Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ennodu Kalanthuvidu!
Ennodu Kalanthuvidu!
Ennodu Kalanthuvidu!
Ebook134 pages31 minutes

Ennodu Kalanthuvidu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சேலையில் முள் பட்டாலும், முள்ளில் சேலைப்பட்டாலும் விளைவு சேலைக்கே என்பதை போல பெண் எந்தவித ஆசாபாசமும் கொள்ளாவிட்டாலும் அவளை பின்தொடரும் பிரச்சனைகள் அவளையே சாரும். அதுபோல இக்கதையில் வரும் கதாநாயகியான அஸ்வினியின் நிலையும், அதில் அவள் மீண்டுவர எடுக்கும் முடிவுமே கதையின் திருப்பமாகும்.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580140606457
Ennodu Kalanthuvidu!

Read more from R. Manimala

Related to Ennodu Kalanthuvidu!

Related ebooks

Reviews for Ennodu Kalanthuvidu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ennodu Kalanthuvidu! - R. Manimala

    https://www.pustaka.co.in

    என்னோடு கலந்துவிடு!

    Ennodu Kalanthuvidu!

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books
    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    பீச் ஸ்டேஷன்! காலை ஏழுமணி!

    மூச்சிரைக்க வந்து நின்ற ரயில் தன்னிடமிருந்த மனிதர்களை பொலபொலவென நெல்லிக்காய் மூட்டையைப்போல் தரையில் உதிர்த்து விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது.

    கடைசி ஆளாய் இறங்கினாள் அஸ்வினி!

    தோளில் அங்கவஸ்திரம்போல் தொங்கிய துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இடுப்பு பக்கமாய் முடிபோட்டு தொங்கவிட்டாள்.

    மழை லேசாய் தூறிக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாமல் கனத்த பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு விரைந்து நடந்தாள்.

    ரயில் அரை மணி நேரம் தாமதம்.

    'எப்போது வீட்டிற்குப் போய்... எப்போது ஆபீஸிற்கு கிளம்புவது? பஸ்ஸிற்காக வேறு தவமிருக்க வேண்டும். சே!' சலிப்புத் தட்டியது அஸ்வினிக்கு.

    பஸ் ஸ்டாண்டில் ஏக கூட்டம்.

    கூட்டத்தில் அஸ்வினியும் ஐக்கியமாகி பஸ் வரும் திசையை விழி நோகாதுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அரைமணி நேரம் விரையமானப் பிறகு மயிலாப்பூர் செல்லும் பஸ் வர முண்டியடித்து ஏறினாள்.

    பஸ்ஸை விட்டு இறங்குவதற்குள் சடசடவென மழை வேகமாய் கொட்டத் துவங்க... அஸ்வினி நொடியில் ஈரமானாள்.

    ஓட்டமும் நடையுமாய் வீட்டையடைந்தவள் பஸ்ஸரை அழுத்தினாள்.

    சில நொடிகளில் கதவு திறக்கப்பட... குணசேகரன் இவளைப் பார்த்து சிரித்தான்.

    வந்துட்டியா? அடடா... என்ன இப்படி நனைஞ்சு வந்திருக்கே? குடை எதுவும் எடுத்து வந்திருக்கலாமில்லே?"

    குடைய வேற எதுக்கு சுமக்கணும்னு வேணாமாம்னுட்டு வந்திருப்பா. ஏன்டி நேத்து வர்ற ஆளா நீ? ரஞ்சனி குணசேகரனுக்குப் பின்னால வந்து சற்றே கோபத்துடன் கேட்டாள்.

    ஸாரிக்கா... அம்மா தான்... நாளைக்குப் போயேன்னு..

    கொஞ்சினாங்களாக்கும்! நேத்தெல்லாம் எனக்கு நல்ல ஃபீவர் தெரியுமா? தனியே சமையல் அது இதுன்னு எல்லா வேலையும் நானே செஞ்சு அல்லாடிட்டேன்!

