Malai Nerathu Mayakkam...
()
About this ebook
பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசுந்தரத்திற்கு வசுந்தராவின் அண்ணனான மாணிக்கம் தரும் பதிலடி என்ன? பார்த்திபன் வசுந்தராவிற்கு ஏற்பட்ட மன விரிசல் சரியாக்க ஆனந்தவள்ளி செய்த செயல்களையும், அன்பும், காதலும், அக்கறையும், கண்டிப்பும் கலந்த இந்த கதையை வாசித்து மகிழ்வோம்...
Read more from Muthulakshmi Raghavan
Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey... Rating: 5 out of 5 stars5/5Manam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Markazhi Paniyil..! Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Sollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Mounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Thanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsNenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsPoove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsKalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Santham Thantha Sontham Rating: 4 out of 5 stars4/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Malai Nerathu Mayakkam...
Related ebooks
Nizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsMellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsNila Soru Rating: 0 out of 5 stars0 ratingsThoduvaanam Rating: 3 out of 5 stars3/5Unnaivida Oru Urava..? Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Vandhal Mahalakshmiye... Rating: 2 out of 5 stars2/5Aasaiya... Kobama...? Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Pookolam Podavaa... Rating: 0 out of 5 stars0 ratingsNeeyedhaan En Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Vandha Nilavu Rating: 4 out of 5 stars4/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Anicha Malar...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Thaaiyin Mugamingu Nizhaladuthu... Rating: 5 out of 5 stars5/5Urave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Idhayathin Saalaram Rating: 3 out of 5 stars3/5Kalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Kanavugal Manathiley Malaruthey... Rating: 5 out of 5 stars5/5Uyire Unaithedi Rating: 4 out of 5 stars4/5Engey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Vaanam Vittu Vaa Nilavey Rating: 5 out of 5 stars5/5Yaarodu Yaaro... Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru... Rating: 4 out of 5 stars4/5Unakkenave... Ulaginile... Piranthavale... Rating: 3 out of 5 stars3/5
Reviews for Malai Nerathu Mayakkam...
0 ratings0 reviews
Book preview
Malai Nerathu Mayakkam... - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
மாலை நேரத்து மயக்கம்...
Malai Nerathu Mayakkam...
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
"ஆறோடும் மண்ணில்
எங்கும் நீரோடும்..."
வயல் பரப்பிலிருந்த ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது... அந்தப் பாட்டில் மயங்கியதைப் போல... நீர் ததும்பிய வயல்களில் நிமிர்ந்து நின்றிருந்த நாற்றுக்கள் தலை அசைத்துக் கொண்டிருந்தன... வயல் தண்ணீரில் ஒற்றைக் காலை உயர்த்தி தவம் செய்து கொண்டிருக்கும் முனிவரைப் போல நின்று கொண்டிருந்த நாரைகள்... இறக்கைகளை விரித்துப் பறந்தன... அதிகாலை குளிர்காற்று... வயல் வெளியின் ஈரப்பசையுடன் முகத்தில் வந்து மோத ஆனந்தமாக தண்ணீரை பாய்ச்சிக் கொண்டிருந்தார் மருதநாயகம்.
உழைத்து உரமேறிய உடல் அவரை நாற்பதைத் தொட்டவரென்று காட்டினாலும்... அவரின் வயது நாற்பதல்ல... ஐம்பத்தைந்து... அதை யாராலும் அனுமானிக்க முடியாது... உழைப்பாளிகளின் உடல் வலு அப்படிப்பட்டது. சீரான உடல்பயிற்சிக் கூடங்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அவர்களின் அன்றாட அலுவல்களே... ஆயிரம் உடற்பயிற்சிகளுக்குச் சமமானதாகும்.
