Nenjathiley Nee Netru Vandhai
4/5
()
About this ebook
எங்கோ பிறந்த இரு மலர்கள் ஓர் இரவு இரயில் பயணத்தில் நட்புறவு கொண்டு வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்தார்கள். இருவரின் காதல் இருவரும் அறிந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரும் அவர்களின் காதலை அவரவர் வீட்டில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம். அவளது குடும்பத்தில் அவன் வேண்டாதவனாக ஆகிவிடுவானோ? இருவரின் காதலும் கைகூடுமா? அவர்களின் வாழ்க்கை நிலைக்குமா? வாசித்து பாருங்கள் கதையின் சுவாரசியத்தை...
Read more from Muthulakshmi Raghavan
En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5January Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Sollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsMalai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Mounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsKalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Nizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5
Related to Nenjathiley Nee Netru Vandhai
Related ebooks
Sollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsVandhal Mahalakshmiye... Rating: 2 out of 5 stars2/5Thanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Unnaivida Oru Urava..? Rating: 0 out of 5 stars0 ratingsOttraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsMellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsNesam Mattum Nenjiniley... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathin Saalaram Rating: 3 out of 5 stars3/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Nathi Engey Pogirathu...? Rating: 4 out of 5 stars4/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Uyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Unnudan Naan... Ennudan Nee... Rating: 4 out of 5 stars4/5En Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Brindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Vidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Neengatha Ninaivugal... Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Thedum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Eppothum Thodar Kathaithan... Rating: 3 out of 5 stars3/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Ammamma.. Keladi Thozhi...! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTheansindhum Pooncholai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nenjathiley Nee Netru Vandhai
1 rating0 reviews
Book preview
Nenjathiley Nee Netru Vandhai - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
Nenjathiley Nee Netru Vandhai
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
1
வீடெங்கும் சாம்பிராணியின் மணம் கமழ்ந்து கொண்டிருந்தது... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டு... புரண்டு படுத்துக் கொண்டிருந்த சுஜாதாவின் நாசியை அது வருட... கோவிலுக்குள் இருப்பது போன்று உணர்ந்தாள் அவள்... கண் விழித்துப் பார்த்தாள். குளித்து முடித்து ஈரத்தலையைச் சுற்றித் துண்டு கட்டி... மங்களகரமான முகத்தில் குங்குமம் துலங்க... கையில் சாம்பிராணிக் கரண்டியுடன்... வீடு பூராவும் வலம் வந்து கொண்டிருந்தாள் கமலம். அவளது கையில் இருந்த சாம்பிராணிக் கரண்டியில் இருந்து எழுந்த புகையின் நடுவே தெரிந்த அவள் முகம்... வரம் கொடுக்கும் தேவதை ஒன்று வீட்டுக்குள் வந்து நிற்பதைப் போல் இருந்தது.
அதற்கு மேல் படுக்கையில் புரள மனமில்லாமல் எழுந்து கொண்டாள் சுஜாதா. படுக்கையறையை விட்டு வெளியே வந்தாள். கையில் சாம்பிராணிக் கரண்டியோடு இருந்த கமலம் புன்னகைத்தாள்.
எழுந்துட்டயா...? போ... போய் பல் தேய்த்து விட்டுக் காபியைக் குடி...
பல் தேய்க்காவிட்டால் காபி கிடையாதா...?
கிடையாது...
என்ன அராஜகம் இது...? யானையெல்லாம் பல்லா தேய்க்கிறது...?
சுஜாதா கூறியதைக் கேட்டு... அப்போதுதான் உலாவப் போய்விட்டு திரும்பி வந்த ஆனந்தன் பலமாகச் சிரித்தார்...
சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிய கமலம் கணவனை முறைத்தாள்.
இப்போ எதுக்காகச் சிரிக்கறீங்க...?
என் பெண்ணின் அறிவைப் பார்த்தாயாடி...
ஆமாம்... அதை நீங்கள்தான் மெச்சிக்கணும்...
