Muthal Vasantham!
()
About this ebook
தன் அண்ணன் மகனுக்கு தன் மகளை கல்யாணம் செய்து தர வேண்டும் என்ற ஆசை! அது நடக்காமல் போக அந்த அண்ணனையே அழிக்கும் வெறியாக மாற, ஒரு அத்தை செய்யும் வில்லி வேலையை, அண்ணனை இழந்த குடும்பம் எப்படி முறியடிக்கிறது என்பதை, பல திடுக்கிடும் திருப்பங்களுடன் சொல்கிறது இந்த நாவல். அழகாக குடும்ப கதையாக தொடங்கி, பல க்ரைம் திருப்பங்களுடன் கதை விறுவிறுப்பாக செல்கிறது! பரபரப்பான நாவல் இது.
Read more from Shruthi Prakash
Devan Vanthandi Rating: 0 out of 5 stars0 ratingsVanthal Varalakshmi!!! Rating: 0 out of 5 stars0 ratingsPalaar Rating: 0 out of 5 stars0 ratingsThalatta Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsSaravedi Rating: 0 out of 5 stars0 ratingsShruthi Prakashin Sirukathaigal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vellai Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Muthal Vasantham!
Related ebooks
Sollil Varuvathu Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Nee Irukkum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsNeerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Vannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsInithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5En Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Penmai Thorpathillai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Aval En Devathai Rating: 0 out of 5 stars0 ratingsPoove Neeyum Penthano Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Kalanthuvidu! Rating: 0 out of 5 stars0 ratingsIthayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsPogumidam Vegu Thooramillai Rating: 5 out of 5 stars5/5Kann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Kudil Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsVaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsElla Saalaikalum Kutrangalai Nokki Rating: 5 out of 5 stars5/5Ennai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsSoorasamharam Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Muthal Vasantham!
0 ratings0 reviews
Book preview
Muthal Vasantham! - Shruthi Prakash
https://www.pustaka.co.in
முதல் வசந்தம்!
Muthal Vasantham!
Author:
ஸ்ருதி பிரகாஷ்
Shruthi Prakash
For more books
https://www.pustaka.co.in/home/author/shruthi-prakash
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 1
ஜோசியர் வீட்டு வாசலில் காரை நிறுத்தினார் சிகாமணி. அவர் மனைவி பரிமளா காரை விட்டு இறங்கவேயில்லை.
காரை விட்டு இறங்க மாட்டியா?
எனக்கு சுத்தமா பிடிக்கலை!
என்ன பிடிக்கலை?
நம்ம பையன் கோபியை கேக்காம அவனுக்கு வரன் பார்க்க வந்திருக்கோம். வாழப்போறவன் கோபி. அவன் சம்மதம் கேக்காம நாம செயல்படறது சரியில்லீங்க!
இப்ப என்ன நிச்சயமா பண்ணிட்டோம்? பெத்தவங்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா பரிமளா? பெரியவன் கோபி நம்ம பேச்சை மீற மாட்டான். சின்னவன் வசந்த்னா நமக்கு அடங்க மாட்டான். நீ உள்ளே வா! ஜோசியர் சொல்லட்டும். அப்புறமா நாம பேசலாம்.!
இருவரும் உள்ளே வந்தார்கள். சில நிமிடங்கள் காத்திருந்த பின், ஜோசியர் அழைத்தார். ஏற்கனவே தெரிந்த ஜோசியர்தான்.பல சமயம் இங்கே வந்ததுண்டு. அவரிடம் ஜாதகத்தை தர, கோபி ஜாதகமா? நான்தான் பார்த்திருக்கேனே! குடுங்க!
அவர் வாங்கி சில நிமிஷங்கள் அலசினார். நிமிர்ந்தார்.
இந்த பையனுக்கு குருபலம் வந்தாச்சு! அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள்ளே கல்யாணத்தை நடத்தியாகணும். இல்லைனா, ஆறு வருஷங்கள் கல்யாணம் தள்ளிப்போகும்!
நாங்க உடனே நடத்த தயார். நல்ல வரன் இருந்தா நீங்களே சொல்லுங்க!
அப்பா கேட்க, ஜோசியருக்கு ஃபோன் வந்தது. எழுந்து போய் ஐந்து நிமிஷங்கள் போல பேசி விட்டு வந்தார்.
நீங்க வெளில தேட வேண்டாம்! அசல்ல நடக்காது. அப்படி நடந்தா, வாழ்க்கை நல்லா இருக்காது. சொந்தத்துல அத்தை மகள் இருக்காளா?
என் தங்கை பொண்ணு இருக்காளே!
அதுதான் நடக்கும். அவதான் உங்க மருமகள். அதுல மாற்றுக்கருத்தே இல்லை!
ஜாதகம் பார்க்க வேண்டாமா?
எதுக்கு? அத்தை, மாமா உறவுக்கு ஜாதகம் அவசியமில்லை! நீங்க நாள் குறிச்சுக்கலாம்!
அம்மா குறுக்கிட்டாள்.
எங்க பிள்ளை சம்மதம் வேணும். அவனை கேக்காம எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாதுங்க!
