Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Alli Vacha Malligaiye!
Alli Vacha Malligaiye!
Alli Vacha Malligaiye!
Ebook125 pages42 minutes

Alli Vacha Malligaiye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளே நம் வாழ்க்கையின் பெருஞ் செல்வங்கள். அந்த குழந்தைச் செல்வம் ஒரு பெண்ணிற்கு இல்லாவிடில், அவள் வாழ்க்கை இந்த பூமியில் நரகமே. இதுபோலவே இந்த கதையில் சீதாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆனால் இவளுடைய ஓரகத்தியான மங்களாவிற்கு இரட்டைக் குழந்தைகள் அதுவும் ஒரே பிரசவத்தில். இந்த மகிழ்ச்சியான செய்தியே, பேரிடியாக சீதாவின் வாழ்க்கையில் வந்திறங்கியது. இதனால் மங்களா மற்றும் சீதாவின் வாழ்க்கையில் நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்களை வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateJan 23, 2023
ISBN6580137109354
Alli Vacha Malligaiye!

Read more from R. Sumathi

Related to Alli Vacha Malligaiye!

Related ebooks

Reviews for Alli Vacha Malligaiye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Alli Vacha Malligaiye! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அள்ளி வச்ச மல்லிகையே!

    Alli Vacha Malligaiye!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    அந்த பிரசவ அறைக்கு வெளியே சௌந்தரியும், அவளுடைய மகன் மனோகரும் மிகவும் கவலையாகவும், படபடப்பாகவும் அமர்ந்திருந்தனர்.

    உள்ளே மருமகள் மங்களா தன் குழந்தைகளுக்கு புது உலகைக்காட்ட போராடிக் கொண்டிருந்தாள்.

    குழந்தைகள். இரட்டைக் குழந்தைகள். எப்படி பெற்றெடுக்கப்போகிறோம் என்ற பயம் அந்த அறைக்குள் நுழையும் நிமிடம்வரை மிரட்சிக் கொள்ள வைத்தது.

    அதே பயமும் மிரட்சியும் சௌந்தரி, மனோகர் இருவரையும் அலைக்கழித்தது.

    இரட்டைக் குழந்தை என்பதால் பயமும் இரட்டிப்பானது. குடும்ப மருத்துவர்தான் மிகவும் தைரியம் கொடுத்திருந்தார்.

    ‘நார்மல் டெலிவரிக்கு கஷ்டமாயிருந்தா ஆபரேஷன் பண்ணி எடுத்திடுங்க டாக்டர்’

    மனைவி பிரசவவலியில் துடிக்கக் கூடாதென மனோகர் மருத்துவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டான்.

    ‘பயப்பட வேண்டாம். நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இல்லைன்னா மட்டும்தான் நான் ஆபரேஷன் பண்ணுவேன். உங்க மனைவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ரொம்ப அழகா நார்மல் டெலிவரி ஆகும்.’

    தோளைத் தட்டிக் கொடுத்தார்.

    ஆனாலும் தைரியம் இல்லை மனோகரிடம். உள்ளே போராடும் மங்களா எப்படியெல்லாம் வலியால் கஷ்டப்படுகிறாளோ தெரியவில்லையே எனத் தவித்தான்.

    வெளியில் செல்லும் போதெல்லாம் ஒரு பேக்கைக் கூட அவளை தூக்கவிடாமல் தான் வாங்கிக் கொள்ளும் அவன் எப்படித்தான் இதை சுமக்கிறாளோ என தள்ளிய வயிற்றைப் பார்த்து பார்த்து யோசிப்பான்.

    இந்த சுமையை கைமாற்றிக் கொள்ள முடியாமல் வருத்தப்படுவான்.

    எல்லாவிதத்திலும் ஆணின் உடலை வலிமையாகப் படைத்த இயற்கை எப்படி இந்த வலியை தாங்க மென்மையான உடலமைப்புக் கொண்ட பெண்ணைத் தேர்ந்தெடுத்தது என எண்ணி எண்ணி ஆச்சரியம் கலந்த ஆத்திரம் கூட கொண்டான்.

    பெண்களை ஆண்கள்தான் அடக்கியாள்வதாக நினைக்கிறார்கள். இயற்கையே அவர்களை அடக்கி வைத்துவிட்டதோ என நினைப்பான் மனோகர்.

    இரட்டைக் குழந்தை என்று மருத்துவர் சொன்னதிலிருந்தே இந்த நிமிடம்வரை அவனுடைய இதயத்துடிப்பு இயற்கையாக, சீராக இல்லை.

    சௌந்தரியும் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

    ஒவ்வொரு பெண்ணுமே குழந்தை பெறும் அனுபவத்தைக் கடந்துதான் வருகிறார்கள். ஆனால் இன்னொரு பெண் வலியுறும்போது அவர்களால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

    மருத்துவர் வெளியே வந்து எப்பொழுது நல்ல சேதி சொல்லுவார் இருவரும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் மனோகரின் அலைபேசி அழைத்தது.

