Markazhi Paniyil..!
()
About this ebook
வருண் உத்ரா இவர்கள் இருவரின் காதலையும் ஏற்றுக் கொள்ளாத, உத்ராவின் பெற்றோர் முதலில் எதிர்பை தெரிவித்தாலும் பிறகு சம்மதம் தெரிவிக்கின்றனர். இவர்கள் சம்மதம் தெரிவித்ததின் காரணம் என்ன? வருண் உத்ரா இவர்கள் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? அந்த மார்கழிப் பனியில் தொடங்கிய வருண் உத்ராவின் காதல், இடர்கள் பலவற்றைக் கடந்து வெற்றி கண்டதா? வாசிப்போம்...
Read more from Muthulakshmi Raghavan
Kothikkum Panithuli..! Rating: 4 out of 5 stars4/5Kandalum Pothum Kangal Rating: 5 out of 5 stars5/5Puram Solla Virumbu Rating: 4 out of 5 stars4/5January Maatham Kanavugal Pookkum Rating: 4 out of 5 stars4/5Uzhavan Magal..! Rating: 5 out of 5 stars5/5En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Nee Engey... Rating: 5 out of 5 stars5/5Mellisaiyaai Oru Kaadhal... Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean Rating: 3 out of 5 stars3/5Malai Nerathu Mayakkam... Rating: 0 out of 5 stars0 ratingsManam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Nilavodu Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThanjamena Vanthavaley Rating: 1 out of 5 stars1/5Mounamana Neram... Rating: 4 out of 5 stars4/5Kuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Nenjathiley Nee Netru Vandhai Rating: 4 out of 5 stars4/5Rhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Nila Veliyil Rating: 4 out of 5 stars4/5Mugil Maraitha Nilavu... Rating: 0 out of 5 stars0 ratingsKalvanai Kaadhali Rating: 4 out of 5 stars4/5Neethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsSantham Thantha Sontham Rating: 4 out of 5 stars4/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5
Related to Markazhi Paniyil..!
Related ebooks
En Manathu Ondruthaan..! Rating: 4 out of 5 stars4/5Unnodu Naan..! Rating: 4 out of 5 stars4/5Nila Soru Rating: 0 out of 5 stars0 ratingsUnnaivida Oru Urava..? Rating: 0 out of 5 stars0 ratingsNee Engey... Rating: 5 out of 5 stars5/5Ottraiyadi.. Paathaiyiley... Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Paattu...! Rating: 5 out of 5 stars5/5Sollamaley... Poopoothathey Rating: 0 out of 5 stars0 ratingsManjal Veyil Maalai Neram... Rating: 4 out of 5 stars4/5Mannavan Vanthaanadi... Thozhi..! Rating: 4 out of 5 stars4/5Manam Thiruda Vandhaya..? Rating: 5 out of 5 stars5/5Poove Mayangathey Rating: 4 out of 5 stars4/5Unmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratingsRhythm Atra Swaram Rating: 3 out of 5 stars3/5Nee Enthan Vennilavu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasinthurugi... Rating: 0 out of 5 stars0 ratingsTheril Vandha Thirumagal..! Rating: 0 out of 5 stars0 ratingsAgal Vilakku... Rating: 1 out of 5 stars1/5Kaatrodu Thoothu Vittean Rating: 4 out of 5 stars4/5Arathanai Rating: 0 out of 5 stars0 ratingsNathi Engey Pogirathu...? Rating: 4 out of 5 stars4/5Vanam Vasapadum... Rating: 4 out of 5 stars4/5Thendralai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsAasaiya... Kobama...? Rating: 0 out of 5 stars0 ratingsPookolam Podavaa... Rating: 0 out of 5 stars0 ratingsPani Vizhum Iravu... Rating: 0 out of 5 stars0 ratingsAnicha Malar...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kaathirunthen... Kaatriniley... Rating: 0 out of 5 stars0 ratingsEnni Irunthathu Edera... Part - 7 Rating: 2 out of 5 stars2/5Enni Irunthathu Edera... Part - 8 Rating: 4 out of 5 stars4/5
Reviews for Markazhi Paniyil..!
