Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasaiya... Kobama...?
Aasaiya... Kobama...?
Aasaiya... Kobama...?
Ebook219 pages2 hours

Aasaiya... Kobama...?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பூர்ணிமாவும் சரளாவும் நெருங்கிய சினேகிதிகள். அதேபோல் அரவிந்தனும் குணசீலனும் நெருங்கிய சினேகிதர்கள். இவர்கள் நாலு பேரும் ஒரே வங்கியில் பணி செய்கிறார்கள். இவர்களுக்கிடையே மலரும் காதலும் அதற்கு தடையாக வரும் இடைஞ்சல்களும் கதையின் சுவாரஸ்யம். இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா? குணசீலனையும் பூர்ணிமாவையும் சேரவிடாமல் சதா இடைஞ்சல் செய்பவள் லிஸி. யார் இவள்? கதையின் முடிவில் ஆசை, கோபம் இவற்றில் எது வெற்றி பெற்றது? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 12, 2023
ISBN6580133810098
Aasaiya... Kobama...?

Read more from Muthulakshmi Raghavan

Related to Aasaiya... Kobama...?

Related ebooks

Reviews for Aasaiya... Kobama...?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasaiya... Kobama...? - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆசையா... கோபமா...?

    Aasaiya... Kobama...?

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    கொட்டுகிற அருவியில் முகம் நீட்டியதைப் போல சிலு சிலுப்பாக உணர்ந்தாள் பூர்ணிமா... அவள் முகத்தில் நீர்திவலைகள் படிந்து... வழிந்து அந்த அனுபவம் பொய்யில்லை... உண்மையென்று உணர்த்த... மீண்டும் அருவிக்குள் முகம் நீட்ட விழைந்தாள்... அவளது ஆசையை அறிந்ததைப் போல் அருவிநீர் மீண்டும் அவள் முகம்மீது கொட்டியது... நீர்த்துளிகளின் மெல்லிய தாக்குதலில் அவள் முகம் சிலிர்த்து அந்த ஜில்லென்ற நதிநீரில் நனையும் அனுபவத்தை ரசித்தாள்...

    ஏண்டி... இன்னும் எத்தனை பக்கெட் தண்ணியை உன்மேல கொட்டினா... நீ எழுந்து தொலைப்பேன்னு... சொல்லித் தொலைடி...

    நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தவளின் காதோரமாக கோபக்குரல் ஒலிக்க... ‘இது சரளாவின் குரலைப் போல இருக்கே...’ பூர்ணிமா நினைத்துக் கொண்டாள்...

    நினைவோடு நிறுத்திக் கொள்ளாமல்... கண் விழிக்காமலே...

    சரள்... நீயும் அருவியிலே தலையைக் காட்டேன்... எவ்வளவு ஜில்லுன்னு இருக்கு தெரியுமா...? என்று முணுமுணுத்தும் வைத்தாள்...

    இருக்கும்டி... இருக்கும்... நானும் உன்கூட இந்த அருவிக் குளியலை ரசிக்க வந்திட்டா... யாரு நம்ம மேல பக்கெட் தண்ணியை ஊத்தறது...? உன்மேல் ஊத்த நானிருக்கேன்... என்மேல ஊத்த யாரிருக்கா...?

    ரௌத்ரமான சரளாவின் பதிலைக் கேட்ட பூர்ணிமா... ‘இவ எதுக்கு இத்தனை கோபப்படறா...? அருவிக்குளியலுக்கும்... பக்கெட் தண்ணிக்கம் என்ன சம்பந்தம்...’ என்று புரியாமல் கண் விழித்தாள்...

    விழித்தவளின் முன்னால் அருவிக்கரைக்குப் பதில்... அறையின் சுவர் தெரிந்தது... கொட்டும் அருவிக்குப் பதில்... பக்கெட்டுடன் நின்றின்றிருந்த சரளா தென்பட்டாள்...

    கண்களை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்த பூர்ணிமா...

    அருவிக்கரை எங்கேடி...? என்று சரளாவிடம் கேட்டு வைத்தாள்...

    விடியற்காலையிலேயே... என் கொலைவெறியை கிளப்பாதே...

    த்ச்சு... குற்றால அருவியிலே குளிச்சுக்கிட்டு இருந்தவகிட்ட கொலைவெறியைப் பற்றிப் பேசாதேடி...

    எனக்கு நல்லா வந்திரும் வாயிலே... கண்ணை முழிச்சுப் பாரு... இது அருவிக்கரையா...? இல்லை... உன் ஹாஸ்டல் ரூமான்னு...

    ஆமாம்... இது அருவிக்கரை மாதிரியில்லையே...

