Gangaikarai Pookkal
5/5
()
About this ebook
Anuradha was born in 1947 in Thanjavur, Tamil Nadu. Her grandfather R. Balasubramaniam was an actor who inspired Anuradha to become a writer. Anuradha started her career as an artist before making several unsuccessful attempts to get a job with popular magazines. This prompted her to join Mangai, a Tamil magazine after the editor found her writings very interesting. Anuradha's literary career started in 1977 while working for the magazine.
Apart from her literary contributions, she was well known for her "anti-divorce counselling" work. In a career that spanned over 30 years, Anuradha wrote nearly 800 novels and 1,230 short stories. Her works were mainly centered on family and everyday happenings. One of her early works Sirai, won a gold medal for the best short story from Ananda Vikatan. It was adapted into a film of the same name. Following this, her other novels Kootu Puzhukkal, Oru Malarin Payanam and Oru Veedu Iruvasal were adapted into films in various languages such as Tamil, Telugu and Kannada. Oru Veedu Iru Vasal, directed by Balachander won the National Film Award for Best Film on Other Social Issues in 1991. The 1988 Telugu film Oka Baarya Katha based on her work won five Nandi Awards. In addition to films, many of her stories such as Archanai Pookal, Paasam and Kanakanden Thozhi have been adapted into Television serials. She was awarded a gold medal by M. G. Ramachandran, the then Chief Minister of Tamil Nadu.
Read more from Anuradha Ramanan
Mullodu Oru Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Nilavum Penthaan Rating: 5 out of 5 stars5/5Nanaindha Iravugal Rating: 5 out of 5 stars5/5Moga Mazhai Rating: 5 out of 5 stars5/5Mouna Kanavu Rating: 5 out of 5 stars5/5Ulley Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsPoovodum Pottodum Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Oru Veedum Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Thendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Mogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Oru Yuddham! Rating: 3 out of 5 stars3/5Anna Rating: 5 out of 5 stars5/5Unnaruge Ullaval Rating: 0 out of 5 stars0 ratingsUravu Ondru Vendum Rating: 5 out of 5 stars5/5Puthusai Potta Kolam Rating: 4 out of 5 stars4/5Sonthamendru Vanthathellam Rating: 5 out of 5 stars5/5Vera Vazhi Theriyale... Rating: 5 out of 5 stars5/5Mundhanai Sirai Rating: 3 out of 5 stars3/5Mana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikka… Kaathiru Rating: 0 out of 5 stars0 ratingsNila Sandhippu Rating: 5 out of 5 stars5/5Salanam Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chirusugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikkum Bothimaram Rating: 0 out of 5 stars0 ratingsNee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Nadippu Suthesikal... Rating: 5 out of 5 stars5/5
Related to Gangaikarai Pookkal
Related ebooks
Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Nizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Anantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Nee En Poonchiragu Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Koondu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsVettai Maan Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Uruga Marukkum Meluguvarthikal Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsVaira Kammal Rating: 5 out of 5 stars5/5Velli Kanavu Rating: 5 out of 5 stars5/5Kadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Thanthu Vitten Ennai Rating: 5 out of 5 stars5/5Manakukai Ooviyamaai... Rating: 5 out of 5 stars5/5Muthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsJarigai Siraigal Rating: 4 out of 5 stars4/5Mandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Unnudane Naan Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5
Reviews for Gangaikarai Pookkal
1 rating0 reviews
Book preview
Gangaikarai Pookkal - Anuradha Ramanan
http://www.pustaka.co.in
கங்கைக்கரைப் பூக்கள்
Gangaikarai Pookkal
Author:
அனுராதா ரமணன்
Anuradha Ramanan
For more books
http://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
போட்ட திட்டமெல்லாம் இது வரையில் ஒழுங்காகத்தான் நடந்து வந்திருக்கிறது.
மாலை ஆறு மணிவரையில் இப்படியே நேரத்தைத் தள்ளிக் கொண்டு போனால்- ஆறரை மணி பஸ் பிடித்து தஞ்சாவூர் போய் விடலாம். அப்புறம் அங்கிருந்து சென்னைக்கு ஏதாவது ஒரு பஸ்...