இதுதாங்க நடக்கும். கட்டங்களை உங்க பிள்ளையால தாண்ட முடியாது. அப்படி தாண்டினா, அவர் வாழ்க்கை நிம்மதியா இருக்காது! உங்க பிள்ளை சந்தோஷம், உங்களுக்கு முக்கியமில்லையா? பெத்தவங்கதான் முடிவு செய்யணும். பிள்ளைங்க இழுத்த இழுப்புக்கெல்லாம், நீங்க போகலாமா? இதுதாங்க நடக்கும். நாள் குறிங்க!
சரிங்க! பரிமளா! போகலாம் வா!
வீட்டுக்கு போய் ,பையன் கிட்ட பேசி தேதியை குறிங்க!
இரண்டு பேரும் புறப்பட்டார்கள். அம்மாவின் முகத்தில் தெளிவில்லை.
.....
எதுக்காக அந்த ஜோசியர் கட்டாயப்படுத்தறார்? வாழறவங்க விருப்பம் முக்கியமில்லையா? கோபியை கேக்க வேண்டாமா?
பரிமளா சீற, இப்ப என்ன உன் பிரச்னை? என் தங்கச்சி பொண்ணு சித்ராவுக்கு என்ன குறைச்சல்? என் தங்கை ருக்மணி அவளை பெத்த முதலே, நம்ம கோபிக்குத்தான் சித்ரானு பேசிட்டு இருக்கா! இப்ப ஜோசியர் அடிச்சு சொல்லிட்டார், அதுதான் நடக்கும்னு. அசல்ல போனா, வாழ்க்கை நல்லா இருக்காதுனு கட்டங்கள் சொல்லுது இல்லையா? நம்ம பையன் நல்லா இருக்க வேண்டாமா?
சகலமும் கேட்டபடி கோபியும், சின்னவன் வசந்தும் உள்ளே வந்தார்கள். அம்மா எல்லாம் சொல்ல, கோபி மௌனமாக இருந்தான்.
உங்கம்மாவுக்கு என் தங்கச்சி ருக்குவை பிடிக்காது. அதான் தடுக்கப்பாக்கறா! இப்ப நம்ம கோபதாபத்தை விட, புள்ளைங்க சந்தோஷம்தான் முக்கியம். அதை நீ புரிஞ்சுகோ!
இதப்பாருங்க! உங்களை கட்டிக்கிட்டு நான் இந்த வீட்டுக்கு வந்த புதுசுல, உங்க தங்கச்சி என்னை பாடாய்படுத்தினது ஊருக்கே தெரியும். அவ ராட்சசி. சம்பந்தியா மாறினா இந்தக்குடும்பமே நாறும். வேண்டாம்.நான் பட்டது போதும். என் புள்ளைங்களாவது நிம்மதியா வாழணும்!
அம்மா! இதுல எனக்கொரு சந்தேகம் இருக்கு. அத்தையும் அந்த ஜோசியரைத்தான் பாக்கறாங்க! ஒரு வேளை, அத்தை ஜோசியரை சரிக்கட்டி இந்த மாதிரி சொல்ல வச்சிருப்பாங்களோ?
வசந்த் கேட்க,
எனக்கு அந்த சந்தேகம் அப்பவே வந்தாச்சுடா. நீ சொல்லிட்டே!
ரெண்டு பேரும் வாயை மூடறீங்களா? ருக்குவை க்ரிமினல்னு முடிவே கட்டியாச்சா?
அப்பா சீற,
கோவப்படாதீங்கப்பா! தன் மகள் வாழணும்னு ஒரு சின்ன தகிடுதத்தம் செய்ய நெனச்சிருக்கலாமில்லை? அந்த ஜோசியர் இதுதான் நடக்கும்னு அடிச்சு எப்படி சொல்லலாம்? அப்படி என்ன அக்கறை நம்ம மேல?
ருக்கு என்னவோ செஞ்சிருக்காடா வசந்த்! நீ சொல்றதுதான் சரி!
குறுக்கே புகுந்தான் கோபி.
எந்த ஒரு ஆதாரமும் இல்லாம யார் மேலயும் பழி போட வேண்டாமே! அத்தை மேல கோவப்பட வேண்டாம். நாம இன்னொரு ஜோசியரை கேட்ரலாம். ஒரு செகண்ட் ஒப்பீனியன் கிடைச்சிட்டா, க்ளியர் ஆயிடும் இல்லையா? அம்மா! நானும் வர்றேன்! வேற ஜோசியரை பாத்துடலாம்!
இருவரும் புறப்பட்டார்கள்.
.....
அத்தை ருக்கு வேகமாக ஜோசியர் வீட்டிற்குள் நுழைய..
வாங்கம்மா... எப்படி இருக்கீங்க?
"அதெல்லாம் இருக்கட்டும் ஜோசியரே, அண்ணனும், அண்ணியும் வந்தாங்களா? என்ன சொன்னாங்க? நாம பேசினபடி சொன்னீங்களா?
அம்மா! எல்லாம் சொல்லியாச்சு. உங்க அண்ணனுக்கு சம்மதம் போலதான் தெரியுது. ஆனா உங்க அண்ணிதான்...
அண்ணன் வச்சதுதான் ஜோசியரே சட்டம், அவரை கன்வின்ஸ் பண்ணிட்டீங்களே அதுவே போதும். இந்தாங்க என்னோட ஒரு சின்ன அன்பளிப்பு
என்று ருக்கு பணத்தை நீட்ட...
"என்னம்மா