Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ottraiyadi.. Paathaiyiley...
Ottraiyadi.. Paathaiyiley...
Ottraiyadi.. Paathaiyiley...
Ebook210 pages1 hour

Ottraiyadi.. Paathaiyiley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜானகி கோதண்டராமன் இவரும் தன்னுடைய காதலை ஊரின் வெளியே இருக்கும் ஒற்றையடிப் பாதையில் வளர்த்தனர். அவர்களை தொடர்ந்து ஜானகியின் மகளான தீபாவும் தன்னுடைய காதலை பார்த்திபனுடன் அதே ஒற்றையடிப் பாதையிலே வளர்கிறாள். இந்த காதல் விவகாரம் பார்த்திபனின் தாயான மேகலாவின் தெரிந்து விடவே, இவர்கள் இருவரையும் பிரிப்பதற்கு அவள் உபயோகித்த அந்த வார்த்தை, அந்த வார்த்தையின் வீரியத்தால் ஏற்படும் விளைவுகளையும் வாசித்து தெரிந்து கொள்வோம்.

Languageதமிழ்
Release dateSep 25, 2023
ISBN6580133810107
Ottraiyadi.. Paathaiyiley...

Read more from Muthulakshmi Raghavan

Related to Ottraiyadi.. Paathaiyiley...

Related ebooks

Reviews for Ottraiyadi.. Paathaiyiley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ottraiyadi.. Paathaiyiley... - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒற்றையடிப்.. பாதையிலே...

    Ottraiyadi.. Paathaiyiley...

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    1

    ஒற்றையடிப் பாதையிலே...

    ஓராயிரம் கதைகளுண்டு...

    அதைப் புரிந்து கொள்ள மனதிருக்கா...?

    கேட்பதற்கு பொழுதிருக்கா...?

    வீட்டைச் சுற்றிப் போடப் பட்டிருந்த வேலியின் மரக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கோதண்ட ராமன்... வீட்டிற்கு முன்னால் இருந்த சிமிண்ட் தரையில் மிளகாயை பரத்தி காயவைத்துக் கொண்டிருந்த ஜானகி நிமிர்ந்து பார்த்தாள்...

    பிள்ளைகள் எங்கேடி...?

    காலையில் எழுந்திருச்சதும் காபித்தண்ணிய குடிச்சுப்புட்டு... கருக்கல்ன்னு கூடப் பார்க்காமல் மோட்டார் எடுத்துவிட தோட்டத்துக்கு ஓடி விட்டிங்களே... உங்களுக்கு வேலையிருப்பது போல... அவங்களுக்கும் வேலை இருக்காதா...?

    ஜானகி... மிளகாய் வற்றலை... கைகளால் பரத்தி விட்ட படி பேச... மோட்டார் தண்ணீரில் குளித்து முடித்துவிட்டு... புத்துணர்வுடன் வந்திருந்த கோதண்டராமன்... வீட்டிற்கு முன்னால் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் விச்ராந்தியாய் அமர்ந்து கொண்டு மனைவிக்கு பதில் சொன்னார்.

    இதைப் பாருடா... காலங்கார்த்தாலேயே... என் அழகுப் பெண்டாட்டிக்கு மூக்கு நுனியில் கோபம் வருவதை... ஏண்டி கவர்ண்மென்டில் எப்போ... மோட்டார் கரண்டு விடறாங்களோ... அப்போப் போய் தண்ணி பாய்ச்சினாத்தானே உண்டு... ஏற்கனவே கிணற்றில்... நாலில் ஒரு பங்குதான் நமக்கு உரிமையிருக்கு... நம்ம முறையில் தண்ணி பாய்ச்சினால்தானே... பயிரை வாடவிடாமல் காப்பாற்ற முடியும்...?...

    இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு... இம்புட்டுத் தூரத்துக்கு ராமாயணம் படிக்கிறீங்க...

    நான் பேசினால் உனக்கு அது ராமாயணம் போல இருக்கா?

    ராமா... இப்ப உங்களுக்கு என்ன வேணும்...?. பிள்ளைக எங்கேன்னு தெரியனும்... அவ்வளவுதானே...

    அவ்வளவேதாண்டி...