காலையில் எழுந்து... மாடுகளுக்கு வைக்கோலைப் போட்டு தண்ணீரைக் காட்டிவிட்டு விலகி... ஊரைவிட்டு விலகி... தூரமாக தள்ளி இருக்கும் தோட்டத்தைத் தேடி ஒரு உழவன் செல்லும் போது... அங்கே நடைபயிற்சி ஆரம்பித்து விடுகிறது... வயலுக்கு அவன் தண்ணீரைப் பாய்ச்ச... குனிந்து நிமிரும்போது உடற்பயிற்சி ஆரம்பித்து விடுகிறது. இப்படி நாள் முழுவதும் உடலுக்கு வேலை கொடுக்கும் உழைப்பாளிகளுக்கு உடல் அழகும் இளமையும் தானாகவே வாய்க்கும். அதற்கு உடற்பயிற்சியென்று தனியாக அவர்களுக்கு எதற்கு...? அதை நகரத்தில் இருக்கும் மூளைக்கு வேலை கொடுக்கும்... சலவை மடிப்பு கலையாத உடுப்புக்காரர்கள்தான் மெனக்கெட வேண்டும்.
அதைப் போல கிராமத்தில் இருக்கும் பெண்... காலையில் எழுந்து வீட்டு வாசல் தெளிப்பதில் இருந்து நடைபயிற்சியை ஆரம்பிக்கிறாள். அவர்கள் வீட்டு விறகு அடுப்பின் புகைகூட அழகு நிலையத்தின் ஆவி பிடிக்கும் முறையாக மாறிப் போவதை அறியாத அப்பாவி கிராமத்துப் பெண்ணான அவளுக்கு இயற்கையான வனப்பு இயல்பாக முகத்திலும் உடலிலும் படிந்து விடுகின்றது.
மருதநாயகத்திற்காக காலை உணவை எடுத்துக் கொண்டு வந்திருந்த அவரின் மனைவி கற்பகமும் அப்படித்தான் இருந்தாள்.
அவருக்கேற்ற ஜோடியாக... முப்பதுகளில் இருப்பதைப் போலத் தோற்றமளித்தவளின் வயது நாற்பத்தேழு... அதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்... அப்படிப் பட்ட உடல்வாகு அவளுக்கு.
காலை உணவை கையிலிருந்த தூக்குவாளியில் பிடித்தபடி. ஒயிலாக வரப்பில் வந்து கொண்டிருந்த மனைவியின் அழகை ரசித்துப் பார்த்தார் மருதநாயகம்.
அதற்குள் அவரை சமீபித்துவிட்ட கற்பகம் அவர் பார்வையில் முகம் சிவந்தாள்.
எதுக்கு அப்படிப் பார்க்கறீங்க...? என் முகத்தில அப்படி என்ன எழுதி ஒட்டியிருக்கு...?
சிணுங்கியபடி... வரப்பில் அமர்ந்த மனைவியின் அருகே வந்து அமர்ந்து கொண்டார் மருதநாயகம். வரப்பின் ஓரமாக இருந்த வாய்க்காலில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் அவர்களின் கால்தொட்டு நனைத்து. ஓடிக் கொண்டிருந்தது.
என்ன எழுதி ஒட்டியிருக்கா...? என் பெண்டாட்டின்னு எழுதி ஒட்டியிருக்குடி...
போதும்... போதும்... மகனுக்கு கல்யாணம் பண்ணி மருமகளும் வீட்டுக்கு வந்தாச்சு... பேரப் புள்ளையையும் பார்த்தாச்சு... இந்த லட்சணத்திலே நேத்துத்தான் என் கழுத்தில் தாலியைக் கட்டியதைப்போல இந்தக் கொஞ்சு... கொஞ்ச வேணாம்...
யாருடி இவ... என் மகனுக்கு கல்யாணமாகி... பேரப்புள்ள வந்துட்டா... என் பொண்டாட்டியை நான் கொஞ்சக் கூடாதுன்னு எங்கேயாச்சும் சட்டமிருக்கா...?
சட்டம் போட்டுட்டாலும்... நீங்க... கேட்டுட்டுத்தா மறுவேலை பார்ப்பீங்க...
இதுக்கெல்லாம் எந்த சட்டமும் போட முடியாதுடி... போட்டா. செல்லும்படியும் ஆகாது... அது பாட்டுக்கு அது... இது பாட்டுக்கு இது...
மருதநாயகம் கண்சிமிட்ட... கற்பகம்... அவரை செல்லக் கோபத்துடன் முறைத்தபடி தூக்குவாளியைத் திறந்து... அதன் மூடியை அவர் கையில் கொடுத்தாள்.
தூக்கு வாலிக்குள் பூப்போன்ற இட்லிகளும்... சின்னக் கிண்ணத்தில் சட்னியும் அணி வகுத்திருந்தன...
