Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirodu Kalanthaval
Uyirodu Kalanthaval
Uyirodu Kalanthaval
Ebook105 pages53 minutes

Uyirodu Kalanthaval

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

என்னைப் பற்றி...

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.

திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.

தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்

பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாசிப்பை நேசிப்போம்.

அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..

Languageதமிழ்
Release dateNov 23, 2019
ISBN6580129504754
Uyirodu Kalanthaval

Read more from Daisy Maran

Related to Uyirodu Kalanthaval

Related ebooks

Reviews for Uyirodu Kalanthaval

Rating: 3 out of 5 stars
3/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirodu Kalanthaval - Daisy Maran

    http://www.pustaka.co.in

    உயிரோடு கலந்தவள்

    Uyirodu Kalanthaval

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    வானதி! வானதி; எழுந்திரிம்மா கொஞ்சமாவது, சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள். யாரோ கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போல தோன்றியது வானதிக்கு.

    அவளால் கண்களை திறக்க முடியவில்லை. திறந்தாலும் ஏதோ பூச்சி பறப்பது போல தோன்ற, திரும்பவும் கண்களை மூடி கொண்டாள்.

    மூன்று நாளுக்கு முன் வானதி எவ்வளவு சந்தோஷமாக இருந்தாளோ, அதற்கு தலைகீழாக மாறி விட்டது, இன்று அவள் வாழ்க்கை.

    மூன்று நாட்களுக்கு முன் அன்று ஞாயிற்றுக்கிழமை, வானதிக்கு அன்று தான் பிறந்த நாள். சிறு வயதில் இருந்தே பெற்றோருடன் கொண்டாடியவள், இந்த மூன்று வருடமாக கல்லூரியில் படித்ததால் விடுதியில் தங்கி இருந்ததால் பிறந்த நாளை பெற்றோருடன் கொண்டாட முடியாமல் போய் விட்டது.

    இந்த வருடம் தான் அவள் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். வந்த இந்த ஒரு மாதத்தில், வீட்டில் இருந்ததை விட பெரியப்பா வீடு, சித்தப்பா வீடு என்று ஊர் சுற்றியது தான் அதிகம்.

    வானதி அவள் பெற்றோருக்கு ஒரே பெண். வானதியின் தந்தை ராஜா ராமன் ரைஸ்மில் நடத்தி வந்தார். ஏக்கர் கணக்கில் நெல் விளையும் வயல், மாந்தோப்புக்குள் பெரிய வீடு என்று வசதியாய் வாழ்பவர்.

    வானதியின் அம்மா சுகந்தி மிகவும் அமைதியானவள். அதிர்ந்து கூட பேச தெரியாதவள்.

    ராஜாராமனுக்கு கூட பிறந்தவர்கள் மூன்று பேர். தம்பி, அண்ணன், அக்கா என்று அவரையும் சேர்த்து நான்கு பேர்.

    கலாவதி சென்னையில் வசித்து வந்தாள். அவள் தம்பிகள் மூன்று பேரும் சொந்த ஊரிலே தனித்தனியாக வீடு கட்டிக் கொண்டு, தனித் தனி தொழில் செய்து வந்தனர்.

    வானதியின் பெரியப்பா, சித்தப்பாவுக்கு இரண்டு, இரண்டு ஆண் பிள்ளைகள். வானதி மட்டும் ராஜாராமுக்கு ஒரே பெண். அதனால் வானதி அந்த மூன்று குடும்பத்துக்கும் செல்ல பெண்.

    வானதியின் அத்தை கலாவதியின் கணவர் சிவில் என்ஜினீயர். சொந்தமாக கட்டிடம் கட்டும் தொழில் செய்து வந்தார். மகன் கௌதமனும் அதே தொழில் சம்பந்தமாக வெளிநாடுகளில் சென்று படித்து விட்டு தந்தைக்கு உதவியாக தந்தையின் தொழிலை கவனித்து கொண்டு இருக்கிறான். கலாவதி, தாமோதரன் தம்பதிக்கு ஒரே மகன் கௌதமன்.

