Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thalattum Poongatru...
Thalattum Poongatru...
Thalattum Poongatru...
Ebook291 pages2 hours

Thalattum Poongatru...

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

அன்பு கொண்ட தாத்தாவின் ஆசைக்குக் கட்டுப்பட்டு வாழக்கையில் இணையும் இளையவர்களைப் பற்றிய கதை...வாழ்வில் இணைந்தவர்கள் காதலிலும் இணைவார்களா....?

Languageதமிழ்
Release dateJun 19, 2020
ISBN6580134205574
Thalattum Poongatru...

Read more from Viji Prabu

Related to Thalattum Poongatru...

Related ebooks

Reviews for Thalattum Poongatru...

Rating: 3.6363636363636362 out of 5 stars
3.5/5

11 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thalattum Poongatru... - Viji Prabu

    http://www.pustaka.co.in

    தாலாட்டும் பூங்காற்று...

    Thalattum Poongatru...

    Author:

    விஜி பிரபு

    Viji Prabu

    For more books

    http://www.pustaka.co.in/home/author/viji-prabu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    ஓம் வாசுதேவாய நமஹ....

    மந்திரம் ஓதியபடி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அய்யரைவிட... அதிகமான பக்தியுடன் கரம் குவித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தாள் வானதி...

    கற்பூரம் தொட்டுக்க குழந்தே...

    வானதியிடம் கற்பூர தட்டினை நீட்டிய அய்யரின் முகம் கனிந்திருந்தது...

    நீ வந்து பூஜை சாமானை விலக்கி கொடுத்தால்தான் நேக்கு பூஜை பண்ணின திருப்தியே கிடைக்கறது... நீ ஷேமமா இருக்கணும்...

    அய்யரின் கரம் ஆசிர்வாதமாக வானதியின் தலையில் பதிய... புன்னகையுடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள் வானதி...

    என்னோட சாமிக்கு என்னால முடிஞ்சதை செய்யறேன் இதுக்கு எதுக்கு இந்த பாராட்டெல்லாம்...

    புன் சிரிப்பும் அமைதியுமாக கூறியவள்... மீண்டும் ஒருமுறை கர்ப்பகிருகத்தில் உள்ள பெருமாளை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட... செல்லும் அவளை சிரிப்புடன் பார்த்தவாறு மற்ற பக்தர்களை கவனிக்க தொடங்கினார் அவர்...

    என்னம்மா... உன் காலை கைங்கரியமெல்லாம் முடிஞ்சதா...? வா வா... உங்கம்மா இப்பதான் காபின்ற பேருல ஒரு கருப்பு தண்ணிய குடுத்துட்டு போனா... நீயும் போய் வாங்கி குடி...

    கையில் காபி டம்ளருடன் வாசற்படி திண்ணையில் அமர்ந்திருந்த அறுமுகம் குறும்புடன் கூறியதை கேட்டு... வேகமாக வீட்டிலிருந்து வெளிவந்தாள் கலாராணி...

    அவ்வளவு சலிப்பாக நான் போட்ட காபியை யாரும் குடிக்க வேண்டியது இல்ல... அதை அப்படியே என்கிட்ட குடுத்துட்டு... உங்க மகளையே போய் காபி போட்டு கொண்டார சொல்லுங்க...

    நம்ம பிரச்சினைல என் பொண்ண எதுக்காக இழுக்கற கலா... நான் இப்ப என்ன சொல்லிட்டேன்... காபி ரொம்ப நல்ல்லா இருக்குடா... நீயும் போய் குடின்னு என் மககிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்...

    ம்...ம்... எங்களுக்கும் எல்லாம் கேட்டுச்சு... இவரு என்னை பாராட்டினாராம்...! அத இவங்க ஆமோதிச்சாகளாம்...! ஒரு நிமிசத்துல உங்க அப்பா எப்படி பிளேட்டை மாத்திப்போடரார் பாரு வானதி...! சரியான ஆளுதான் போ...!

    அதுதான் உங்களுக்கே தெரியுதுல்ல... எங்கப்பா தான் உங்களுக்கு சரியான ஆளுன்னு...? அப்புறம் எதுக்காக அவர்மேல கோபப்படுற மாதிரி ஆக்டிக் கொடுக்கறீங்கம்மா...?

