Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Innum Thudikirathu!
Idhayam Innum Thudikirathu!
Idhayam Innum Thudikirathu!
Ebook107 pages31 minutes

Idhayam Innum Thudikirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரமா, தனக்கு பிறகு தன் மகனை தன் கணவனிடம் சேர்க்க நினைக்கிறாள். ஆனால் அவள் கணவன் சந்தானமோ 'பணம் என்றால் பிணம்கூட வாய் திறக்கும்' என்பதற்கேற்ப வாழ்பவன். ராமாவின் நிலைமையை நன்கு அறிந்தும் தன் மகன் ஹரியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். அவன் ஏற்க மறுக்கும் காரணம் என்ன? பவானி, அற்புதா இவர்கள் யார்? இவர்களுக்கும் சந்தானத்திற்குமான தொடர்பு என்ன? அற்புதாவின் இதயத் துடிப்பைக் கேட்டு ஹரி மகிழ்வதற்கான காரணம் என்ன? இவை அனைத்திற்குமான விடையை தெரிந்துக் கொள்ள கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateMay 22, 2023
ISBN6580137109463
Idhayam Innum Thudikirathu!

Read more from R. Sumathi

Related to Idhayam Innum Thudikirathu!

Related ebooks

Reviews for Idhayam Innum Thudikirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Innum Thudikirathu! - R. Sumathi

    pustaka_logo-blue_3x

    https://www.pustaka.co.in

    இதயம் இன்னும் துடிக்கிறது!

    Idhayam Innum Thudikirathu!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    விடிந்து வெகு நேரமாகிவிட்டது! படிந்திருந்த இருளெல்லாம் பறந்துவிட்டது. படிகளில் கோலமிழுத்துக் கொண்டிருந்த பவானியின் காதை கிழிப்பதைப் போல்... உள்ளிருந்து வீட்டை இரண்டாக்கும் வீரிடல், மது எழுந்துவிட்டாள். இன்னும் ரெண்டு வரிகளை இழுக்க முடியாமல் இணைந்து ஒலித்தது சந்தானத்தின் குரல்.

    பவானி... ஏய் பவானி...

    மாறி மாறி ஒலிக்கும் அப்பா மகள் இருவரின் கத்தலையும் அலட்சியம் செய்துவிட்டு கோலத்தை முடித்துக் கொண்டு நிதானமாக உள்ளே வந்தபோது...

    படுக்கையறையில் எழுந்து உட்கார்ந்த நிலையில் இரைந்தான் சந்தானம்.

    குழந்தை கத்துறது காதுல விழலை? உனக்கு?

    ஆமா! குழந்தை, நேத்து தானே பொறந்தது... ரெண்டாங் க்ளாஸ் படிக்குது. இன்னும் தொண்டை கிழியற மாதிரி கத்துது. அதுக்கு மேல நீங்க கத்தறீங்க. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ரெண்டு பேர் கழுத்தையும் பிடிச்சு நெரிச்சிரலாம் போலிருக்கு. அக்கம் பக்கம் ஜனங்க இருக்காங்களேன்னு ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது இருக்கா? அவதான் சின்ன புள்ளை. உங்களுக்குத் தெரிய வேண்டாம். அதை சமாதானப்படுத்தறதை விட்டுட்டு நீங்களும் கத்தறீங்க?

    ஆமா! நான் எழுந்து உட்கார்ந்து சமாதானப்படுத்தறேன். ராத்திரி ஓவர் டைம் பார்த்துட்டு நான் வந்ததே ஒரு மணி. காலையில ஓடணும். கொஞ்ச நேரமாவது மனுஷன் தூங்க வேண்டாமா? மொதல்ல இதை இழுத்துக்கிட்டு வெளியில் போ...

    ஆமா! அப்படியே ஓவர் டைம் பார்த்து பார்த்து பணத்தை அடுக்க புது பீரோதான் வாங்கணும் முணுமுணுத்தவாறே மதுவின் முதுகில் நாலு சாத்து சாத்தினாள்.

    காலையில என் வாயைக் கிளறாதே. முதல்ல... இந்த குட்டி பிசாசை இழுத்துக்கிட்டு வெளியில போ... உட்கார்ந்திருந்தவன் படுத்து போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான்.

