Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuyil Paattu...!
Kuyil Paattu...!
Kuyil Paattu...!
Ebook182 pages1 hour

Kuyil Paattu...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையானது? குயிலின் கருமை நிறம் சிலர் கண்களில் பட்டாலும் அதன் குரல் இனிமை பலர் மனதைக் கவர்ந்துவிடும் என்பதுபோல இக்கதையின் நாயகி காவ்யா கருப்பாக இருந்தாலும் அவள் மனம் எவ்வளவு இனிமையானது என்பதை காதலுடன் படித்து அறிவோம்... குயில் பாட்டுக்கு இணை ஏதும் உண்டா...?

Languageதமிழ்
Release dateAug 5, 2023
ISBN6580133810084
Kuyil Paattu...!

Read more from Muthulakshmi Raghavan

Related to Kuyil Paattu...!

Related ebooks

Reviews for Kuyil Paattu...!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuyil Paattu...! - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    குயில் பாட்டு...!

    Kuyil Paattu...!

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    விடியல் விடியல் விடியல்

    விடியல் வந்தால் விடியல் வந்தால்

    ஒளிர்தல் ஒளிர்தல் ஒளிர்தல்

    அம்பு போல ஆற்று நீரில் பாய்ந்தாள் காவ்யா... வாளை மீனைப் போல அதி விரைவில் நீந்தி அக்கரையைத் தொட்டுவிட்டுத் திரும்பியவளைப் பார்த்து பிரமித்து கைதட்டினாள் செவ்வந்தி.

    அசத்தறடி காவ்யா... நானும்தான் இந்த கானவயலில பொறந்து வளர்ந்திருக்கேன். இந்தக் காவிரியில நீச்சல் பழகியிருக்கேன். உன்போல இம்புட்டுச் சீக்கிரமா நீச்சலடிக்க முடியலையே...

    இது ஒரு பெருமையாக்கும்...? அலட்சியமாகச் சொன்னபடி கரையேறினாள் திவ்யா... காவ்யாவின் தங்கை…!

    இல்லையா, பின்னே...? செவ்வந்தி முகம் சுளித்தாள்.

    உன் பிரண்டோடப் பெருமையை நீதான் மெச்சிக்கணும்... நான் போறேன் வீட்டுக்கு... வாடி ரோஜா... தன் தோழியை அழைத்தபடி நடையைக் கட்டினாள் திவ்யா.

    உன்னப் பாராட்டி ஒரு வார்த்த சொல்லிறக் கூடாதே... இவளுக்குப் பொறுக்காதே... ஆற்றாமையுடன் சொன்னாள் செவ்வந்தி.

    விடுடி... அவ குணம் அப்படி... அதப் போயி பெரிசாப் பேசிக்கிட்டு... புதுசாவா பேசறா...? தோழியை அமைதிப் படுத்தினாள் காவ்யா.

    அதச் சொல்லு... அவ என்ன இன்னைக்கு நேத்தாப் பேசறா...? வாயில பேச்சு வந்த நாளில இருந்தே உன்ன மட்டம் தட்டித்தானே பேசறா...? அது எப்படித்தான் கூடப் பொறந்த அக்காவைக் கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்க முடியுதோ... அவளச் சொல்லிக் குற்றமில்லை காவ்யா... உங்க அம்மாவைச் சொல்லனும்... உன் தங்கச்சிக்கு வாய் வளர்த்து விடறதே உங்க அம்மாதான்.

    அதுக்கு என்னடி செய்யறது...? அவ எங்க அம்மாவைக் கொண்டு அழகா, செக்கச் செவேல்ன்னு பொறந்திருக்கா... நான் அப்பாவைக் கொண்டு கருப்பாய் பொறந்து தொலைச்சிருக்கேனே... விரக்தியுடன் சொன்னாள் காவ்யா.

    அதுக்காக பெத்த பொண்ணுகளுக்கு இடையிலேயே பேதம் பார்ப்பாங்களா...? கொடுமைடி இது... ஆத்திரப்பட்டாள் செவ்வந்தி.

