Engey En Jeevan
By R. Manimala
5/5
()
About this ebook
ராகவன்...மகன்..மருமகள்...பேரக்குழந்தை என்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்.இவர்கள் மூவரும் வெளியூர் செல்லும் நாட்களில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஒரு பெண்மணியை ரகசியமாய் வரவழைப்பார்.அந்த பெண்மணி வேறு யாருமல்ல...அவர் தாலி கட்டிய மனைவிதான்.ஏன் இப்படியான ஒரு ரகசிய வாழ்க்கை?
Read more from R. Manimala
Kalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsNee En Nila Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Thean Kinnam? Rating: 4 out of 5 stars4/5Kanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Nee Ena Kandean! Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsVaa... Ponmayiley! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Megangal Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPennalla... Neeyoru Bommai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Rajiyam Enathu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalin Pon Veedhiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsMalare Mounama? Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Theriniley... Rating: 0 out of 5 stars0 ratingsEnathu Nila Kanniley...! Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPoovum Naanum Veru... Rating: 0 out of 5 stars0 ratingsMugarasi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivennum Sannathiyil? Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsNinaithathu Yaro... Neethaney! Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Valaiyil Vizhalama! Rating: 0 out of 5 stars0 ratingsEnakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Amaithi Theda…! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Engey En Jeevan
Related ebooks
Neeye Enthan Nila Saaraladi! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsEnakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaithu Kaathirunthean! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsMagarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Manathukkul Aarathanai Rating: 4 out of 5 stars4/5Thalli Ponal Theipirai Rating: 0 out of 5 stars0 ratingsOttraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsVasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Kadal Serum Vinmeengal Rating: 5 out of 5 stars5/5Iru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsKarpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Piriyaudan Oru Vaarththai Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Aboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsYaarodu Yaaro... Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Uyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Nila Soru Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Engey En Jeevan
1 rating0 reviews
Book preview
Engey En Jeevan - R. Manimala
https://www.pustaka.co.in
எங்கே என் ஜீவன்?
Engey En Jeevan?
Author:
ஆர். மணிமாலா
R. Manimala
For more books
https://www.pustaka.co.in/home/author/r-manimala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
அருகிலிருந்த மசூதியில் தொழுகை ஓதும் ஒலி மூடிய ஜன்னலின் சிற்சில துளைகளின் வழியே உள்ளே நுழைந்தது. புரண்டுப்படுத்தாள் சந்தியா! சன்னமான வெளிச்சத்தில் சுவற்றிலிருந்த கடிகாரத்தில் கண்களைச் சுருக்கி நேரம் பார்த்தாள்.
அதிகாலை ஐந்தைத் தொட இன்னும் சில நிமிடங்களே இருந்தன. அந்நேரத்திலும்... தன் இரையைக் கண்டுவிட்ட பல்லியொன்று கடிகார மறைவிலிருந்து மேல்பக்கமாய் ஓடியது.
கண்ணாடி ஜன்னலின் வழியே... மிக மெலிதான வெளிச்சம் புலப்பட்டது. 'அதுக்குள்ளே விடிஞ்சேப் போச்சா?'அலுப்புடன் பெருமூச்சு விட்டாள்... சந்தியா. அந்நிலையிலும் அவள் நெஞ்சாங்கூடு மிக அழகாய் ஏறி இறங்கியது.
இரவு படுக்கச் செல்லவே பன்னிரெண்டிற்கு மேலாகிவிட்டது. ஊருக்குச் செல்ல... மூன்று நாள் பயணத்திற்கான உடைகளையும், தேவையான மற்றப் பொருட்களையும் எடுத்து வைக்கவே போதும் போதும் என்றாகி விட்டது.
'கிளம்பணுமே... டிபன் செய்யணுமே!' அவள் எண்ணவோட்டத்திற்கு கமாபோடுவதுப் போல் அவள் இடுப்பின் வளைவை மென்மையாக அழுத்தியது ஆகாஷின் வலது கரம்.
குட்மார்னிங் டியர்!
முழிச்சாச்சா...?
பின்னே... ஈருடல் ஓருயிர்னு சும்மாவா சொல்லி வச்சாங்க? நீ முழிச்சுக்கிட்டா... நானும் தானே...?
ஐயோ போதுமே... காலையிலேயே வழிய ஆரம்பிச்சாச்சா?
தப்பு... தப்பு... சரியான வார்த்தையப் போட்டுப் பேசு. அசிங்கமா பேசப்படாது!