    நான்கு குடும்பத்தாரும் ஒன்றாக சந்திக்கிறார்கள் என்றால் அது தைப்பொங்கல் நாளில் தான். இப்படிதான் பல வருடங்களாய் நடந்து கொண்டிருந்தது.

    பெண்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைப்பார்கள். ஆண்கள் எல்லோரும் சேர்ந்து சீட்டு விளையாடுவதும், கபடி விளையாடுவதுமாக பொழுதை போக்குவார்கள். பிள்ளைகள் டென்னிஸ் விளையாடுவதும், சி. டி. யில் புதுப்படம் பார்ப்பதும் என்று வீடே அரட்டையும், கச்சேரியுமாக களைகட்டி இருக்கும்.

    வானதியின் அத்தை முன்பெல்லாம் ஒவ்வொரு வருடப் பொங்கலுக்கும் தவறாமல் வருவாள். அத்தை, மாமா, கௌதமன் என மூன்று பேருமாக வருவார்கள். பிறகு அத்தை மட்டுமாக வர ஆரம்பித்தாள். மாமாவுக்கு வேலை இருக்கிறது. அதனால் அவர் வரவில்லை. கௌதமனும் கன்ஸ்ட்ரக்ஷன் வேலையில் ஓய்வில்லாமல் இருக்கிறான் என்பாள். பிறகு அத்தை வருவதும் நின்று விட்டது. எப்போதாவது கோவில் திருவிழாவிற்கு வருவாள். தம்பிகள் மூன்று பேரும் சென்னை செல்லும் வேலை இருந்தால் அக்கா வீட்டிற்கு சென்று வருவார்கள்.

    வானதியின் வீடு இருப்பது திருச்சி பக்கத்தில் ஒரு கிராமம். அவள் பள்ளி படித்தது எல்லாம் திருச்சியில் தான். கல்லூரி கோயமுத்தூரில் படித்தாள். வீட்டிற்கும் செல்லப் பெண்ணாக இருந்தாலும், இன்னொரு வீட்டிற்கு போகப்போகும் பெண் என்பதால் கண்டிப்பாக சமையல் தெரிய வேண்டும் என்று மனைவியிடம் சொல்லி இருந்தார் ராஜாராம்.

    சுகந்தியும், வானதிக்கு லீவு நாட்களில் சமையல் கற்றுக் கொடுத்திருந்தாள். வானதியும் ஆர்வத்துடன் கற்று வித விதமாய் சமைக்க தெரிந்து வைத்திருந்தாள்.

    வானதி பெரியப்பா வீட்டிற்கு போனால் அங்கு ஒரு புது வகையான உணவு தயாரித்து அசத்துவாள். சித்தப்பா வீட்டிற்கு போனாலும் அதுவே தான் அவர்கள் பிள்ளைகளும் இவள் சமைக்கும் நூடுல்ஸ் பிரைடுரைஸ் எனசைனீஸ் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.

    அதனால் வானதி இன்று வீட்டிற்கு வருகிறாயா? போனமுறை செய்தாயே அந்த கோபி மஞ்சூரியன் செய்து தருகிறாயா? என அண்ணனும், தம்பியும் இவளை அழைப்பதிலே குறியாய் இருப்பார்கள்.

    உறவுக்காரர்கள் யாரும் அவளை கடிந்து பேசியது கூட இல்லை. வீட்டில் என்றால் அப்பா செல்லம். அம்மாவுக்கும் செல்லம் தான். ஆனால் அம்மா செல்லமாய் கொஞ்சம் கடிந்து கொள்ளுவாள்.

    வானதிக்கு கவலை என்றால் என்னவென்று தெரியாத வயது! சிட்டுக்குருவி போல சிறகடித்து பறக்கும் பருவம்.

    இன்பமான அவள் வாழ்க்கையிலே இடி விழுந்தது போல அந்த துன்பம் வந்து, அவள் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது. அன்று வானதிக்கு இருபத்தி இரண்டாவது பிறந்த நாள். அம்மாவும், அப்பாவும் வானதிக்கு தெரியாமல் தங்கச்செயின் பரிசு கொடுக்க விரும்பினார்கள். அதில் கோர்க்கப்பட்ட டாலரில் வானதி

    Enjoying the preview?
    Page 1 of 1