'அப்பாடா... அதற்குப் பிறகு இந்த வீட்டை நினைத்தே பார்க்க வேண்டாம். எங்கேயாவது கூலி வேலை செஞ்சாவது பிழைப்பேனே தவிர, மறுபடியும் இந்த நரகத்துல வந்து மாட்டிக்க மாட்டேம்பா...'
தயா தலையைக் குலுக்கி, நினைவுகளை உதறப்பார்த்தாள். நெஞ்சுக்குள் மறுபடியும் பயப் பறவை சிறகுகளை அடித்துக் கொள்கிறது.
புறப்படுகிற வரையில், எந்தவிதத்திலும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருந்தாள் அவள்… அவளை விடவும் மாடியில் குடியிருந்த ராமநாதன் செட்டியார் மகள் வடிவு...
அவள் தான் இவள் புறப்படுவதற்கு முழு ஒத்துழைப்பும், தைரியமும் தந்தவள்.
நீ கிளம்புடி... பிடிக்காதப் புருஷனோட எத்தனை நாள்தான் குடும்பம் நடத்துவே...
அதில்லே வடிவு... நாளைக்கு திரும்ப மாட்டிக்கிட்டேனா... எங்க அத்தையும் மாமாவும் என்னைக் கொன்னே போடுவாங்க. உனக்குத்தான் தெரியுமே... எங்க மாமா பேரே அருவா துரைதானே... பஞ்சாயத்துத் தலைவர் வேற... அதான்...
ஒரு பொண்ணைக் காணோமின்னா போலீஸ்லே தகவல் கொடுப்பாங்க இல்லே? உங்க மாமா என்னன்னு சொல்லுவாரு? இதுமாதிரி என் மச்சான் பொண்ணு- என் ரெண்டாவது மகனோடப் பெண்டாட்டியின்னு தானே சொல்லுவாரு?
ஆமா...
உடனே போலீஸ் என்ன கேட்கும் தெரியுமா... பொண்ணு பேரென்ன... வயசென்னன்னுதான்...
சொல்லிட்டுப் போறாரு...
அங்கேதான் உதைக்கும். உன் வயசென்ன...
பதினாறு...
உம்... இதை உங்க மாமா போலீஸ்லே சொன்னா முதல்லே அவர் கைக்குத்தான் காப்பு போடுவாங்க. நீ இன்னும் மேஜரே ஆகல்லே. மைனர் பொண்ணுக்கு கல்யாணம் செய்யறது சட்டப்படி குற்றம்...
எங்க மாமா, என் வயசை இருபத்தஞ்சுன்னு கூசாமச் சொல்லுவாரு வடிவு... பெர்த் சர்டிபிகேட்டை எல்லாம்கூட மாத்திடுவாரு. அவருக்கு இருக்கற செல்வாக்குக்கு என்ன வேணுமானாலும் பண்ணுவாரு...
அதுக்குத்தான் நான் சொல்றேன்; ஓடிப் போன்னு… பட்டணத்துல எங்க பாட்டி இருக்காங்க. லெட்டர் தர்றேன். விலாசம் தர்றேன். எப்படியாவது போய் சேர்ந்துடு. அவங்க உன்னை நல்ல எடத்துல சேர்த்து மேற்கொண்டு படிக்க, ஏதாவது டிரெய்னிங் எடுத்துக்க... எல்லாத்துக்கும் உதவுவாங்க...
ஒருநாள்- இரண்டு நாள் இல்லை... ஆறு மாதங்களாகத் திட்டம் தீட்டித் தீட்டி... இன்றைக்குத்தான் அதைச் செயல்படுத்தப் போகிறார்கள்.
எதற்கும் ஒருமுறை நினைவு தெரிந்ததிலிருந்து இதுநாள்வரையில் தான் வாழ்ந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கிறாள் தயா.
பெரிய வீடு... ஆட்களும் நிறைய... அவளது அத்தை சம்பாவுக்கும் அத்தையின் கணவன் துரைசாமிக்கும் சுற்றம் அதிகம். இவர்களுக்கே ஆறு குழந்தைகள்... நாலு பையன்; இரண்டு பெண்... எல்லோருக்கும் மணமாகி, அந்த வீட்டிலேயே ஒரே குடும்பமாக... ஆயிரம் சண்டை வரும். வெட்டுப்பழி, குத்துப் பழியாக ஒருத்தர் குடுமியை அடுத்தவர் பிடித்துக் கொண்டு நிற்பார்கள். ஆனாலும் தனிக் குடித்தனம் போக வேண்டும் என்று யாருமே மூச்சு விட்டதில்லை. அதற்கு காரணமில்லாமல் இல்லை.
