Thotti Chedigal
()
About this ebook
எந்த நேரத்திலும் புலம் பெயரத் தயாராக இருக்கும் தொட்டிச் செடிகள்... பெண்மையும் அப்படித் தான். கருவிலிருந்து கல்லறை வரை தனக்கென ஒரு ஸ்திரமான நிலையின்றி சார்பு நிலையில் இருப்பவள் பெண். காலம் மாறினாலும் அடிப்படை கருத்துக்களில் மாற்றமில்லை. இதைச் சொல்லும் கதைகள் இவைகள்.
Read more from Vimala Ramani
Un Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsTher Yeri Vandha Nila Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Vidiyal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Vandhuvittal! Rating: 0 out of 5 stars0 ratingsNee Varuvaiyana Ninaithirunthean Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsDeluxe Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNeer Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsJatayu Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Rating: 0 out of 5 stars0 ratingsYaazhisai Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsMutru Peratha Athiyayam Rating: 0 out of 5 stars0 ratingsMegapaaraigal Rating: 0 out of 5 stars0 ratingsPalingu Mandapam Rating: 0 out of 5 stars0 ratingsEn Selvam, En Raja! Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsAkkaraiyil Ore Anniya Paravai... Rating: 0 out of 5 stars0 ratingsMella Veesum Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thotti Chedigal
Related ebooks
Maalai Idum Sontham Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsThelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Tamil Selvi Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiye Thol Serava? Rating: 0 out of 5 stars0 ratingsAthuthanda Arasiyal! Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKandu Kondren Kandu Kondren Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Neethane Un Uyir Naanthane Rating: 1 out of 5 stars1/5Vendatha Varam Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsThaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsThalaa Oru Thota Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Mayiliragu Rating: 5 out of 5 stars5/5Uraintha Ragasiyam... Rating: 4 out of 5 stars4/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Vaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavar Kalvan Rating: 0 out of 5 stars0 ratingsVanna Poochchudava Vennila Rating: 0 out of 5 stars0 ratingsOru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsAambalai Rating: 5 out of 5 stars5/5Nee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5Ivalallava Ilavarasi! Rating: 0 out of 5 stars0 ratingsThala Oru Thotta...! Rating: 0 out of 5 stars0 ratingsIntha Aagayam Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thotti Chedigal
0 ratings0 reviews
Book preview
Thotti Chedigal - Vimala Ramani
https://www.pustaka.co.in
தொட்டிச் செடிகள்
Thotti Chedigal
Author:
விமலா ரமணி
Vimala Ramani
For more books
https://www.pustaka.co.in/home/author/vimala-ramani-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
அழைப் பூ
நெஞ்சோடு நினைவுகள்
நேர்த்திக்கடன்
யாத்ரா
நின்னையே ரதியென்று
ரோஜா மலரே ராஜகுமாரி
மலரே குறிஞ்சி மலரே
மீண்டும் வருக
வீட்டில் ஒரு தேவதை
வேரில் பழுத்த பலா
சந்தன மரம்
பிராயச் சித்தம்
சிகப்பி
பூங்கதவே தாழ் திறவாய்
தீபாவளி கனவுகள்
முன்னுரை
எந்த நேரத்திலும் புலம் பெயரத் தயாராக இருக்கும் தொட்டிச் செடிகள்..பெண்மையும் அப்படித் தான்.
கருவிலிருந்து கல்லறை வரை தனக்கென ஒரு ஸ்திரமான நிலையின்றி சார்பு நிலையில் இருப்பவள் பெண்.
காலம் மாறினாலும் அடிப்படை கருத்துக்களில் மாற்றமில்லை.
இதைச் சொல்லும் கதைகள் இவைகள்.
அழைப் பூ
சற்றுத் தயக்கத்திற்கு பிறகு தான் அழைப்பு மணியை உயிர்ப்பித்தாள் பாமினி.
யார் கதவு திறப்பார்கள்? காத்திருந்தாள் கதவு திறந்தது.சாரங்கன் தான். இருபது வருடங்களுக்கு முன் பார்த்த மாதிரியே தான் இருந்தான். அதிக வித்தியாசம் தெரியவில்லை முகத்தில் தங்க பிரேம் கண்ணாடி ஏறியிருந்தது தலையில் ஆங்காங்கே சில வெள்ளை முடிகள் அதுகூட அழகாகத்தான் இருந்தது 45 வயதில் தவறாக தெரியவில்லை,
உம்
என்றான் இவளை உள்ளே வரச் சொல்லும் அழைப்பாக.