    பொண்ணு... வேலைக்கு கிளம்பிக்கிட்டு இருக்கா... பையன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிக்கிட்டு இருக்கான்... போதுமா...?

    போதாதுங்கிறேன்... இப்ப அதுக்கு நீ என்னாங்கிற...?

    இன்னைக்கு பொழுதுக்கும் நான் பேசினாலும்... நீங்க வாய் பார்த்துக்கிட்டுத்தான் உட்கார்ந்திருப்பீங்க... போதும்ன்னு ஒரு வார்த்தை சொல்லப் போறதில்ல... அப்புறம் வீட்டு வேலையையும்... காட்டு வேலையையும்... யார் பாக்கிறது...

    ஜானகி நொடித்துக் கொள்ள... அந்த வயதிலும்... வனப்புமாறாமல் அழகுடன் இருந்த மனைவியின் அழகை அள்ளிப் பருகுவது போல் ஓர் பார்வையை அவள்பக்கம் வீசிய கோதண்டராமன்... மனைவியின் பேச்சை ரசித்துச் சிரித்துக்கொண்டார்...

    எதுக்குடி ஆத்தா... இப்படி சடைச்சுக்கிறவ...? உன் பொண்ணுகிட்டயும்... பையன் கிட்டயும் பேசினால் உனக்கு வாய் வலிக்காது... என்கிட்டப் பேசினால் மட்டும்... வாய் வலிக்குமாக்கும்...?

    காலையிலேயே வம்பளக்க ஆரம்பிக்கனும்னு நீங்க வரிந்துகட்டிக் கொண்டு வந்துட்டிங்க... உங்ககிட்டு நின்னு பேச எனக்கு நேரமில்லை... வேலைக் கழுதை ஆயிரம் இருக்கு... ஆளை விடுங்க...

    அது எப்படி டீ விட முடியும்...? விடாமல்தானே... என் கையைப் பிடித்துக்கிட்டு நீயும் உன் பிறந்த வீட்டை விட்டு வெளியேறி வந்தே... நானும்... கோவிலில் தாலிகட்டி உன்னோடு குடும்பம் நடத்த ஆரம்பிச்சேன்... இன்னைக்குத் தானேடி... உனக்கு என்கூடப் பேச பொழுதில்லாம போயிருச்சு... ஒரு காலத்தில... என் கூடப் பேச... இடுப்பில் தண்ணிகுடத்தை வைச்சுக்கிட்டு... ஒற்றையடிப் பாதையிலே... ஒற்றைக்காலில் தவம் இருந்தவ தானேடி நீ... எல்லாம் மறந்து போச்சா...?

    எப்படி மறக்கும்...?

    ஜானகி கணவனை நிமிர்ந்து பார்த்தாள்... கருப்பு நிறம்தான்... ஆனால் மிக... மிகக் களையான முகம்... உயரமான... ஆஜானு பாகுவான தோற்றம்... முரட்டு மீசை... பெரிய கண்கள்... வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று பந்தாடும் வீரம்... எதற்கும் அஞ்சாத துணிச்சல்...

    அந்த ஆண்மையைத்தான்... அதி தீவிரமாகக் காதலித்தாள் ஜானகி... பக்கத்து கிராமத்தில்... பண்ணையாருக்கு மகளாய் பிறந்தவள்... இரண்டு கிராமத்திற்கும் இடையில் போகும் ஒற்றையடிப் பாதையில்... கோதண்டராமனை ஊரறியாமல் சந்தித்து உறவாடினாள்... அவள் வீட்டில் திருமணப்பேச்சு எழுந்தபோது... கோதண்டராமன் முறைப்படி... பெற்றோருடன்... பெண் கேட்டு... ஜானகியின் வீட்டிற்கு வந்தான்... வந்தவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்தார் ஜானகியின் அப்பா... கிருஷ்ணமூர்த்தி...

    இந்த ஊருக்குள்ள இருக்கிற நிலத்தில பாதி நிலம் என்னுடையது... மீதி நிலம்... என் மச்சினனுடையது... ஒரு மோட்டார் தண்ணியில் கூட... நான்கில் ஒரு பாகம்தான் உனக்குச் சொந்தம்... கையலக நிலத்தை வைத்துக்கிட்டு... எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு... என் வீட்டுப் படியேறி பெண் கேட்க வந்தே...

