Kadhal Kalamadi Kanne
By R.Sumathi
5/5
()
About this ebook
Read more from R.Sumathi
Eppadi Solvenadi Rating: 4 out of 5 stars4/5Sinnakkili Rating: 4 out of 5 stars4/5Kannoram Minsaaram Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Thottrangal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Sudum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPuthiraaga Oru Poo Rating: 5 out of 5 stars5/5Thendrale Ennai Thodu Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKathal Suvadukal Rating: 0 out of 5 stars0 ratingsEn Malar Madiyile Rating: 4 out of 5 stars4/5Kaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsPaasa Malargal Rating: 0 out of 5 stars0 ratingsOreedam Nee Tharuvaai Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsKunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPovomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5En Iniya Ilamaane Rating: 0 out of 5 stars0 ratingsUravukal Sirukathai Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Paarththaal Kathal Varum Rating: 5 out of 5 stars5/5Paarvaikal Puthithaa Rating: 0 out of 5 stars0 ratingsMayakkathirkuriya Manthirame Rating: 5 out of 5 stars5/5Sinthanaiye... En Siththame! Rating: 0 out of 5 stars0 ratingsKoodu Marantha Kuyilkal Rating: 5 out of 5 stars5/5Ennam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kadhal Kalamadi Kanne
Related ebooks
Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Ennai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsOru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsManthira Punnagai Rating: 4 out of 5 stars4/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKaathirukkum Poo Maalai Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsKanavile Vanthu Nilladi Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Aayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsMaya Nathiyile Naan...! Rating: 0 out of 5 stars0 ratingsNilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Maya Enum Poonchiragu Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Ponnaadai Rating: 4 out of 5 stars4/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Sarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsGangaikarai Pookkal Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kadhal Kalamadi Kanne
1 rating0 reviews
Book preview
Kadhal Kalamadi Kanne - R.Sumathi
19
1
வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்த பூபதி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.
கதவைத் திறந்துகொண்டு இறங்கினான் ராதாகிருஷ்ணன்.
உற்சாகமாக விசிலடித்தபடி உள்ளே வந்தான்.
டேய்... ராதா! மோகன் எங்கே? வரலையா?
இல்லடா! அவங்க அம்மாவுக்கு லேசா உடம்பு முடியலையாம். அவனைப் பத்தித்தான் தெரியுமே! சரியான அம்மாபிள்ளை. ‘ஸாரிடா! என்னால கல்யாணத்துக்கு வரமுடியாது’ன்னு சொல்லிட்டான். நல்லவேளை காரைக் கொடுத்தான். எடுத்துட்டு வந்துட்டேன். மச்சான்! சரியா ஆறுமணிக்கெல்லாம் கிளம்பறோம். நான் போய்தான் எல்லாத்தையும் கவனிக்கணும். ஒரு வாரத்துக்கு முன்னாடியே வரலைன்னு ஏற்கனவே எனக்கு சித்ரா டோஸ் விட்டுக்கிட்டிருக்கா. சித்தப்பா பாவம். தனி ஆளா கிடந்து கஷ்டப்படுவார்.
என்னமோ சொந்த தங்கச்சி கல்யாணம் மாதிரி பரபரக்கிறே? சித்தப்பா பொண்ணு தானே?
இருக்கட்டுமே! அவளை என்னோட சொந்த தங்கச்சியாத்தான் நான் நினைக்கிறேன்.
நீ எப்படிவேணா நினைச்சுக்க. கார் ஓட்ட நல்ல டிரைவரா போய் கூட்டிக்கிட்டு வா
என்னது... டிரைவரா? என்னைப் பார்த்தா கார் ஓட்டறவன் மாதிரி தெரியலையா?
ஐய்யய்யோ... உன்னை நம்பி நான் வரணுமா? கடவுளே! எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலை. வாழ்க்கையில் எந்த சுகத்தையும் அனுபவிக்கலை. அழகழகா ஆறு பொண்ணுங்களை சைட்டடிச்சுக்கிட்டிருக்கேன். அதுல ஒண்ணு கிடைச்சாகூட போதும்னு கனவு கண்டுக் கிட்டிருக்கேன். நீ என்னடான்னா... உன் தங்கச்சி கல்யாணத்துக்கு அழைச்சுட்டுப் போய் என்னை மேலோகத்துக்கு அனுப்பி வச்சுருவே போலிருக்கே! நான் வரலைப்பா. ஆளை விடு.
பூபதி பயந்து அலற ராதாகிருஷ்ணன் பலமாக சிரித்தான்.