இவள் வீட்டில் நுழைந்தாள் இவள் இருந்திருக்க வேண்டிய வீடு.
சில இழப்புகளை சரி செய்ய முடியாது சிறு வயதில் தவறுகளை எச்சில் தொட்டு அழிக்கும் சிலேட்டு பலகை அல்ல வாழ்க்கை.
பவித்ராவுக்கு கல்யாணம்
தயங்கியபடி அழைப்பிதழை தந்தாள்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எப்படி?
ரொம்ப நல்ல மாதிரி தினேஷ் அதான் மாப்பிள்ளை லவ் பண்ணித் தான் கல்யாணம் செய்கிறார் அவங்க வீட்டுல எல்லாருக்கும் சம்மதம்.பவித்ரா எங்க வீட்டுக்கு வந்தா எங்களுக்கு பெரிய யோகம் அப்படின்னு சம்பந்தியம்மா சொன்னாங்க.
சாரங்கன் சிரித்துக்கொண்டான்.
கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும். முகூர்த்தத்துக்கு வரணும்.
ஏன் முதல் நாள் வந்தா துரத்திடுவியா?
இவள் பேசவில்லை கல்யாண பத்திரிகையில் முன்பு மாதிரி 4 நாட்கள் முன்னதாகவே வந்திருந்து என்பது போன்ற வாசகங்கள் கிடையாது ஆனால் அழைப்பு உண்டு இது அழைப்பு.
ட்ரை பண்றேன் முடிஞ்சா...
"இல்ல இல்ல நீங்க கட்டாயம் வந்தே ஆகணும் இது கடமை நம்ம கடமை சாரங்கன் அவளை வியப்புடன் பார்த்தான்.
"அவங்க ரொம்ப ஆர்த்தடாக்ஸ் நம்ம கலாச்சாரம் பண்பாடு இதை எல்லாம் அவங்க ரொம்பவும் மதிக்கறவங்க...
சம்பந்தி அம்மா சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்திக் கொண்டாள்.
இதோ பாருங்க சம்பந்தமா புருஷன் பொஞ்சாதிக் குள்ளே ஆயிரம் தகராறு வரும் அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை அவங்க பிரிஞ்சி இருப்பாங்க.ஆனா பரவாயில்ல அதனால் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா மண்டபத்துலே பவித்ராவை தாரை வார்த்துக் கொடுத்தால் தான் எங்களால் ஏத்துக்க முடியும்.எங்க சொந்தகாரங்க முன்னால நாங்க நிமிர்ந்து நிற்க முடியும் உங்களுடைய பிரிவு பற்றியோ உங்களுடைய உணர்வுகளைப் பற்றியோ கவலை இல்லை.,அது பர்சனல் ஆனா...எப்படியாவது கல்யாணத்துக்கு உங்க வீட்டுக்காரரை வரச் சொல்லிடுங்க.அதுதான் முக்கியம்.
பாமினி சொன்னதை சாரங்கன் கேட்டான்.
ஆயிரம் காலத்துப் பயிர் ஆனால் இவர்களுக்கும் அந்த ஆயிரங்காலத்துப் பயிர் திருமணம் தான் நடந்தது. ஆனால் அந்தப் பயிர் அழுகிவிட்டது. ஏதேதோ தகராறு கணவனை இழந்த இவன் தாய்க்கு தாக்க பாமினி ஒரு இலக்காகி போனாள் வீட்டில் வாழாவெட்டியாக வந்த இவன் அக்கா தூபம் போட தினம் தினம் சண்டை அழுகை...வாக்குவாதம் வாழ்க்கை நரகமாகிப் போனது ஒருநாள் இதன் உச்சகட்டமாக இரண்டு வயது பவித்ராவை தூக்கிக்கொண்டு இனி நீங்க கூப்பிட்டா தான் நான் வீட்டுக்கு வருவேன் இல்லையென்றால் நுழைய மாட்டேன்
என்று பாமினி கூற
நீயும் என்ன வந்து கூப்பிட்டால் தான் நான் உன் வீட்டுக்கு வருவேன்
என்று இவனும் சூள் உரைக்க காரணம் காரியம் ஏதும் இன்றி காலங்கள் காற்றில் பறந்தன.
