Poo Maalaiyil Oru Malligai!
By R. Sumathi
()
About this ebook
நிவேதா, தாய்மையின் கடமைகளை தன் குழந்தைக்குச் செய்ய மறுக்கப்படும் ஓர் அபலை. எதற்காக இந்த வேதனையை அவள் அனுபவித்து கொண்டு நடைபிணமாக வாழ்கிறாள். அப்படி அவள் மேல் சுமத்தப்படும் குற்றம் என்ன? நிவேதாவின் கணவன் விஜயனின் நிலை இருதலைக் கொள்ளியாக அந்த வீட்டில் இருந்தது. தன் தாய் பத்மாவின் செயலால் விஜயனும், நிவேதாவும் வெகுவாகவே பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை என்று மாறும்? எப்பொழுது தன் குழந்தையை தன் மார்பில் பூமாலையாக சூடி கொள்வேன்!? என்ற ஏக்கத்தோடு தன் குழந்தையின் வரவை எண்ணி காத்திருக்கும் ஓர் தாயின் பரிதவிப்பை, விவரிக்கும் இக்கதையை வாசித்து தெரிந்து கொள்வோம்…
Read more from R. Sumathi
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsAlli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Kaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Vazhgirean Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Jothi Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsPoomagal Oorvalam Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothume Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Poo Maalaiyil Oru Malligai!
Related ebooks
Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5En Su(vaasa) Malare... Rating: 5 out of 5 stars5/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsMazhaithuli Mattum Unakku Rating: 5 out of 5 stars5/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsThean Sindhum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Un Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Malarnthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Parakka Thayangum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsManjam Konda Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Manthira Koley Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratingsAtharkaga Alai Paaigirean Rating: 0 out of 5 stars0 ratingsVaramai Vantha Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsNee Thaney En Pon Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsKalyaniyin Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsSahana Oru Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Poo Maalaiyil Oru Malligai!
0 ratings0 reviews
Book preview
Poo Maalaiyil Oru Malligai! - R. Sumathi
https://www.pustaka.co.in
பூ மாலையில் ஓர் மல்லிகை!
Poo Maalaiyil Oru Malligai!
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
1
டேய்... வேலை செய்தது போதும். மண்டை காய்ஞ்சுப்போச்சு. வா... டீ குடிச்சுட்டு வரலாம்.
கணினியில் கவனமாகயிருந்த விஜயனை பின்னால் வந்து தோள்களை அழுத்தினான் மகேஷ்.
விஜயனுக்கும் தொடர்ந்து கணினியில் கவிழ்ந்து கிடந்த சோர்வு ஒரு தேநீருக்கு ஏங்க வைத்தது. எழுந்தான்.
எனக்கும் டீ குடிக்கணும் போலிருக்கு. வா
கணினியை நிறுத்திவிட்டு அவனுடன் நடந்தான்.
இருவரும் அலுவலக விஷயங்களைப்பற்றி பேசியபடியே கம்பெனி கேன்டினிற்கு வந்தனர்.
என்ன சொல்ல?
என்ற மகேஷிடம்,
டீ மட்டும் போதும்
என்றபடி விஜயன் இருக்கை தேடி அமர்ந்தான்.
பெரும்பாலான ஊழியர்கள் அங்குதான் இருந்தனர்.
ஒருத்தனும் வேலை செய்யற மாதிரி தெரியலை
முணுமுணுத்தான் மகேஷ்.
ஏண்டா அப்படி சொல்றே?
பாரேன்... எல்லா பயலும் இங்கே தான் இருக்கானுங்க. நம்மகூட வேலைப்பார்க்கிற பொண்ணுங்க இங்க தான் டயம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்காளுக. இல்லாட்டி பாத்ரூம்ல இருப்பாளுங்க. தலையை வார்றதும் லிப்ஸ்டிக் போடறதும் பவுடர் போடறதும்... ச்சே... இந்த பொண்ணுங்களை வேலைக்கே வைக்கக் கூடாதுப்பா...
விஜயன் சிரித்தான்.
ஏண்டா... இப்படி பொண்ணுங்களை எதிரியா நினைக்கிறே? பொண்ணுங்களுக்கு சமஉரிமை கொடுக்கணும்னு போராடுற அமைப்புகள் உன் பேச்சைக் கேட்டா கொதிச்சு எழுந்துடுவாங்க.
நல்லா எழுந்தாங்க. இவளுங்களும் வேலை செய்யமாட்டாளுங்க. நம்மையும் வேலை செய்யவிடமாட்டாளுங்க.