    கொதிப்புடன் கேட்ட அன்னையிடம் கொஞ்சலாக கூறியவாற சலுகையுடன் தந்தையின் தோள்வளைவில் கை கொடுத்து அணைத்தவாறு அமர்ந்து கொண்ட மகளை பார்த்து அதிசயிப்பவளாக கன்னத்தில் கைவைத்து நின்று விட்டாள் கலாராணி...

    விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும்கிறது சரியாத்தான் இருக்கு...! உங்கப்பாவை விட நீ புத்திசாலியாத்தான் இருக்க...! கடைசியில நான்தான் கேணச்சியாப் போயிட்டேனா...!

    கடைசியில இல்ல கலாராணி... ஆரம்பத்துல இருந்தே நீ அப்படித்தானே...!

    என்ன சொன்னீங்க...?

    நக்கலாக கூறிய கணவனை கலாராணி முறைத்து பார்த்த விதத்தில்... ஒரு நமுட்டும் சிரிப்புடன் ஆறுமுகம் அங்கிருந்து எகேப் ஆகிவிட... தானும் மெல்ல அங்கிருந்து நழுவ தொடங்கிய மகளின் கரம்பற்றி அவளை தடுத்து நிறுத்தினாள் கலாராணி...

    நீ எங்க போற...? காலையில இருந்து ஒண்ணுமே குடிக்காம கொலை பட்டினியாக இருக்க... உள்ள வந்து ஒரு வாய் காபித்தண்ணி குடிச்சுட்டு அப்புறமாக எங்க வேணும்னாலும் போ...

    இல்லம்மா... இப்ப எதுவும் வேண்டாம்... பெரிய வீட்டுல தாத்தா எனக்காக காத்திருப்பாரும்மா... நான் போய் அவர பார்த்துட்டு வந்து சாப்பாடே சாப்பிடுக்கறேன்...

    சொல்லுற பேச்சை கேளு வானதி... இம்புட்டு நேரம் காத்திருந்த மனுசன் இன்னும் கொஞ்சநேரம் காத்திருக்க மாட்டாரா... வா கண்ணு... வந்து ஒரு வாய் காபி குடிச்சுட்டு போம்மா...

    கலாராணி கெஞ்சுதலாக கூறியதைக் கேட்ட வானதி அரைமனதாக தலையசைக்க... நிம்மதியுடன் திரும்பி வீட்டிற்குள் விரைந்தாள் கலாரணி...

    பெரிய வீட்டுக்காரர் என்றழைக்கப்படும் துளசிராமன்... உண்மையிலேயே அந்த ஊரிலேயே பெரிதாக இருக்கும் வீட்டிற்கு சொந்தக்காரர் ஆவார்...

    வீட்டில் மட்டுமல்லாது... சொத்து பத்துக்களிலும் அனைவரைவிடவும் அவரே முதன்மையானவராக இருந்த காரணத்தினால்... அந்த மஞ்சம்பட்டி கிராமமே அவர்மீது மதிப்பு கொண்டிருந்தது...

    மகன்... மருமகள்... பேரன்... பேத்தி... வீடு நிறைந்த வேலையாட்கள்... உத்தரவிற்கு காத்திருக்கும் பண்ணையாட்கள் என எத்தனையோ பேர் சுற்றியிருந்தாலும்... வானதியின் மீது தனியானதொரு அன்பு கொண்டிருப்பவர் அவர்...

    இன்று... நேற்றல்ல... வானதி ஓரளவிற்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே அவர்களுக்குள் உருவாகி இருந்த பந்தம் அது...

    துளசிராமிற்கு சொந்தமான அரிசி மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சாதாரண கூலி தொழிலாளியா ஆறுமுகம் வேலைபார்த்து கொண்டிருந்த காலத்தில் இருந்து உருவான அன்புச் சங்கிலியானது...

    இன்று சின்னஞ்சிறிய அரிசி மில்... ஐந்து ஏக்கர் நிலம்... தனக்கென சொந்தமாக வீடு... என ஓரளவிற்கு ஆறுமுகம் முன்னேறியிருந்த நேரத்திலும் உறுதியாக தொடர்ந்து கொண்டிருக்கிறது...

    ஆறுமுகத்தின் ஓவ்வொரு முன்னேற்றத்திற்கும் பின்புலமாக துளசிராம் இருந்த காரணத்தினால்... அவரைப் பொறுத்தவரையில் துளசிராம் ஆறுமுகத்தின் குரு...