அப்பா... அம்மாவைப் பாருங்கப்பா... எப்போது பார்த்தாலும் என்னையே திட்டுகிறாங்க...
ஏண்டி என் பெண்ணையே திட்டுகிற...? அவள் என் செல்லப் பெண்... தெரியுமா...?
அம்மாவுக்கு நான் செல்லமில்லை அப்பா...
வேறு யாருடா கண்ணா செல்லம்...?
வேறு யார்... எல்லாம் அவங்களோட அருமை பேத்தி நிஷாதான்...
அப்போது பார்த்து இரண்டரை வயது நிஷா...
பாட்டி...
என்று கண்ணைக் கசக்கியவாறு அங்கே வந்தாள்.
வாடி செல்லம்... என் கண்ணம்மா விழித்தாச்சா...
என்று கொஞ்சியபடி பேத்தியைத் தூக்கி கமலம் இடுப்பில் வைத்துக்கொள்ள.
பார்த்தீங்களாப்பா...
என்றாள் சுஜாதா...
பார்த்தேன்... பார்த்தேன்...
தூங்கி முடித்து இவங்க பேத்தி கண் விழித்ததற்கு விட்டால் விழாவே எடுத்து விடுவாங்க போல... எனக்கொரு நியாயம்... இவங்க பேத்திக்கு ஒரு நியாயமா...?
ஏண்டி... குழந்தையோடு போட்டிக்கு வருகிற...?
கமலம் கடிந்து கொண்டே உள்ளே செல்ல... ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்த ஆனந்தன்... செய்தித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
மாமா... காபி...
என்றபடி... அவரது மருமகள் சுகுணா வந்து காபியை நீட்டினாள்.
அண்ணி எனக்குக் காபி...?
பல் தேய்த்து விட்டாயா...
நீங்களும் ஆரம்பித்து விட்டீங்களா...? அப்படியே மாமியாருக்கு ஏற்ற மருமகள், ம்ஹும்... அப்பா... அப்போ நான் கட்டாயம் பல் தேய்த்துத்தான் ஆகணுமா...?
காபி வேண்டுமானால் பல் தேய்த்துத்தான் ஆகணும்...
இது அநியாயம் அப்பா...
என்னம்மா செய்வது... நான் கிச்சன் டிபார்ட்மென்டில் தலையிடக் கூடாதே...
சுஜாதா எழுந்து போய் பல் தேய்த்துவிட்டுத் திரும்பி வந்தபோது... தினேஷ்... ஆனந்தனிடம் தீவிரமாய் நாட்டு நடப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அண்ணி... காபி...
என்று குரல் கொடுத்தபடி அவனுக்கு அருகே அமர்ந்த சுஜாதா.
என்ன அண்ணா... பேப்பரில் என்ன நியூஸ் போட்டிருக்கு...?
என்று வினவினாள்.
அதைத்தான் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக் கிறேன்ம்மா...
என்றவன்... காபியுடன் வந்த சுகுணாவைப் பார்த்ததும்...
எனக்கொரு காபி ப்ளீஸ்...
என்றான்.
என்னண்ணா... அண்ணியிடம் ப்ளீஸ் போடுகிறீங்க... ஆர்டர் போட மாட்டிங்களா...? ஷேம்... ஷேம்...
நான் அப்பாவின் வாரிசும்மா... பெண்களிடம் என் அடக்குமுறையை பிரயோகிப்பதில்லை...
சுகுணாவைப் பார்த்து அவன் யாருக்கும் தெரியாமல் லேசாய் கண் சிமிட்ட... அவள் வெட்கப் புன்முறுவலோடு உள்ளே சென்றாள்.
செய்தித்தாளை படித்தபடி... காபியை உறிஞ்சிக் கொண்டிருந்த சுஜாதா விழியை உயர்த்தாமல்...
சைட்டெல்லாம் பலமாய் இருக்கிறதே...
என்றாள்.
யாரைச் சொல்கிற...?
தினேஷ் அறியாதவன் போல் வினவினான்.
வேறு யாரைச் சொல்வேன்... உங்களைத்தான்...