உன்னை வேலை செய்ய விடலையா? ஏன்?
எனக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு அழகிங்க. இந்த பக்கம் திரும்பினா ஒருத்தி சிரிப்பா. அந்த பக்கம் திரும்பினா ஒருத்தி சிரிப்பா. ரெண்டு பேரும் தொண தொணன்னு ஏதாவது பேச்சு கொடுத்துக்கிட்டேயிருப்பாளுங்க. இவளுங்களால தினமும் நான் எம்.டி.கிட்ட திட்டு வாங்குறேன்.
ஏன்... லேடீஸோட பேசினா நம்ம எம்.டி.க்குப் பிடிக்காதா?
நீ வேற... தினமும் நான் பண்ற வேலையில இவளுங்களால நிறைய மிஸ்டேக். அதையெல்லாம் சுட்டிக்காட்டி திட்டுவார்.
விஜயன் மேஜையை தட்டி பெரிதாக சிரித்ததில் எல்லா மேஜைகளிலிருந்தும் திரும்பிப் பார்த்தனர்.
அதேசமயம் மேஜைக்கு சூடான தேநீர் கோப்பைகள் வந்தன. இருவரும் பருகிக் கொண்டிருந்தபோது விஜயனின் செல்போன் ஒலித்தது.
யாரு
என்ற மகேஷிடம்,
அம்மா
என்று கூறிய விஜயன் பேசத் தொடங்கினான்.
சொல்லும்மா
என்னப்பா பண்றே?
டீ குடிச்சுக்கிட்டிருக்கேம்மா. என்ன விஷயம்?
சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுப்பா.
ஏம்மா உன்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டுப் போகணுமா?
எனக்கென்ன நான் நல்லாத்தானே இருக்கேன்.
பின்ன எதுக்கு சீக்கிரம் வரணும்? ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கும்மா.
எந்த வேலை இருந்தாலும் ஒதுக்கி வச்சுட்டு அஞ்சு மணிக்கெல்லாம் டாண்னு கிளம்பிடு. தரகர் ஒரு வரன் கொண்டு வந்திருக்கார். அஞ்சு மணிக்கு பெண் பார்க்க வர்றதா சொல்லியிருக்கேன். பொண்ணோட போட்டோவை உன் மொபைலுக்கு அனுப்பியிருக்கேன். பார். மத்த விவரங்களை நேர்ல சொல்றேன். லேட் பண்ணிடாதே. அஞ்சு மணிக்கெல்லாம் நீ ஆபீஸைவிட்டு கிளம்பினாத்தான் சரியாயிருக்கும்.
சொல்லிவிட்டு அம்மா தொடர்பைத் துண்டித்து விட்டாள்.
என்னவாம்?
மகேஷ் தேநீர் பருகிய உதட்டை கைக்குட்டையால் துடைத்தபடி கேட்டான்.
தரகர் வரன் கொண்டு வந்திருக்காரம். சாயந்தரம் பார்க்கப் போகணுமாம். அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்றாங்க.
மகேஷ் எதுவும் சொல்லவில்லை. இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி பக்கத்து மேஜையில் வடை சாப்பிட்டபடியே சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பெண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.
விஜயன் மொபைலில் அம்மா அனுப்பியிருந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான். முகம் மலர்ந்தான்.
நண்பனிடம் காட்டினான்.
வாங்கி பார்த்த மகேஷ் ‘வாவ்... ப்யூட்டிபுல்’ என வியப்பான். வார்த்தையால் அளப்பான் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம்.
எரிச்சலாக எழுந்துக் கொண்டான். மகேஷும் எழுந்து அமைதியாக அவனுடன் நடந்தான்.
இருவரும் கேன்டினை விட்டு வெளியே வந்தனர்.
என்னடா எதுவுமே சொல்லாம வர்றே?
என்ன சொல்லணும்?
மகேஷ் திருப்பிக் கேட்டான்.
பொண்ணோட போட்டோவை பார்த்தேயில்லே. எதுவுமே சொல்லாம வர்றே? பொறாமையா?
பொறாமையா? எதுக்கு?
எனக்கு இவ்வளவு அழகான பொண்ணு கிடைச்சிருக்கேன்னு...
இதைக்கேட்டு மகேஷ் திடீரென பெரிதாக வாய்விட்டு சிரித்தான்.