    துளசிராமின் பேச்சிற்கு எதிர் பேச்சு பேசாமல்... வாழ்வில் எத்தனை உயரத்திற்கு போனாலும் பழைய பணிவினை மறக்காத ஆறுமுகத்தின் மகளான வானதியிடம் அளவிற்கதிகமான அன்பு கொண்டிருந்தார் அவர்...

    வந்துட்டியா வானதி...! இன்னும் வானதி வரலையா... வரலையான்னு ஒரு நூறு தடவை கேட்டுவிட்டாரு உன் தாத்தா... அப்படி என்னதான் மாயம் பண்ணிவெச் சிருக்கியோ போ...

    வானதி வீட்டினுள் நுழையும் முன்பாக... மிகப்பெரும் நிம்மதி கொண்டவளாக அவளை வரவேற்றாள் மகாலெட்சுமி...

    துளசிராமின் மனைவியான அவளது குரலில் தெரிந்த சலிப்பிற்கு மாறாக... வானதியை கண்டவுடன் மலர்ந்த அவளது முகமே அவளது வரவினை தானும் எதிர்பார்த்திருந்ததை உணர்த்த... அதனை உணர்ந்தவளாக புன்னகையுடன் மாடிப்படிகளை வேகமாக கடந்து செல்ல தொடங்கினாள் வானதி...

    அங்கேயே நில்லு... உள்ள வராத... மகா... மகா... இந்த பொண்ண ரூமுக்குள்ள விடாத...

    ஏன்... ஏன்... தாத்தா...

    அது அப்படித்தான்... உள்ள வராதன்னா... வராத...

    நானும் அப்படித்தான் வருவேன்...

    வர வர இந்த வீட்டில என் பேச்சுக்கு மதிப்பில்லாம போச்சு... வயசாகி போச்சுல்ல... அதான்... எல்லாருக்கும் நான் ரெண்டாம்பச்சமாக போயிட்டேன்...

    தாத்தா... ப்ளீ... அப்படி பேசாதீங்க...

    நோய்வாய்ப்பட்ட நிலையில்... நடை குறைந்து... படுக்கையில் கிடந்த துளசிராம்... தன் நிலையை எண்ணிய கழிவிரக்கத்துடன் கூறியதைக் கேட்ட வானதியின் விழிகளில் கண்ணீர் படர்ந்து விட... வேகமாகச் சென்று பெரியவரின் அருகில் அமர்ந்து கெஞ்சுதலாக அவரது கரத்தினை பற்றிக் கொண்டாள் வானதி...

    கோவிலில் லேட்டாகிவிட்டது தாத்தா... அதனால தான் இன்னிக்கு இங்க வரதுக்கும் லேட்... எனக்கு எப்பவுமே நீங்க... நீங்க மட்டும்தான் பெசல் என்று உங்களுக்கு தெரியாதா...? எங்கப்பாகூட உங்களுக்கு அப்புறம்தான்...

    ஸாரிடா... விடு... வயசாகிருச்சுல்ல... அதான்... இப்படி சட்டுசட்டுன்னு டென்சன் ஆகிடறேன் போல... ஒருவேளை பிபி வந்துருக்குமோ...?

    எதுக்கு சந்தேகம்... டெட் பண்ணி பார்த்துட்டா போச்சு.... அதுசரி.... நீங்க இன்னமும் எதுவுமே சாப்பிடலையாமே... பாட்டி சொன்னாங்க... ஏன் தாத்தா இப்படி இருக்கீங்க...

    கிழவி அதுக்குள்ள வத்தி வெச்சுட்டாளா...?

    ம்ம்... இப்ப அவங்களை திட்ட போறீங்களா...? போதும் தாத்தா... உங்க உடம்பை பத்தின கவலை அவங்களுக்கும் இருக்காதா... நீங்க இப்படி எதுவும் குடிக்காம இருந்தா... அவங்க கவலைபட மாட்டாங்களா...

    உனக்கு தெரியாது வானதி... அந்த கிழவி என்னை பத்தின நினைப்புல இப்பல்லாம் சரியா சாப்பிடாம... தூங்காம கிடக்கிறா... அதை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு...

    நான் பார்த்துக்கறேன் தாத்தா... நீங்க அமைதியா இருங்க...

    ஒரு குழந்தையாக வானதியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாகி விட்டவளுக்கு தேவையான பணிவிடைகளை செய்து முடித்து விட்டு... வானதி திரும்புவதற்குள்ளாக...

