Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kandalum Pothum Kangal
Kandalum Pothum Kangal
Kandalum Pothum Kangal
Ebook196 pages1 hour

Kandalum Pothum Kangal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

கண்டாலும் போதும் கண்கள் என்று வெறிகொண்டு பாரதியைத் தேடிக் கொண்டிருக்கும் நரேந்திரன் கண்முன் வந்து நின்ற பாரதியை ஏன் தவிர்த்தான்? பாரதியிடம் இருக்கும் குழந்தை யார்? பாரதி ஏன் நரேந்திரனை பிரிந்தாள்? கோபமும், காதலும் கலந்த இந்த கதையை வாசித்து மகிழ்வோம்...

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810083
Kandalum Pothum Kangal

Read more from Muthulakshmi Raghavan

Related to Kandalum Pothum Kangal

Related ebooks

Reviews for Kandalum Pothum Kangal

Rating: 4.6 out of 5 stars
4.5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kandalum Pothum Kangal - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்டாலும் போதும் கண்கள்

    Kandalum Pothum Kangal

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் கடிதம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    ஆசிரியர் கடிதம்

    மனம் விட்டுப் பேசலாமா...?

    என் பிரியத்துக்குரிய வாசக... வாசகிகளே...!

    பேசுவதற்கு நிறைய விசயம் உள்ளது... துளித்துளியாய் விழும் மழைத்துளிகள் போல் நானும் அள்ளிக் கொடுக்க வேண்டியதை கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்... பக்கம் பக்கமாய் உரையாட ஆசைதான்... பதிப்பாளர் அடிக்க வந்து விடுவாரே... அதனால் இதழ்கள் தோறும் ஒரிரு பக்கங்களுடன் அடக்கி வாசிக்கிறேன்...

    இந்த இதழிலிருந்து நம் கொடி நாவல்களான பொற்கொடி, பவளக்கொடி, சுடர் கொடி ஆகிய மூன்று நாவல்களும் ஒரே மாதத்தில் வெளியாகும்... மறு மாதம் இந்த மூன்று நாவல்களின் சிறப்பிதழ்களாக பொற்கொடி சிறப்பிதழ், பவளக்கொடி சிறப்பிதழ், சுடர்கொடி சிறப்பிதழ் வெளியாகும்... சித்திரை மாதம் மே ஒன்றாம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகின்றது...

    தமிழ் புத்தாண்டில் இம்மாற்றத்தைக் கொண்டு வர உத்தேசித்தோம்... நம் விஷ்ணு பப்ளிகேசனில் என்னைத் தவிர மூன்று எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்... 1. விஜி பிரபு, 2. ஸ்ரீ லட்சுமி 3. ஸ்ரீ கலா...

    இவர்களில் விஜி பிரபுவையும் ஸ்ரீலட்சுமியையும் நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகலா பதிப்பகத்திலும் இணைய தளத்திலும் பிரபலமான எழுத்தாளர்... மாத நாவலில் உங்களிடம்தான் நான் அறிமுகமாவேன் என்று காத்திருந்து வருகை தந்திருப்பவர்... இவர் சாதாரணமானவரல்ல... இவரைப் பற்றி இவரது நாவல்கள் வெளியாகப் போகும் இதழில் விரிவாக எழுதுகிறேன்...

    இம்மாதம் வெளியாகும் பொற்கொடியில் எனது கதை, பவளக்கொடியில் எனது கதை, சுடர் கொடியில் ஸ்ரீலட்சுமி...

    ஜூன் மாதம் வெளியாகும் பொற்கொடி சிறப்பிதழில் ஸ்ரீகலாவின் கதை, பவளக்கொடி சிறப்பிதழில் எனது கதை, சுடர்கொடி சிறப்பிதழில் விஜி பிரபுவின் கதை...

    இந்த வரிசை இனி வரும் மாதங்களில் சீராக தொடரும்... ஒரு மாதம் மூன்று கொடி நாவல்கள் மறுமாதம் இம்மூன்றின் சிறப்பிதழ்கள்... மாதா மாதம் மூன்று நாவல்கள்... சரிதானே...?