ம்... வேற எப்படிப் பேசறதாம்...
இவன் பக்கமாய் புரண்டுப்படுத்தாள்... சந்தியா.
இருவருக்கும் நடுவில் மூன்று வயது கிரண். நைட்டி கணுக்காலுக்கு மேலேறி, தலைமுடி சிலும்பி நெற்றியிலும், கன்னத்திலும் காற்றில் லேசாய் படபடக்க... முன்தினம் மாலையில் நெற்றி வகிட்டில் இட்ட குங்குமமும், காஜலும், கன்னத்து பளபளப்பும், வடிவான உதடுகளும்... அவன் விரல்கள் கன்னத்தில் கோலமிட்டு...
பொண்டாட்டி தாசன்னு சொல்லு!
என்றான்.
இது அதைவிட அசிங்கமாயிருக்கு!
என்றாள் மெல்லப் புன்னகைத்து. அந்த சிறு அசைவிற்கே... கன்னத்தில் குழிவிழுந்தது… செம அழகு
அந்தக் குழியில் ஐந்து வருடத்திற்கு முன்பு விழுந்தவன் தான்! எழுந்த முடியவில்லை.
அப்ப... சந்தியா அடிமை... இது... இது நல்லாயில்லே?
யோவ்... காலைல இதென்ன ஆராய்ச்சி? எந்திரி!
அவன் மீசையைச் செல்லமாய் பிடித்து இழுத்தாள்.
ஆ...
என சத்தமின்றி அலறியவன், கிரணை தள்ளிப் போட்டு விட்டு அவள் பக்கத்திற்கு வந்தான். அவளின் நீளநாசியை வலிக்காமல் கடித்தான்.
பார்க்க பார்க்க சலிக்காத வசீகரமான முகம் ஆகாஷுக்கு! சந்தியாவை விட நிறத்தில் இன்னும் கூடுதல்! கீழ் உதடு சற்றேப்பருத்து... அடர்த்தியான மீசை மேலுதடை லேசாய் மறைத்து... தலை கொள்ளா படிந்த முடி, துளைக்கும் கண்கள், வட்ட முகம், ஆறடி அளவான தேகம் என ஆள் பக்கா அம்சம். பனியனற்ற வெற்றுடம்பில் படுத்துக் கிடந்த நெஞ்சு ரோமங்கள்... காதலும், பெருமையுமாய் கணவன் நெஞ்சில் தடவிக் கொடுத்தவள்... போதும்... அப்படிப் போய்டுங்க... ஏகப்பட்ட வேலை கிடக்கு! ட்ரெய்ன் எத்தனை மணிக்கு?
ஒன்பது மணிக்குதான்! நைட்டு லேட்டா தானேப் படுத்தே? இன்னும் ஒன் அவர் தூங்கு டார்லிங். டிபன் செய்யாதே! ஓட்டல்ல வாங்கிக்கலாம்
இப்படி பக்கத்துல வந்து படுத்துக்கிட்டு... தூங்குன்னா எப்படி?
ஹேய்... செல்லம்... அப்படியா?
ஆசையாய் அவளை இறுக்கினான்.
யோவ்... எழுந்து அப்படிப் போவியா? எதைச் சொன்னாலும் அதிலே ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடிச்சுக்கிட்டு...
அவன் கையை விலக்கி விட்டு, அவனுக்கு முதுகுக் காட்டித் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
வாய்விட்டு சிரித்த ஆகாஷ் அவள் தோள்பட்டையில் செல்லமாய் அடித்துவிட்டு அவனும் திரும்பிப் படுத்து கிரண்மேல் கைப்போட்டு தன்னோடு இன்னும் நெருக்கமாய் இழுத்து அணைத்துக் கொண்டான்.
கிரண் நிறத்தில் அப்படியே அப்பாதான். சந்தியா ஒன்றும் நிறமற்றவள் அல்ல. மாநிறத்திற்கும் சற்றே கூடுதலான... கவர்ச்சியான கலர். ஆகாஷ் பாலில் குங்குமப்பூவை கலந்த நிறம்!
ஆனால், முகச்சாயல் அப்படியே பாட்டிதான்!
***
மணி... ஏழு!
கிரண் ரெடியாகி சோபாவில் சமர்த்தாய் அமர்ந்திருந்தான். ஆகாஷ்... சட்டையின் கையை மடித்து விட்டபடி கண்ணாடி முன், தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
துணிகளடங்கிய பேக்கைத் திறந்து மறுபடி ஒருமுறை செக் பண்ணிக் கொண்டிருந்த சந்தியா, மாமா எங்கேப்பா... காலைலேர்ந்தே ஆளேக் காணோம்? இன்னும் காபிக் கூடக் குடிக்கலே?