    ப்ச்... விடேன் ரஞ்சு. வந்ததும் வராததுமா... உள்ளே போ... அஸ்வினி! சொட்ட சொட்ட நனைஞ்சு வந்திருக்கேப் பார்... முதல்ல டிரஸ்ஸை மாத்து போ! குணசேகரன் பரிந்து பேசினான்.

    அஸ்வினி விரைந்து செயல்பட்டாள். நிமிடத்தில் சுடிதாரை கழற்றி நைட்டியை மாட்டிக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.

    அங்கு பக்கெட் நிறைய சோப் பவுடர் போட்டு அழுக்குத் துணிகள் ஊற வைக்கப்பட்டிருந்தன.

    வீட்டில் வாஷிங்மெஷின் இருந்தாலும், ஏனோ ரஞ்சனிக்கு பிடிக்காது. கவர் பிரிக்காமல் மூலையில் அதுபாட்டுக்கு அமர்ந்திருந்தது. வாஷிங்மெஷினை விட சூப்பர் மெஷினாய் அஸ்வினி இருக்கும் போது.... அந்த மெஷினுக்கென்ன வேலை?

    என்னக்கா... ஃபீவர்னு சொன்னே? அப்புறமும் ஏன் துணிகளை நனைச்சு வச்சிருக்கே?

    நீ நேத்தே வந்துடுவேன்னு நினைச்சேன். உனக்கு ஒத்தாசை பண்ணனும்னுதான் பவுடர்ல ஊறவச்சேன். அதான் கழுத்தறுத்திட்டியே!

    'துணியை நனைச்சு வைக்கறது ஒத்தாசையா?' தனக்குள் சிரித்துக் கொண்டாள் அஸ்வினி.

    அம்மாவும், அப்பாவும் நல்லாருக்காங்களா?

    இருக்காங்கக்கா! அடுத்த வாரம் உன்னை வரச் சொன்னாங்க! பார்க்கணும் போல இருக்காம்!

    ஏன் அவங்க இங்க வந்து பார்க்கக் கூடாதா?

    அப்பாவுக்கு மூணு நாளா உடம்புக்கு முடியலியாம் அதான்!

    தெரியும். இப்படியொரு நொண்டிசாக்கை காரணமா சொல்வாங்கன்னு. விடு! எனக்கு மட்டும் ஏது நேரம்? பத்துமணியிலேர்ந்து ஏழு மணி வரைக்கும் ஆபீஸ்லேயே அல்லாடற வேலை! வேணும்னா... அடுத்த வாரம் நீ போறப்ப பிரியாவையும் கூட்டிட்டுப்போ! என்றபடி அஸ்வினி கொண்டு வந்த பிளாஸ்டிக் பையை ஆராய்ந்தாள்.

    என்னது இது?

    ஊறுகாயும், திரட்டுப்பாலும்.. உனக்குப் பிடிக்குமேனு கொடுத்தனுப்பினாங்க!

    "சரி... சரி... நீ சீக்கிரமா சப்பாத்தியும் குருமாவும் பண்ணிடு. எனக்கு ஆபிஸ்க்கு நேரமாகுது'.

    காய்ச்சலா இருக்கிறப்ப... பேசாம லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கலாமில்லே...

    ம்ஹூம்... முடியாது! ஏகப்பட்ட வேலை பென்டிங் இருக்கு. அப்புறம், அஸ்வினி, நேத்து ஊறவச்ச துணி... சீக்கிரம் துவைச்சி போட்ரு!

    தர்மசங்கடமாய் அக்காவையும், கடிகாரத்தையும், மாறி மாறி பார்த்தாள் அஸ்வினி.

    என்னடி முழிக்கறே?

    எனக்கும் நேரமாய்டுச்சுக்கா. இப்ப துவைக்க முடியாது. ஆபீஸ் முடிஞ்சு வந்து ஈவ்னிங் துவைக்கிறேன்!

    ஏன்... இன்னைக்கு ஒரு நாள் நீ லீவு போட்டாதான் என்ன?

