Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maram Thedum Mazhaithuli
Maram Thedum Mazhaithuli
Maram Thedum Mazhaithuli
Ebook60 pages21 minutes

Maram Thedum Mazhaithuli

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சொல்லாத காதல் வெல்லுமா? சிவாவின் காதலும் இதேதான். அவன் காதலை சொல்லாத காதலன் நேசத்தை சொல்லாத கணவன் பாசத்தை சொல்லாத தகப்பன் உண்மையை சொல்லாத புதல்வன் எல்லாவற்றையும் மீறி சொல்ல வரும்போது கேட்கத்தான் அங்கே யாருமில்லை. மழைத்துளியைத் தேடி போகிற மரமாக நிற்கிறான். மழைத்துளி விழுமோ...

Languageதமிழ்
Release dateMar 4, 2023
ISBN6580135409606
Maram Thedum Mazhaithuli

Read more from J. Chellam Zarina

Related to Maram Thedum Mazhaithuli

Related ebooks

Reviews for Maram Thedum Mazhaithuli

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maram Thedum Mazhaithuli - J. Chellam Zarina

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மரம் தேடும் மழைத்துளி

    Maram Thedum Mazhaithuli

    Author:

    ஜெ. செல்லம் ஜெரினா

    J. Chellam Zarina

    For more books

    https://www.pustaka.co.in/home/author/chellam-zarina

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    1

    இளவஞ்சி முகத்தைக் கையில் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். பறித்துப் போட்ட கீரைத்தண்டாக படுக்கைமீது வாடிப்போய்க் கிடந்தாள் குழந்தை. ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அறை நிசப்தத்தில் உறைந்து கிடந்தது. ஆனால்...

    இளவஞ்சியின் மனமோ குமுறிக் கொண்டிருந்தது.

    ‘என்ன பேச்சு பேசிவிட்டான்? பெத்த பொண்ணாச்சேன்னே பாசம் வேண்டாம். ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிருக்கேன்னு சொல்றேன்... என்ன ஏதுன்னுகூடக் கேட்காம... சொல்ல வர்றதைக்கூட காதுல வாங்காம இஷ்டத்துக்குப் பேசினா என்ன அர்த்தம்? தாலியை கட்டிய நாளிலிருந்து என்னே செய்திருக்கான். நாளுங்கிழமையிலே வீட்டுலே தங்கியிருக்கானா...? குழந்தையைத்தான் எங்கியாவது கூட்டிப்போயிருப்பானா? இத்தனைக்கும் நான் வாயத் திறந்திருப்பேனா? எப்பப்பாரு... அம்மா, அப்பா, அக்கா, மாமா, தங்கச்சி, மாப்பிளைகள், தங்கச்சி பிள்ளைகள்தான் நினைப்பு...! எதனாச்சும் பேசியிருக்கனா? இன்னிக்கு அப்படி என்ன சொல்லிட்டேன்?

    எனக்கு பயமாருக்குங்க. ஆஸ்பிடலில் என்னென்னவோ சொல்றாங்க. நீங்க வந்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும். பிள்ளைக்கும் ஆறுதலாயிருக்கும்ன்னு தானே கூப்பிட்டேன்.

    அதுக்கென்னவோ கல்யாணமான கதையிலிருந்து எதையெதையோ பேசினா என்ன அர்த்தம்? அதைப் பேச இதுவா நேரம்? நானே நெருப்பை விழுங்கினாப்போல நிக்கேன். நியாயம் பேசுறாராம் நியாயம். நான் எம்பக்கத்து நியாயத்தை சொல்ல ஆரம்பிச்சா எங்கே கொண்டுபோய் வச்சுக்கிடுவாராம் மூஞ்சியை?

    தொட்டுத் தாலிகட்டி வயித்துலே புள்ளையைக் கொடுத்ததோடு சரி! என்னாச்சு ஏதாச்சுன்னு பார்த்ததுண்டா? நிறைமாசம். ஏதோ போன் வந்திச்சு போனதுதான். பிரசவம் முடிஞ்சு ஒரு வாரமான பின்னே வந்தவன்தானே?

    பச்ச உடம்புக்காரி... சிசுவை வச்சிட்டு என்ன செய்வா... நிறைமாசத்துலே நின்ன நினைப்புல்லாம விட்டுட்டு போனோமேன்னு பதறுச்சா உடம்பு?

    மச்சானுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரி போயிட்டேன், தங்கச்சி அழுதான்னு பேசுனவன் தானே? அந்த ஆஸ்பத்திரியிலேயிருக்கிறப்போ கூடவா பொண்டாட்டி ஞாபகம் வரலை? கட்டின பொண்டாட்டி பெத்தாளா பொழைச்சாளான்னு தோணலை?

    அம்மாச்சி போனைப் போட்டு பொண்ணு பொறந்திருக்குப்பான்னு சொன்ன பொறவுகூட பதறாமே அதிராமே தானே பேசினான்.

    இவனையெல்லாம் ஒரு மனுஷன்னு உதவிக்குக் கூப்பிட்டேன் பாரு.

    என் புத்தியத்தான் ஜோட்டாலே அடிச்சுக்கணும்.’

    அவளுடைய இயலாமை ஆற்றாமையாக சூடான கண்ணீராக விரலிடுக்கு வழியே வழிந்தது. யாருமேயில்லாத தனிமையில் மீண்டும் தான் தள்ளப்பட்டுவிட்டதை உணர்ந்தவளாய் சுயவிரக்கத்தில் கரைந்தாள்.

    அழுததில் மனம் சற்றே லேசாகியது. அதே நேரம் எஃகுபோல் இறுகியது. மனதில் உறுதியான குரல் ஒன்று

    Enjoying the preview?
    Page 1 of 1