Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkal Malarum
Pookkal Malarum
Pookkal Malarum
Ebook136 pages1 hour

Pookkal Malarum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466114
Pookkal Malarum

Read more from G.A.Prabha

Related to Pookkal Malarum

Related ebooks

Reviews for Pookkal Malarum

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkal Malarum - G.A.Prabha

    17

    1

    "டேய் நந்து, இன்னும் டென் மினிட்ஸ். அதுக்குள்ள நீ எழுந்துக்கலை. பச்சத்தண்ணீரை மேல ஊத்துவேன்"

    ஓ! டாட் - நந்து பதறி எழுந்தான்.

    செஞ்சாலும் செய்வீங்க

    சே! என்ன தகப்பனோ? நந்தினி அலுத்துக்கொண்டாள்.

    குழந்தையை ஒரு பத்து நிமிஷம் தூங்கவிட்டா என்னவாம்?

    முதல்ல இவன் குழந்தை இல்லை. இருபத்தாறு வயசாகுது. மடியில போட்டு கொஞ்சறே!

    அம்மாக்கு புள்ள என்னைக்கும் குழந்தைதான் - நந்து.

    நீ எழுந்து போய் குளிடா - நந்துவை துரத்தினார்.

    பாத்ரூம் வெந்நீர் இருக்கு. பிரஷ்ல பேஸ்ட் போட்டு வச்சிருக்கேன். ஓடு

    ஷேவ் பண்ணனும் டாட்

    முதல்ல காப்பி குடிக்கட்டுமே குழந்தை - நந்தினி.

    பல் தேய்ச்சுட்டு வா - வரதராஜன் ஹாலுக்கு வந்தார். நியூஸ் பேப்பரை எடுத்து டீப்பாய் மேல் போட்டுவிட்டு நிமிர்ந்தபோது பூனையாய் நந்தினி சமையலறைக்குள் செல்வது தெரிந்தது.

    காப்பி குடிச்சிட்டானா?

    நந்தினி திடுக்கிட்டாள். பதில் சொல்லாமல் விழித்தாள். காலி டம்ளர் ஆமாம் என்றது.,

    திருத்தவே முடியாது. அவன் என்ன குழந்தையா? ஒரு மல்ட்டி மில்லியன் கம்பெனியில் சீஃப் என்ஜினீயர், பி.டெக் படிச்சிட்டு, அஞ்சு இலக்க சம்பளம் வாங்கறான். என்னவோ ஃபீடிங் பாட்டில் குழந்தை மாதிரி அவனும் கொஞ்சறான். நீயும் தங்கமேன்னு உருகறே. ஆச்சு, வைகாசில கல்யாணம் பண்ணிடலாம்னு ஐடியா. பொண்டாட்டி வந்தா, நீ ஒதுங்கித்தான் நிக்கணும்

    நந்தினி கண் நிறைந்தது. பதில் சொல்லாமல் உள்ளே போனாள். அவளின் கண்ணீர் அவரையும் சங்கடப்படுத்தியது. ஆனாலும் அவளின் பாசத்துக்கு அணை போடவேண்டியது அவசியம் என்று நினைத்தார்.

    நந்தினியை சமாதானம் செய்யாமல், மீண்டும் ஹாலுக்கு வந்தார்.

    கம்மென்று பவுடர் மணக்க வெளியில் வந்தான் நந்தகுமார். ஆஜானுபாகுவாய் பேண்ட், பனியனில் நின்ற பையனைப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது.

    இத்தனூன்டு, தன் கையில் தவழ்ந்த குழந்தையா இது. தன் மனசே உருகும்போது நந்தினி பெற்றவள். உருகுவதில் என்ன விந்தை. ஆனால் அவள் கொஞ்சம் ஓவர்தான். இன்னமும் கைக்குழந்தையாய் மடியில் போட்டு கொஞ்சுவதும், சோறு ஊட்டுவதும், தங்கம், மயிலே, செல்லமே என்று கொஞ்சுவதும் நாய்க்குட்டியாய் நந்து அதற்கு வளைந்து கொடுப்பதும் அவருக்கு வேடிக்கையாய் இருக்கும்.