எப்படியோ அந்த வீட்டுக்கு 'தியாகி விசுவநாதன் வீடு' என்கிற பெயர் வந்துவிட்டது.
'தியாகி வீட்டுப் பிள்ளைங்கடா'- என்பதில் ஒரு மதிப்பு... மரியாதை...
இத்தனைக்கும் தியாகி விசுவநாதனை- அதோ அந்த நடு முற்றத்தில் தேக்குக் கட்டில் போட்டு, உயரமான மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாரே கிழவர்… அவர் தான் தியாகி விசுவம்... அவரை எழுப்பி, நீங்க எப்பய்யா ஜெயிலுக்குப் போனீங்க? உங்ககூட ஜெயில்லே இருந்த தலைவர்கள் யார் யார் எனக் கேட்டால் மிரள மிரள விழிப்பார்.
தொண்ணூறு வயசாகிறது. மடித்து வைத்த புகையிலை மட்டை போல இருப்பார். பேசவே மாட்டார். அப்படியே வாய் திறந்தாலும் ஒரேயொரு பெயரைத்தான் கூப்பிடுவார்.
தயா...
அவ குளிக்கிறா... என்ன வேணும்?
……………
'கிழத்துக்குத் திமிரைப் பாரு. எதுவானாலும் தன் பேத்திகிட்டத்தான் சொல்லணுமாம். சரியான அமுக்கலாங் கிழங்கு...'
பெண்களின் எந்த விமரிசனத்துக்கும் வாயைத் திறக்க மாட்டார் கிழவர்.
தயா வந்துதான் எழுப்பி உட்கார வைக்க வேண்டும். குளிப்பாட்ட வேண்டும். அரிசி நொய் கஞ்சியில் எவ்வளவு உப்பு போட வேண்டும் என்பதுகூட தயாவுக்குத்தான் தெரியும்.
இந்த வீட்டை விட்டுக் கிளம்புவதற்காக அவள் வருத்தப்பட வேண்டும் என்றால், இவர் ஒருவருக்காகத் தான். மற்றபடி எல்லாருக்கும் தனித்தனியே குடும்பம், மனைவி, மக்கள் என்று நிறைய துணைகள் இருக்கிறது. ஏன், கட்சிகள்கூட இருக்கிறது.
அவளது தாத்தா விசுவம் அந்த நாளைய காங்கிரஸ்காரர் என்று எல்லாராலும் போற்றப்படுபவர்.
எங்க அப்பா காந்தியோட உப்பு சத்தியாகிரகத்துல கலந்துட்டுத்தானே ஜெயிலுக்குப் போனாரு. முன்னேயெல்லாம் இதைப்பத்தி கதை கதையாச் சொல்லுவாரு பாருங்க... மெய்மறந்து கேட்டுட்டே இருக்கலாம்...
இப்படிச் சொல்லும் சம்பாவின் புருஷன் துரை ஆளும் கட்சியில் முக்கியப் பிரமுகராகப் போற்றிக் கொண்டாடப்படுகிறவன்... துரையின் மூத்தமகன் எதிர்க் கட்சி எம்.எல்.ஏ., இரண்டாவது நா.மா.க., அடுத்தவன் போ.வ.க., மூன்றாவது மகனும், மூத்த மாப்பிள்ளையும் அடிக்கொரு தரம் டில்லிக்குப் பறந்து கொண்டிருக் கிறார்கள். நான்காவதான தயாவின் கணவனான சந்திரன்- தனது பெயரை தமிழ்ப்படுத்தி- நிலவழகன் என்று வைத்துக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் வட்டாரத்தில் நிலவளகன் அல்லது நிளவு- வீட்டுப் பெயர் சந்திரன்தான்.
இதுவரையில் தனக்கென்று ஸ்திரமாய் எந்தக் கட்சியையும் வைத்துக் கொள்ளவில்லை சந்திரன். எந்த சமயத்தில் யார் கை ஓங்கியிருக்கிறதோ- அந்தக் கட்சியின் அனுதாபியாக இருப்பான்.