வராட்டி போயேன். நான் கிளம்பறேன்.
- அதே சமயம் ராதாகிருஷ்ணனின் செல்ஃபோன் ஒலித்தது. எடுத்து பேசினான்.
ஹலோ...
ராதா... எப்படியிருக்கே?
- காதில் ஒலித்த பெண் குரலைக் கேட்டதும் கடுப்படித்தான்.
உனக்கு எத்தனை தடவை சொல்றது - இப்படி ராதா, அம்பிகான்னு கூப்பிடாதேன்னு! ஆம்பளையைக் கூப்பிடற லட்சணமாயிது?
உன் பேரை சுருக்கி கூப்பிட்டேன்.
சுருக்கி கிருஷ்ணன்னு கூப்பிடலாமே!
எனக்கு ராதான்னு கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு. என் தோழிங்களுக்கு நான் யார் கூட பேசிக்கிட்டிருக்கேன்னு சந்தேகம் வராது பாரு. நீ வேணும்னா சுவேதாங்கற என் பேரை சுருக்கி வேதா... வேதுக்குட்டின்னு கூப்பிடேன்.
போதும்! எதுக்கு போன் பண்ணினே சொல்லு.
ஊருக்கு கிளம்பிட்டியா?
ம்... கிளம்பிக்கிட்டிருக்கேன்.
எத்தனை மணிக்கு?
சரியா ஆறுமணிக்கெல்லாம் போயிடுவேன்.
எதுல?
என் ஃபிரண்ட் கார் கொடுத்திருக்கான்.
நல்லதாப் போச்சு. அடுத்த பத்து நிமிஷத்துல நான் அங்கயிருப்பேன்.
நீ எதுக்கு இங்க வர்றே?
எங்கப்பா உனக்கு போன் பண்ணலையா?
இல்லையே!
என்னை உன் கூடவே கிளம்பி ஊருக்கு வரச் சொல்லிட்டார்.
என்ன விளையாடறியா? அதெல்லாம் நீ என்கூட வரமுடியாது. இங்க கார்ல இடம் இல்லை. மொத்தம் நாங்க ஏழு பேர் போறோம். நெருக்கியடிச்சுக்கிட்டு உட்கார்ந்துதான் போகணும். நீ வந்தா சரியா வராது.
அதெல்லாம் முடியாது. யாராவது ரெண்டு பேரைக் கழட்டி விடு.
ரொம்ப அவசியம். இடமில்லைன்னு சொல்றேன். பஸ்ஸைப் புடிச்சு ஊருக்கு போ.
இடமில்லையா? ஒரு இடம் காலியாத்தானே இருக்கும்?
எங்கே?
உன் மடி! அங்க உட்கார்ந்துக்கிட்டு வர்றேன்.
வெட்கமாயில்லை இப்படிப்பேச?
என் அத்தை மகன்கிட்ட எனக்கென்ன வெட்கம்?
இதப்பார்! உன்னை என் கூட அழைச்சுட்டு போக முடியாது. என் ஃபிரண்ட்ஸுங்களெல்லாம் என்னை மாதிரியே இருப்பாங்கன்னு நினைக்காதே! மோசமான பசங்க.
கரெக்ட்! உன்னோட அத்தைமகளோட கற்பைக் காப்பாத்த வேண்டிய முதல் கடமை உனக்குத்தான். அதனால அவனுங்களைக் கார்ல போகச் சொல்லிட்டு நீ என் கூட வா. ரெண்டு பேரும் பஸ்ல போகலாம்.
அதெல்லாம் என்னால முடியாது. அவனுங்களை அழைச்சுட்டு போறதே நான்தான். உனக்காக அவனுங்களைக் கழட்டி விட முடியாது. நீ பஸ்ல போ.
என்னைத் தனியா பஸ்ல போகச் சொல்றியே! உனக்கு மனசாட்சியே இல்லையா? எங்கப்பா உன்னோட பாதுகாப்புலதான் என்னைப் புறப்பட்டு வரச்சொல்லியிருக்கார்.
பொண்ணுங்க தன்னந்தனியா விண் வெளியில பறக்கறாளுங்க. உனக்கு இதோ இருக்கற கடலூருக்குப் போகறதுக்கு பாதுகாப்பு வேணுமா? பாதுகாப்பு வேணும்னா போலிஸுக்கு போ. போலிஸ் பாதுகாப்போட ஊருக்கு வந்து சேரு.
- தொடர்பைத் துண்டித்தான்.