    அடுத்த ஆசிரியர் கடிதத்தில் சந்திக்கிறேன்...

    பார்வை ஒன்றே போதும்

    உன்னைப் பார்த்த கண்கள்

    மண்ணைப் பார்த்து சிரிக்கும்...

    விண்ணைப் பார்த்த கண்தான்...

    உன்னைப் பார்த்து வெட்கும்...

    நீ பார்க்கும் பார்வையிலே

    மனதோரம் பூப்பூக்கும்...

    நீ பாராத போது

    எனக்குள்ளே ஏதோ துடிக்கும்...

    உன்னிமை மூடி நீ உணர்த்தும்

    சங்கீதம் என் சொர்க்கம்...

    ஒரு கோடி வார்த்தைகள் எதற்கு...?

    ஒரு சிறு பார்வை பார்த்தால் போதும்...

    - நட்புடன்

    முத்துலட்சுமி ராகவன்

    அத்தியாயம் 1

    குளிர் நிரம்பிய இதமான பெங்களூரின் சீதோஷ்ண நிலை நரேந்திரனை ‘வா’ என வரவேற்றது... சென்னையைப் போலவே பரபரப்பான விமான நிலையம்... நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட கண்டிப்பான பார்வையுமாக கம்பீரமாக இருந்த நரேந்திரனின் உயரம் ஆறடி... கண்களில் கருப்பு நிறக் கண்ணாடி அணிந்திருந்தான்... அவனைக் கடந்து போன பெண்கள் மறுபடியும் பார்த்து வைத்ததை அவன் துளியும் லட்சியம் பண்ணவில்லை... சிவந்த நிறம்... ஆறடிக்கும் மேல் உயரம்...

    வாவ்... வெளிப்படையாகச் சொன்ன ஒரு பெண்ணை இவன் கண்ணாடியைக் கழற்றி விட்டு வெளிப்படையாக முறைத்தான்... இறுக்கமான முகம்... அவனது கடுமையையும் பொருட்படுத்தாமல் கிறக்கப் பார்வை பார்த்தாள் அவள்... பார்வையை விலக்கிக் கொண்டு வேகமாக நடந்தவனை தொடர்ந்தது அவள் பார்வை...

    முசுட்டு மூஞ்சியா இருக்கான்... உன்னைப் போல் ஒருத்தி சைட் அடித்தால் பதிலுக்கு சிரிக்க வேண்டாம்... பிரண்ட்லியாவது பார்க்கலாமில்லையா...? இவன் என்னவோ நீ செய்யக் கூடாததை செய்து விட்டதைப் போல முறைத்துக்கிட்டுப் போறான்... நீ வெட்கமில்லாமல் அவனை சைட் அடிக்கிறதை கண்டினியூ பண்ணுகிற... வாட் இஸ் திஸ்...? அந்தப் பெண்ணின் தோழி கோபித்துக் கொண்டாள்...

    கடுவன் பூனையா இருந்தா இருந்துட்டுப் போறான்... வாட் எ ஹேண்ட்சம் ஹி இஸ்... அந்தப் பெண்ணின் விழிகளில் மயக்கம் வழிந்தது...

    உன்னைத் திருத்தவே முடியாது என்ற ரீதியில் அந்தப் பெண்ணின் தோழி தலையில் அடித்துக் கொள்ள... அவள் திருந்தினாலும், திருந்தாவிட்டாலும் எனக்கென்ன ஆனது என்று நரேந்திரன் திரும்பிப் பார்க்காமல் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தான்... அப்போதுதான் வந்து நின்ற காரிலிருந்து கையாட்டிய முகுந்தன்...

    வெல்கம் நரேன்... ஐ ஆம் ஹியர்... என்று கூவினான்...

    காரின் பின் சீட்டில் பெட்டியை வீசிய நரேந்திரன் முன் பக்கக் கதவைத் திறந்து முகுந்தனின் பக்கத்தில் உட்கார்ந்தான்... கார் வேகமெடுத்துச் சாலையின் போக்குவரத்தில் கலந்தது... பூங்காக்களின் நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூர் சாலைகள் இரு புறமும் மலர் மரங்களுடன் காட்சி தந்தன... நரேந்திரன் எதுவும் பேசாமல் உர்ரென்று இருந்தான்... முகுந்தனோ அவனுக்கு நேர் எதிராக முகம் முழுவதும் சிரிப்பைப் பூசிக் கொண்டிருந்தான்...

