ளவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

    யாருங்க அவங்க, பார்க்கிறதுக்கு சினிமா நட்சத்திர ஜோடி மாதிரி இருக்காங்க.

    ராஜசேகரை தெரியாதா, பெரிய தொழிலதிபர் இரண்டு டெக்ஸ்டைல் மில் வச்சு நடத்தராரு அவங்க ஓய்ப் வசுந்தரா, அரசு அதிகாரி நல்ல போஸ்ட் எக்கசக்க பணம் அழகாக இரண்டு பெண்கள்.

    சந்தோஷமான குடும்பம் எல்லா ஐஸ்வர்யமும் நிறைஞ்சு இருக்கு கொடுத்து வச்சவங்க.

    அப்படியா... குழந்தைகளை அழைச்சுட்டு வரலையே

    கல்யாண வயசில் இருக்கிற பெண்கள் பா. குழந்தைகள் இல்லை காலேஜில் படிச்சிட்டிருக்காங்க.

    பார்க்க வயசு தெரியலை. இரண்டு பேரும் கச்சிதமா இளம் ஜோடி போல தெரியறாங்க.

    வாழ்க்கையில் சந்தோஷமும் மனதில் புத்துணர்வும் இருக்கும் போது, முதுமைக்கூட அவங்களை நெருங்க பயப்படுது, அதான் இரண்டு பேரும் இளமையா காட்சி தர்றாங்க. கொடுத்து வச்சவங்க, நம்பளை மாதிரியா

    கல்யாணதுக்கு வந்திருந்தவர், நண்பரிடம் அவர்களை பற்றி பேசி பெருமூச்சு விட்டார்.

    பெயருக்கு பந்தியில் உட்கார்ந்து எழுந்து கொண்டு வந்த பரிசு பொருளை மணமக்களிடம் கொடுத்தவர்கள்.

    அப்ப நாங்க கிளம்பறோம். மத்தியானம் எனக்கு மீட்டிங் இருக்கு.

    தாம்பூல பையை வாங்கி கொண்டு, இன்முகத்தோடு விடை பெற்றார்கள்.

    வசுந்தரா காரில் ஏற, காரை ஸ்டார்ட் செய்த ராஜசேகர் மனைவியை பார்த்தார்.

    வசு... எனக்கு அண்ணாநகரில் கொஞ்சம் வேலை இருக்கு நீ ஒரு கால்-டாக்ஸி எடுத்துட்டு வீட்டுக்கு போறியா

    சிறது நேரம் மௌனமாக இருந்தவள்,

    இப்படி பட்டுப்புடவையும், நகையுமாக கால் டாக்ஸியில் போக எனக்கு இஷ்டமில்லை. என்னை ஆதம்பாக்கத்தில் என் தங்கை அகிலா வீட்டில் இறக்கி விட்டுருங்க.

    நான் அங்கே இருந்துட்டு சாயிந்திரமா வரேன்.

    ஓ.கே. உன் இஷ்டம்

    வீட்டு வாசல் முன் காரை நிறுத்த,

    வசுந்தரா இறங்கி கொள்ள,

    உள்ளே வந்துட்டு போங்களேன்

    இல்லை எனக்கு லேட்டாயிடும், நான் கிளம்பறேன்.

    காரில் பறந்தார்.

    செல்போன் சிணுங்க,

    இதோ வந்துட்டு இருக்கேன் டார்லிங். அதற்குள் அவசரமா இன்னும் அரைமணி நேரத்தில் உன் முன்னால் நிற்பேன்

    மூணுமாசம் உங்களை பார்க்காம... எப்படி இருந்தேன்னு தெரியலை. சரி, சரி, டிரைவ் பண்ணிட்டு இருப்பீங்க சீக்கிரம் வாங்க.

    குரலில் கரிசனத்தைவிட, காதல் மேலோங்கி நின்றது. ராஜசேகரின் ஆசைநாயகி தனுஜா... அவருக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்க தொடங்கினாள்.

    *****

    2

    அக்கா வா, வா... நீ வரேன்னு ஒரு போன் கூட பண்ணலை. என்ன தனியா வந்தியா அத்தான் வரலையா

    எங்காவது பங்க்ஷனுக்கு போய்ட்டு வர்றியா அசத்தலா டிரஸ் பண்ணியிருக்கே

    இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்குக்கா.

    போதும், போதும் கொஞ்சம் மூச்சு விட்டுதான் பேசு. கல்யாண வீட்டுக்கு போனோம். உன் அத்தான் வேலை இருக்குன்னு சொன்னாரு.

    நானும் உன்னை பார்த்து நாளாச்சு உன் வீட்டில் இறங்கிட்டேன். முதலில் ஒரு காட்டன் புடவை, எடுத்துட்டு வா அகிலா டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.

    தங்கையின் புடவையை கட்டிக் கொண்டு வந்தாள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

    உன் வீட்டுக்காரர் மதன் எல்லாம் வேலைக்கு போயாச்சா

    "ஆமாம்கா, காலை நேரம் தான் பரபரப்பாக இருக்கும், டிபன் செய்து சாப்பாடு கட்டி, எல்லா வேலயும் முடிக்கணும் உன்னை மாதிரியா... சமையலுக்கு ஒரு ஆள். மேல் வேலைக்கு ஒரு ஆள்னு வச்சுருக்கேன் எல்லாத்தையும் நான் தான்

    Enjoying the preview?
    Page 1 of 1