Kothikkum Panithuli..!
4/5
()
About this ebook
சந்தோஷ்-அமலா இவர்களின் காதல் எப்படி ஆரம்பமானது? இவர்களின் காதலுக்கு இடையில் வரும் நபர்கள் யார்? அவர்களால் இருவருக்கும் வரும் மனச் சங்கடங்கள் என்ன? அவற்றை மறந்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களின் வாழ்க்கை இனிமையாக அமைந்ததா? வாசித்து தெரிந்து கொள்வோம்...
Read more from Muthulakshmi Raghavan
En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5January Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Nenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsMellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsMounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsKalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Sollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsNila Veliyil Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kothikkum Panithuli..!
Related ebooks
Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Kaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsMannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsNenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Nathi Engey Pogirathu...? Rating: 4 out of 5 stars4/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5Manam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Vandha Nilavu Rating: 4 out of 5 stars4/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru... Rating: 4 out of 5 stars4/5Puthithaga Oru Bhoopalam Rating: 4 out of 5 stars4/5Theril Vandha Thirumagal..! Rating: 0 out of 5 stars0 ratingsAasaiya... Kobama...? Rating: 0 out of 5 stars0 ratingsThendralai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathin Saalaram Rating: 3 out of 5 stars3/5Nesam Mattum Nenjiniley... Rating: 0 out of 5 stars0 ratingsEnni Irunthathu Edera... Part - 4 Rating: 3 out of 5 stars3/5Kavitha Oru Kavidhai Rating: 5 out of 5 stars5/5Putham Puthu Kaalai... Rating: 4 out of 5 stars4/5Kaadhal Nilavey! Rating: 5 out of 5 stars5/5Kaathirunthean Kanmaniye... Rating: 4 out of 5 stars4/5Pakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Malarey Ennidam Mayangathey Rating: 4 out of 5 stars4/5Kaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Maan Vizhiye Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kothikkum Panithuli..!
1 rating0 reviews
Book preview
Kothikkum Panithuli..! - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
கொதிக்கும் பனித்துளி..!
Kothikkum Panithuli..!
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
ஐயா...!
காடுகளுக்கிடையே டமாரம் அடித்துச் செய்தி சொல்வதைப் போல சந்தோஷின் செவிப்பறையின் ஜவ்வைப் பதம் பார்த்து அழைப்பொலி வந்தது...
அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்தவன் எட்டிப் பார்த்தான்...
உங்க பிரண்ட் வந்திருக்காருங்க...
கூவியவன் சுட்டிக் காட்டிய திசையில் காரின் மீது சாய்ந்து நின்று கூலிங்கிளாஸீடன் படுஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் மகேந்திரன்... சந்தோஷின் ஆப்த நண்பன்...
சந்தோஷ் மேலே வரும்படி கை அசைத்தான்... அவனோ முட்டிக்காலைத் தொட்டுக் காட்டி...
கால் வலிக்கும்டா...
என்று கத்தினான்...
அடச்சீ... மேலே வா... அத்தச் சோம்பேறி...!
பதிலுக்கு சப்தம் போட்டான் சந்தோஷ்...
என்னென்னவோ சேஷ்டைகள் செய்து பார்த்தும் பலன் கிடைக்காமல் போனதில் மொணமொணவென முணுமுணுத்த வண்ணம் முட்டியிரண்டும் தேய... மூச்சு வாங்கியபடி மேல் தளத்திற்கு வந்து சேர்ந்தான் மகேந்திரன்...
என்ஜினியர்காட்டிய வரைபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தோஷ் நாய் இளைப்பதைப் போன்ற சப்தத்தைக் கேட்டதும்...
பில்டிங் உச்சியிலே நாய் எப்படி வந்துச்சு...?
என்று வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் அதட்டினான்...
ம்ம்ம்... இப்படித்தான் வந்துச்சு...