    அப்புறம்...? உற்சாகமாக நண்பனை விசாரித்தான்...

    அப்புறம்ன்னா...? நண்பன் என்னவோ கேட்க கூடாத ஒன்றைக் கேட்டு விட்டதைப் போல முகத்தைச் சுளித்தான் நரேந்திரன்...

    என்னடா இப்படி முறைக்கிற...? சென்னையில் அங்கிள், ஆண்ட்டி எப்படி இருக்கிறாங்க...? நீ லண்டனிலிருந்து எப்ப வந்த...? எக்ஸெட்ரா... எக்ஸெட்ராங்கிறதை... ‘அப்புறம்’ன்னு ஒரே வார்த்தையில் கேட்டா அடிக்க வருகிறதைப் போல கடிக்கிற...?

    எல்லாம் ‘ஓகே’ தான்...

    அவ்வளவுதான்... உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை முடிந்தது என்பதைப் போல உம்மென்று ஆகி விட்டான் நரேந்திரன்... முகுந்தனா விடுவான்...? அவனுக்கு நரேந்திரனிடம் பேச நிறைய விவரங்கள் இருந்தன... அவனது பங்களாவுக்குப் போவதற்குள் பேசியாக வேண்டும்... மனதில் அமிழ்த்தி வைத்திருக்கும் ரகசியங்களை நண்பனிடம் மட்டுமே பகிர முடியும்...

    நரேன்...

    சொல்லு...

    உன்னிடம் பேசனும்டா...

    அதற்கென்னடா... பேசு... இதற்குப் போய் அனுமதி கேட்கிறான் பார்... என்று நரேந்திரன் சொல்லி விடவில்லை... அப்படிப்பட்ட கொடுப்பினையா முகுந்தனுக்குக் கிடைத்திருக்கிறது...? அவன் என்னவோ நரேந்திரனைச் சொத்தைக் குடு என்று கேட்டு விட்டதைப் போல உக்கிரமான நரேந்திரன்...

    கம்பெனியைப் பத்திப் பேசறதுன்னா காரை நிறுத்தி விடு... நான் இப்படியே ஏரோடிராமுக்கு ரிட்டர்ன் ஆகி லண்டனுக்குப் பிளைட்டைப் பிடிச்சுப் பறந்து போயிடறேன்... என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்...

    முகுந்தனுக்கு வெறுத்துப் போய் விட்டது... இப்படியுமா ஒருவன் நண்பன் என்ன சொல்ல வருகிறான். ஏது சொல்ல வருகிறான் என்று கேட்காமல் சண்டைக்கு அழைப்பதைப் போலக் கத்துவான்...?

    முகுந்தனும், நரேந்திரனும் நண்பர்கள்... எம்.பி.ஏ படிப்பை வெளிநாட்டில் ஒன்றாகப் படித்தவர்கள்... நரேந்திரனின் குடும்பம் சென்னையில் இருந்தது... அவர்கள் ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலில் பிரசித்தி பெற்றவர்கள்... முகுந்தனின் குடும்பம் பெங்களூரில் இருந்தது... இவர்கள் கட்டிடத் துறையில் இருந்தார்கள்... எம்.பி.ஏ படிப்பை முடித்து வந்ததும்...

    நரேந்திரன் சென்னையிலிருந்து ‘நரேன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கம்பெனி’யின் எம்.டியாக ஆனான்... முகுந்தனுக்கு பெங்களூரில் ‘எம்.எம். கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி...’ யின் தலைமைப் பதவி காத்திருந்தது... அதில் இருவருக்குமே மனத் திருப்தி இல்லை... என்ன இருந்தாலும் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்புத் தங்களின் பெற்றோர் கொடுத்ததுதானே என்ற எண்ணம் அவர்களது மனதைக் குடைந்து கொண்டே இருந்தது... அதற்குத் தூபம் போடுவதைப் போல அவர்களின் உறவினர்களும், நண்பர்களும்...