0 ratings0 reviews
Book preview
Markazhi Paniyil..! - Muthulakshmi Raghavan
https://www.pustaka.co.in
மார்கழிப் பனியில்..!
Markazhi Paniyil..!
Author:
முத்துலட்சுமி ராகவன்
Muthulakshmi Raghavan
For more books
https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
1
இப்படியொரு கனவு வரக்கூடும் என்ற முன்னரே தெரிந்திருந்தால் பொழுது விடியப் போகும் சமயத்தில் படுத்துறங்கப் போகாமல் முன்னிரவுப் பொழுதிலேயே படுக்கையில் சாய்ந்திருப்பாள் உத்ரா...
எந்த நேரம் எதுவரக்கூடும் என்று யாருக்குத் தெரியும்...?
வீட்டிலிருந்தும் வேலையைப் பார்க்கலாம் என்ற வசதியைக் கொண்டு வந்த ஐ.டி கம்பெனியை வாழ்க என்று பாடிய அவள் மனது அதை வாபஸ் வாங்கிக் கொள்ள முனைந்தது.
அப்படியொரு வசதி வந்து தொலைத்ததினால்தானே அவள் தூக்கத்தை மறந்து லேப்டாப்பில் மூழ்கியிருந்தாள்...? இல்லா விட்டால் எப்போதோ இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பாளே...
‘ஆஹா... எப்பேற்பட்ட கனவு இது...!’
உறக்கத்தின் ஊடே அவள் இதழ்களில் வெட்கப் புன்முறுவல் வந்து தொலைத்தது... வராதா பின்னே...? முதல்நாள் மித்ராவுடன் தியேட்டருக்குப் போய் பார்த்த அருமையான திரைப்படத்தில் வரும் பாடல் காட்சி போல... அருவி கொட்டிக் கொண்டிருந்தது... வெண்புகை போன்ற நீர்ச் சாரல்களின் மத்தியில் தேவதையைப் போல உடையணிந்து வழுக்குப் பாறையில் ஆடிப் பாடினாள் உத்ரா.
‘பாத்துடி... வழுக்கி விடப் போகுது...’
தொலைவிலிருந்து மித்ரா சொல்வதைப் போல இருந்தது... அவளுக்குப் பொறாமையென்று சந்தோஷித்தாள் தேவதையான உத்ரா... இதுவரைக்கும் வந்த கனவுக் காட்சிகளே அவளை ‘லாலாலா’ பாட வைக்கப் போதுமானதாக இருக்க... இவற்றைத் தூக்கிச் சாப்பிடுவதைப் போல ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் அருவிக் கரையிலிருந்த மரத்தின் வேரைப் பற்றி அந்தரத்தில் சுழன்று வந்தான் ஓர் கதாநாயகன்...
‘சிக்ஸ் பேக் இருக்குமா...? இல்லை செவன், எயிட்டுன்னு போகுமா...?’ உத்ராவுக்குள் சந்தேகம் வந்தது...
அவனது விரிந்த மார்பு அப்படித்தான் இருந்தது... வழுக்குப் பாறைமீது வழுக்காமல் நின்று டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த உத்ராவின் அருகில் அந்தரத்தில் சுழன்றவன் இறங்கி நின்று கொள்ள... இரண்டு நபர்களுக்கு பாறையில் போதிய இடம் இருக்குமா என்று ஏகத்துக்கும் கவலைப்பட்டுப் போனாள் உத்ரா...
‘இல்லேன்னா இவன் வேரைப் பிடிச்சுக்கிட்டு தாவிப் போயிருவானே...’