    ஒரு துறவியைப் போன்ற சாந்த முகத்துடன் அமைதியாகத் துவைத்து வைத்திருந்த துணிகளை தோளில் போட்டுக் கொண்டு படியேறிய தோழியைப் பார்த்த செவ்வந்தியின் மனம் வலித்தது.

    அம்மாவுக்கு அவளைப் பிடிக்கும்ன்னு கோபப்பட்டா, அப்பாவுக்கு என்னைப் பிடிக்குதுன்னு அவ கோபப்படுவாள்ல...? எதிலயும் நியாயம் இருக்கனும் செவ்வந்தி...

    உங்கப்பா தமிழ் பேராசிரியர்... அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர். உன் அருமை அவருக்குத் தெரிஞ்சிருக்கு... கொண்டாடுறாரு...

    அதுபோல திவ்யாவின் அழகு அம்மாவுக்குப் பிடிச்சிருக்கு... அவங்க அவளைக் கொண்டாடறாங்க... விட்டுத்தள்ளுவியா... இதப்போயி பெரிசு பண்ணி க்கிட்டு...

    நீயும் அழகுதானேடி காவ்யா...?

    கருத்தம்மாவ அழகுன்னு சொல்ற ஒரே ஆளு நீதாண்டி... பிரண்டுங்கிறதுக்காக என்னவெல்லாம் பொய் சொல்ற...?

    பொய்யா...? போடி இவளே... உன் வீட்டில உன் தங்கச்சியைத் தூக்கி வைச்சுப் பேசிப்பேசி உன் அழக உனக்கே தெரியாம மறக்கடிச்சு வைச்சிருக்காங்க... கண்ணாடியில போய்ப் பாரு... மூக்கும் முழியுமா நீ எம்புட்டு லட்சணமா இருக்கேன்னு உனக்கே தெரியும்... கோவிலில் இருக்கும் அம்மன் சிலை போல அம்புட்டு அழகுடி நீ...

    காவ்யா அப்படித்தான் இருந்தாள்... செவ்வந்தியின் வர்ணனையைப் போல வட்ட முகமும், பெரிய கண்களும், சீரான நாசியும், குவிந்த இதழ்களுமாக இருந்தாள்... கருமை நிறம் என்பதைத்தவிர குறையேதும் சொல்ல முடியாத பேரழகி அவள்... அதை திவ்யாவும் உணர்ந்துதான் இருந்தாள்... அதில் அவள் மனதில் கடலளவு பொறாமையும் சினமும் உண்டு... காவ்யாவின் காலளவு கருங்கூந்தலில் திவ்யா பொறுமிப் போவாள்.

    ‘இந்தக் கருப்பிக்கு இருக்கிற முக லட்சணம் எனக்கு இல்லையே... போதாக் குறைக்கு எம்புட்டு நீளமான முடி...’

    திவ்யா அரைத்துவிட்ட சந்தனத்தின் நிறத்தில் இருப்பாள். அந்த சுற்று வட்டாரத்தில் அவளது நிறம் பிரசித்தி பெற்றது. அப்படியொரு நிறம் வாய்க்கப் பெற்றவளுக்கு நீள்வடிவில் முகம் இருக்கும்... சிறிய கண்கள்... உருண்டை வடிவிலான நாசி... இந்தக் குறைகளை அவளது நிறம் மறைத்து விடும் என்பதை தெரிந்து வைத்திருந்த சாமர்த்தியசாலி அவள்... காவ்யாவின் காலளவுக் கருங்கூந்தலை ‘பட்டிக்காடு’ என்று கேலி பேசி தமக்கையின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணுவாள்.

    என்னைப் போல ஸ்டைலா இருக்கத் தெரியல... அதுசரி... ஸ்டைலா இருந்தா மட்டும் கருப்பியை எவன் திரும்பிப் பார்ப்பான்... தோளைத் தாண்டி சீராக வெட்டப்பட்டிருக்கும் முடியைச் சிலுப்புவாள்.

