Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathal Suvadukal
Kathal Suvadukal
Kathal Suvadukal
Ebook86 pages50 minutes

Kathal Suvadukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Sumathi, an exceptional Tamil novelist, written over 100 novels, 250 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465810
Kathal Suvadukal

Read more from R.Sumathi

Related to Kathal Suvadukal

Related ebooks

Reviews for Kathal Suvadukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathal Suvadukal - R.Sumathi

    10

    1

    அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டியிருந்தது. மங்கள இசை தெரு முனையிலேயே வருபவர்களை வரவேற்றது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் தன்னுடைய வாகனத்தையும் இடையில் செருகிவிட்டு வந்தான் சந்தானம் பன்னீர் தெளித்து வரவேற்றார் மாணிக்கம் - அவனுடைய அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்ப்பவர். அவருடைய மகளுக்குத் திருமணம்.

    என்னப்பா... ஃபேமிலி வரலையா? நீ மட்டும் தனிய வந்திருக்கே?

    அது... வேற ஒரு கல்யாணம். இதை முகூர்த்தத்துல. அதுக்கு போகணுமே, அதான்... ஒய்ப் அங்க போய்ட்டா...

    அப்படியா... மாடியில சாப்பிட்டுட்டு அப்புறம் உள்ள போகலாம். குரு... சாரை கூட்டிக்கிட்டு போ...

    குடுகுடுவென குரு என்ற வாலிபன் ஓடி வந்து சந்தானத்தின் கையைப் பற்றி சாப்பாட்டு கூட்டத்திற்கு அழைத்து சென்றான். சாப்பிட்டு முடித்து கீழே வந்தபோது, மணமேடையில் திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.

    வாப்பா... சந்தானம் அவனுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களுடைய மனைவிமார்களும் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

    என்னப்பா... நீ மட்டும் வந்திருக்கே? உன் ஒய்ப், பசங்க யாருமே வரலையா?

    ஒருவர் இப்படிக் கேட்க, சந்தானம் பதில் சொல்வதற்கு முன் இன்னொருவன் முந்திக் கொண்டான்.

    ஆமா! இவன் என்னைக்கு எந்த இடத்துக்கு பொண்டாட்டி புள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கான். இன்னைக்கு கூட்டிட்டு வர...

    அவன் சொன்னதுதான் தாமதம். அலுவலகத்து நண்பர்கள் அனைவரும் ‘கொல்’லென சிரித்தனர்.

    சந்தானத்தின் முகம் அப்படியே கருத்துப் போனது. இனம் புரியாத அவமானம் நெஞ்சில் சுழிந்தது.

    க்ளார்க், மோகனின் மனைவி மீனா முன் வரிசையிலிருந்து திரும்பினாள். அழகாக, சிக்கென்றிருப்பாள். எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவாள். அவளுடைய பேச்சில் துடுக்குத் தனம் எப்பொழுதும் இருக்கும். மீனாவும் அவர்களுடன் வேலை பார்ப்பவள்தான்.

    சந்தானம் சார்! உங்க மனைவியை நாங்க எப்பத்தான் பார்க்கறது, பேசறது? அன்னைக்கு கிருஷ்ணன் சார் பையனோட பர்த்டே பார்ட்டியில உங்கக்கிட்ட என்ன சொன்னேன்? மாணிக்கம் சாரோட பொண்ணு கல்யாணத்துக்கு அவசியம் உங்க குடும்பத்தைக் கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னேன்ல, சரி சரின்னு தலையாட்டிட்டு இப்ப தனியா வந்திருக்கீங்க...

    அதானே... சார்...! இப்படி நல்லது கெட்டதுக்கெல்லாம் உங்க மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்தாதானே நாம எல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் கலந்து பழக முடியும் அசிஸ்டண்ட் மேனேஜரின் மனைவியும் அதில் சேர்ந்து கொண்டாள்.

    சந்தானம் தர்ம சங்கடமாக நெளிந்தான். வந்து... ரெண்டு பேரும் சேர்ந்து வரலாம்னுதான் இருந்தோம். சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம் ஒண்ணு இதே தேதியில இதே முகூர்த்தத்துல நடக்குது. அதுக்கு அவ குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு போய்ட்டா...

    ஏதாவது ஒரு காரணம் ரெடியா வச்சிருப்பியே!

    சந்தானம் சிரித்து மழுப்பினான்.

    இந்த இடத்திலிருந்து கழுற்றிக் கொண்டால் போதும் என்று தெரிந்தவர் ஒருவரிடம் பேசும் சாக்கில், சந்தானம் எழுந்து சென்றான்.

    அவன் சென்றதும் அவர்கள் ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பான குரலில் பேசிக் கொண்டனர்.

    அவன் கிடக்கான், நாம என்ன சொன்னாலும் அவன் கேட்கவே மாட்டான். எங்கேயும் பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு வரமாட்டான். ரெண்டு பேரும் ஜோடியா ஒரு இடத்துக்குப் போய் நான் பார்த்ததேயில்லை...

    ஏன்... இப்படியிருக்கான் இவன்?

    அவனோட ஒய்ப் நல்லாதானேயிருப்பாங்க? அழகாயிருப்பங்கள்லே!

    அழகாயிருப்பாங்க. அம்சமாயிருப்பாங்க. ரெண்டு பசங்க இருக்காங்க. பொண்ணு பத்தாவது படிக்கறா, பையன் ப்ளஸ் டூ படிக்கிறான். பார்த்தா இவ்வளவு பெரிய பசங்களுக்கு அம்மான்னு சொல்லவே முடியாது. இப்ப கூட மணவறையில் உட்கார வைக்கலாம். அப்படி ஒரு அழகு.

    அப்புறம் ஏன் வெளியில் கூட்டிக்கிட்டு வரமாட்டேங்கறான்!

    அந்த அழகே இவனுக்கு பகையோ என்னமோ! சில ஆம்பளைங்க தன்னோட பொண்டாட்டி பேரழகியாயிருக்கணும்னு ஆசைப்படுவாங்க... ஆனா... அவ கூண்டுக்கிளி மாதிரி இருக்கணும்னு நினைப்பாங்க. அடுத்த ஆம்பளைங்க கண்ணு தன் பொண்டாட்டி மேலே பட்டுடக் கூடாதுன்னு நினைப்பாங்க. அந்த மாதிரி ஆளோ என்னவோ?

    ச்சே! அப்படியெல்லாம் இருக்காதுப்பா. சந்தானத்தைப் பார்த்தா அந்தளவுக்கு பிற்போக்கான ஆளா தெரியலைப்பா...

    ஒருவேளை பொண்டாட்டி கிராமத்து பொண்ணோ என்னவோ? படிக்காத பொண்ணாயிருக்கும். இப்படி படிச்சவங்க மத்தியில அலைச்சுட்டு வந்தா கௌரவக் குறைச்சலா நினைக்கிறானோ என்னவோ.

    அடப் போப்பா! சந்தானத்தோட பொண்டாட்டி ஒரு கிராஜீவேட் தெரியுமா?

    அப்படியா? ஆச்சரியமாயிருக்குப்பா. படிப்பு அழகு எல்லாம். இருந்தும், அவளை இவன் ஏன் எங்கேயுமே கூட்டிக்கிட்டு வரமாட்டேங்கறான்?

    "அட சும்மாயிருங்கப்பா! நேரம் சந்தர்ப்பம் சரியில்லாமலிருக்கலாம்! அதனால கூட்டிக்கிட்டு வராம இருக்கலாம் உடனே ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1