அப்படி ஏதும் ஆகவில்லை... அவன் நிற்க பாறையில் தேவையான அளவுக்கு இடமிருந்தது... வழுக்குப் பாறையில் வழுக்காமல் நிற்க பேலன்ஸ் பண்ணாமல் உடனடியாக உத்ராவுடன் டூயட் பாட ஆரம்பித்து விட்டான் அவன்...
‘ஆமாண்டா... இப்போ டூயட்டுக்குத்தான் அவசரம்... முதல்ல காலை ஊன்றி நிற்கப் பாருடா... மாக்கா...’
திட்ட வேண்டும் போல இருந்தாலும்... அதையும் மீறிய மயக்கத்தில் அந்த ‘எயிட்பேக்’ வாலிபனுடன் இணைந்து உத்ராவும் டூயட் பாட ஆரம்பித்து விட்டாள்... ஒரு பக்கம் டூயட் பாடும் ஆனந்தம்... மறுபக்கம் அவன் வழுக்குப் பாறையில் வழுக்கி விடுவானோ என்ற பயம்...
‘என்னடா அவஸ்தை இது...?’
நெருஞ்சி முள்ளாய் இந்த பயம் நெருடிக் கொண்டிருந்தால் எப்படி அவள் மனம் டூயட்டில் லயிக்கும்...?
அதற்கேற்றாற்போல் அவன் ஓரிடத்தில் நிற்காமல் ஓடி ஆடி டூயட் பாடியதில் உத்ரா பயந்ததைப் போல வழுக்கி விழுந்து வைத்தான்... விழுந்தவன் சும்மாவும் விழுகாமல் உத்ராவின் கையை விடாமல் இறுகப் பற்றி இழுத்துக் கொண்டதில் அவனுடன் சேர்ந்து உத்ராவும் வழுக்கி விழ ஆரம்பித்தாள்...
‘இதுக்குப் பேர்தான் கை விடாம இருக்கிறதா...? எங்கேயிருந்துடா நீ கிளம்பி வந்த...? நீ விழுகிறது பத்தாதுன்னு என்னையும் ஏண்டா இழுக்கற...?’
வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தவர்கள் பனியில் சறுக்கி விழ ஆரம்பிக்க... ஆஹா... கனவென்றால் இதுவல்லவோ கனவு என்று மகிழ்ந்து போனாள் உத்ரா...
எங்கு பார்த்தாலும் வெண்மை நிற நுரைக் குவியல் போல பனித்துகள்... குவிந்திருந்தன... இப்போது உத்ரா எழுந்து ஓட ஆரம்பித்தாள்... அவன் அவளைத் துரத்தினான்... திரும்பிப் பார்த்த உத்ரா பனித்துகளைக் கையில் அள்ளி அவன் மீது விட்டெரிந்தாள்... பதிலுக்கு அவனும் அதே போல பனித்துகளை வீசினான்...
‘இது என்ன இடம்...?’ அகஸ்மாஸ்த்தாக யோசித்து வைத்தாள்.
யோசிக்கும் போதே தேவைதானா இது என்று தலையில் குட்டிக்கொள்ளவும் செய்தாள்... கனவு வந்தால் என்ஜாய் பண்ணிவிட்டுப் போக வேண்டும்... அதை விட்டு விட்டு... இது என்ன இடமென்று பூகோளம் படிக்க யத்தனிக்கக் கூடாது...
லா... லா... லா...
அவனுடன் இணைந்து பனிச்சாரலில் கை கோர்த்து பாடி, ஆடியபோது... இவனை நம்பிக் கை கோர்த்திருக்கிறோமே... இங்கே எந்த இடத்தில் வழுக்கி வைத்து அவளையும் உடன் இழுத்துச் செல்லப் போகிறானோ என்ற கலக்கம் அவள் மனதில் வரத்தான் செய்தது... அது வந்ததை அவன் எப்படித்தான் அறிந்தானோ... பனித்துகளில் அவளையும் இழுத்துக் கொண்டு சறுக்க ஆரம்பித்தான்.
‘இவன் சறுக்கு மரம் ஏறுகிறவனா இருப்பானோ...’