என்னையா...?
ஆமாம், அண்ணியிடம் ரகசியமாய் கண் சிமிட்டியது நீங்கள்தானே...
ஏய்ய்...
தினகரன் முகம் சிவந்து போனான். ஆனந்தன் மகனையும்... மகளையும் கவனிக்காதவர் போல் எழுந்து சென்று விட... தினேஷ் சுஜாதாவின் காதைப் பிடித்துத் திருகினான்.
அப்பா... முன்னால் கிண்டலா பண்ணுகிறாய்...?
ஐயோ... அண்ணா... வலிக்குது... விடுங்கள்...
வலிப்பதுபோல் போலியாய் அலறினாள் சுஜதா. கணவனுக்காக காபி கொண்டு வந்த சுகுணா.
ஐயோ பாவம்... சின்னப் பெண்... அவளை ஏன் காதைப் பிடித்துத் திருகுகிறீங்க... வலி தாங்காமல் அலறுகிறாள் பாருங்க...
என்று நாத்தனாருக்காகப் பரிந்து பேசினாள்.
வலி தாங்காமல் அலறுகிறாளா... இவளா... நான் சும்மா காதில் கையை வைத்ததுக்கே டிராமா போட்டுக் கொண்டிருக்கிறாள்... நீ வேறு புரியாமல் சப்போர்ட்டுக்கு வராதே...
எதுவாக இருந்தாலும்... கல்யாண வயதில் இருக்கும் பெண்ணின் காதைப் பிடித்துத் திருகலாமா...?
இவ என்ன சொன்னா தெரியுமா...?
என்ன சொன்னா...?
நான் உன்னை சைட் அடிக்கிறேனாம்...
தினேஷ் கூறியதைச் கேட்டதும்... சுகுணா ரம்யமாய்ச் சிரித்தாள்.
உள்ளதைத்தானே சொல்லியிருக்கிறா...? நீங்க என்னை சைட் அடிக்கவில்லையா...?
அப்படிச் சொல்லுங்க அண்ணி... அப்பாவின் முன்னாலேயே உங்களிடம் என்னமாய் வழிகிறார் தெரியுமா...? யாராவது தெரியாதவர்கள் பார்த்தால்... உங்கள் இரண்டு பேரையும் ஹஸ்பென்ட் அன்ட் வொய்ப்ன்னு சொல்ல மாட்டாங்க... லவ்வர்ஸ்ன்னுதான் சொல்வாங்க...
சுகுணா பெருமையாய் கணவனைப் பார்த்துக் கொண்டாள். அதைக் கண்ட தினேஷின் பார்வையில் காதல் தெரிந்தது.
சரி... சரி... நீ காபியைக் குடிச்சிட்டயா...
ஆச்சு... இந்தாங்க தம்ளர்...
சுகுணா சமையலறைப் பக்கம் போக முனைய... தினேஷ் எழுந்து மாடிப்படி ஏறியவாறு...
சுகுணா...
என்று அழைத்தான்.
என்னங்க...
நான் குளிக்கனும்...
இதோ வந்துட்டேன்...
சுகுணா சமையலறைக்குள் சென்று காலி தம்ளரைப் போட்டு விட்டுத் திரும்பி வந்து மாடிப்படி ஏறினாள்.
ஏன் அண்ணி... அண்ணன் குளிக்கப் போனால் உங்களுக்கு அங்கு என்ன வேலை...? அவரை குளிப்பாட்டி விடப் போகிறீர்களா...?
ஏய்... அரட்டை... அவருக்கு டவல்... சோப்ன்னு எடுத்துக் கொடுக்க வேண்டாமா...?
அதை அவர் எடுத்துக் கொள்ள மாட்டாரா...? அவர் என்ன நம் நிஷாவைப் போல் சிறு குழந்தையா...?
இதற்கு பதிலை... நீ கல்யாணமாகி... உன் கணவர் பின்னால் சோப்பையும்... துண்டையும் தூக்கிக் கொண்டு போவாய் இல்லையா...? அப்போது சொல்கிறேன்...