    ஒரு பெரிய டிரேயுடன் மருமகள் பின்தொடர அறைக்குள் வந்து நின்றாள் மகாலெட்சுமி...

    ஓட் கஞ்சியும்.... பிரெட்டும் கொண்டு வந்திருக்கேன் வானதி... காலை சாப்பாடு சரிதான...?

    ம்ம்... சரிதான் பாட்டி... ஆனா... இதெல்லாம் தாத்தாவுக்குத்தான்... நீங்க தாத்தா மாதிரியே சாப்பிடணும்னு அவசியம் இல்ல... கண்டிப்பாக நார்மல் டயட் எடுத்துக்கணும்...

    இல்லடா... அவர் சாப்பிடாத சாப்பாடு... எனக்கெதுக்கு...

    தாத்தாவை நல்லபடியாக பார்த்துக்க உங்க உடம்பில தெம்பு வேணும் இல்லையா... அதுக்காகத்தான்... இதை என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போய் சாப்பிட்டுவிட்டு வாங்க பாட்டி... தாத்தாவை நான் சாப்பிட வைக்கறேன்...

    இல்லடா வாணி... நான் அப்புறமாக...

    அவதான் சொல்றால்ல அத்த... நீங்க வந்து சாப்பிடுங்க... வாங்க...

    கணவரை பார்த்து தயங்கி நின்ற மாமியாரை ஆறுதலாக அணைத்த நிலையில் காயத்ரி அழைத்துச் செல்ல... செல்லும் மனைவியை பார்த்து கண் கலங்கிய துளசிராமை... கொஞ்சலாக முறைத்தவாறு அவளுக்கான சாப்பாட்டினை பூனினால் அள்ளி ஊட்ட தொடங்கினாள் வானதி...

    2

    பலதரப்பட்ட மனிதர்கள் அவரவர்களின் தரத்திற்கேற்றவாறு ஒரு கோடி முதல்... ஒரு லட்சம் வரையிலான கார்களிலும்... சில லட்சம் முதல் பல ஆயிரம் ரூபாய் வரையிலான மோட்டார் சைக்கிளிலும்... அந்த பெரிய சாலையை அடைத்து... ஒருவரையொருவர் முந்திச் செல்லும் வேகத்துடன் பறந்து கொண்டிருந்தனர்...

    ஆபீ போக இன்னும் டைம் இருக்குடா பிரதீப்... இப்ப எதுக்காக இப்படி பறந்துகிட்டு போற... கொஞ்சம் லோவாக போடா... எனக்கு பீதியில வயித்த கலக்குதுடா...

    கிட்டத்தட்ட பல லட்சங்களை தனதாக்கிக் கொண்டிருந்த அந்த படகுக் காரினை டைலாக செலுத்திக் கொண்டிருந்த பிரதீப்... அவனருகில் அமர்ந்து பயத்துடன் அலறிக் கொண்டிருந்த நண்பனை பார்த்த பார்வையில் அலட்சியம் இருந்தது.

    உனக்கெல்லாம் எங்க அப்பா ஓட்டுகிற பழைய அம்பாசிடர் கார்தான் லாயக்கு வசந்தா... உன்னைப் போய் என்னோட வோல்க்வேகன் காரில் ஏத்திக்கிட்டு போகிறேனே... என்னைச் சொல்லணும்டா...

    நீ உன்னை மட்டும் இல்ல... உன் பரம்பரையையே கூட நல்லா நல்லா திட்டிக்க நண்பா... ஆனா எதை செய்வதாக இருந்தாலும் தயவு செய்து ரோட்டை பார்த்து ஓட்டிக்கிட்டே செய்யுடா... உன் வோல்க்வேகன் காரோட பெருமையை கேட்பதற்காக என்னால உயிரையெல்லாம் தியாகம் பண்ண முடியாதுப்பா...

    டேய்... ஏண்டா இப்படி பயந்து நடுங்கி என் மானத்த வாங்குற... உன்னையெல்லாம்...

    ஐயோ... ஐயய்யோ... டேய்... ரோட்டை பாரு... ரோட்டை பாரு...