    கோதண்டராமன் அவமானப் பட்டுத் திரும்பினான்... ஜானகி பரிதவித்தாள்... ஒற்றையடிப் பாதையிலே... அவனை வழி மறித்து நியாயம் கேட்டாள்...

    என் வீட்டில் பெண் தரமாட்டேன்னு சொன்னால்... அப்படியே என்னை கைகழுவி விடுவீங்களா...?

    எந்த மூஞ்சியோடு பெண் கேட்டு வந்தேன்னு உங்க அப்பன் அவமானப்படுத்தியது என்னை மட்டுமில்ல ஜானகி... என்னைப் பெத்தவங்களையும் தான்...

    சொல்ல வேண்டியதுதானே... இந்த மூஞ்சியைத்தான் உன் மகளுக்குப் பிடித்திருக்கிறதுன்னு சொல்ல வேண்டியதுதானே...

    பைத்தியமா நீ...? பார்த்தோம்... ஆசைப்பட்டோம்... பழகினோம்... கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைச்சோம்... அது முடியாமல் போச்சுன்னா... கண்ணியமாய் விலகி விடனும்... காதலித்தவளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது...

    அதே சமயம் காதலித்தவளை கைவிடவும் கூடாது...

    என்னை என்ன செய்யச் சொல்கிற...?

    இதை நான் சொல்லி... நீங்கள் செய்தால்... எனக்கு அது பெருமையில்லை... சொல்லாமல் செய்யனும்... நான் கேட்காமலே... நான் விரும்பிய வாழ்க்கை எனக்கு கிடைக்கனும்...

    கோதண்டராமன்... கலங்கிச் சிவந்திருந்த ஜானகியின் முகத்தை உற்றுப் பார்த்தான்... அவளை மார்போடு அணைத்து... அவள் விழி சிந்தும் நீரை துடைத்துவிடத் துடித்த மனத்தை அடக்கிக் கொண்டான்...

    2

    ஒற்றையடிப் பாதையிலே...

    உன்மனசை நான் படிச்சேன்...

    ஊரையெல்லாம் எதுத்து நின்னு...

    உன் கையை நான் பிடிச்சேன்...

    வேண்டாம் ஜானகி... உன் அப்பாவே சொன்னது போல... நீ மகாராணியாய் இருக்க வேண்டியவள்... மண் குடிசை உனக்கு வேண்டாம்...

    மாளிகையில் கிடைக்காத நிம்மதியும்... சந்தோசமும்... உங்களின் மண்குடிசையில்தானே எனக்குக் கிடைக்கும்...?

    கையகல நிலத்தையும்... மோட்டார் தண்ணியில்... நாலில் ஒரு பங்கும் வைத்திருக்கிறவன்... பேராசைப் படக்கூடாது...

    அடுத்தவரின் பொருள்மேலதான் ஆசைப்படக்கூடாது... உங்களின் பொருளை விட்டுக் கொடுக்கவும் கூடாது...

    உன் மாமன் மகன்... மோகனரங்கம்... உன் மேல் கொள்ளை ஆசை வைத்திருக்கிறதாய்... ஊரில் பேசிக்கிறாங்க...

    நான் யார் மேல் ஆசை வைத்திருக்கிறேன்...? இல்லை... நீங்கள் யார் மேல் ஆசை வைத்திருக்கிறீங்க...?

    ஜானகி கண்ணீருடன் கேட்டு விட்டுப் போய் விட்டாள்... அவள் பாதத் தடங்கள் பட்ட... ஒற்றையடிப் பாதையில்... ஒற்றையாய் நடந்தவனின் மனம். கனத்தது... பாடியது...

    "உன் மேல ஆசை வைச்சேன்...

    உத்தமியே மெத்தையுண்டு...

    சத்தியமாகச் சொல்லுறேண்டி

    தங்க ரத்தினமே...

    தாள முடியாது கண்ணே!

    பொண்ணு ரத்தினமே...!"