இஸ்... இஸ்... என்ற இளைப்புடன் ஏறக்குறைய தவழ்ந்து வருகிறவனைப் போல முட்டியைப் பிடித்தபடி குரல் கொடுத்தான் மகேந்திரன்...
திரும்பிப் பார்த்த சந்தோஷிற்குச் சிரிப்புத் தாங்கவில்லை...
இஸ்... இஸ்ஸீன்னு சத்தம் கேட்டதும் நான் நாய்ன்னு நினைச்சுட்டேண்டா நண்பா...
சமாதானப் படுத்தினான்...
நினைப்ப... நினைப்ப... ஏன் நினைக்க மாட்ட...? எவரெஸ்ட் உச்சியில நின்னுக்கிட்டுக் கூப்பிட்டாலும் மலையேறி வர்றேனில்ல... நீ கூப்பிடத்தான் செய்வ...
கோவிச்சுக்காதேடா வக்கீலு...
அது உனக்கு ஞாபகமிருக்கா...?
இல்லாமத்தான் என் கம்பெனிக்கு உன்னை லீகல் அட்வைசராப் போட்டிருக்கேனா...?
அது ஒன்னு மட்டும்தான் நீ எனக்காக செய்த ஒரே நல்ல காரியம்...
சொச்சத்தையெல்லாம் எடுத்து விட்டா நீ தாங்க மாட்ட...
பேசியபடியே அங்கிருந்த சேர்களில் ஒன்றில் உட்கார்ந்த சந்தோஷ் கூடவே உட்காராமல் நின்று கொண்டிருந்த தோழனை வியப்புடன் பார்த்தான்...
இப்பத்தான் இஸ்ஸீ இஸ்ஸீன்னு இளைச்சுக்கிட்டே வந்து சேர்ந்த... முட்டி வலிக்குதுன்னா உட்கார வேண்டியதுதானேடா...? எதுக்காக நிக்கிற...? வேண்டுதலா...?
இப்படியொரு வேண்டுதலை கிறுக்கன்கூட வேண்ட மாட்டான்...
அப்படிங்கிற...? அதுவும் சரிதான்... அப்ப உக்காந்து தொலைக்க வேண்டியதுதானே...?
எங்கேடா உட்காரச் சொல்கிற...?
ம்ம்ம்... என் மடியில் உட்காரு... ஆளைப் பாரு... இத்தனை சேர்கள் இருக்கே... இதில ஏதாவது ஒன்னில உக்கார வேண்டியது தானே...?
இத்தனை சேர்கள் இருந்தும் உட்கார தோதுப்படலை சந்தோஷ்... நீ சொன்னதைப் போல உன் மடியில் உட்கார வேண்டியதுதான்... என் கனத்தை உன் மடி தாங்கும்... நம்ம ரெண்டு பேரோட கனத்தையும் சேர் தாங்குமா...?
மகேந்திரனின் கேள்வியில் மற்ற சேர்களைப் பார்த்தான் சந்தோஷ்... அனைத்திலும் கட்டிட வேலை சம்பந்தப்பட்ட சாமான்கள் குமிந்திருந்தன... என்ஜினியரை முறைத்தான்... அவன் அவசரமாக கட்டிட வேலை செய்து கொண்டிருந்தவர்களை அழைத்து சேர்களில் இருந்தவைகளை அப்புறப் படுத்தித் துடைத்து வைக்கச் சொன்னான்... சுத்தமான சேரில் உட்கார்ந்து காலைப் பிடித்துக் கொண்ட மகேந்திரன்...
உஷ்ஷ்... அப்பாடா...
என்றான்...
உன் அப்பாவை போன வாரம் பார்த்தேன்...
சந்தோஷ் சொன்னான்...
எங்கே பார்த்த...?
பீச் ரோட்டில ஜாகிங் போய்கிட்டு இருந்தார்... இந்த வயசிலயும் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கிறார்...! வாட் எ மேன்...! அவரோட மகன் நீ... இந்த பில்டிங் உச்சியை எவரெஸ்ட்டுன்னு சொல்லிக்கிட்டு முட்டியைப் பிடிக்கிற...