    சனியனே. வாயை மூடறியா? உன்னைவிட சின்ன புள்ளைங்களெல்லாம் அக்கம் பக்கம் எழுந்து எவ்வளவு சமத்தா ஹோம் வொர்க் எழுதிக்கிட்டிருக்குங்க. நீ ஏன் இப்படி காந்தாரி மாதிரி வாயை வச்சுக்கிட்டு அலறுரே... வா... கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே போனாள் பவானி.

    போர்வைக்குள் பெண்டாட்டியை இஷ்டத்துக்கு திட்டினான் சந்தானம். எதுவும் கேட்காது என்ற தைரியத்தில். அவன் நிதானமாக எழுந்து குளித்து அலுவலகத்திற்கு கிளம்பி வந்தபோது பவானி வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் மதுவை ஏற்றி அனுப்பி ‘டாடா’ காட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

    டாடா காட்டியதில் இருந்த கொஞ்ச நஞ்ச மலர்ச்சியும் அவனைக் கண்டதும் போய்விட்டது.

    டிபன் எடுத்து வைக்கட்டா? காலை சிடுசிடுப்பு குறையாமல் கேட்டாள்.

    ம்... அவனும் முறைப்பு குறையாமல் முடித்துக் கொண்டான்.

    தட்டில் இட்லியோடு சாம்பாரைப் பார்த்ததும் ஏன் சட்னி அரைக்கலையா? என்றான்.

    இல்லை. சாம்பார்தான்.

    அதான் ஏன்னு கேட்டேன்.

    மிக்ஸி கெட்டுப் போய் ஒரு வாரம் ஆச்சு.

    தெருமுனையில தானே கடை இருக்கு. சரி பண்ண கொடுத்தா என்ன?

    அங்க தான் கெடக்கு. அதை இனிமே சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டான். அவனே குப்பைத் தொட்டியில போட்டுடறேன்னும் சொல்லிட்டான். புதுசு வாங்கிக்க சொல்றான்.

    என்ன கொழுப்பா?

    யாருக்கு? எனக்கா? அவனுக்கா?

    ம்... ரெண்டு பேருக்கும்தான். முதல்ல போய் அந்த மிக்ஸியை வாங்கிட்டு வா. வேற கடையில் கொடுத்துப் பார்க்கலாம்.

    வாங்கிட்டு வர்றேன். ஆனா... நானே அதை குப்பைத் தொட்டியில் போட்டுடுவேன். அதுக்கு செலவு பண்ணின காசுக்கு புது மிக்ஸியே வாங்கிடலாம்.

    என்கிட்ட புதுசு வாங்க காசு இல்லை.

    உங்கக்கிட்ட என்னைக்குத்தான் இருந்தது?

    இதப்பார். ஆபீஸ் போற நேரத்துல மூட் அவுட் பண்ணாதே.

    எனக்கென்ன? மிக்ஸி வாங்கித்தரலைன்னா தினமும் இட்லி தோசைக்கு முதல் நாள் செய்த குழம்புதான் தொட்டுக்கறதுக்கு வைப்பேன்.

    சந்தானம் ஆத்திரத்தை பல்லிடுக்கில் கடித்தவனாக இரண்டு இட்லியோடு எழுந்தான்.

    உன் இட்லியும் நீயும், உட்கார்ந்துக்கிட்டு நீயே தின்னு எரிச்சலோடு கைகழுவிக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி போய்விட்டான்.

    இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. கதவை அடித்து சாத்திவிட்டு அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டாள் பவானி.

    மாலை அலுவலகம் முடிந்து சந்தானம் வீட்டிற்கு வந்தபோது உள்ளிருந்து வந்த பவானியின் சத்தம் காதை கிழித்தது.

    ச்சே... இந்த வீட்ல உருப்படியா ஒண்ணாவது இருக்கா? இந்த பாழாப்போன டி.வி.யில ஒரு எழவும் தெரிய மாட்டேங்குது. வர்ற ஆத்திரத்துக்கு எதையாவது எடுத்து அடிச்சு உடைச்சுட்டா தேவலாம் போலிருக்கு. ஒரு நல்ல சீரியல் பார்க்கும்போது படக்படக்குன்னு போயிடுது தினமும் அவன் அலுவலகம் விட்டு வரும்போது அவன் கேட்கும் வசனம்தான்.

    அதனால் பெரிதான எந்த பாதிப்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1