சுகுணா சிரித்துக் கொண்டே மாடிக்குப் போய் விட்டாள்... ஆனந்தினின் அறைக்குள் இருந்து...
கமலம்... என் கிரின் கலர் சர்ட் எங்கே...
என்ற குரல் கேட்டது.
இதோ வந்து விட்டேன்...
என்றபடி கமலம் அறைக்குள் விரைந்தாள்.
என்னடா இது... அண்ணனும்... அப்பாவும் ஆபீஸிற்குக் கிளம்பினால்... அண்ணியும்... அம்மாவும் அவர்களுக்கு பின்னாலேயே சுற்றுகிறாங்க... இதில் வேறு... மாமியாரும் மருமகளும்... ‘இதோ வந்துட்டேன்...’ ங்கிற டயலாக்கை ஒன்று போல் சொல்கிறாங்க. என்னதான் நடக்கிறது இங்கே...
என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள் சுஜாதா...
அவள் தனக்குத்தானே பேசிக் கொள்வதை வினோதமாய் பார்த்தபடி அருகில் வந்து நின்ற நிஷா.
என்ன அத்தை...
என்று வினவினாள்...
வா... வா... உனக்கும் எனக்கும்தான் ஜோடியில்லை... நாம் இரண்டு பேரும்தான் உட்கார்ந்து பேச்சு வார்த்தை நடத்தனும்...
என்று அவளைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள் சுஜாதா.
அதைக் கேட்டவாறு அறையில் இருந்து வெளியே வந்த ஆனந்தனுக்கு சிரிப்பு வந்து விட்டது.
அவள் என்ன சொன்னாலும் சிரிங்க...
என்றபடி கமலம் டைனிங் டேபிளில் காலை டிபனுக்கான பாத்திரங்களை பரப்ப ஆரம்பித்தாள்.
அதைக் கண்டு கொள்ளாமல் மகளுக்கு அருகில் சென்று அமர்ந்த ஆனந்தன் மகளின் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்தார்.
உனக்கும்... நிஷாவுக்கும் ஜோடியுமில்லை... வேலையுமில்லை... அவள் இன்னும் படிப்பை ஆரம்பிக்க வில்லை... நீ படிப்பை முடித்து விட்ட... என்ன மாதிரியான காம்பினேசன் தெரியுமா... நீங்கள் இருவரும்... என்ஜாய் பண்ணுங்கள்... எங்களைப் பார்... காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட வேண்டியிருக்கிறது... எனக்கும்... உன் அண்ணனுக்கும் ஆபீஸ் வேலை... அம்மாவுக்கும்... அண்ணிக்கும் சமையல் வேலை... நீங்கள் இரண்டு பேருமாவது... இந்தக் கவலைகள் இல்லாமல் கொஞ்ச நாள் நிம்மதியாக இருங்க...
எங்கே அப்பா... எனக்கு நாளைக்கே அப்பாயின்ட் மென்ட் ஆர்டர் வந்தாலும் வரலாம்... யார் கண்டது... அப்புறம் எங்கே நான் என்ஜாய் பண்ணுவது...? ஒன்றுக்கு பதினைந்து இன்டர்வியூ அட்டென்ட் பண்ணியிருக்கிறேன். கட்டாயம் எனக்கு வேலை கிடைத்துவிடும். அதற்குப் பின் இந்த நிஷாக் குட்டியின் அத்தை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆகிவிடுவேனாம்... வேலை செய்யும் இடத்திற்கு பறந்து விடுவேனாம்... நிஷாக்குட்டி போட்டிக்கு ஆள் இல்லாமல் ஜாலியாக இருப்பாளாம்... என்ன குட்டி...
அண்ணன் மகளை அணைத்து அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவாறு சுஜாதா கூறினாள்.
ஆமாம்டி... நேற்றுப் பிறந்த குழந்தைக்கு நீ போட்டியா...? பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் சின்ன குழந்தையாக மாறப் பார்க்கிறாயே...