சரி, இருந்துவிட்டுப் போகட்டும். இதற்கும்- தயாவின் இப்போதைய முடிவுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களில் யாராவது கேட்கலாம்...
தயாவின் முடிவு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டதுதான்.
பதினைந்து வயதுக்குள் கல்யாணம் என்பது அவளளவில் நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயமாக இருந்தது. அதுவும் சந்திரனுக்கு வயசு இருபத்தியொன்பது. இதுவரையில் நிரந்தர வேலை என்று எதுவுமே இல்லை. படிப்புமில்லை. சதா வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிகரெட்டுகளை ஊதித் தள்ளுவதும், போகிற வருகிற பெண்களை எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டலடிப்பதுமாய்...
நீ நாசமாப் போக... உன் நாக்கை நல்ல பாம்பு கொத்த...
இப்படி சில பெண்கள் வயிறெரிந்து இவனை சபித்திருக்கிறார்கள். தயாவே கேட்டிருக்கிறாள்.
சந்துரு... எதுக்கு இதுமாதிரி பேரை வாங்கிக் கட்டிக்கறே. தாத்தாவுக்குத் தெரிஞ்சா எத்தனை வருத்தப் படுவாரு தெரியுமா...?
சரிதான் போடீ... பெரீசா சொல்ல வந்துட்டா...
எலியும் பூனையும்கூட எப்பொழுதாவது சினேகமாக இருக்குமாயிருக்கும்.
சந்திரன்- தயாவினிடையே ஓரிரு வார்த்தைகூட அன்பாகக் கிடையாது. இத்தனைக்கும் பிறந்ததிலிருந்து இந்த வீடு, இதிலுள்ள மனிதர்களைத் தவிர்த்து, வேறு யாரையும் தெரியாது தயாவுக்கு.
துரையின் தங்கை மகள்தான் தயா. பிரசவத்துக்குப் பிறந்த வீடு வந்த தயாவின் தாய்- பெற்றுப் பிழைக்கவில்லை. ஏழே நாள் உலக அனுபவத்துடன் பாலுக்கு அழுவதைத் தவிர வேறு எதையுமே அறியாதக் குழந்தையை அள்ளி அணைத்தவள் சம்பாதான்.
அப்பொழுதே அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்து எல்லாம் வளர்ந்து விட்டன.
கடைசியா ஒரு பொண்ணைக் கடவுள் கொடுத்ததா நினைச்சுத்தான் இவளை வளர்க்கிறேன் சாமி...
இப்படி எல்லாரிடமும் சொல்லியது மட்டுமின்றி- தயாவை தங்கள் கிராமத்திலிருந்து வண்டி கட்டி தஞ்சாவூருக்கு கான்வென்ட்டில் படிக்க அனுப்பிய போதெல்லாம் வேறெந்த எண்ணமும் இல்லை சம்பாவுக்கு...
தாயில்லாக் குழந்தை ஏதோ படிக்க ஆசைப்படுது. இதுல என்ன தப்புங்கறேன்...
துரை, தன்னைச் சந்திக்க வருகிற ஆசாமிகளிடம் எல்லாம் பெருமையாய் சொல்லிக் கொள்வார்.
இப்படிப்பட்ட தம்பதிகளுக்கு- இவளை மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற விபரீத எண்ணம் வந்ததுதான் தயாவின் இந்த வெளிநடப்புக்குக் காரணம்...
அத்தை இந்த கல்யாணம் வேணாம் அத்தை... நான் இன்னும் படிப்பை முடிக்கவே இல்லே... பரீட்சை வருது... என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் டென்த் போறப்ப- நான் மட்டும் அசிங்கமா...
சந்துருவை நான் கூடப் பொறந்த அண்ணாவா நினைக்கறேன் மாமா... ப்ளீஸ்...
யாரும் வாயைத் திறக்கவில்லை, சந்துருவிடம் ஓடினாள்:
டேய், உனக்கு ஏற்கனவே சுவாமிமலையில் ஒரு காதலி இருக்கா இல்லே? நானே எத்தனை தடவை உனக்காக லெட்டர் கொண்டு கொடுத்திருக்கேன். அவளுக்கு விஷயம் போச்சுன்னா உன்னை சும்மாவிட மாட்டா...
"இவளது