    எப்படி இருக்கும்...? லேடிஸ் ஹாஸ்டலில் எட்டடி ரூமுக்குள் ஒண்டிக்கிட்டு... அருவிக்கரையை வான்னு கூப்பிட்டா அது வந்து விடுமா...? கனவில்தான் அது வரும்... நிஜத்தில் பக்கெட் தண்ணித்தான் வரும்...

    பக்கெட் தண்ணியையா ஊற்றிக்கிட்டு இருந்த...?

    ஆமாம்... பின்னே... இவ்வளவு நேரமும் அருவியிலயா ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு இருந்த...? நல்ல கதைதான் போ... பக்கெட் தண்ணியை உன் முகத்தில் விசிறியடிச்சுக்கிட்டு இருந்தேண்டி...

    முகம் பூராவும் வழிந்து கொண்டிருந்த நீரை கையால் வழித்து விட்டபடி எழுந்து அமர்ந்தாள் பூர்ணிமா...

    ஏண்டி பிசாசே... என் முகத்தில் தண்ணியைக் கொட்டின...?

    வேறவழி...? தினமும் எனக்கு இதே வேலையாய் போச்சே... ராத்திரி பூராவும் குருட்டு யோசனையிலே மண்டையை உடைத்துக்கிட்டு... விட்டத்தைப் பார்த்துக்கிட்டு கிடக்க வேண்டியது... விடிஞ்சப்புறம் கும்பகர்ணியாய் மாறித் தூக்கம் போட வேண்டியது... உனக்குத்தான் இதே பிழைப்பாய் போச்சே... உன்னை எழுப்பி... பேங்குக்கு கூப்பிட்டுக்கிட்டு போகிறதுக்குள்ள... உன்பாடு... என் பாடுன்னு ஆகித் தொலைக்குது... இப்ப மணி என்னன்னு தெரியுமா...?

    என்ன... ஒரு ஆறு மணியிருக்குமா...?

    பேராசைதாண்டி உனக்கு... இப்ப மணி எட்டு...

    பூர்ணிமா அலறியடித்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து குளியலறைக்குள் ஓடினாள்...

    இப்பப் புரியுதா... ஏன் நான் உன் முகத்தில் பக்கெட்... பக்கெட்டா தண்ணியை ஊத்தியேன்னு...?

    விளம்பர பாணியில் சராள சொல்ல... பூர்ணிமா அவளை முறைத்தாள்...

    சான்ஸ் கிடைச்சிருன்னு ஓட்டிப் பார்க்கிறயா...?

    எனக்கெதுக்குடி வம்பு... எட்டரைக்கு ஓபன் ஆகிற டைனிங் ஹாலை முக்கால் மணி நேரத்தில் மூடிவிடுவாங்க... அந்த நேரத்துக்குள் போனால்தான் காலையில் வயிற்றில் போட ஏதாவது கிடைக்கும்... மதியத்துக்கும் லன்ச் பாக்ஸ் நிரம்பும்...

    இது அநியாயம்டி...

    எதைச் சொல்கிற...?

    இந்த ஹாஸ்டலில் போட்டிருக்கிற சட்டத்தைச் சொல்கிறேன்...

    இங்கே இதுதான் சட்டம்... உன்னை மாதிரி ஆளுக இப்படிச் சட்டம் போட்டால் கூடத் திருந்த மாட்டேங்கறிங்களேடி... ஓடு... எட்டரைக்குள்ளே பல்லையாவது தேய்த்து விட்டு வந்து சேரு...

    பூர்ணிமா குளித்து முடித்தே வந்து விட்டாள்...

    டிரஸ் சேன்ஜ் பண்ணிக்க நேரமில்லைடி... என்றபடி... நைட்டியோடு சாப்பிடக்கிளம்பினாள்...

    முதலில் பந்திக்கு முந்துவோம்... பத்துமணிக்குத்தானே பேங்குக்கு போகனும்...

    இங்கேயிருந்து பேங்க் போக அரைமணி நேரம் ஆகுமேடி...

    இவ்வளவு யோசிக்கிறவ... இழுத்துப் போர்த்திக்கிட்டு எட்டு மணிவரைக்கும் தூங்கக் கூடாது...

    அவர்கள் சன்னக்குரலில் வழக்கடித்தபடி சாப்பிட்டு விட்டு வந்தார்கள்...

    பத்தே நிமிசம்தான் இருக்கு...

    கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி பூர்ணிமா பரபரத்தாள்...

    அது உன் கவலை... ஆல்ரெடி நான் கிளம்பி ரெடியாய் இருக்கேன்...

