Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Veliyil
Nila Veliyil
Nila Veliyil
Ebook134 pages1 hour

Nila Veliyil

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

நிலா வெளியில் இது முத்துலட்சுமி ராகவன் ஆகிய நான் எழுதிய முதல் கதை. ஒரு அத்தியாயத்தின் முடிவில் வரும் வார்த்தையை கொண்டு அந்தாதி பாணியில் அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கும்.

கிராமத்தில் உடம்பு சரியில்லாமல் இருந்த அத்தையை பார்க்க சென்ற பெற்றவர்கள் அழைத்துவரச் சொன்னதாக சொல்லி காருடன் வருகிறார் காயத்ரியின் பெரியப்பா.

இவளும் அவருடன் கிளம்பிச் செல்கிறாள். இரவு நேர பயணம் விடியும்போது கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலைக்கோயிலில் கார் நிற்கிறது. மலை ஏறிச் சென்றால் அங்கே கோவிலில் உறவினர்களும் காயத்ரியின் பெற்றோர்களும் இருக்கிறார்கள். காயத்ரியை அவசரமாக அழைத்துச் செல்லும் காயத்ரியின் அம்மா அவளை குளிக்க வைத்து பட்டுப் புடவை நகைகளை போட்டு விட்டு மணப்பெண் போல அலங்காரம் செய்து அழைத்துச் சென்று மணவறையில் காத்திருக்கும் மாப்பிள்ளையின் அருகில் உட்கார வைக்கிறார். என்ன நடக்கிறது என்று காயத்ரி உணர்வதற்குள் அவள் கழுத்தில் தாலி ஏறிவிடுகிறது. தாலி கட்டியவனை அப்போதுதான் முதன்முதலாக பார்த்து யார் நீ என்று அடையாளம் பார்த்து அதிர்ச்சியுடன் விழிகளால் வினவுகிறாள் காயத்ரி. அவன் யார் என்று அவளுக்கு தெரியவில்லை. நிலாவெளியில் நடப்பதைப் போன்ற இதமான சுகானுபவம் தரும் கதை இது

Languageதமிழ்
Release dateJul 19, 2023
ISBN6580133806426
Nila Veliyil

Read more from Muthulakshmi Raghavan

Related to Nila Veliyil

Related ebooks

Reviews for Nila Veliyil

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Veliyil - Muthulakshmi Raghavan

    http://www.pustaka.co.in

    நிலா வெளியில்

    Nila Veliyil

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    மார்கழிப் பனி போல் குளுமையானது காதல்

    மலரினை விட மென்மையானது.

    அதைப் புரிந்தே உறவைத் துறந்து போனேன்.

    எனைப் பிரிந்தே அவளோ பறந்து போனாள்.

    அழகான மலர்தோட்டம். அந்தத் தோட்டத்தில் ஒரு பூ அவனை அழைத்தது. நெருங்கிச் செல்ல செல்ல அந்த மலர் முகம் நிலவு முகமாகி அவனைப் பார்த்துச் சிரித்தது. அவனது இதழ்களிலும் இளமுறுவல் அரும்பியது. அந்த இனிய கனவுடன் கண்விழித்தான் அரவிந்தன். எழுந்து அறையின் ஜன்னல் திரைகளை விலக்கி தோட்டத்தைப் பார்த்தான். நேற்றைய இரவின் பனித்துளிகளோடு தோட்டத்துச் செடிகளின் இலைகள் உறவாடிக் கொண்டிருந்தன. மலர் செடிகளின் மணம் பனிகாலத்து விடியலின் அற்புதத்தை உணர்த்தின. ஜோடியாய் பறந்த குயில்கள் 'குக்கூ குக்கூ' என ராகம் பாடிக் கொண்டு சென்றன. உலகமே உற்சாகமாய் இருந்தது அரவிந்தனைத் தவிர. கதவு தட்டப்படுவது கேட்டுத் திரும்பினான். கதவை திறந்தான். விசாலம் காபியுடன் நின்றிருந்தாள். சிவந்திருந்த அவன் விழிகளைப் பார்த்தபடி அருகிலிருந்த டீபாயின் மேல் காபியை வைத்தவள்,

    என்னடா அரவிந்த், கண்ணெல்லாம் சிவந்திருக்கு. உடம்பு சரியில்லையா? என்றவாறு அருகில் வந்து அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

    அவள் கையை தட்டிவிட்ட அரவிந்தன், கோபமாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

    கோபத்துடன் மகனைப் பார்த்த விசாலம்.