    அது என்ன மாயமோ தெரியவில்லை... அத்தனை தைலங்களையும் திவ்யா பிரயோகித்துப் பார்த்து விட்டாள். அவளது முடி நடு முதுகைத் தாண்டி வளருவேனா என்று சண்டித்தனம் செய்து விட்டது... வேறு வழியின்றி அழகு நிலையத்தில் தன் முடியை சீராக வெட்டி விட்டுக் கொண்டு அதுதான் நாகரிகம் என்று பறைசாற்றிப் பெருமை கொண்டாள் அவள்.

    என்போல நீயும் முடியை வெட்டிக்க... அப்படியாச்சும் உன்னைப் பொண்ணுப் பார்க்க வர்றவன் சரின்னு சொல்வானான்னு பார்க்கலாம்... தமக்கையின் முடியை வெட்டி விடுவதில் குறியாக தூண்டி விடுவாள்...

    நீண்ட கூந்தல் தமிழரின் கலாச்சாரம் காவ்யா... உன் தங்கை சொல்கிறான்னு நீ முடியை வெட்டக் கூடாதும்மா... அவர்களைப் பெற்ற தந்தையான சுந்தரமூர்த்தி கடிந்து பேசி காவ்யாவின் கருங்கூந்தலைக் காப்பாற்றி விட்டார்.

    இல்லையென்றால் காவ்யா தூங்கும்போது அவளது கூந்தலை வெட்டித் தள்ளியிருப்பாள் திவ்யா... அதைக் குற்றமென்று சொல்ல விடாமல் தமக்கைக்கு நன்மைதான் செய்தாள் என்று சாதித்திருப்பாள்… அப்படிச் செய்ய விடாமல் தகப்பனாரின் தடா உத்தரவு அவளைக் கட்டிப் போட்டு விட்டதில் செம காண்டு அவளுக்கு...

    ‘இந்த அப்பாவுக்கு அவதான் உசத்தி...’

    சுந்தரமூர்த்தி தான் பெற்ற பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுபவரல்ல... அவர் என்றுமே காவ்யா, திவ்யாவிடமும், அவர்களுக்கு அடுத்துப் பிறந்திருந்த பிரசன்னாவிடமும் பேதம் பார்த்ததில்லை... மூன்று பிள்ளைகளையும் சமமாக நேசித்தார்... அதே சமயம் பொறுப்புள்ள தகப்பனாக அவர்களிடம் இருந்த நிறை குறையான குண நலன்களைச் சுட்டிக் காட்டி பாராட்டினார்... கண்டித்தார்... இதில் காவ்யாவிடம் நிறைகள் மட்டுமே இருந்தன... திவ்யாவிடம் குறைகள் மட்டுமே இருந்தன... பிரசன்னாவிடம் இரண்டுமே இருந்தன... அதனால் காவ்யா பாராட்டப்பட்டாள்... திவ்யா கண்டிக்கப்பட்டாள்... பிரசன்னாவுக்கு இரண்மே கிடைத்தன...

    சுந்தரமூர்த்தியின் தர்மபத்தினியான தாரா கணவரைப்போல குணம் படைத்தவளல்ல... சிவந்த நிறத்துடன் இருந்தவள் … பட்டினத்தில் இருந்து ஒரு ராஜகுமாரன் தேரேறி வந்து அவளுக்கு மாலை சூட்டி அழைத்துப் போவான் என்று கனவு கண்டு கொண்டிருந்தவள். நனவு வேறாக மாறி, அவளைக் கரியநிற தமிழ்ப்பேராசிரியருடன் இணைத்து வைத்து விட்டது... நினைத்த வாழ்வு கிடைக்காத ஏமாற்றம் அவள் மனதில் கனன்று கொண்டிருந்ததில் அவள் கணவரின் சாயலில் பிறந்த மூத்த மகளைக் ‘கடனே’ என்றுதான் கொஞ்சுவாள்.