    ‘அரவிந்த்’ அழைக்கிறான். அரவிந்த் அவனுடைய அண்ணன்.

    யாருப்பா?

    அண்ணன்ம்மா. பேசறியா?

    நீயே பேசு. நான் பிரார்த்தனைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.

    சொல்லிவிட்டு சௌந்தரி கண்களை பழையபடி மூடிக்கொண்டு தலையை குனிந்துக்கொண்டு ஏதோ சாமி பாடலை முணுமுணுக்கத் தொடங்கினாள்.

    சொல்லு அரவிந்த்

    மங்களா எப்படியிருக்கா?

    லேபர் வார்டுல இருக்கா

    டாக்டர் என்ன சொல்றார்?

    நார்மல் டெலிவரியாயிடும். ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லியிருக்கார். ஆனாலும் பயமாயிருக்கு. ரெட்டைக் குழந்தையாச்சே

    பயப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். சீதா கூட காலையிலேயே கோவிலுக்குப் போய்ட்டா, மங்களாவுக்காக வேண்டிக்க. அம்மாவை டென்ஷன் ஆகாமப் பார்த்துக்க என்று கூறிவிட்டு அவன் இணைப்பை துண்டித்த அதே நிமிடம் பிரசவ அறையின் கதவைத் திறந்துக் கொண்டு மருத்துவர் மீனாகுமாரி வெளியே வந்தார்.

    காத்துக்கிடந்த கண்கள் ஒளிப் பெற்றதைப் போல் இருவரும் அவரிடம் ஓடினர்.

    மேடம்…

    மீனாகுமாரியின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அவர் சொல்லாமலேயே விஷயத்தை இடம் மாற்றியது.

    மனோகரின் கையைப்பற்றி குலுக்கினார் மீனா குமாரி.

    வாழ்த்துக்கள். நார்மல் டெலிவரி. ரெட்டைக் குழந்தையும் நல்லபடியா பிறந்திருக்கு

    உடல் சிலிர்த்துப் போனான் மனோகர். சௌந்தரி கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

    டாக்டர், குழந்தைகள் ரெண்டும் ஆணா பெண்ணா?

    ஒரே கல்லுல ரெண்ட மாங்காய். அதுவும் ரொம்ப இனிப்பானது. ஆண் ஒண்ணு. பொண்ணு ஒண்ணு.

    ஆனந்த அருவி உச்சந் தலையில் கொட்டியதைப் போல் இருந்தது. உணர்வுகள் துள்ளிக் குதிக்க மகிழ்ச்சியில் திக்கு முக்காடினான். எட்டுத்திக்கும் பறையறைந்து தெரிவிக்க வேண்டும் போலிருந்தது.

    அறைக்கு அடுத்தப்பக்கம் இருக்கும் தன் இரட்டை சொர்க்கத்தை உடனடியாக காணத்துடித்த தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தான்.

    டாக்டர் நாங்க பார்க்கலாமா?

    தாராளமா. அதுக்கு முன்னாடி ஸ்வீட் வாங்கிட்டு வந்து தாங்க. சொல்லிவிட்டு கடந்தார்.

    மனோகர், முதல்ல அரவிந்த்துக்கு ஃபோன் பண்ணி சொல்லு

    மறுபடியும் அரவிந்த்துடன் தொடர்புக் கொண்டான் மனோகர்.

    அரவிந்த்… மங்களாவுக்கு குழந்தைப் பிறந்துட்டு. ஒரு ஆண் ஒரு பெண்

    வாவ்…சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    தாங்க்ஸ் அரவிந்த்

    நார்மல் டெலிவரிதானே?

    ஆமா

    ரொம்ப சந்தோஷம். நானும் சீதாவும் கிளம்பி வர்றோம்

    சரி அரவிந்த்.

    மங்களாவைப் பார்த்துக்க

    சரி என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.

    அதற்குள் பொறுமை இல்லாமல் அம்மா உள்ளே போயிருந்தாள்.

    ஒருவித இனம் புரியாத படபடப்புடன் மனோகரும் உள்ளே சென்றான்.

    மங்களா சோர்வாக கண்கள் மூடிக்கிடந்தாள். வெற்றிக்குப்பின் உறங்கும் திருப்தியான, நிம்மதியான உறக்கம் அவளை ஆட்கொண்டிருந்தது. அந்த தெய்வீக உறக்கத்தை கலைக்க மனம் இல்லாதவனைப் போல் தேடி வந்த வைரங்களை திருடச்செல்லும் திருடனைப் போல் சத்தம் எழுப்பாமல் அமைதியாக தொட்டிலருகே வந்தாள் சௌந்தரி.

    அவளுக்குப் பின்னாலேயே வந்த மனோகர் தொட்டிலில் கிடந்த தன் குழந்தைகளை குருடன் பெற்ற கண்களின் புது ஒளியைப்

    Enjoying the preview?
    Page 1 of 1