Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnudane Naan
Unnudane Naan
Unnudane Naan
Ebook78 pages39 minutes

Unnudane Naan

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466114
Unnudane Naan

Read more from G.A.Prabha

Related to Unnudane Naan

Related ebooks

Reviews for Unnudane Naan

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnudane Naan - G.A.Prabha

    12

    1

    சந்தோஷமாக இருந்தது. அதிகாலை குளிர் காற்று முகத்தில் அடிக்க மெதுவாக நடப்பது நன்றாக இருந்தது.

    லேசாய் நீலமும் வெண்மையும் கலந்த வானம். அதிகாலை காற்று. பறவைகளின் கீச்சொலி உதிர்ந்த பவழ மல்லி, வாதநாரயன பூக்கள், சிவப்பும் வெள்ளையும் கலந்து லேசான நறுமணத்துடன் மனதை கொள்ளை கொண்டது.

    மனசு நல்லா இருக்கணுமா? அதிகாலை வாக்கிங் போ என்பார் தாத்தா.

    உண்மைதான். தூய்மையான காற்று, பறவைகளின் இன்னிசை, பூக்களின் நறுமணம், தெருவின் இருபக்கமும் உதிர்ந்து கிடக்கும் வண்ணப் பூக்கள் எல்லாமே மனசை லேசாக்கி விடுகிறது

    லேசான மனசு நாள் முழுதும் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தந்து விடுகிறது.

    உடன் வேலை செய்யும் மாலா, சாயந்திரம் வரை நீதான் பிரஃஷ்ஷா இருக்கே உமா என்பாள்.

    அதிகாலை வாக்கிங் தந்த பரிசு. என்னால முடியலை. காத்தால எழுந்தா சமையல் செஞ்சு, பசங்களை கிளப்பி வரவே சரியா இருக்கு. இதுல எங்கே வாக்கிங்.?

    இதுதான் உங்க தப்பே, கல்யாணம் ஆகி குழந்தைன்னு வந்துட்டா உங்க மேல அக்கறை போயிடறது. உன் உடம்பு நல்லா இருந்தாத்தான் நீ உழைக்க முடியும். எல்லா பொறுப்புகளும் முடிஞ்சு, சரின்னு நீ ரிலாக்ஸா இருக்கறப்போ வாக்கிங் போன்னு டாக்டர் சொல்வார். அதுக்கு முன்னாடி நீயே அலர்ட் ஆயிடலாம்ல.

    ‘கல்யாணம் ஆகி, குடும்பம்னு ஆன பிறகு நீ எப்படி இருக்கேன்னு நானும் பாக்கறேன் இப்படித்தான் இருப்போம் என்று நினைத்தாள் உமா. எதற்காக மாற வேண்டும்?

    இந்த வாழ்க்கை ஒரு முறை. இதை முழுமையாக, சந்தோஷமாக வாழ்ந்து விடவேண்டும். கல்யாணம் பார்ட் ஆஃப், லைஃப். இதை ஏன் விலங்காக நினைத்து, அது இப்படி, இது இப்படி என்று தானும் பயந்து, இருப்பவர்களையும் பயமுறுத்த வேண்டும்!’

    உமா மெதுவாக யோசனையுடன் நடந்தாள்.

    ஜூலை கடைசி என்பதால் மழை ஆரம்பத்திருந்தது. நேற்று இரவு முழுதும் மழை. நின்று விட்டாலும் மேகம் லேசாக எப்போது வேணாலும் வருவேன் என்று பயமுறுத்தியது.

    ஏம்மா இதுல போகணுமா? காலையில் கிளம்பும் போதே அப்பா கேட்டார்.

    இல்லைப்பா. ஒரு நாள் சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டா அதே வழக்கமாயிடும் என்றவள் கிளம்பி விட்டாள். மழைதான் இல்லையே என்ற தாத்தாவின் சிபாரிசு வேறு.

    ஹலோ பேபி, குட் மார்னிங் ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் கடந்து போனார். - நடையும் இல்லாமல், ஓட்டமும் இல்லாத ஒரு வாக்கிங்.

    உமாகுட்டி சீதா பாட்டி. இன்னைக்கு லேட் போல

    ஆமாம் பாட்டி. அப்பா மழை வராப்பல இருக்கு. வேண்டாம்னார்.

    ஆமாம். செல்லப் பெண். மழையில் கரைஞ்சிடப் போறாளேன்ற பயம்.

    பாட்டி கிண்டல் செய்தாலும் அதுதான் உண்மை, உமாவுக்காகவே அப்பா வாழ்கிறார் என்றால் அது மிகையில்லை. மூச்சு விடுவதே உமாவுக்காகத்தான்.

    அவன் மூச்சை கவனித்துப் பார்த்தால் அதுவும் உமா உமான்னுதான் சொல்லும் பாட்டி கிண்டல் செய்வார்.

    சில சமயங்களில் அவர் பிரியம் மூச்சை முட்டவைக்கும். ஆனால் அப்பாவுக்கு அவள்தான் உலகம். உமா, உமா என்று அவள் பெயரையேதான் உச்சரிப்பார். ஒவ்வொரு நிமிஷமும், செயலும் அவளைப் பற்றித்தான்.

    பெண் குழந்தைகள் என்றால் அப்பாவுக்கு ஆசை. வீட்டுக்கு அழகே பெண் குழந்தைகள்தான். கொலுசு சப்திக்க அதுக அப்பான்னு கூப்டுண்டு ஓடி வரப்போ உலகே நம்ம காலடியில், என் தாய் மீனாட்சியே வந்து பொறக்கணும் என்பாராம்.

    முதல் இரண்டு கலைந்து போய், அடுத்து அண்ணா பொறந்ததும் அப்பா மனசு விட்டு விட்டார். மீனாட்சி அம்மனை அடிக்கடி போய் தரிசித்து விட்டு வருவார்.

    ஒருமுறை சென்ற போது அப்பா எனக்கு பெண் பொறந்தால் நான் தாம்பத்ய வாழ்விலிருந்து முழுதாக விலகி விடுகிறேன் என்று வேண்டிக் கொண்டார். வந்து அதே வருடம் உமா பறந்தாள். அதன் பிறகு அப்பா முழுதாக இல்லறத் துறவு மேற்கொண்டார்.

    எல்லோரும் சொன்னார்கள். வேண்டாம். சின்ன வயசு. முழுதாக குடும்பத்திலிருந்து விலக வேண்டாம் என்று. அப்பா கேட்கவில்லை.

    அவரின் விருப்பமே தன் விருப்பம் என்று நடக்கும் அம்மாவால் அவர் வாழ்வு இன்னும் இனியதாக மாறியது.

    ஒரு பெண் குழந்தை பிறந்து அதை சிறப்பா வளர்த்து, அதை நல்ல இடத்துல கட்டிக் கொடுத்து, அது சந்தோஷமா வாழும்போது பெத்தவன் மனசுல ஒரு கர்வம் வரும் பாரு! அதுக்கு ஈடு எதுவும்

    Enjoying the preview?
    Page 1 of 1