Anbulla Maan Vizhiye
By Daisy Maran
4.5/5
()
About this ebook
என்னைப் பற்றி...
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் நாகை மாவட்டம் கொள்ளிடம் என்ற சிறிய ஊரில். பள்ளிப் பருவத்திலேயே எழுத்தின் மீது ஆர்வம் இருந்தது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி காலத்தில் ஆண்டு மலரில் எழுதினேன்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டாயிரத்தில் சென்னைக்கு வந்து 19 வருடங்களாக கதை கட்டுரை சிறுகதை என எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் முதல் நாவல் 2015ல் தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் நாவல் எழுதும் ஆர்வம் என்னிடத்தில் மேலோங்கியது. இந்த நான்கு வருடங்களில் 42 நாவல்கள், 60 சிறுகதைகள், இரண்டு தொடர்கதைகள், என எல்லா இதழ்களிலும் என் படைப்பு வெளிவந்துள்ளது.
தினமலர், வானதி, ஜெர்மன் ஞானசவுந்தரி போன்ற சிறுகதைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்றுள்ளேன்
பொதுவாக என் நாவல்கள் குடும்பம் மற்றும் காதல் என்ற தளத்திற்குள்தான் இருக்கும். கதைகளில் வன்முறைகளை தவிர்த்து சுபமான முடிவாகத் தான் எழுதுவேன். நாவல் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு தகவலை தர வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். மேலும் என் நாவல்களை பற்றி நானே சொல்வதைவிட நாவலைப் படித்துவிட்டு அதைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் பதிவிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
வாசிப்பை நேசிப்போம்.
அன்புடன் உங்கள்
டெய்சி மாறன்..
Read more from Daisy Maran
Vandhuvidu Ennavane... Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthe Unnaiye! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Orey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Uyirodu Kalanthaval Rating: 3 out of 5 stars3/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Maranthal Thane Ninaipatharku! Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Pirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsKann Malargalil Azhaipithazh Rating: 0 out of 5 stars0 ratingsKanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsThen Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Thedi Vantha Nila...! Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Kaadhal... Kanavugaley...! Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyoram Oru Vanavil...! Rating: 2 out of 5 stars2/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Mounamey Kaadhalaai..! Rating: 0 out of 5 stars0 ratingsManathoodu Oru Naal... Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5'Nesippaya Nenjamey...!' Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Urasum Karaiyoram...! Rating: 0 out of 5 stars0 ratings'Thathi Thavuthu Manasu!' Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsManasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5Kaadhal Meipada Vendum! Rating: 4 out of 5 stars4/5
Related to Anbulla Maan Vizhiye
Related ebooks
Nenjamellam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Vaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Marakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Odi Vaa Penne…! Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsUnnale... Unnale… Rating: 5 out of 5 stars5/5Azhagai Pookkuthe... Rating: 5 out of 5 stars5/5Yenazhuthaai Enuyire Rating: 5 out of 5 stars5/5Pakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsIvan Vasam Vaaraayo! Rating: 5 out of 5 stars5/5Sugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Kalyana Thean Nila Rating: 3 out of 5 stars3/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Neela Nayanangalil... Rating: 2 out of 5 stars2/5Puthagam Moodiya Mayiliragu Rating: 0 out of 5 stars0 ratingsNee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsUnathuravil Naan Kalanthean... Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5En Anbu Kanavane! Unnai Kaadhalikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsPenney Un Mel Pizhai Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsHello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Azhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5
Reviews for Anbulla Maan Vizhiye
3 ratings0 reviews
Book preview
Anbulla Maan Vizhiye - Daisy Maran
http://www.pustaka.co.in
அன்புள்ள மான் விழியே...
Anbulla Maan Vizhiye…
Author:
டெய்சி மாறன்
Daisy Maran
For more books
http://www.pustaka.co.in/home/author/daisy-maran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
1
அலோ சார்... கிருஷ்ணாநகர் மூன்றாவது தெரு எங்கே இருக்கு...?
அந்த தெரு முனையிலே அயன் பண்ணிக் கொண்டிருந்த நபரை பார்த்து கேட்டான் தீனதயாளன்.
அவன் கேட்டது காதில் விழுந்ததோ இல்லையோ அவன் வந்த காரை பார்த்துவிட்டு வாயை பிறந்தவாறு அருகில் வந்தான் அந்த அயன் வண்டிகாரன்
என்ன சார்... கேட்டீங்கள்...?
கிருஷ்ணா நகர் மூன்றாவது தெரு...
அங்க... யாரு வீட்டுக்குங்க போகணும்...?
சண்முகம் சார் வீட்டுக்கு...
ஓ... போன வாரம் செத்துப்போனாறே அவரா...
ஆமாங்க அவரே தான். அவருடைய வீட்டுக்குத்தான் போகணும்.
நா வேண்ணா வந்த காட்றேங்க... பின்னாடி கதவை திறந்து விடுங்க...