    கோபத்துடன் தன்புறமாக திரும்பிய நண்பனின் தலையை அலறியடித்தவாறு தன் இரண்டு கைகளாலும் பிடித்து... ரோட்டின் புறமாக வசந்தன் திருப்புவதற்குள்ளாக எதிர்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள்காரன்... ஜட் மிஸிங்... அவர்களது காரில் அடிபடாமல்... அதைப் பற்றி உணராதவனாக பறந்து சென்றதைக் கண்டு படபடத்த நெஞ்சினை கைகளால் அழுத்தியவாறு சீட்டில் அமர்ந்து பெருமூச்சு விட்ட வசந்தனை கண்டு வாய்விட்டு சிரிக்க தொடங்கினான் பிரதீப்...

    சிரி மச்சான்... நீ சிரி... நான் எதுவும் பேசுவதாக இல்லை... இன்னிக்கு நீ ஒரு குறிக்கோளோட கிளம்பியிருக்கிறது கன்பர்ம் ஆகிவிட்டது... ஆத்தா... மகமாயி... இருந்திருந்து இந்த மாதிரி ஒரு பிரண்ட எனக்கு கொடுக்கிற அளவுக்கு நான் என்னம்மா தப்பு பண்ணினேன்...

    டேய்... நீ என்கிட்ட உதைதான் வாங்க போற...

    கண்டிப்பா வாங்கிக்கறேன் மச்சான்... ஆனா... எதை செய்வதாக இருந்தாலும் ஆபீ போன பின்னால பார்த்துக்கலாம்... ஓகேவா...

    ஆபீ போன பின்னாலயா...! ஆபீ போனதுக்கப்புறம் உன்னை எதுக்குடா நான் கண்டுக்க போறேன்... ஐ வில் பி பிஸி... யூ நோ...?

    யெ யுவர் ஆனர்... ஆல் டீடெயில் ஐ நோ... ஸோ... யு புரொசீட்...

    பிரதீப்பை பற்றி நன்கு அறிந்தவனாக... வசந்தன் வாய் மேல் கை வைத்து அமைதியாக அமர்ந்துவிட... பொங்கி வந்த சிரிப்புடன் காரை ஓட்ட தொடங்கிய நண்பனை பார்த்த வசந்தனின் பார்வையில் ரசனை தெரிந்தது...

    அலையலையாக காற்றில் பறக்கும் அடர்ந்த சிகையுடன்... அலைபாயும் கண்களுடன் நேர் கொண்ட நாசியும்... அழகிய உதடுகளில் தவழும் வசீகர புன்னகையுமாக... சிவப்பாக... உயரமாக... அழகாக இருக்கும் நண்பனின் தோற்றத்தை பார்த்த வசந்தனின் முகத்தில் நட்பு கலந்த புன்முறுவல் தோன்றியது...

    அளவற்ற செல்வத்தை கொண்ட துளசிராமின் பேரனான பிரதீப்பை சிறு வயது முதலாக அறிந்தவன் வசந்தன்...

    ஐந்தாம் வகுப்பு தோழனாக அறிமுகமான பிரதீப்புடன்... அன்று முதல் இன்று வரையிலும்... நட்பு மாறாமல் வளர்ந்து வந்திருந்தவனுக்கு பிரதீப்பின் அத்தனை குணாதிசயங்களும் அத்துப்படி ஆகியிருந்தது...

    செல்வத்தில் பிறந்து... செல்வத்துடன் வளர்ந்திருந்தவனுக்கு... அனைத்தும் விளையாட்டாக... இருக்க... எந்தக் கவலையும் இல்லாமல் விட்டு விடுதலையான சிட்டுக் குருவியாக வாழ்க்கையை ரசனையுடன் வாழும் நண்பனை வசந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது...

    இப்ப எதுக்காக இப்படி அறக்க பறக்க ஓடுற பிரதீப்... உண்மையை சொல்லு... நீ இப்படி எல்லாம் கரெக்ட் டயத்துக்கு முன்னால ஆபீசுக்கு ஓடுற ஆள் இல்லையே...! எங்கேயோ இடிக்குதேடா...

    நண்பனை நன்கு அறிந்தவனாக வசந்தன் சந்தேகமாக கேட்க... தன்னை அவன் அறிந்து கொண்டு விட்டான் என்கிற எண்ணத்துடன் குறும்பாக கண்சிமிட்டி சிரித்தான் பிரதீப்...

    ம்ஹீம்... என்னமோ இருக்கு... உன் சிரிப்பே சரியில்ல... என்ன மேட்டர் பிரதீப்...

    நடாஷா...!!