    ஆனால் எதிரே நின்ற மகனைப் பார்க்கையில் தாவி அணைத்துக்கொள்ள மனசு பறந்தது என்னவோ உண்மைதான்.

    ஓ.கே டாட். கிவ் மீய கிஸ் நந்து குனிந்து கன்னத்தைக் காட்டினான்.

    எதுக்குடா?

    அ..ஆ... என்னைப் பார்த்ததும் உன் கண்ல ஒரு கிலோ பிரியம் பொங்கி வழிஞ்சுதே. அதை வெளியில் காட்டினா என்னவாம்?

    படவா வரதராஜன் சிரித்தபடி அவன் கன்னத்தில் அழுந்தி முத்தமிட்டார்.

    தேங்க்யூ நந்தகுமார் பூஜையறைக்குள் சென்றான். ஒரு விதத்தில் வரதராஜனுக்கு தன் பையனைப் பற்றி ஒரு கர்வம். பி.டெக் படித்து, பெரிய கம்பெனியில் வேலை பார்த்தாலும், தன் சாத்திரம், சம்பிரதாயங்களை, குடும்ப வழக்கங்களை எதுவுமே அவன் விட்டதில்லை. குளித்து, சுவாமியறையில் பத்து நிமிஷம் எல்லா ஸ்லோகங்களும் சொல்லுவான். பொய் சொல்லமாட்டான். மனிதாபிமானம் அதிகம். மாதா மாதம் தன் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அனாதை இல்லத்துக்கு அனுப்பிவிடுவான். சிகரெட், மது கிடையாது.

    பெற்றோர்களிடம் உயிர். அவர்கள் சந்தோஷம்தான் அவனுக்கு முக்கியம். அவர்களிடம் எதையும் மறைக்கமாட்டான்.

    அவனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை வீட்டில். இன்னொரு குழந்தை வந்து அதற்கு தங்கள் அன்பை பங்கு போடப்பிடிக்காமல் ஒரு குழந்தை போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் நந்தினி - வரதராஜன்.

    அது வளர வளர நந்தகுமாருக்குப் புரிந்தது. அதன்பின் அவன் உலகம் அவர்கள் மட்டுமேதான்.

    எந்த டூர், பிக்னிக் என்றாலும் அது மூவரும் சேர்ந்துதான்.

    நந்தகுமார் கூட இருந்தால் மட்டும்தான் அவர்கள் உலகம் இயங்கும். அவன் இல்லாவிட்டால் சாப்பாடு கூட இறங்காது. இப்போது கூட மதியச் சாப்பாடு வீட்டில் செய்வதில்லை. காலையில் நந்தகுமாருக்கு செய்த டிபன்தான் மதியம். மாலை அஞ்சரைக்கு நந்தகுமார் வந்தபிறகு அவன் விருப்பம் கேட்டுதான் இரவுச் சமையல் ஆகும். அதுவும் சமையலில் வரதராஜனும் சேர்ந்து கொள்வார்.

    நியூஸ் கேட்டபடி சாப்பிட்டு, பத்தரை வரை அப்பாவும் பிள்ளையும் டி.வி. பார்ப்பார்கள். நந்தகுமார் படுக்கப்போகும் வரை அவனுக்கு சாப்பாடு, காப்பி, ஸ்நாக்ஸ் என்று பார்த்து பார்த்து தந்து, அவன் படுக்கப் போகும்போது பசும்பால் தந்து, நெற்றியில் முத்தமிட்டு, தூங்குடா கண்ணா என்று போர்வையை இழுத்து போர்த்திவிட்டு வெளியில் வந்தபிறகும், நந்தினி நந்து ஞாபகமாகவே இருப்பாள்.

    குழந்தை தனியா படுத்திருக்கானே! குழந்தை இருமற மாதிரி இருக்கே. எழுந்து எழுந்து போய் பார்த்துவிட்டு வருவாள்.