எனக் கேட்டாள்.
வாக்கிங் போயிருப்பார்!
மழை வேறத் தூறுதே?
இருந்தாலென்ன? இந்த சன்னமான மழையில வாக்கிங் போறதே... ஒரு ரசனை தான்!
சொன்னவனை ஏளனமாய் ஏறிட்டுத் தன் வேலையில் கவனமானாள்.
சரியாய் மூன்று நிமிடம் கழித்து ராகவன் உள்ளே நுழைந்தார். குடையையும், செருப்பையும் வராந்தாவில் கழற்றி வைத்து... கால்களை நன்கு துடைத்துக் கொண்டு உள்ளே வந்தவர்... பேரனைப் பார்த்து சிரித்தார்.
ஹேய்... குட்டிப்பையா? ரெடியாய்ட்டியா?
ஆமா... தாத்தா!
எங்கேப்பா... போய்ட்டீங்க... மழையில?
வாக்கிங் போனேன்ப்பா...
அதுக்காக மழையிலயா?
இதெல்லாம் ஒரு மழையா ஆகாஷ்? சென்னையில மழை பெய்யறதே அதிசயம். பெய்யறப்ப... உடம்பைக் கொஞ்சம் நனைச்சிட்டு வந்துடணும். மறுபடி இப்படியொரு சான்ஸ் எப்பக் கிடைக்குமோ?
ஏற்கனவே உடம்புக்கு முடியல...!
அட... விடுப்பா... நேரமாகல... சாப்பிட்டாச்சா?
இல்லேப்பா... போற வழியில டிபன் சாப்பிட்டுக்கறோம். டைம் இருக்கு... சரியான டயத்துல ஸ்டேஷன்ல ரீச் ஆய்டுவோம்!
மாமா... காபி!
சந்தியா டம்ளரை நீட்டினாள். அடுத்த கணம் கண்கள் விரிந்தது.
என்ன மாமா கையில பால் கவரா?
ஆமாம்மா!
காபியை வாங்கிக் கொண்டார்.
ப்ரிட்ஜ்ல ஒரு கவர் இருக்கு... அப்புறம் ஏன் நீங்க வேற வாங்கிட்டு வந்தீங்க?
இ... இல்லேம்மா... நண்பர்கள் சில பேர் வர்றதாச் சொல்லியிருக்காங்க.
டி... ப... ன்...!
அதெல்லாம் சாப்பிட்டுட்டுதான் வருவாங்கம்மா!
மாமா... தோசை மாவு இருக்கு... புதினா சட்னி இருக்கு. மதியத்துக்கு மோர்க்குழம்பும், சிறுகீரை கூட்டும் வச்சிருக்கேன். ரைஸ் மட்டும் நீங்க வச்சிக்கறீங்களா? என்னதான் ஹாட்பேக்ல வச்சாலும் ரைஸ் ஆறிப் போய்டறது!
என்றாள்.
நெகிழ்வுடன் மருமகளைப் பார்த்தார். எதுக்கும்மா... இவ்ளோ வேலைல ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கறே? இதை நான் பண்ணிக்க மாட்டேனா?
மூணு நாள் ஊர்ல இருக்கமாட்டோம். என்ன சமைச்சி சாப்பிடப் போறிங்களோன்னு கவலையா இருக்கு மாமா!
'அம்மாடி என்னைப்பத்தி எதையும் யோசிக்காதே. நான் பார்த்துக்கறேன். கல்யாணத்துல... சொந்தக்காரங்ககிட்ட நான் ரொம்ப விசாரிச் சேன்னு சொல்லிடும்மா! பொடிப் பயலைதான் மிஸ் பண்ணுவேன். என் ராஜாக்குட்டி இப்படி வா... வா!" பேரனைத் தூக்கி கன்னத்தில் முத்த மிட்டு அவன் முகத்தை கழுத்தில் புதைத்து... வாஞ்சையுடன் கண்களை மூடிக் கொண்டார்.
***
அரைமணி நேரத்தில் வீடு வெறிச்சோடியிருந்தது. அங்கிங்கு சிதறியிருந்த சில பொருட்களை அதனதன் இடத்தில் எடுத்து வைத்தார் ராகவன். ஒரு வருடம் முன்பு தான் ரிடையரான ராகவன்