அவர் பேச்சை எடுக்காதே...
ஏண்டா...?
போனவாரம் வீட்டுக்குப் போனப்ப மனுசன் பாசமழையில என்னைக் குளிப்பாட்டினார்... என்னன்னு பாத்தா அன்னைக்கு ‘பாதர்ஸ் டே’யாம்...
நல்ல விசயம்தானே... அவரோட பாசத்தைக் காட்டியிருப்பாரு...
எப்படிக் காட்டறது...? அவர் பிளேட்டில இருக்கிற எச்சில் டிஷ்ஷை எடுத்து என் வாயில ஊட்டி விட்டு படுத்தி எடுக்கிறதுக்குப் பேர்தான் பாசமா...?
ஹா... ஹா... வாயில வைச்ச எச்சில் டிஷ்ஷை என்ன செய்த... துப்பிட்டயா...?
துப்பனும்னு நான் நினைக்கிறதுக்குள்ள, செம டேஸ்ட்டுன்னு என் நாக்கு நினைச்சிருச்சுடா மச்சான்... ஸோ...
ஸோ...?
என் தொண்டை டிஷ்ஷை முழுங்கித் தொலைச்சிருச்சு...
நீ இருக்கியே... ஹா... ஹா... சரி... அப்பாவுக்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கிக் கொடுத்தியா... நான் என்னோட டாடிக்கு இம்போர்டட் கார் வாங்கிக் கொடுத்தேன்...
நீ கொடுக்கலாம்டா... பிறந்ததில இருந்து உங்கப்பாவும் நீயும் பிரண்ட்ஸ் போலப் பழகறிங்க... நான் எங்கப்பாவை வருசம் பூரா உயிரை எடுத்துட்டு ‘பாதர்ஸ்டே’யில பாசத்தைப் பிழிஞ்சேன்னு வைய்யி... மனுசனுக்கு வர்ற வெறியில சோத்தில விசத்தை வைச்சாலும் வைச்சுருவாரு... அதான்... அடக்கி வாசிச்சுத் தப்பிச்சேன்...
என்னவோ செஞ்சு தொலை... இப்ப எதுக்கு வந்த...?
ஏன் வந்தேன்னு கேட்கறியா...? தலைவிதி...
இதை நான் சொல்லனும்...
வாழ்க்கை நடத்த வேலைன்னு ஒன்னு வேணும்னு உன் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில லீகல் அட்வைசரா குப்பை கொட்டறேன் பாரு... அதான் வந்து நிக்கறேன்...
அதுக்குக் கம்பெனிக்கிள்ல போகனும்...? நேற்று இப்படித்தான் ஒரு சைட் விசயமா லீகல் அட்வைசரை மீட் பண்ணுங்கன்னு சொன்னா... லீகல் அட்வைசரா...? நம்ம கம்பெனியில வொர்க் பண்றாங்களா...? யார் அதுன்னு என்ஜினியர் ரமேஷ் கேட்கிறான்... ஏண்டா ரெண்டு மாதத்துக்கு ஒரு தரமாவது கம்பெனிப் பக்கம் போயி உன் முகத்தை அடையாளம் காட்டிட்டு வரலாமில்ல... எல்லாத்துக்கும் உன் முகம் மறந்து போயிருச்சாம்...
காலம்டா... உன் கன்ட்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்குன்னு வாங்கிப் போடற லேண்டையெல்லாம் வில்லங்கம் புடிச்சவனுக கிட்டயிருந்து வாங்கிப் போட்டிரு... அவனுககூட மாரடிச்சுக் கரை சேறுறதே எனக்குப் பொழைப்பாப் போயிருச்சு... அப்புறம் எங்கே நான் கம்பெனிக்கு வந்து நான்தாண்டா லீகல் அட்வைசர், இதுதாண்டா என் மூஞ்சின்னு அடையாளம் காட்டறது...?