மூச்சு வாங்க அவனுடன் சறுக்கியபடி யோசித்தாள் உத்ரா... பனித்துகள்கள் கணப்பொழுதில் மலர்த் தோட்டங்களாக உருமாறி நிற்க... ஆஹா... என்று வியந்து போனாள் உத்ரா...
‘இதைத்தான் கலர்கலரா கனவு காண்கிறது என்கிறார்களோ...’
மார்கழிப் பனியின் குளுமையை உணர்த்திய பனித் துகள்களில் இருந்து நறுமணம் கமழும் மலர்த் தோட்டத்துக்குள் நுழைந்தவள் அவளுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த ஹீரோவின் முகம் பார்க்க முயன்றாள்... ஊஹீம்... அவனது முகம் தெரியவே இல்லை...
‘என்னங்கடா இது... முகம் தெரியாதவன் கூட டூயட் பாடினா அம்மா திட்ட மாட்டாங்களா...?’
உத்ரா கவலைப்பட்டு முடிவதற்குள் அவள் காதுகளில் சராமரியான வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன...
கரடியாக் கத்தறேன்... இவ காதில வாங்கிக்கிறாளா...? பொட்டப்புள்ளக்கு அப்படியென்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு...? எட்டுமணியாச்சு... இன்னும் எழுந்திரிக்காம கனவு கண்டுக்கிட்டு படுத்திருக்கா...
‘நான் கனாக் கண்டது அம்மாவுக்கு எப்படித் தெரிஞ்சது...?’
மலங்க மலங்க விழித்தவளின் ஒரு கையில் காபித் தம்ளரையும், மறுகையில் காய்கறிக் கூடையையும் திணித்தாள் கிருஷ்ணவேணி...
‘காபித்தம்ளருக்கும் காய்கறிக் கூடைக்கும் என்ன கனெக்சன்...?’ திகைத்தாள் உத்ரா...
காபியைத் தொண்டையில கொட்டிக்கிட்டு... வேகமாய் போயி... காய்கறி வண்டிக்காரன்கிட்ட காயை வாங்கிக்கிட்டு வந்த சேரு...
கிருஷ்ணவேணி அந்த கனெக்சனை விளக்கினாள்...
‘என்னோட ஹீரோ எங்கே...?’
கிருஷ்ணவேணியிடம் கேட்கப் போனவள் சர்வ ஜாக்கிரதையாக வாயை இறுக மூடிக் கொண்டாள்...
‘என்ன காரியம் செய்ய இருந்தேன்...? இதை மட்டும் அம்மா காது கொடுத்துக் கேட்டிருந்தா என்ன கதியாகிறது...?’
அதோகதிதான் என்ற நினைவில் அழுத்தமாக இதழ்களை மூடிக்கொண்டவள் காபியை ரசித்துக் குடித்து விட்டு...
காபின்னா இது காபி... பேஷ்...! பேஷ்...! ரொம்ப நன்னாயிருக்கு...
என்றாள்...
இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் இங்கே வேணாம்... காய் வாங்கிட்டு வர்ற வேலையில இருந்து எஸ்கேப் ஆக டிரை பண்ணாதே... எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு...
எச்சரித்தாள் கிருஷ்ணவேணி...
நீங்க ஸ்கூல் டீச்சர்ங்கிறதுக்காக எப்பப் பார்த்தாலும் கண்ணுக்குத் தெரியாத குச்சியும் கையுமா இருப்பீங்களா...?
தாயை முறைத்தபடி காய்கறிக் கூடையை வாங்கிக் கொண்டாள் உத்ரா... தூக்கக் கலக்கத்துடன் தள்ளாடியபடி மெதுவாகப் படியிறங்கினாள்...
நீ அன்னநடை நடந்து போகிறதுக்குள்ள காய்கறி வண்டிக்காரன் கடைக்கே திரும்பப் போயிருவான்...
கிருஷ்ணவேணியின் சத்தம் கேட்டது...