கணவரின் கையிலிருந்த மூடியில் இட்லிகளை எடுத்து வைத்து... சட்னியை ஊற்றினாள் கற்பகம்... பசியோடு இருந்தவர். ஆவலாக சாப்பிட ஆரம்பிக்க... அதைப் பார்த்துக் கொண்டிருடிந்தவளின் மனதில் பரிவு வந்தது...
மெல்ல... விக்கிக்கப் போகுது... இங்கே யாரும் உங்க சாப்பாட்டைப் பிடுங்கி சாப்பிடமாட்டாங்க... மெதுவாத்தான் சாப்பிடுங்களேன்...
பசிடி... சாப்பாட்டில் எல்லாம் நிதானம் இருக்கக் கூடாது. கண்ணு பார்த்தா... கைய்யி உடனே அதை காலி செய்யணும்... நீ சட்னியைக் கொட்டு...
அவர் இரண்டே நிமிடத்தில் இட்லிகளை காலி செய்துவிட்டு ஏப்பம் விட்டார்... ஓடிக் கொண்டிருந்த வாய்க்கால் தண்ணியில்... பாத்திரத்தைக் கழுவி... அதை வயல்வரப்பில் காய வைத்துவிட்டு விச்ராந்தியாய் அமர்ந்தாள் கற்பகம்.
வாய்க்கால் நீரை இரண்டு கைகளாலும் அள்ளிப் பருகி தாகம் தணித்துக் கொண்ட பின்னர் உண்ட களைப்பு நீங்க...
உஸ்ஸ்... அப்பாடா...
என்றபடி... மனைவிக்கு அருகில் அமர்ந்து கொண்டார் மருதநாயகம்.
அவர் சொல்லிய விதத்தைக் கண்டு வாய்விட்டுச் சிரித்த கற்பகத்தை... புருவங்களை உயர்த்தி... பார்வையிலேயே ஏனென்று கேட்டார் மருதநாயகம்.
என்னமோ வெட்டி முறிச்சதைப் போல இல்ல... உஸ்ஸ் அப்பாடான்னு... இந்த மூச்சுவிடறீங்க...
வெட்டி முறிச்சாக்கூட இந்த அலுப்பு வராதுடி கற்பகம்... அது என்னவோ... வயத்துக்குள்ள சாப்பாட்டைப் போட்டுட்டா மனுசனுக்கு... அப்படியொரு அலுப்புக் கழுதை... உடம்பு மேல ஏறி உட்கார்ந்துக்குது...
அவர் வயல் வரப்பில் வாகாக சாய்ந்து கொள்ள... கற்பகம் சிந்தனையோடு நாற்றுக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எந்தக் கோட்டையைப் பிடிக்க... இம்புட்டுத் தூரத்துக்கு யோசனை பண்ணுகிறவ...?
மருதநாயகத்தின் கேள்வியைக் கேட்டதும் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தவளின் முகத்தில் துயரத்தின் நிழல் லேசாகப் படிந்திருந்தது.
மருதநாயகத்தின் நெற்றியில் சுருக்கம் விழுந்தது.
என்னடி... என்னன்னு சொல்லு...
என்று அதட்டினார்.
நம்ம வசுந்தராவை நினைச்சுப் பார்த்தேன்...
அவள் குரல் கம்மியது...
மருதநாயகத்தின் முகத்திலிருந்த ஒளிர்வு அகன்று அவர் முகத்தில் இருளின் போர்வை கவிந்தது... அவர் பேசவில்லை... மௌனமானார்...
கணவரின் மௌனத்தைக் கண்ட கற்பகத்தின் விழிகளில் கோபத்தின் சாயல் படிந்தது.
பேசமாட்டீங்களே... இப்ப மட்டும் வாயடைச்சுப் போயிருமே... இம்புட்டு நேரமும் உணக்கையாய் பேசின மனுசனுக்கு... மகளைப் பத்திப் பேசினா மட்டும்... பேச்சு தொலைஞ்சு போகுது... இந்தக் கொடுமையை நான் எங்கிட்டுப் போய்ச் சொல்ல...?