    சாவாதானமாக ஒரு நாவலை எடுத்துப் புரட்டியபடி சரளா கூறினாள்... அவளை எரிப்பதைப் போல பார்த்தபடி... அந்த பத்து நிமிடத்தில் பூர்ணிமா தயாராகி விட்டாள்...

    வெரிகுட்...

    தோழியின் வேகத்தை மெச்சிய சரளாவை பார்வையிட்டாள் பூர்ணிமா...

    உயரமாக... ஒல்லியாக... கொடி போல் இருந்தாள் சரளா... வட்ட முகத்தில் பெரிய கண்கள் லேசாக மையிடப்பட்டு பார்ப்பவர்களை வசீகரித்தன... அடர்ந்த கருமையான கூந்தலை விரிய விட்டு... ஹேர் பேன்டில் அடக்கியிருந்தாள்...

    ‘எப்படித்தான் இவ்வளவு அழகாய் இருந்து தொலைக்கிறாளோ...’ அவள் மனதுக்குள் எண்ணம் எழுந்தது...

    என்னடி அப்படிப் பார்க்கிற...?

    பார்ப்பதைப் போல இருந்து தொலைக்கிற... பார்க்கிறேன்...

    தோடா... நீ பார்க்கிறதைப் போல இல்லையா...?

    பூர்ணிமா அதற்குப் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றினாள்...

    இருக்கிறது திருநெல்வேலியில்... பேச்செல்லாம் சென்னைப் பேச்சா...?

    பிறந்து... வளர்ந்தது சென்னைதானேடி... இந்த ஒரு வருசமாத்தானே திருநெல்வேலியில் இருக்கிறேன்...? என்னைச் சொல்கிறயே... நீ மட்டும் யாராம்...? பெரிய குளத்துக்காரப் பொண்ணுதானே நீ...?

    இப்ப வேலைக்குப் போகாமல் ஊரைப் பத்தி என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு...? வா... வா... போகலாம்...

    கிளம்பிய பூர்ணிமாவை நிறுத்தி... அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தாள் சரளா...

    இப்போது... என்னடி... அப்படிப் பார்க்கிற...? என்று கேட்பது பூர்ணிமாவின் முறையாகி விட்டது...

    நீயேண்டி... என்னையே உயர்த்தியாய் பேசற...? நீ எவ்வளவு அழகுன்னு உனக்குத் தெரியுமா...?

    எனக்கும் தெரியாது... மத்தவங்களுக்கும் தெரியாது...

    இப்படிச் சொன்ன பூர்ணிமா சரளாவைப் போல உயரமாக இல்லாமல்... உயரம் கம்மியாக இருந்தாள்... பூசினாற் போன்ற சதைப்பிடிப்பான உடல்வாகு... மாநிறம்... நீள்வாக்கிலான சிறிய கண்கள்... நீண்ட கூந்தல்...

    பூர்ணிமாவைப் போல பார்த்தவுடனே... ‘வாவ்...’ என்று சொல்ல வைக்கும் அழகியாக அவளில்லாவிட்டாலும்... அவளிடம் ஒர்விதமான தனித்த வசீகரத்தன்மை இருக்கத்தான் செய்தது...

    அவள் சிரிக்கும்போது கூடச் சேர்ந்து சிரிக்கும் கண்கள்... அவளது அந்த வசீகரத்தை அதிகப்படுத்துவதை அவள் அறியாமல் இருந்தாள்...

    மத்தவங்களுக்குத் தெரியாதுன்னு நீயாய் எப்படிச் சொல்கிற...? உன் குணசீலனுக்குத் தெரியாதா...?

    இதைக் கேட்டவுடன் பூர்ணிமாவின் மனதில் சாரல் அடித்தது... அவளது மனதின் மையல் கண்களில் தெரிய... அவள் முகம் ஒளிர்ந்தது... இதழ் வளைத்துச் சிரித்தாள் அவள்...

    அட... அட... அம்மணி முகத்தில் பல்ப் எரியுது... சரளா கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்...

    ம்த்ச்... அதெல்லாம் ஒன்றுமில்லை... நீயாக... எதையாவது சொல்லாதே... அவனை எதற்கு இப்போ நினைவுபடுத்தற...?

    இந்தக் கதையெல்லாம் வேற யாருகிட்டயாவது சொல்லு... உன் மனதில் அவன் இல்லையாக்கும்...?

    இல்லை...

    இதை என்னை நம்பச் சொல்கிறயாக்கும்...?

    ஆமாம்...

    இந்த வருசத்தோட மிகச்சிறந்த ஜோக் இதுதாண்டி...

    இதையெல்லாம் சொல்லத்தெரியுது... இந்த வருசத்திலே நாம் லேட்டாய் போனது எத்தனை தடவைன்னு மட்டும் நினைவில் இல்லையா...?