    டூ மச் என்பார் வரதராஜன்.

    கல்யாணமானா என்ன செய்வே?

    அவளுக்கும் சேர்த்து கவலைப்பட்டுட்டு போறேன்

    தாய்னா வேண்டாததை நினைச்சு கவலைப்பட்டுத்தான் ஆகணுமா?

    அதான் தாய்

    எந்தத் தாயையும் மாற்றவே முடியாது என்று நினைத்துக் கொண்டார் வரதராஜன். இப்போது கூட டைனிங் ஹாலில் நந்து எதோ ஃபைல் பார்த்துக் கொண்டிருக்க, நந்தினி ஊட்டிக் கொண்டிருந்தாள்.

    வரதராஜன் எழுந்து வந்து அவன் எதிரில் உட்கார்ந்தார்.

    எத்தனை நாளைக்குடா அம்மாவே ஊட்டிட்டிருப்பா

    ஃபார் எ சேஞ்ச், நீங்க ஊட்டுங்களேன்

    நானும் எத்தனை நாளைக்கு?

    என்ன டாட்! - நந்து நிமிர்ந்தான்.

    என்னவோ புதுசா பேசறீங்க?

    எல்லார் வீட்டுலேயும் பேசறதுதான்

    என்னவாம்?

    பொண்டாட்டி வர வரைக்கும்தான்

    வந்துட்டா

    நாங்க எட்டிதான் நிக்கணும்

    அப்படின்னா பொண்டாட்டியே வேணாம்

    ஏன். நீயே பாத்து வச்சிருக்கியா?

    பாத்தியா? இதான். உடனே டைவ் அடிச்சிடறே. பாத்தியாப்பா, ஏன் எனக்கு பொண்ணு நீ பாத்து வச்சிருக்கியா?

    எஸ். ஒண்ணுல்ல. பத்து

    பத்து பேரை கல்யாணம் பண்ணிக்கறது சட்டப்படி குற்றம் டாட்

    அடி செருப்பால, பத்து வேணுமா?

    ஒன்பதுன்னாலும் நோ அப்ஜெக்ஷன்

    உன் மூஞ்சிக்கு ஒண்ணே கிடைக்கறது கஷ்டம்

    ஏன்? என் குழந்தைக்கு என்ன குறைச்சல்? - நந்தினி.

    டாடி, என் பி.சி.ல வந்து பாருங்க. டெய்லி ஐ லவ் யூன்னு எத்தனை ஈ.மெயில் வருதுன்னு

    எதானும் ராங் ஈ.மெயில் அட்ரஸா இருக்கும்

    டாடி சுத்த மோசம்மா

    கிடக்கிறார். விடுடி தங்கம். நீ ஆபீஸுக்கு கிளம்பு

    சாயந்திரத்துக்குள்ள ஃபோட்டோவை பாத்து பதில் சொல்லணும் நந்து

    நோ டைம் அட் ஆல். நீங்களே பாருங்க

    சாயந்திரம் வந்து பாக்கறியா? ம்

    நந்து அவசரமாய் எழுந்து, பைக் சாவியுடன் வந்தான். பைம்மா, பைப்பா என்று அப்பா, அம்மா கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டுவிட்டு பைக்கில் ஏறிப் பறந்தான்.

    பதிலே சொல்லாம போறான்?

    ஆபீஸ் போற அவசரம் - நந்தினி உள்ளே வந்து கிச்சனை ஒழிக்க ஆரம்பித்தாள்.

    பத்து ஃபோட்டோ இருக்கு

    நாமளே பாத்து நல்லதா செலக்ட் பண்ணலாம்

    அவனுக்கு பிடிக்குமா?

    அவன் நம்ம குழந்தைங்க

    சொன்னா கேப்பான்றே!

    "இதான் பொண்ணு. கட்டுடா தாலியைன்னா என் குழந்தை

    Enjoying the preview?
    Page 1 of 1