    அவள் மேல் வைத்த ஆசை அவனை உருக்குலைத்தது... வேண்டாம் என்று வாய் சொன்னாலும்... அவனது மனம் அதைச் சொல்லாமல் தவித்தது... மறுநாள் மீண்டும் ஒற்றையடிப் பாதைக்கே அவனுடைய கால்கள் சென்றன...

    அவள் காத்திருந்தாள்... அவனைப் பார்த்ததும்... அவளது கண்கள் பூத்தன... நீர்த்துளிகளை உதிர்த்தன... அவன் மௌனமாக நின்றான்... அவள் அந்த மௌனத்தைக் குலைத்து வார்த்தைகளை உதிர்த்தாள்...

    நாளைக்கு காலையிலே... என் மாமன் வீட்டிலிருந்து எனக்கு பரிசம் போட வருகிறாங்க... அவங்க பரிசம் போட்டுவிட்டால்... அதற்குப் பின்னால் நீங்க தலைகீழாய் நின்னாலும்... நான் உங்களுக்கு கிடைக்கமாட்டேன்...

    அவள் போய் விட்டாள்... அவள் உதிர்த்த வார்த்தைகள் காற்றோடு கலந்து... கோதண்டராமனின்... காதுகளில்... ஒளித்தன...

    மறுநாள் காலையில்... ஜானகியின் வீடு... விழா நாளின் குதுகலத்தோடு... தயாராக இருக்க... ஜானகியின் தாய் மாமாவின் குடும்பம் சீர்வரிசைகளோடு... ஊர்வலமாய்... வந்தது... கெட்டி மேளமும்... நாதஸ்வரமும் களைகட்ட... ஊர்வலத்தின் முன்னால்... மோகனரங்கம்... முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க... வந்தான்...

    வந்தவர்களை வாசலில் நின்று வரவேற்ற... ஜானகியின் அப்பா... எல்லோரையும்... உள்ளே வரும்படி அழைத்தார்... முறைப்படி அவர்கள் நிச்சயதாம்பூல தட்டை மாற்றிக் கொள்ளப் போகும்... கடைசி வினாடியில்... தாம்பூலத் தட்டின் மேல் வீச்சறுவாள் ஒன்று பறந்து வந்து விழுந்தது... தாம்பூலத்தட்டு கீழே விழுந்து சிதற... கிருஷ்ணமூர்த்தி மீசை துடிக்க எழுந்தார்...

    எவன்டா... அவன்...?

    நான்தான்...

    வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோதண்டராமன் வந்து நின்றான்... சபையில்... உயிரற்ற பொம்மை போல் அமர்ந்திருந்த ஜானகி... உயிர் பெற்று எழுந்தாள்... அவளுடைய கையை பிடித்துக் கொண்ட கோதண்டராமனின் முகத்தை ஆனந்தத்துடன் பார்த்தாள்...

    வா... என்னுடன்...

    மறுக்காமல் கோதண்டராமனை அவள் பின் தொடர... அருவாளைத் தூக்கப் போன கிருஷ்ணமூர்த்தியை... மோகனரங்கம் தடுத்தான்...

    மாமா... யாரை வெட்டப் போகிறீங்க...?

    எவ்வளவு தைரியமிருந்தால்... அவன் என் வீட்டுக்குள்ளேயே வந்து என் கண் முன்னால்... என் மகளின் கையைப் பிடித்துக் கூப்பிட்டுக் கொண்டு போவான்...?

    அது யார் கொடுத்த தைரியம்...?

    மோகனரங்கம்...!

    உங்களுக்கும் அது தெரிகிறது... எனக்கும் அது புரிகிறது... அவன் கையைப் பிடித்தால்... ஜானகி கையை உருவியிருக்க வேண்டாமா? அவன் பிடித்த கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு... அவன் பின்னாடியே இவளும் போகிறாள் என்றால்... அதுக்கு என்ன அர்த்தம்...?

    அதுக்காக... அவனை அப்படியே விட்டுவிடுவதா...?

    "விட்டு விடுங்க மாமா... ஜானகி மனசுக்குப் பிடித்தவனுடன் சந்தோசமாக வாழட்டும்... அவன் மேல் எவ்வளவு ஆசையிருந்தால்... என் பணம்...

    Enjoying the preview?
    Page 1 of 1