    சுந்தரமூர்த்தி பெயருக்கேற்றார் போல அழகான முகவடிவைக் கொண்டவர்... வாட்ட சாட்டமான உடல்வாகு. நிமிர்ந்த நடையுடன் அவர் கல்லூரியில் பிரவேசித்தால் அனைத்து மாணவ மாணவிகளும் கரம் கூப்பி வணக்கம் சொல்வார்கள்.

    இந்தப் பெருமையை அறியாதவள் தாரா... சிங்கம் போன்ற கணவன் வாய்த்திருக்கும் மகிழ்வின்றி அவள் இன்னும்

    என்ன மெட்ராஸில பெரிய வக்கீலுக்குப் பொண்ணுக் கேட்டாக... பம்பாயில என்ஜினியருக்குப் பொண்ணுக் கேட்டாக... பெங்களூரில பேங்கு மேனேஜருக்குப் பொண்ணுக் கேட்டாக... எந்தலைவிதி... கருத்த மச்சான்... தமிழ் புரபசருக்கு வாக்கப்படனும்னு இருந்திருச்சு... என்று புலம்பித் தள்ளுவாள்.

    அவளைப் பெண் கேட்டவர்களாக அவள் குறிப்பிடும் நபர்கள் எல்லாம் பெரும் நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். சுந்தரமூர்த்தி கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்... மனைவியைக் கும்பகோணத்தில் குடி வைத்திருந்தால் அவளது மனம் மகிழ்ந்து ஆறியிருக்கும்... அதை விட்டுவிட்டு பிறந்த ஊரை விட்டு நகர மாட்டேன் என்று கடுமை காட்டிக் கிராமத்து வீட்டிலேயே சிறை வைத்து விட்டார்.

    இதோ... எட்டு கிலோ மீட்டரில கும்பகோணம் இருக்கு... சாமான் வாங்கனும்னா போயிட்டு வரக் கார் இருக்கு... அரண்மனை போல வீடு இருக்கு... எங்க பாட்டன், முப்பாட்டன் சேர்த்து வைச்சிட்டுப் போயிருக்கிற தோப்பு, வயலை விட்டு ஓரடி நகர மாட்டேன்... சொல்லிட்டேன்...

    சுந்தரமூர்த்தி ஒன்றைச் சொல்லி விட்டால், அதுவே கட்டளை…! அந்தக் கட்டளையே சாசனம்...! இப்பேற்பட்ட அடக்குமுறை ஆண்பிள்ளை சிங்கத்திற்கு வாழ்க்கைப் பட்டவளுக்கு கணவரின் சாயலில் பிறந்திருந்த மூத்த மகளின்மீது பிடிப்பு வராமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை...

    அடுத்துப் பிறந்த திவ்யா தாராவைப் போல சிவந்த நிறத்துடன் அச்சு அசல் தாராவின் ஜாடையாகப் பிறந்ததில் தாராவின் அன்பு, பாசம் முழுவதும் இரண்டாவது மகளிடம் மட்டுமே நிலைகொண்டது. திவ்யாவைக் கொண்டாடிய அளவிற்கு அவள் பிரசன்னாவைக் கூடக் கொண்டாடியதில்லை...

    தாராவைப் பொறுத்தவரை திவ்யா சொல்வதே வேதம்.

    2

    பாடு... பாடு... பாடு...

    பாடல் பொருளை... பாடல் பொருளை

    தேடு... தேடு... தேடு...

    ஏதோ ஒரு யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள் காவ்யா...இரு பக்கமும் மரங்கள் அடர்ந்திருந்த மலைச் சாலை அழகாக இருந்தது...

    இப்பத்தானேடி போனா...? அதுக்குள்ளே ரெக்கை முளைச்சு பறந்துட்டாளா...? ஆளையே காணோம்...? என்று

    Enjoying the preview?
    Page 1 of 1