    ஏண்டா என்மேல் கோபிக்கிறே. நான் என்ன செய்தேன்? என்று கேட்டாள். பதில் சொல்லாமல் காபிக் கோப்பையை அரவிந்தன் டீபாயின் மேல் வைக்க,

    அரவிந்த். நான் ஒருத்தி இங்கே நின்று காட்டுக்கத்தலா கத்திக்கிட்டு இருக்கேன். பதிலே பேசாமல் இருக்க. என்று எரிச்சலுடன் கேட்டாள் விசாலம்.

    அதான் காட்டுக்கத்தலா கத்தறேன்னு உன் வாயாலேயே சொல்லிட்டே இல்ல. இப்படிக் கத்தினா அவன் எப்படி பதில் சொல்வான், என்ற குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தாள் விசாலம். ராஜதுரை அறைவாசலில் நின்று கொண்டிருந்தார். தந்தையைப் பார்த்ததும் அரவிந்தன் ஜன்னலருகில் போய் வெளியே பார்க்க ஆரம்பிக்க ராஜதுரை மெதுவாக உள்ளே வந்தார். மகனின் முதுகை தடவியவர்.

    அரவிந்த். உன் கோபம் காரணமில்லாதது. நானும் உன் வயதை கடந்து வந்தவன்தான். இளவயது ஆசைகள் அறிவார்ந்தவைகளாக எப்போதுமே இருக்காது. தகுதிக்கு சமமான இடத்தில் கல்யாணம் செய்வதுதான் உன் எதிர்காலத்திற்கு நல்லது. இதை உன்னிடம் ஆயிரம் முறை சொல்லிவிட்டேன். நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நம்மை விட பெரிய இடத்திலெல்லாம் நான், நீயென்று உனக்குப் பெண் கொடுக்க போட்டி போடுகிறார்கள். நீயென்னவென்றால் சாதாரண பேங்க் மேனேஜர் மகளைத் தான் கட்டுவேனென்று ஒற்றைக் காலில் நின்றாய். ஆனாலும் உன் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்துப் பெண் கேட்க நானும் உன் அம்மாவும் போனோமா, இல்லையா? அந்தப் பெண் உன்னை மணக்க சம்மதமில்லை என்று எங்கள் முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டது. என் கௌரவத்திற்கு உன்னால் ஒரு சிறு அவமரியாதை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் என் பிள்ளைக்காக என்று நான் பொறுத்துக் கொண்டேன். நீ என்னவென்றால் என்னையும், உன் அம்மாவையும் எதிரிப்போல் பார்க்கிறாய், என்றார் ராஜதுரை அழுத்தமான குரலில்.

    அப்பா! பெண் கேட்டுப் போனோம், போனோம்ன்னு சொல்கிறீர்கள. அங்கே போய் எப்படிப் பெண் கேட்டீர்கள் என்பதை சொல்கிறீர்களா? அம்மா பேசிய விதத்திற்கு சுயமரியாதையுள்ள எந்தப் பெண்தான் சரியென்று சொல்வாள். அதனால்தான் காயத்ரி என்னை மறுத்துவிட்டாள், என்றான் அரவிந்தன் கோபமாக.

    அப்படி என்னடா நான் பேசிட்டேன். அவர்கள் வீடு நம் போர்டிகோ அளவில் கூட இல்லைன்னு சொன்னேன். உண்மையைத்தானே சொன்னேன். நாளைக்கு ஒரு வேளை கல்யாணம் ஆயிட்டா எங்க அரவிந்தன் இங்கே வந்து போகவெல்லாம் தோதுப்படாதுன்னு சொன்னேன். என் மனதுக்கு பட்டதைத்தானே சொன்னேன். 'உங்களுக் கும், எங்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது ஆனால் என்ன பண்றது? எங்க அரவிந்தன் உங்க பெண் மேல் ஆசைப்பட்டுட்டான். அதனால்தான் எங்க தகுதிக்கு இறங்கி வந்து பெண்கேட்க வந்தோம்'ன்னு சொன்னேன். அது தப்பா? விசாலம் நொடித்தாள்.