    வாட்...! ஓஹோன்னானா...! அப்படி போகுதா விசயம்... டேய் பிரதீப்பு... என்ஜாய் மச்சான்...

    தேங்க்யூ....

    சற்றும் பொறாமையின்றி நண்பனை கலாய்த்த வசந்தனின் குணத்தை கண்டு பெருமிதம் கொண்டவனாக... டியரிங்கை பிடித்திருந்த கையை விலக்கி... வசந்தனின் தோளினை பிரதீப் நட்புடன் பற்ற முயல... அலறியடித்தபடி அந்த கையினை பற்றி மீண்டும் டியரிங்கின் மேல் வைத்து விட்டான் வசந்தன்...

    எது பேசுவதாக இருந்தாலும்... கவனத்தை டிரைவிங்கில் வைத்துக் கொண்டே பேசுவோம் நண்பா... நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதை ஞாபகத்தில வெச்சுக்கடா... ப்ளீ...

    ஏய்... ச்சீ... சரியான பயந்தாங்கொள்ளிடா நீ...

    இருக்கட்டும்... இப்ப அதனால உனக்கெந்த பிரச்சினையும் இல்லையில்ல...? நீ நடாஷா மேட்டருக்கு வா...

    தனக்கேயுரிய விளையாட்டுத்தனத்துடன் கூறினான் வசந்தன்...

    நடாஷா... சில தினங்களுக்கு முன்பாகத்தான் அவர்களது ஆபீசில் வேலைக்கு சேர்ந்திருந்த அந்த அழகு சிலையின்... ம்ஹீம்... கவர்ச்சிப் புயலின்... பின்னால் அந்த ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அத்தனை ஆண்களும் அலைந்து கொண்டிருந்தார்கள்...

    அப்படிப்பட்ட நடாஷாவின் பார்வை பிரதீப்பின் மீது விழுந்திருப்பது வசந்தனுக்கு வியப்பாக தெரிய வில்லைதான்...

    ஏனென்றால்... பணம்... செல்வாக்கு... வசீகரம்... இவற்றின் ஒட்டு மொத்த கலவையாக இருந்த பிரதீப்... அறிவிலும் கெட்டிக்காரனாக இருப்பதினால்... எப்படிப்பட்ட அழகிக்கும் அவனை பிடித்து விடும் என்பது வசந்தனுக்கு தெரியும்...

    ஆனால்... ஒரு நண்பனாக... பிரதீப்பின் எண்ணவோட்டத்தினை நன்கு அறிந்தவனாக... அவனுக்கு நடாஷவின் மீது ஈர்ப்பு வந்திருப்பதை கண்டுதான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான் வசந்தன்...

    "ஒரு மாலை இளவெயில் நேரம்…

    அழகான இலையுதிர்க் காலம்…

    சற்றுத் தொலைவினில் அவள் முகம் பார்த்தேன்....

    அங்கே தொலைந்தவன் நானே...."

    வசந்தனின் வியந்த பார்வைக்கு பதிலாக... அழகாக பிரதிப் பாடிக் காட்ட... தன் பயத்தையும் மறந்தவனாக பிரதீபின் முதுகில் கடுப்பாக ஒரு அடியை வைத்தான் வசந்தன்...

    ... இப்ப எதுக்குடா இப்படி அடிக்கிற...? டிரைவிங்ல நான் கான்சன்ட்ரேட் பண்ண வேண்டாமா...

    வலியினால் முகம் சுளித்து வினவிய பிரதீப்பின் கண்முன் தன் ஒற்றை விரலை எச்சரிக்கையாக ஆட்டிக் காட்டி... அவனை அடக்கினான் வசந்தன்...

    கொன்னுருவேன் பார்த்துக்க... டிரைவிங்ல உன் கவனம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை நீ காரோட்ட கத்துக்கிட்ட நாளில் இருந்து பார்த்தவன் நானு... ஒழுங்கா விசயத்துக்கு வா... எப்ப இருந்து இந்த நடாஷா மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு...? ஏன் அத என்கிட்ட மறைச்ச...

    அதான் பாடியே காட்டினேனே மச்சான்...

    "டேய்... டேய்... நீயெல்லாம் பல மாலை இளவெயிலை கலர்கலராக பார்த்தவன்னு எனக்கு தெரியும்டா... என்கிட்டயேவா...!

    Enjoying the preview?
    Page 1 of 1