Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mayanginean Solla Thayanginean
Mayanginean Solla Thayanginean
Mayanginean Solla Thayanginean
Ebook110 pages52 minutes

Mayanginean Solla Thayanginean

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் காதலை சந்தித்திருப்பார்கள். விடலைப்பருவத்திலோ, பணிபுரியும் இடத்திலோ, நடுத்தர வயதிலோ ஏதாவது ஒரு தருணத்தில் சட்டென்று காதல் உரசிப்போயிருக்கும். சட்டென்று பூக்கும் பூவைப்போல, ஒரு மின்னலைப்போல எந்த நொடியில் காதல் தோன்றும் என்பதை சொல்ல முடியாது. எந்த வித நிபந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாததுதான் உண்மைக்காதல்.
இதேபோல் தான் ஒரு எதிர்பாராத தருணத்தில்தான் காதலனை சந்திக்கிறாள் நம் கதையின் நாயகி. இருவருக்குமிடையே மோதலில் ஆரபித்து பின் காதல் முடிவடைகிறது.
Languageதமிழ்
Release dateFeb 26, 2020
ISBN6580129505052
Mayanginean Solla Thayanginean

Read more from Daisy Maran

Related to Mayanginean Solla Thayanginean

Related ebooks

Reviews for Mayanginean Solla Thayanginean

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mayanginean Solla Thayanginean - Daisy Maran

    http://www.pustaka.co.in

    மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

    Mayanginean Solla Thayanginean

    Author:

    டெய்சி மாறன்

    Daisy Maran

    For more books

    http://pustaka.co.in/home/author/daisy-maran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அதிகாலை...

    இருள் விலகி வெளிச்சம் மெல்ல பரவிக் கொண்டிருந்தது. தூக்கம் கலைந்து படுக்கையை விட்டு எழுந்த நிவேதிதா, கண்களை மூடி முன்று முறை கடவுளின் பெயரை உச்சரித்தாள். பிறகு எழுந்து வந்து ஜன்னலின் திரைச்சீலைகளை விலக்கி தோட்டத்துப் பக்கம் பார்வையை செலுத்தினாள்.

    அங்கே...

    காலைப்பனியில் நனைந்தபடி நின்றிருந்தது பசுமையான அந்த துளசிச்செடி. நிவேதிதாவுக்கு அந்த துளசிச் செடியை பார்க்கும் ஒவ்வொரு முறையும், தன் தாயின் முகம் நினைவுக்கு வரும்.

    'அம்மா' தினமும் அதிகாலையிலேயே எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, துளசிமாடத்தை சுற்றி விட்டுத்தான் சமையலையே ஆரம்பிப்பாள். நிவேதிதா படுக்கையை விட்டு எழுந்தவுடன், தன் தாயைத்தான் தேடிச் செல்வாள். மகளைக் கட்டித் தழுவி முத்தமிடுவாள் அன்னை.

    தாயின் மஞ்சள் பூசிய முகமும், மெல்லிய பௌடர் வாசனையும், நிவேதிதாவுக்கு மிகவும் பிடித்தமானவை. அப்பா குணசேகரன் ராணுவத்திலே வேலைப் பார்த்தார். வருடத்திற்கு ஒருமுறை லீவிலே வந்துட்டு போவார். மற்றபடி வாரத்துக்கு இருமுறை போனில் பேசுவதோடு சரி.

    நிவேதிதாவுக்கு அப்போது பத்து வயதிருக்கும். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அதுவும் தாத்தாவோட மேனேஜ்மெண்ட்ஸ் ஸ்கூலில் சில மாதங்களுக்கு பிறகு நோய்வாய்ப்பட்டு தாத்தா இறந்து விடவே, இவளுடைய அம்மா சுகந்தி அந்த பள்ளிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். என்னதான் சொந்த பள்ளிக்கூடமாக இருந்தாலும், சக மாணவர்களை நடத்துவது போலத்தான் இவளையும் நடத்துவாள் அம்மா சுகந்தி.

    ஆனாலும், உடன் படிக்கும் தோழிகள் இவளைப் பார்த்து ஆச்சரியப்படும் போதெல்லாம், இவளுக்கு பெருமையாக இருக்கும்.

    உனக்கென்னடி உன்னுடைய சொந்த ஸ்கூலு, நீ... லேட்டா வந்தாக்கூட உன்னை யாரும் திட்டமாட்டாங்க, நாங்க அப்படியா?

    தோழிகள் சொல்லும் போதெல்லாம் வானத்தில் பறப்பது போலிருக்கும் நிவேதிதாவுக்கு. சீ... அப்படியெல்லாம் இல்லையடி. எல்லோரையும் போலத்தான் நானும் இந்த பள்ளியில் படிக்கிறேன். சொல்லி சமாளிப்பாள்.

    அன்று மாலை...

    பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவள். தன் தாயை காணாமல், வீடு முழுவதும் தேடினாள்.

    அம்மா எங்கே போயிருப்பாள்?

    காலையில் எழுந்ததிலிருந்தே அம்மாவின் முகம் சரியில்லையே? சோர்வாகவே தெரிந்ததே!