    தப்பில்லைம்மா. உங்களைப் பொறுத்தவரை நீங்க பேசியது எல்லாம் சரி. எப்படிப் பெண் கேட்டால் அவர்கள் மாட்டேன்னு சொல்வாங்கன்னு சரியா நாடி பிடிச்சு பேசிட்டு வந்தீங்க பாருங்க. அங்கதான் நீங்க கைதேர்ந்த வியாபாரி ராஜதுரையின் மனைவின்னு நிரூபிச்சுட்டு வந்தீங்க. உங்களைப் போய் தப்புச் சொல்வேனா. உங்களை நம்பி பெண் கேட்க அனுப்பினேன் பாருங்க. என்னைச் சொல்லணும். அரவிந்தன் எரிச்சலுடன் பேசினான்.

    அரவிந்த் என்ன இது நீயும் அம்மா கூட சண்டை போட்டுக்கிட்டு. அம்மா அவள் மனதுக்குப் பட்டதை பேசினாள். இப்போ நீ உன் மனதுக்குப் பட்டதை பேசுகிறாய் இல்லையா. இதைப்போல் அம்மாவுக்கும் பேச உரிமை இருக்கிறதா இல்லையா?

    நன்றாகச் சொன்னீர்கள் அப்பா. உங்கள் கெட்டிக்காரத்தனத்தை என் வாழ்க்கையில் காட்டிவிட்டு அதை நியாயப்படுத்தி பேசவும் செய்கிறீர்கள்.

    இப்போ என்ன செய்யலாம் அரவிந்த். நாங்கள் போய் காயத்ரி வீட்டில் மன்னிப்பு கேட்கவா? சொல். அதையும் செய்கிறோம். நீ அதைத்தான் விரும்புகிறாய் போல.

    இதைப்போல் இக்கட்டாகப் பேசி என்னை உங்கள் வழிக்கு கொண்டு வர முயல வேண்டாம்ப்பா. நீங்கள் போய் இனி காயத்ரி வீட்டில் எதுவும் பேச வேண்டாம். பேசியது வரை போதும். இனி நான் பார்த்துக் கொள்கிறேன்.

    என்... என்... என்னடா சொல்கிறாய். நீ பார்த்துக் கொள்கிறாயா? என்ன பார்த்துக் கொள்வாய்? நீ சொல்வதுக்கு என்ன அர்த்தம்? விசாலம் பதற்றமாகப் பேச அதையே கண்களால் கேட்டபடி ராஜதுரை நிற்க இருவரையும் பார்த்தபடி,

    ஆமாம். நான் காயத்ரியிடம் பேசப் போகிறேன். 'நான் உன்னை விரும்புகிறேன். முறைப்படி பெண் கேட்பது தான் உனக்குப் பிடிக்கும்ன்னு என் அப்பா, அம்மாவை அனுப்பினேன். அவங்க எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசிட்டாங்க. அவங்க பேச்சுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை'ன்னு சொல்லப் போகிறேன்... என்றான் அரவிந்தன்.

    எங்கள் பேச்சுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை என்கிறாயா? இல்லை உனக்கும் எங்களுக்குமே சம்பந்தமில்லை என்கிறாயா? நிதானமாக வினவினார் ராஜதுரை.

    அப்பா! என் மேல் குறை சொல்ல வேண்டாம். நான் காயத்ரியிடம் பேசி எப்படியும் அவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைப்பேன். அப்போது உங்களிடம் வருவேன். நீங்கள் சம்மதித்தால் முழுமனதாய் எங்களிருவரின் கல்யாணத்தை நடத்தி வையுங்கள்.

    சம்மதிக்காவிட்டால்...? விசாலம் ஆத்திரத்துடன் இடைமறிக்க,

    மனத்தில் உங்கள் இருவரின் ஆசிர்வாதத்தை வேண்டிக் கொண்டு என் கல்யாணத்தை நானே நடத்திக் கொள்வேன், என்றான் அரவிந்தன்.

    எப்படிப் பேசறான் பாருங்க, என்று இரைந்த விசாலத்தை சமாதானப்படுதுதிக் கொண்டிருந்த தகப்பனாரை கவனிக்காமல் குளியலறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டான் அரவிந்தன். சிறிது நேரத்தில் அலுவலகம் கிளம்பத்

    Enjoying the preview?
    Page 1 of 1