மச்சான்... சுவேதாவா? நம்ம கூட ஊருக்கு வர்றேன்னாளா? ஏன்டா அவளைப் போய் வர வேண்டாங்கறே? போறதே மூணு பேருன்னுதான் முடிவு பண்ணினோம். அதுல மோகன் வரலைன்னு சொல்லிட்டான். இப்போ நீயும் நானும்தான். அவகிட்ட ஏழு பேர் போறோம் எட்டு பேர் போறோம்னு எதுக்கு டூப் விடறே!
எல்லாம் அவளைக் கழட்டி விடத்தான்.
டேய்... டேய்... ஏன்டா இப்படியிருக்கே? அவனவன் பக்கத்து வூட்டு பொண்ணு பார்த்தாலே பல்லை இளிச்சுக்கிட்டு ஓடறான். நீ என்னடான்னா அழகான பொண்ணு - அதுவும் அத்தை பொண்ணு - அவளைப் போய் கழட்டி விடறே! டேய்... டேய்... அவளை வரச் சொல்லுடா...
- பூபதி கெஞ்ச, முறைத்தான் ராதாகிருஷ்ணன்.
நீதானே கல்யாணத்துக்கு வரலைன்னு சொன்னே? இப்போ அவளுக்காக ஏன் கெஞ்சறே? அவளை நான் அழைச்சுட்டுப் போனா உனக்கென்ன? அழைச்சுட்டுப் போகலைன்னா உனக்கென்ன?
என்றபடியே தன் துணிகளை அடுக்கி சூட்கேஸில் வைக்கப் போனான்.
டேய்... சும்மா ஒரு இதுக்கு சொன்னேன். அதைப் போய் பெரிசா எடுத்துக்கிட்டு. நான் மட்டும் வரலைன்னா அம்மா உன்னைத்தான் திட்டுவாங்க. பாவம்டா சுவேதா. அவளை வரச் சொல்லுடா!
டேய்... அவளைப்பத்தி உனக்குத் தெரியாது. சரியான அறுவை. அவளை நம்மோட கூட்டிக்கிட்டுப் போனா நிச்சயம் என்னால ஒழுங்கா கார் ஓட்ட முடியாது. தொணதொணன்னு பேசி உயிரை வாங்கிடுவா.
டேய்... டேய்... என்னடா நீ? சுவேதா வந்தா ஜாலியா பேசிக்கிட்டு போகலாம். பயண அலுப்பே தெரியாது.
இதப்பார்! நான் சொன்னா சொன்னதுதான். இஷ்டம் இருந்தா நீ வா. இல்லாட்டி போ. நான் கிளம்பறேன்.
- சொல்லிக் கொண்டே ராதாகிருஷ்ணன் குளியலறைக்குள் நுழைந்தான்.
பூபதி அவனை திட்டித் தீர்த்தான்.
ச்சே! என்ன மனுஷன் இவன். கொஞ்சம் கூட ரசனை இல்லாதவன். எனக்கெல்லாம் இப்படி அழகான ஒரு அத்தை பொண்ணு இருந்தா ஆபீஸே போக மாட்டேன். எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.
- நொந்து கொண்டான் பூபதி.
2
அடுத்த அரைமணி நேரத்தில் தன் அறையிலிருந்து வெளிப்பட்ட ராதாகிருஷ்ணனைப் பார்த்து விழிகளை விரித்தான் பூபதி.
டேய்... மச்சான்... மாப்பிள்ளை மாதிரி ஜம்முன்னு இருக்கேடா இந்த டிரஸ்ல.
கல்யாணம் என் தங்கச்சிக்கு. விட்டா... எனக்கும் ஒரு பொண்ணு பார்த்து கட்டிவச்சுடுவே போலிருக்கே
என்று மேஜை மீது கிடந்த பேனாவை எடுத்து ஸ்டைலாக சட்டைப் பையில் செருகிக் கொண்டான்.
டேய்... பொண்ணு எதுக்குடா பார்க்கணும். அதான் சுவேதா இருக்காளே! உன் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் அதே மேடையில்வச்சு உன் கல்யாணத்தை முடிச்சுக்க.
டேய்... சும்மாயிருக்க மாட்டே? சும்மா சுவேதா சுவேதான்னுக்கிட்டு.
உண்மையிலேயே அவமேல உனக்கு ஆசை இல்லையா?
ஆசையா? அவமேல எதுக்கு எனக்கு ஆசை வரணும்?
அவ உன் அத்தை பொண்ணுடா!
அத்தை பொண்ணுன்னா உடனே அவளைக் காதலிக்கணுமா?