    உனக்கென்ன... உன் அப்பா வளர்த்த கம்பெனி இருக்கு... இந்த சின்ன வயதிலே எம்.டியா ஆகிட்ட... என்று சொல்லி வைத்தாற்போல ஒரே வார்த்தைகளைச் சொல்லி வைத்தார்கள்...

    நரேந்திரனின் தன்மானம் உசுப்பி விடப்பட அவன் முகுந்தனுடன் ஆலோசித்தான்... மற்றவர்கள் சொல்கிறார்களே என்று ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்பிலிருந்து விலக முடியாது... பெற்றவர்களின் சுமையைக் குறைக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை... அதற்காக சுய அடையாளமில்லாமல் இருக்கவும் முடியாது...

    முகுந்த்... நீயும் நானும் கம்யூட்டர் இன்ஜினியர்ஸ்... ஐ.டி படித்து விட்டு நான் இம்போர்டு அண்ட் எக்ஸ்போர்ட் பிஸினெஸ்ஸில் இறங்கிட்டேன்... நீ கண்ஸ்ட்ரக்சன்னு போயிட்ட... நாம ஏண்டா ஒரு ஐ.டி கம்பெனியை ஆரம்பிக்கக் கூடாது...?

    நரேந்திரனின் கேள்வியில் உருவானதுதான் ‘என்.எம் கம்யூட்டர்ஸ் லிமிடெட்...’ ஐ.டி கம்பெனிகள் கோலோச்சும் பெங்களூரில் அது மையம் கொண்டது... நரேந்திரனும் முகுந்தனும் கம்பெனியில் பார்ட்னர்ஸ்... இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனிக்காக நரேந்திரன் உலகம் சுற்றி வர... முகுந்தன் கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்காக பெங்களூரிலேயே காலை ஊன்றினான்... ஐ.டி கம்பெனியின் நிர்வாகத்தை முகுந்தன் கவனித்துக் கொள்ள, நரேந்திரன் இந்தியாவில் இருக்கும் போது பெங்களூருக்கு வந்து போவான்... இதுவரை ஐ.டி கம்பெனி சம்பந்தமாக நண்பர்கள் இருவருக்குள்ளும் மனத்தாங்கல் ஏதும் வந்ததில்லை... முகுந்தனை நம்பிக் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்திருந்தாலும் நரேந்திரன் வரும்போதெல்லாம் கம்பெனியின் செயல்பாடுகளை ஊன்றிக் கவனிப்பான்... ஆராய்வான்... பெங்களூரில் இல்லாமலே இண்டர்நெட் மூலம் கம்பெனியின் நிர்வாகத்தில் பங்கு பெறுபவன் அவன்... கம்பெனியின் வரவு, செலவு கணக்குகளை விரல் நுனியில் வைத்திருப்பான்...

    சமீப காலமாகத்தான் இப்படி கம்பெனியில் பற்றில்லாமல் நடந்து கொள்கிறான்... எரிந்து விழுகிறான்... காரணம் என்னவென்று முகுந்தன் எப்படியெல்லாமோ வினவி விட்டான்... பதில் கிடைக்கவில்லை... கடந்த இரண்டு வருட காலமாக நரேந்திரன் இந்தியாவில் இல்லை... அவனுடைய ‘நரேன் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்’ கம்பெனியின் நியுயார்க் கிளையில் இருந்தான்...

    நரேன்... எனக்கு உன்னிடம் பேச வேண்டியது நிறைய இருக்குடா...

    கம்பெனி மேட்டரா...?

    ம்ப்ச்... இல்லை நரேன்... மோஸ்ட் பெர்சனல்... போதுமா...?

    முகுந்தன் முகத்தைச் சுளித்ததில் நரேநதிரன் அவன் பக்கம் திரும்பினான்... நண்பனின் கண்டனத்தை சட்டையே செய்யாமல்

    உம்... பேசு... என்றான் கடமை வீரனாக...

    பேசுவதற்கு எதுவுமில்லை என்று விட்டு விடலாம் போல

    Enjoying the preview?
    Page 1 of 1