மனைவியின் குத்தல் பேச்சில் இருந்த நியாயத்தில் குற்ற உணர்வு கொண்டார் மருதநாயகம். மெதுவாக மௌனத்திரையை விலக்கவும் செய்தார்.
என்னை என்னதாண்டி செய்யச் சொல்கிற...?
இதைச் சொல்கிறது என் புருசன்தானா? எனக்கே என் காதுகளை நம்ப முடியலைங்க... பெத்த மகளைப் பத்திப் பேசினா... என்ன பண்ணச் சொல்றன்னு எதிர்கேள்வி கேட்கறீங்களே... இது உங்களுக்கே நியாயமாய் இருக்கா...?
இல்லதான். அதுக்காக... கண்ணுக்கு முன்னாலேயே இருக்கிற பாதையில்... கண்ணாடிச் சில்லும்... முள்ளும் நிறைஞ்சு கிடக்கிறப்போ... காலில் செருப்பில்லாம அதில் இறங்கி நடக்க முடியுமாடி?
வேற என்னதான் வழி...?
அதை நான் சொல்லுவேன். நீ கேட்டுக்குவியா...?
நான் கேட்டுக்கிறது இருக்கட்டும்... அதை நீங்களே உங்க வாயாலே வசுந்தாரா கிட்டச் சொல்லிற வேண்டியது தானே. ஊடாலே நான் எதுக்கு...?
என்னாலே அது முடியுமாடி...?
என்னாலே மட்டும் அது முடியுமா...?
என்னதாண்டி சொல்ல வர்ற...?
இந்த வேலையை எந்தலையில் சுமத்தாதீங்க சாமின்னு சொல்றேன்... நீங்களும்... உங்க மகனும் ஆடுற ஆடு புலி ஆட்டத்துக்கு நான் வரலை... உங்க சொந்தப் பகைக்காக... நாம பெத்த மக... சந்தோசமில்லாம நிற்கிறா... என் கண்ணுக்கு அது மட்டும்தான் தெரியுது...
கற்பகத்தின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளி உருண்டோடி... வாய்க்கால் நீரில் விழுந்து கரைந்தது...
2
கற்பகத்தின் கண்களில் கண்ணீர் வருமளவிற்கு மருதநாயகம் அவளுடன் குடும்பம் நடத்தியதில்லை. அவர் ஒரு முழுமையான ஆண்மகன்... அவரை நம்பி வந்த பெண்ணின் கண்களில் சிறு கலக்கம்கூட இல்லாமல் பார்த்துக் கொண்ட காதல் கணவன்.
இன்று அவர் கண் முன்னாலேயே அவரின் காதல் மனைவி விழிநீரைச் சிந்துகிறாள்... அதைப் பார்த்துக் கொண்டிருந்தும் அதைத் துடைத்துவிட இயலாத இயலாமையோடு மருதநாயகம் பெருமூச்சுவிட்டார்...
என் மக கதி இப்படியா போகணும்...?
கற்பகம் பொருமினாள்...
அவ கதிக்கென்ன குறைச்சல் கற்பகம்... அவளைக் கண்ணுக்குள்ள வைத்துப் பார்த்துக்கிற பெத்தவங்களா நாம இல்லையா...? இல்லை... கூடப் பிறந்தவளுக்காக உயிரையே கொடுக்கத் துணிகிற அவளோட அண்ணனில்லையா...?
இருந்தும் என்ன பிரயோசனம்...? என் மக கூடப் படிச்சு குமரிப் பொண்ணுக எல்லாம் கல்யாணம் பண்ணிக் கிட்டு... கையில ஒன்னும்... வயித்துல ஒன்னுமா நிற்கையிலே... என் மக மட்டும் இன்னும் நம்ம மகளா நம்ம வீட்டிலேயே கிடக்கிறோ...
அதுக்கு யாரு காரணம் கற்பகம்...?
நீங்களும்... உங்க மகனும்தான் காரணம்...
"ஏண்டி... அவன் உனக்கு மகனில்லையா...? நம்ம மகளுக்கு அண்ணனில்லையா...? கற்பகம்... அவன் அவனோட தங்கச்சிக்காக உசிரைக் கொடுப்பாண்டி... மானத்தைக் கொடுடான்னு சொன்னா... அது எந்த வகையில நியாயம்டி...? இதை