கமலம்... மகளைச் செல்லமாய் கடிந்து கொண்டாள்.
உங்கள் பேத்தியை ஒரு வார்த்தை சொல்லி விடக் கூடாதே... உடனே ஆஜராகி விடுவீங்களே...
ஆமாமாம்... நீயும்... உன் வாதமும்... எழுந்து குளிக்கப் போடி...
கமலத்தின் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷாவுடன் மும்முரமாய் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் சுஜாதா.
அதைக் கவனித்தபடி மாடியிலிருந்து கணவனுடன் இறங்கி வந்த சுகுணா.
என்னவோ... இவள் பேசுவது குழந்தைக்கு புரிந்து விடுவது போல் என்னமாய் பேசிக் கொண்டிருக்கிறாள் பாருங்கள்...
என்று கணவனிடம் சொன்னாள்.
நீ வேற... அவள் அப்பாவிடம் அவருக்கு ஏற்றாற் போல் பேசுவாள்... என்னிடமும்... உன்னிடமும் நமக்குத் தகுந்தாற்போல் பேசுவாள்... குழந்தையிடம் குழந்தையாகவே மாறிப் பேசுவாள்... அங்கே பார் நிஷா கண்ணை கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதை...
தினேஷ் தங்கையைப் பார்த்தபடி டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டான்.
சுஜாதா... நீயும் சாப்பிடவா...
அம்மா எனக்கு டிபன் போட மாட்டாங்கப்பா...
ஏண்டி...
குளிக்காமல் டிபன் கிடையாது...
கமலம் திட்டவட்டமாய் கூற... ஆனந்தன் மகளைப் பார்த்தார். அவள் பாவம் போல் முகபாவம் காட்டியவாறு கூறினாள்.
இப்படித்தான்ப்பா... இந்த வீட்டில் அநியாயம் நடக்கிறது. பல் தேய்த்தால்தான் காபியாம். குளித்தால் தான் டிபனாம்... ம்ஹும்... நான் என்ன செய்வேன்... நீங்களே சொல்லுங்க...
அவள் சொல்லிய விதத்தில் அவர்கள் அனைவரும் சிரிக்க... நிஷாவுடன் தன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தாள் சுஜாதா... திண்டுக்கல்லில்... வசதியானவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்த அழகிய பூந்தோட்டம் போன்ற அந்தக் குடும்பத்தில்... பூத்திருந்த புதுமலராய் வளைய வந்த சுஜாதாவிற்கு பெங்களூரில் வேலை கிடைத்திருந்த செய்தியைச் சொல்லிய விரைவுத் தபால் அன்று மதியம் அவள் கையில் கிடைத்தது.
2
வைகைப் பாசனத்தின் பசுமையை பறைசாற்றும் நெற்பயிர்களுக்கு இடையே வரப்பில் கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான் பரதன்.
மாலை நேரத்துப் காற்றும்... மரகதப் பச்சையும்... கண்களுக்கும் மனதிற்கும் குளுமையைத் தர... இதமான அந்தச் சூழ்நிலையை ரசித்தபடி வந்து கொண்டிருந்த வனுக்கு எதிரே வந்த அந்தப் பெரியவர்.
யாரு... நம்ம பரதனா...?
என்று வினவினார்...
ஆமாம் தாத்தா...
"ஆத்தி... பிள்ளையைப் பார்த்து எத்தனை நாளாச்சு...? பெங்களூருக்கு வேலைக்குப் போனா மேலூரை மறந்து விடணும்னு சட்டமாய்யா...? ஆடிக்கொருதரம்... அமாவாசைக்கு ஒருதரம்ன்னு வந்துதான்... அப்பனையும்... ஆத்தாளையும் பார்த்துவிட்டுப் போவியோ... உன்னை வளர்த்து ஆளாக்கியதுகய்யா... அந்த ரெண்டு ஜீவனும்... அதுகளையும்... நம்ம அண்ணன் வந்து கரையேத்து வாருன்னு