லேசான புன்னகையோடு காரின் பின் டோரை திறந்து விட்டான் தீனதயாளன்.
எனக்கு... ஆடி காருலே ஏறனுன்னு ரொம்ப நாளா... ஆசை சார். அது இன்னைக்குதான் நிறைவேறுனிச்சி...
அப்படியா...?
சார்... எந்த ஊரிலிருந்து வர்றீங்க...?
சென்னை...
சார்... சார் ரைட்டு இல்லே, லெப்ட் திரும்புங்க...
அதோ மஞ்சபோர்டு தெரியுதே அந்த தெருதான்.
லெப்டு திரும்பி சென்றான். மஞ்சபோர்டு அருகில் வந்ததும்,
சார்... அதோ முருங்க மரம் இருக்கே அந்த வீடுதான்.
நான் இங்கேயே இறங்கிக்கிறேன். சார்.
அந்த பையனை இறக்கி விட்டுவிட்டு, வீட்டருகே சென்று காரை நிறுத்தினான்.
வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பையன்களில் ஒருவன் இவனை பார்த்துவிட்டு வீட்டினுள் ஓடினான்.
அம்மா... அம்மா... நம்ம வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க...
யாருன்னு கேளு...
ஐயே... நீ நினைக்கிற மாதிரி இல்லே...
பெரிய காருலே வந்திருக்காரு...
அப்ப... நம்ம வீட்டுக்கா இருக்காது.
என்னம்மா... நீ வெளியிலே வந்துதான் பாரேன்
ஏய்... சுகந்தி யாருன்னு போய் பாரு...
பூ கட்டிக்கிட்டு இருந்த சுகந்தி எழுந்து வெளியில் வந்து பார்த்தாள்.
‘நெடு, நெடு' என்ற வளர்த்தியில் அந்த வீட்டையே சின்னதாக்கிக் கொண்டு நின்றான் அவன்.
யாரு வேணுங்க...
நான் சென்னையிலிருந்து வர்றேன். சண்முகம் சாரோட வீடு இதுதானே...?
ஆமாம்... உள்ளே வாங்க... பார்த்து குனிஞ்சி வாங்க, தலை இடிக்கப் போகுது
உள்ளே வந்தவனைப் பார்த்து எழுந்து நின்றாள் சண்முகத்தின் மனனவி பூங்கோதை
"வணக்கம்மா... நான், சண்முகம் சார் வேலைப் பார்த்த கம்பெனியோட எம்.டி கருணாகரனின் மகன், என் பெயர் தீன தயாளன்
ஐயோ... ஐயோவோட புள்ளையா... நீங்க...? உட்காருங்க. நின்னுகிட்டே இருக்கீங்களே..."
பாபு அந்த சேரை இப்படி எடுத்துட்டு வா...
அந்த பாபு எடுத்துட்டு வந்த சேரை வாங்கி போட்டு அதில் உட்கார்ந்தான்
அம்மா... சண்முகம் சார் இறந்தபோது நானும், அப்பாவும் என் தங்கையை பார்க்க டெல்லி போயிருந்தோம். அதான் சாவுக்கூட எங்களால் வர முடியவில்லை.
இருக்கட்டும் தம்பி... கை, கால் முடங்கிய நிலையிலே... அவர்பட்ட கஷ்ட்டத்தை பாக்கும்போது போய் சேர்ந்ததே நிம்மதின்னு நினைக்கிறேன் தம்பி...
அப்படி சொல்லாதீங்கம்மா... சண்முகம் சார் ரொம்ப நல்லவர். அவருக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது. நல்லவர்தான்... இல்லேன்னு சொல்லலை. ஆனா மூணு பிள்ளைகளையும் அம்போண்ணு விட்டுட்டுல்ல போயிட்டார். நல்ல வேளை என் பெரிய பொண்ணு இந்த ஒரு வருஷமா வேலைக்கு போயிட்டு இருக்கா...
அப்பா படுத்த படுக்கையா ஆயிட்டாரு நான் படிச்சவரைக்கு போதும். நான் இனி வேலைக்கு போறேன்னு சொன்னா... எனக்கும் வேற வழி தெரியலை. சரி... போ... வேலைக்கு போயிட்டே படிச்சிக்கோண்ணு சொல்லிட்டேன்.
இவங்கதான் உங்க பெரிய பொண்ணா...?
இல்லே தம்பி... அவ இன்னும் வேலையிலேருந்து வரலை...
இது ரெண்டாவது பொண்ணு பன்னென்டு படுக்கிறா... சுகந்தி தம்பிக்கு காபி போட்டு எடுத்துட்டுவா..."
சரிம்மா...