இவர்கள் வாழ்வை அழித்தவர்கள் மரணித்தனர். வாழ்க்கை திசைமாறி வார்த்தைகள் மட்டுமே மாறாமல் வழி மறித்து நின்றன. உறவுகள் ஒட்டாமல் தனித் தனியே நின்று விட்டன.
முறைப்படி நடத்தப்பட்ட திருமணம்..கை கோர்த்து அக்னி வலம் வந்து ஏழடி எடுத்து வைத்து அம்மி மிதித்து..பகலில் அருந்ததி பார்த்து...எல்லாமே..போலி..இப்போது மீண்டும் ஒரு அரங்கேற்றமா?
பாமினி விடைபெறும் முன் வீட்டைப் பார்த்தாள். வீடு நிசப்தமாக இருந்தது ஒருவேளை மறுமணம் செய்து கொள்ளவில்லையோ? எப்படி கேட்பது?வேண்டாம் என்று ஒதுங்கி விட்டபிறகு உறவு தழைத்தால் என்ன தவித்தால் என்ன? இவள் கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தபோது பவித்ரா பரபரப்பாக இருந்தாள்.
"என்னம்மா எங்க போயிட்ட? டிரஸ் எடுக்கணும்னு சொல்லி கால் டாக்ஸி கூட ஆர்டர் பண்ணிட்டேன்,சோளி தைக்கக் கொடுக்கணும். உன் பிரண்டு யாரோ சுகந்தியாமே... உன்ன பாக்க வந்தாங்க. எத்தனை நேரம்தான் காத்திருப்பாங்க சொல்லு அப்புறம் அவங்க கிட்ட கல்யாண பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு வரச் சொல்லி அனுப்பி வைச்சேன். எங்கம்மா போயிட்டே?,
பாமினி கண்ணீர் மறைத்து உள்ளே நுழைந்தாள்
ரொம்ப நாள் கழிச்சு பழைய பிரண்ட் ஒத்தரை சந்திச்சேன் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். நேரம் போனதே தெரியல.
அவர்கள் வாசலில் காத்திருந்த கால் டாக்ஸியில் ஏறினார்கள்.
***
திருமணப் பந்தல் மேளச்சத்தம் உறவு கூட்டங்கள் வரவேற்பு வைபவங்கள் வண்ணமயமான விளக்குகள் மாவிலைத் தோரணங்கள் முகூர்த்த கால் கலசத்துடன் வெள்ளை சிவப்பு நிறப் பூச்சுடன் மாவிலை தோரணம் அத்துடன் காப்பு கட்டு கொடியுடன் கம்பீரமாக தலையசைத்து அனைவரும் வரவேற்றுக் கொண்டிருந்தது
பாமினி வாசலையே பார்த்தாள். சாரங்கன் வருவானா? மாட்டானா? வரவில்லை என்றால் சம்மந்திக்கு என்ன பதில் சொல்வது? இதற்குள் சம்பந்திகள் வந்துவிட்டார்கள். உள்ளூர் என்பதால் ஒரு பஸ் நிறைய உறவு கூட்டம் சிரிப்பும் களிப்பும் கும்மாளமுமாக...
கைகூப்பி அவர்களை வரவேற்றாள் பாமினி முதல் நாள் தான் மெஹந்தி விழாவில் பவித்ரா இவ்வளவு வற்புறுத்தி உட்காரவைத்து கையில் மெஹந்தி போட வைத்தாள்."
வேண்டாம் எனக்கு எதுக்கு?
பரவால்ல நீயும் போட்டுக்கோ
என்றாள்
கையெல்லாம் சிவப்பு அதே சமயம் அவை கண்களிலும்...
சம்பந்தியம்மா கல்யாண பொண்ணு மாதிரி இருக்கீங்களே
என்று யாரோ சொல்ல கைதட்டலும் சிரிப்புமாக ஒரே கொண்டாட்டம்.
அப்போது வாசலில் ஒரு டாக்ஸி வந்து நிற்க அதிலிருந்து சாரங்கன் பைஜாமா குர்த்தா அணிந்து கல்யாண மாப்பிள்ளை