    இல்லேக்கா... சனிக்கிழமையும் லீவு போட்டாச்சு. இப்ப மறுபடி இன்னைக்கும் போட்டா எடிட்டர் கத்துவார்!

    ரஞ்சனி பதில் கூறாமல் தங்கையை முறைத்துப் பார்த்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்துக் கொண்டாள்.

    பெருமூச்சு விட்ட அஸ்வினி நேரமாவதை உணர்ந்து கிச்சனுக்குள் நுழைந்தாள்.

    கிச்சனே களேபரமாய் இருந்தது. பாத்திரங்கள் ஒழுங்கின்றி இங்குமங்கும் இறைந்துக் கிடந்தன.

    அவசர அவசரமாய் அவற்றை அதனதன் இடத்தில் வைத்துக் கொண்டிருந்தவள் அருகே நிழலாடியது.

    குணசேகரன் நின்றிருந்தான்.

    நீ ரெண்டு நாள் வீட்லே இல்லேன்னா... வீடே குப்பை மேடா ஆகிப்போயிடுது பார்த்தியா?

    போங்க மாமா! ரஞ்சனி காதில் விழுந்தா நீங்க அவ்வளவுதான்! என்றாள் சிரித்தபடி.

    அது நிஜம்தான்! ஆமாம் உனக்கும் ஆபீஸ்க்கு டைமாய்டுச்சி போல... பேசாம ஹோட்டலுக்கு போய் டிபன் வாங்கிட்டு வந்திடட்டுமா?

    ஐய்யோ... வேணாம் மாமா! ரஞ்சனிக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னு தான் உங்களுக்குத் தெரியுமே! பத்து நிமிஷத்துல பண்ணிடறேன்!

    நீ குக்கர்ல காய்கறிப் போடு! நான் அதுக்குள்ள மாவை பிசையறேன்!

    இல்ல பரவாயில்லே... நானே பார்த்துக்கறேன்!

    நானும் கொஞ்சம் பார்த்துக்கறேனே! நக்கலாய் சொல்லிவிட்டு மாவை பிசைய ஆரம்பித்தான் குணசேகரன்.

    அஸ்வினி பதிலேதும் தராமல் பரபரவென வேலையில் ஈடுபட்டாள்... ரஞ்சனி பாத்ரூமிலிருந்து வெளிப்படவும் குணசேகரன் அவள் முன் பார்க்கும் அங்கிருந்து அகன்று. அவனும் ஆபீஸ் கிளம்பும் ஆயத்தப்பணியில் இறங்குகிறான்.

    அடுத்த அரைமணி நேரத்தில் சப்பாத்தியும், குருமாவும் ரெடி! அஸ்வினியும் ஆபீஸ்க்கு புறப்பட தன்னை தயார்படுத்திக் கொண்டாள். கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. இன்னைக்கு ரொம்பவே லேட்!

    ரஞ்சனி டைனிங் டேபிள் முன் வந்தமர்ந்தாள்.

    அஸ்வினி.... சீக்கிரம்! என்று குரல் கொடுத்தாள்.

    அவளாக எடுத்து வைத்து சாப்பிடக்கூடாதா? சலிப்பும், வெறுப்புமாய் கிச்சனிலிருந்து அனைத்தையும் எடுத்து வைத்தாள்.

    கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தா.... மதியத்துக்கும் சமைச்சிருப்பே... ஹீஹீம்.... இன்னைக்கு ஹோட்டல்லேயே பார்த்துக்க வேண்டியது தான்! என்னடி பார்த்துக்கிட்டு நிக்கறே.... மாமாவுக்கு தட்டுல எடுத்து வை!

    அஸ்வினி அனைவருக்கும் பரிமாறினாள்.

    சாப்பிட்டு முடியும்வரை காத்திருந்து டேபிளை சுத்தம் செய்தாள்.

    நீ சாப்பிடலியா அஸ்வினி? குணசேகரன் கரிசனமாய் கேட்டான்.

    "இல்லே... டைமாய்டுச்சி... நான்

    Enjoying the preview?
    Page 1 of 1