என்னைச் சத்தம் போடறதுக்குப் பதிலா நீங்களே போய் காய் வாங்கிட்டு வாரதுக்கென்ன...?
உத்ராவும் பதிலுக்குச் சத்தம் போட்டாள்...
இவளுடைய சத்தத்திற்குப் பதிலாக சமையலறையில் கரண்டி பறக்கும் சத்தம் கேட்டது...
‘ஆஹா...! சும்மா இருந்த பெண் சிங்கத்தை சொரிஞ்சு விட்டுட்டேனே...’ உத்ரா தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள்.
புயல் வாசல்படிக்கு வந்து மையம் கொள்வதற்குள் கரை கடந்து விட வேண்டும் என்று இவள் படிகளைக் கடக்க முற்படுவதற்குள் காலம் கடந்து விட்டது... கிருஷ்ணவேணி புயல் சமையலறையி லிருந்து கிளம்பி ஹாலைக் கடந்து... வாசல் படியில் உத்ராவுக்கு நேர் எதிராக மையம் கொண்டு விட்டது...
ஆமாண்டி... ஸ்கூலுக்குப் போய் டீச்சர் உத்தியோகம் பார்த்து சம்பளத்தையும் கொண்டு வந்து கொட்டனும்... வீட்டுக்குள்ள இருக்கிற அத்தனை வேலையையும் நான் ஒண்டி ஆளாப் பார்க்கனும்... நினைப்புடி உனக்கு...
உத்ராவுக்கு காலையில் கண்ட கனவு நினைவுக்கு வந்தது... முகம் தெரியாத ஹீரோவின் அழகில் வசீகரிக்கப்பட்டவள் அவனை நினைக்கும் நினைவை அம்மா அறிந்தால் என்ன செய்வாள் என்று நினைத்துப் பார்த்தாள்...
‘நினைப்புடி உனக்குன்னு சொல்றாங்களே... நான் அவனை நினைக்கும் நினைவை தெரிஞ்சுக்கிட்டுச் சொல்றாங்களோ...’
ஓர்நொடி மனம் பதைத்து கிருஷ்ணவேணியைப் பார்த்தாள்... அவள் முகத்தில் இருந்த அனல் ஒடுக்கப்பட்ட பெண்களின் ஒட்டு மொத்த உரிமைக்குரலின் அனலாக இருந்ததில்...
‘சீச்சீ...! அப்படி இருக்காது... இது வேறு அனல்...’ என்று மனம் தெளிந்தாள்...
அந்த மனத் தெளிவுடன் வாயை வைத்துக் கொண்டு கிருஷ்ணவேணிக்கு ஒரு தோப்புக்கரணத்தைப் போட்டுவிட்டு அவள் பேசாமல் போயிருக்கலாம்... அதை விட்டு விட்டு வாயை விட்டு விட்டாள்...
அவ்வளவு கஷ்டமா இருந்தா டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிருங்கம்மா...
இலகுவாக சொன்ன பின்னர்தான் தான் பேசிய வார்த்தைகளுக்கான பின் விளைவே அவள் மண்டையில் உறைத்தது.
‘வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கப் போறேனே...’
அவள் மனம் நடுங்க கிருஷ்ணவேணியைப் பார்த்தாள்... அவளோ ஒரு மார்க்கமாக மகளைப் பார்த்தாள்...
ஆக... உனக்கும் உன் அப்பா, தங்கைக்கும் வடிச்சுக் கொட்டிச் சேவகம் பண்றதுக்காக நான் என் ஐடெண்டியை விட்டுக் கொடுத்திரனும்... அப்படித்தான சொல்ல வர்ற...?
உத்ரா அப்படியா சொல்ல வந்தாள்...? வேலைக்குப் போவதில் உள்ள சங்கடங்களை தாய் அனுபவிக்க வேண்டாமே என்ற காருண்யத்தில் வாயை விட்டு விட்டால்