அவனுடைய சிரிப்பு விஜயனுக்கு எரிச்சலை உண்டுப் பண்ணியது.
ஏண்டா சிரிக்கறே?
உன்னைப் பார்த்து பொறாமையா? உன்னைப் பார்த்தா பொறாமை வரலைடா. பரிதாபம்தான் வருது.
விஜயன் புரியாமல் பார்த்தான்.
என்னைப் பார்த்து பரிதாபப்பட நான் என்ன பிச்சைக்காரனா?
பிச்சைக்காரனைப் பார்த்து இப்பவெல்லாம் பரிதாபப்பட முடியாதுடா. அவனுங்களைப் பார்த்துதான் நாம பொறாமைப்படணும். சமீபத்துல நியூஸ்ல பார்க்கலையா? ஒரு பிச்சைக்காரன் செத்துப் போனான். அவனோட சேமிப்பு ஆறு லட்சத்துக்கும் மேல. சொல்லுடா... பிச்சைக்காரனைப் பார்த்து நாம பரிதாபப்பட முடியுமா?
அப்ப என்னைப் பார்த்து ஏன் பரிதாபப்படறே?
நீ கல்யாணம் பண்ணிக்க தயாராயிட்டியே...
ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?
சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக அவனை உறுத்துப் பார்த்த மகேஷ் இதழ்களில் பரவிய மெல்லிய சிரிப்புடன் நிதானமாகக் கேட்டான்.
அப்போ... நிவேதா... அவ்வளவு தானா?
அந்த கேள்வி சுளீரென சாட்டையால் அடித்தது விஜயனை.
2
ஐந்து மணியானதும் விஜயன் அலுவலகத்தைவிட்டு கிளம்பினான். ஆனால் வீட்டிற்கு செல்லவில்லை. நேராக கடற்கரைக்கு வந்து விட்டான்.
பரபரப்பும் கலகலப்பும் இரைச்சலும் நிறைந்த கடற்கரையில் அமைதியான இடம் தேடுவது அரிதாகயிருந்தது. எப்படியோ ஓரிடம் தேடி அமர்ந்தான்.
மனம் முழுவதும் கனம். கணத்திற்கு கணம் மகேஷ் சொன்ன வார்த்தைகளே காதில் வந்து மோதின.
‘அப்போ நிவேதா அவ்வளவுதானா?’
உடம்பு ஒருமுறையல்ல இருமுறையல்ல நினைக்கும் ஒவ்வொரு முறையும் தூக்கித் தூக்கிப் போட்டது.
அலையின் இரைச்சலெல்லாம் அதே கேள்வியை கேட்பதைப் போலிருந்தது. எதிரே ஓடி வரும் அலைகள் ‘என்ன அவ்வளவு தானா? நிவேதா அவ்வளவு தானா?’ என கேட்டு கேட்டு ஓடுவதாகயிருந்தது.
எதிரே சுண்டல் பாத்திரத்துடன் வந்து நின்ற சிறுவன்,
‘என்ன நிவேதா அவ்வளவு தானா?’ என்றான்.
தூரத்து பஜ்ஜிக்கடை பெண்மணி. ‘அப்போ நிவேதா அவ்வளவு தானா?’ என அவனை நோக்கி கூவினாள். பக்கத்தில் பலூன் சுடும் சத்தம். துப்பாக்கியின் குண்டு பாய்ந்து ஒவ்வொரு பலூனும் வெடிக்கும் போதும் ‘அப்போ நிவேதா அவ்வளவு தானா?’ என்ற சத்தம். மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. மண்டையை இறுகப் பற்றிக்கொண்டான்.
ஓடிவரும் அலைகளுடன் சேர்ந்து ஓடி வந்தது நிவேதாவின் உருவம்.
கூந்தல் பறக்க முந்தானை பறக்க வனதேவதையாய் பறந்து வந்து அவனெதிரே நின்றாள்.
மின்னலாய் சிரித்தாள். மண்டியிட்டு அவன் மடி மீது சரிந்தாள். ஏக்கமாய் கேட்டாள்.
‘அப்போ... நான் அவ்வளவு தானா?’
விலுக் விலுக்கென சாட்டையடி. அவனை துடிக்க வைத்தன. சுற்றுபுறம் சுத்தமாக இருட்டி விட்டதா? இல்லை தனக்குத்தான் கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறதா என்ற வேறுபாடு புரியாமல் இருட்டில் தவித்தான்.
அதே சமயம் செல்போன் அழைத்தது.