விடுடா... விடுடா... நீதான் கில்லாடி வக்கீலாச்சே... எவ்வளவு பெரிய வில்லங்கமா இருந்தாலும் சரி பண்ணி அதை லீகல் லேண்டாக்கிறதில கெட்டிக்காரனாச்சே...
இப்படிச் சொல்லியே கவிழ்த்திரு... சரி... சரி... இன்னைக்கு ஈவினிங் பார்ட்டி இருக்கு...
யாரோட பார்ட்டி...?
அடப்பாவி...! என் அடி மடியிலேயே கை வைக்கிறயேடா... என்னோட வருங்கால மாமனார் கொடுக்கிற பார்ட்டிடா... உன்னைக் கட்டாயம் கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்னு வாக்குக் கொடுத்திருக்கேண்டா மச்சான்... கவிழ்த்திராதே...
உன்னோட வருங்கால மாமனார் என்னை எதுக்குடா பார்க்கணும்...?
உன் பிரண்டுன்னு நான் சொன்னதினாலதான் போனாப் போகுதுன்னு பொண்ணு கொடுக்கச் சம்மதிச்சிருக்காரு... என்னையும் ஒருத்தி காதல் பண்ணி அவ அப்பனும் அதை ஒப்புக்கிட்டு பார்ட்டி கொடுத்து ‘அனௌஸ்’ பண்ணப் போறாங்கடா சந்தோஷ்... எனக்காக வந்து நில்லு...
ஆகட்டும்... உனக்காக வர்றேன்...
நண்பனின் வேண்டுகோளுக்காகத்தான் அந்தப் பார்ட்டிக்குப் போனான் சந்தோஷ்... பார்ட்டி நடக்கும் ஸ்டார் ஹோட்டலின் ஹாலில் நுழையும் போது எதிரில் வந்த பெண்ணின் மீது கவனகுறைவாக இடித்து விட்டான்... அது பெரிய இமாலயத் தவறு என்பதைப் போல அவள் பொங்கி வெடித்தாள்...
2
ஹேய்... மிஸ்டர்... வாட் இஸ் திஸ்...?
அதிமுக்கியமான ஜெர்மானியக் கம்பெனியொன்றின் ஒப்பந்தத்தைப் பற்றிச் சிந்தித்தபடி பார்ட்டி ஹாலில் நுழைந்து கொண்டிருந்த சந்தோஷ் அவன் செவிகளில் விழுந்த தேனினும் இனிய பெண்குரலில் ஜெர்மானிய ஒப்பந்தத்தை அம்போ என விட்டுவிட்டு...
‘இது யார்...?’
என்று அந்தப் பெண்ணை உன்னிப்பாக பார்த்து வைத்தான்... அந்தப் பார்வையில் இன்னும் கொஞ்சம் கடுப்பான அந்தப் பெண்...
கண்ட்ரி புரூட்...
என்று சத்தமாக திட்டி வைத்தாள்...
‘யாரந்த கண்ட்ரி புரூட்...?’ என்று சுற்று முற்றும் தேடிப் பார்த்தான் சந்தோஷ்...
ஸ்டார் ஹோட்டலின் பார்ட்டியில் ரேமண்ட் மாடல்கள் போல கோட், சூட் அணிந்த கண்ணியவான்களே எங்கும் தென்பட்டார்கள்... தார்ப்பாய்ச்சு வேட்டி கட்டிய பட்டிக்காட்டுக் கனவான்கள் தென்படவேயில்லை... ஆதலினால்...
நீங்க யாரைச் சொல்றீங்க...?
என்று சொன்னவளிடமே கேட்டு வைத்தான்.
திட்டினவளின் முகம் சிவந்தது நிச்சயமாய் வெட்கத்தினால் அல்ல... கோபத்தினால்