சேரில் உட்கார்ந்திருந்தவன் வீட்டை ஒரு முறை அளந்தான். அது ஒரு பழங்காலத்து ஓட்டு வீடு. உத்திரமெல்லாம் மக்கிபோன நிலையில், ஓடு கூட ஆங்காங்கே உடைந்து இதோ விழப்போகிறேன் என்ற நிலையிலே பயமுறுத்திக் கொண்டிருந்தது.
சுவற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த கபோர்டில் வெண்கல பதக்கங்களும் ஷீல்டும், பித்தளை கோப்பைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அவன் யோசனையோடு அதை பார்த்துக் கொண்டிருக்க, அதை புரிந்துக் கொண்ட பூங்கோதை
தம்பி... இதெல்லாம் என் பெரிய பொண்ணு வாங்கியது. பள்ளியிலும், கல்லூரியிலும் வாங்கிய பரிசு.
ம்... பரவாயில்லையே...
அக்கா... ஸ்கூல்ல கூட பஸ்ட்ரேங்தான். காலேஜ்லேயும் பஸ்ட் கிளாஸ்தான்
காபி டம்பளரோடு வந்த சுகந்தி தன் அக்காவை பற்றி பெருமையாகக் கூறினாள்.
என்னடி... என்னோட பேச்சி அடிபடுது. கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தவள், அங்கு வேறு ஒரு புதியவனை கண்டவுடன் தயங்கி நின்றாள்.
அவளின் தயக்கத்தை புரிந்துக் கொண்ட பூங்கோதை வா... பாரதி, உள்ளே... வா, தம்பி... வேறு யாருமில்லே, உங்க அப்பா வேலை பார்த்த கம்பெனியோட ஓனர்தான்.
அந்த பாரதியை நிமிர்ந்து பார்த்தவன் ஒரு நிமிடம் தடுமாறிப் போனான். இந்த ஏழ்மையிலும் இவ்வளவு அழகா...? அவன் வாழ்நாளிலே எவ்வளவோ பெண்களை பார்த்திருக்கிறான். ஆனால் யாருமே அவனுடைய மனதை இப்படி பாதித்தது இல்லை.
அவள் அணிந்திருந்தது எளிய உடைதான் தலைமுடி கூட காற்றில் கலைந்திருந்தது. சாயம் பூசாத உதடுகள் மை தீட்டாத விழிகள், பவுடர் பூசாத முகம், ஆனாலும் மிதம்மிஞ்சிய ஒரு அழகு. பட்டை தீட்டாத வைரம் என்பார்களே... அதைப்போல்
வணக்கம் என்றாள் இரு கரங்களையும் கூப்பி.
அந்த தாமரை மொட்டு போன்ற குவிந்த விரல்களை தன்னை மறந்து ரசித்தான்
எல்லோரும் தன்னை கவனிப்பதை உணர்ந்தவன் வணக்கம்...
என்று பதிலுரைத்தான்.
உங்க அப்பா இறந்தப்போ, தம்பியும், அவர் அப்பாவும் வெளியூருக்கு போயிருந்தாங்களாம். அதான் நேரிலே வந்து விசாரிச்சிட்டு போகலாண்ணு வந்திருக்கு.
ம்ம்... ஒரு பெருமூச்சோடு அருகிலிருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்
எங்க பாரதி... கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள். யாருகிட்டேயும் அவ்வளவோ பேச மாட்டா... இதோ இது இருக்குதே... இது கிட்ட வாயை குடுத்து மீள முடியாது.
ஆமா, என்னைப்பத்தி கொரை பேசுலேண்ணா உங்களுக்கு தூக்கம் வராதே...
ஓகே... ஓகே... அம்மா தானே விட்டுடு சுகந்தி இதையெல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது.
அப்படி சொல்லுங்க தம்பி...
முகம், கை கால் கழுவிக்கிட்டு, வெளியில் வந்தாள் பாரதி.
அம்மா... எனக்கு டைமாகுது. நான் கிளம்பட்டுமா...?
சரி தம்பி அப்பாவை கேட்டதா சொல்லுங்க...
சரிங்கம்மா... இந்தாங்க இதை அப்பா உங்ககிட்ட கொடுத்துட்டு வர சொன்னார். ஒரு வெண்ணிர கவரை எடுத்து பூங்கோதையிடம் கொடுத்தான் தீனதயாளன்
என்ன தம்பி... இது...?
ஒரு சின்ன அன்பளிப்பு சண்முகம் சார் இறந்ததிலே உங்களுக்கு தேவைகள் அதிகமாக இருக்கும். அதான் அப்பா கொடுத்து விட்டார்.
பூங்கோதை வாங்க தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரதி முன்னால் வந்தாள்.
சார்... அன்பளிப்பெல்லாம் வேண்டாம் சார். நீங்கள் எங்களை தேடி வந்து பார்த்ததே போதும்
அப்படி இல்லேங்க... நீங்க இதை வாங்கிகிட்டா எங்க மனசுக்கு சந்தோஷமா இருக்கும்.
"ஆனா... எங்க மனசுக்கு