    அதை மறந்து போனேன் பாரு... வாடி... ஓடியே போகலாம்...

    நாம ஓடமுடியாது... வண்டியில் ஏறி உட்காரு... வண்டி ஓடும்...

    சரளாவின் கைனடிக் ஹோண்டாவில் பூர்ணிமா ஏறிக்கொள்ள வண்டி கிளம்பி... படுவேகமாக சாலைப் போக்குவரத்தில் கலந்தது...

    மூச்சிரைக்க... பேங்குக்குள் நுழைந்தவர்களைப் பார்த்த குணசீலன் புருவங்களை உயர்த்தினான்...

    ஏண்டா அரவிந்தா... இவங்க வேலைக்கு வந்திருக்காங்களா...? இல்லை... ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்க வந்திருக்காங்களா...?

    அந்த அரவிந்தனாகப் பட்டவன் சரளாவை அள்ளிப் பருகுவதைப் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு...

    எனக்கு அப்படியெல்லாம் தோணலைடா... எங்க தாத்தா சொன்ன கதையில வருகிற பூலோக ரம்பை மாதிரி தோனுதுடா... என்று ஜொள்ளினான்...

    காலையிலேயே வழிசலை ஆரம்பிச்சுட்டாண்டி... பூர்ணிமாவின் காதோரமாக முணுமுணுத்தாள் சரளா...

    பூர்ணிமாவோ... அவளது முணுமுணுப்பைக் கவனிக்காமல் குணசிலனின் புருவ உயர்த்தலைக் கவனித்தபடி... முகச்சுளிப்புடன் அவனுக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்தாள்...

    அப்படியே இஞ்சி தின்ற குரங்கைப் போலவே இருக்குடா... குணசீலன் பூர்ணிமாவைப் பார்த்தபடி அரவிந்தனிடம் சொல்லி வைக்க... பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது...

    ‘என்னைத்தானே சொல்லுகிறாய்...?’ என்று அவன் சட்டையைப் பிடிக்க முடியாமல் கண் முன் காத்திருந்த மக்கள் வரிசை தடுக்க... அவள் பரபரவென்று கம்யூட்டரை உயிர்பித்தாள்...

    எனக்கொன்னும் அப்படித் தோணலை... சரளாவின் முகத்தில் விழி பதித்திருந்த அரவிந்தன் சொன்னான்...

    நீ பார்க்கிற முகம் அப்படி...

    குணசீலன் ஜாடையாக பூர்ணிமாவைப் பார்த்தபடி கூறினான்... அவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை... பூர்ணிமா... எரிமலையாய் அவன் பக்கம் திரும்பி... அனல் பார்வையொன்றைக் கக்கினாள்...

    குணசீலன் அதற்கும் அயர்ந்து போகவில்லை...

    ஹப்பா... ஒரே அனல் காத்துடா மச்சான்... என்று மீண்டும் அவளை வம்புக்கு இழுத்தான்...

    பொறுக்க முடியாத பூர்ணிமா அரவிந்தனின் பக்கம் திரும்பினாள்...

    இது சரியில்லை அரவிந்தன்...

    சரளாவின் பார்வையை தன் பக்கமாக திருப்ப தீவிரமாக முயன்று கொண்டிருந்த அரவிந்தன் பேந்தப் பேந்த விழித்தான்...

    ‘இவ எதை சரியில்லைன்னு சொல்கிறா...? ஒருவேளை இவ பிரண்டை நான் சைட் அடிக்கிறதைத்தான் சரியில்லைன்னு சொல்கிறாளோ...’

    எனக்கு இதுதாங்க சரி...

    இது கொஞ்சம் கூட நல்லாயில்லை...

    சரளாவின் தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் அரவிந்தன்...

    ஏங்க... எவ்வளவு நல்லாயிருக்கு தெரியுமா...? என்று சொல்லி வைத்தான்...

    எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது...

    ‘இவ பிரண்டைப் பார்த்தா இவளுக்கென்ன...? இவளுக்கு பிடிச்சிருந்தா... எனக்கென்ன... பிடிக்கலைன்னாத்தான் எனக்கென்ன... அவளுக்குப் பிடித்திருந்தால் போதுமே...’

    எனக்குப் பிடிச்சிருக்கே...

    எப்பவும் நான் வாயை மூடிக்கிட்டே இருந்திருவேன்னு நினைக்காதீங்க...

    ‘நீ எப்படியிருந்தா எனக்கென்ன...?’

    நினைக்கலைங்க...

    ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காதுங்க...

    ‘எது இருக்காது...?’

    இருக்காட்டிப் போகட்டும்...

    Enjoying the preview?
    Page 1 of 1