    என்னாச்சிம்மா...? காலையில் தான் கேட்டதற்கு, அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    அம்மா...

    ம்... என்னம்மா நிவேதிதா?

    அம்மா... உடம்பு சரியில்லையா? மீண்டும் கேட்டாள்.

    இல்லைடா, லேசான தலைவலி... மகளின் தலையை வருடியபடி கூறினாள்.

    அம்மாவிடம் ஏதோ மாற்றம் தெரிகிறது? அது என்னவாக இருக்கும்? கேட்க நினைத்த நாவை அடக்கிக் கொண்டாள்.

    ஸ்கூலுக்கு நேரமாகி விட்டது. இந்த நேரத்திலே, அம்மாவை தொந்தரவுப்படுத்த வேண்டாம். வந்து பார்த்துக் கொள்ளலாம். அந்த நினைப்போடு தான் அன்று கிளம்பிச் சென்றாள்.

    ஆனால்... பள்ளி முடிந்து இங்கு வந்து பார்த்தாள் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கவலை தோய்ந்த முகத்தோடு, வாசற்படியில் அமர்ந்திருந்தாள். கண்டிப்பாக அம்மா வந்து விடுவாள். நம்பிக்கையோடு காத்திருந்தாள். அப்போது...

    தூரத்திலே, எட்டாம் வகுப்பு சாரும், பத்தாவது மேக்ஸ் டீச்சரும், பரபரப்பாக வருவது தெரிந்தது. நம்ம வீட்டை நோக்கித்தான் வர்றாங்க... டீச்சர் ஏன் இவ்வளவு பதற்றமா ஓடி வர்றாங்க?

    இவள் எழுந்து சென்று கேட்டை திறந்து விட்டாள்.

    வாங்க சார்... வாங்க டீச்சர்...

    அவர்களுடைய முகம் சோகத்தில் அப்பிக் கிடந்தது.

    அம்மா எங்கேம்மா...?

    அம்மா வீட்டிலே இல்லே சார். எங்க போனாங்கன்னே தெரியலே சார்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார்...

    கண்கலங்கி நின்றவளை அணைத்துக் கொண்டாள் கணக்கு டீச்சர் கலா.

    அம்மாவுக்கு ஒண்ணுமில்ல, வந்துடுவாங்க, அழக்கூடாது, சரியா?

    ம்... சரிங்க டீச்சர்

    டீச்சர்... நிவேதிதாவை, உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, இங்க தனியா இருக்க வேணாம்... சார் சொல்லவும்,

    சரிங்க சார்...

    வீட்டை பூட்டி விட்டு, நிவேதிதாவையும் அழைச்சிக்கிட்டு, கிளம்பினார்கள்.

    என்ன நடக்குது? ஒன்னுமே புரியலையே? அம்மா எங்கேதான் போனாள்?

    ஒருவேளை பெரியப்பா வீட்டுக்கு போயிருப்பாளோ? இருக்காது, அங்க போக வாய்ப்பே இல்லை ஏனென்றால், இரு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையே கிடையாது.

    போன முறை அப்பா வந்தப்ப கூட, பெரிய சண்டை. வாய்த்தகராறு முற்றி பெரியப்பா அப்பாவை அடிக்க வந்துவிட்டார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், ஓடி வந்து விலக்கி விட்டார்கள்.

    பெரியப்பாவை விட பெரியம்மாவின் பேச்சு குரூரமாக இருக்கும். அடிக்கடி மண்ணை அள்ளி வீசி, சாபமிடுவாள். உனக்கு நல்ல சாவே வராது என்று அம்மாவை பார்க்கும்போதெல்லாம் சபிப்பாள். அதுவும் என்னை கண்டால் ஆகவே ஆகாது.

    மூஞ்சைப்பாரு... வெள்ள ஓணானாட்டம் என்று குத்தலாகப் பேசுவாள்.

    அவர்கள் வீட்டுக்கு அம்மா போக வாய்ப்பே இல்லை. அம்மாவுக்கு போன் பண்ணலாம் என்றாலோ, போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதாக டீச்சர் சொன்னார்களே?

    சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கியது. வெளி வராண்டாவில் அமர்ந்திருந்த நிவேதிதாவுக்கு பயம் தொற்றிக் கொண்டது. மெல்ல டீச்சரிடம் கேட்டாள். டீச்சர்... எங்க அம்மாவை பார்க்கணும்...

    அவளின் நடுங்கிய குரலையும், கலங்கிய கண்களையும் பார்த்த டீச்சர், மெல்லிய குரலில்,

    அம்மாவைத்தானே பார்க்கணும்...? நான் கூட்டிட்டு போறேம்மா, ஆனால் ரெண்டே ரெண்டு இட்லியையாவது சாப்பிட்டாத்தான் கூட்டிட்டு போவேன்

    அப்போ... அம்மா வந்துட்டாங்களா டீச்சர்?

    ம்ம்... வந்துட்டாங்க, உன்னை கூட்டிட்டு போறேன், சீக்கிரமா சாப்பிடு

    டீச்சர்

    Enjoying the preview?
    Page 1 of 1