Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnaivida Oru Urava..?
Unnaivida Oru Urava..?
Unnaivida Oru Urava..?
Ebook314 pages3 hours

Unnaivida Oru Urava..?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஷாலினி மிக அழகானவள். அவளை பார்த்த உடனே சூர்யாவிற்கு பிடித்துவிட்டது. இருவரின் திருமணமும் நடந்தேறியது. ஒரு கட்டத்தில் ஷாலினி சூர்யாவைவிட்டு பிரிந்து சென்றாள். அவள் ஏன் சூர்யாவை பிரிந்தாள்? ஷாலினி சூர்யா மீண்டும் இணைந்தார்களா? படித்து அறிவோம்...

Languageதமிழ்
Release dateJul 29, 2023
ISBN6580133810079
Unnaivida Oru Urava..?

Read more from Muthulakshmi Raghavan

Related to Unnaivida Oru Urava..?

Related ebooks

Reviews for Unnaivida Oru Urava..?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnaivida Oru Urava..? - Muthulakshmi Raghavan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உன்னைவிட ஓர் உறவா..?

    Unnaivida Oru Urava..?

    Author:

    முத்துலட்சுமி ராகவன்

    Muthulakshmi Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/muthulakshmi-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    1

    ‘தாமஸ் சாப்ட்வேர் சொல்யூசன்’ என்று ஆங்கிலத்தில் மிகப்பெரிய நியான் விளக்குகளால் ஒளிர்ந்த அந்த மிகப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் உள்ளே தன் இருக்கையை விட்டு எழுந்தான் சூர்யா... கண்ணாடித் தடுப்புக்களால் மறைக்கப்பட்டிருந்த தன் அறையை விட்டு வெளியே வந்தான்... எதிரே வந்த கார்த்திக்...

    வொர்க் முடிந்து விட்டதா சூர்யா...? என்று கேட்டான்...

    நான் முடித்துக் கொண்டேன்...

    அதைச் சொல்லு... கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என் ஜினியர்ன்னு ஆனாலும் ஆனோம்... இரவு பகல் தெரியாமல் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறோம்... வெளியே போனால் கண் கூசுதுடா... செயற்கை வெளிச்சம்... செயற்கை குளிர்... கம்ப்யூட்டர் திரை... ம்ஹூம்... இப்படியே போனால்... நாம் கூடிய சீக்கிரம் மனித இயல்புகளை மறந்து... மனித உணர்வுகளைத் துறந்து விடுவோம்...

    நிஜம்தான் கார்த்திக்...

    சாப்பிடுகிற நேரத்தில் சாப்பிட்டு... தூங்குகிற நேரத்தில் தூங்க வேண்டும்... இப்படி நேரம் கிடைத்தால் தான் சாப்பாடு... தூக்கம் என்றிருந்தால் வாழ்க்கையை... வாழ்க்கையாய் நாம் எப்போது வாழப் போகிறோம்...?

    கை நிறையக் காசு வேண்டுமென்றால் நம் நேரத்தை நாம் விற்றுத்தானே ஆக வேண்டும்...? வசதிகளுக்காக வாழ்க்கையில் சில உல்லாசங்களை விட்டுக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் கார்த்திக்...

    என்னவோ போ... ஆ... சொல்ல மறந்துவிட்டேன் பார்த்தாயா...? இன்றைக்கு எங்கள் மகளின் மூன்றாவது வருடப் பிறந்த நாள் பார்ட்டி இருக்கிறது... எங்கள் பிளாட்டிலேயே கொண்டாடுகிறோம்... நீ என்னுடனே வந்துவிடு...

    பார்ட்டியை வைத்துக் கொண்டு ஆபிஸிற்கு வந்தாயா...?

    பார்ட்டிக்காக லீவ் போடக் கூடிய சூழ்நிலையிலா நாம் இருக்கிறோம்... இன்றைக்குள் புராஜெட் வொர்க்கை முடிக்க வேண்டுமே...

    முடித்து விட்டாயா...?

    நேற்றுக் காலையிலிருந்தே... கம்ப்யூட்டரே கதின்னு உட்கார்ந்து விட்டேன்... முடித்து விட்டு இப்போதுதான் எழுந்தேன்... சாப்பாடு... குளியல் எல்லாம் இங்கேதான்...

    தட்ஸ் குட்... அப்புறம் பார்ட்டி ஏற்பாடுகளை யார் பார்ப்பது...

    தீப்திதான்... என் அருமை பெண்டாட்டி... என்னை விட சுறுசுறுப்பானவள்... அவளுடைய வொர்க்கை இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே முடித்து விட்டாள்... நேற்றிலிருந்து லீவ் போட்டு விட்டாள்...

    என்னத்தை சொல்லு... இந்தப் பெண்கள் நம்மை விடக் கெட்டிக்காரர்கள்தான்...

    ஆமாமாம்... ஆபீஸ் வேலையிலும் சரி... வீட்டு வேலைகளிலும் சரி... புருசன்காரனின் சிண்டைப் பிடிப்பதிலும் சரி... அவர்கள் கெட்டிக்காரர்கள்தான்...

    அதனால் தான் கல்யாணத்திற்கு பின்னால் உனக்கு முடி குறைந்திருக்கிறதா...?

    கண்டுபிடித்து விட்டாயா...?

    ஓகே... கார்த்திக்... நான் ரொம்ப டயர்டா இருக்கிறேன்... என் பிளாட்டிற்கு போய் குளித்துக் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு உன் வீட்டுப் பார்ட்டிக்கு வருகிறேன்...

    மறந்துவிடாதேடா... நாங்கள் உனக்காக வெயிட் பண்ணுவோம்...

    அதெல்லாம் வேண்டாம் கார்த்திக்... நீ பார்ட்டியை ரன் பண்ணு... நான் முடிந்தால் வந்து கலந்து கொள்கிறேன்...

    இப்படித்தான் எல்லா பங்ஷன்களுக்கும் சொல் கிறாய்... கடைசியில் வராமல் இருந்து விடுகிறாய்...

    சூர்யா பதில் சொல்லாமல் மௌனமாய் ஓர் புன்னகை ஒன்றை உதிர்த்தான்... அந்த ஹாலை விட்டு வெளியேறினான்... அவன் போவதையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனின் முதுகில் ஓர் அடி விழுந்தது... முதுகைத் தடவிக் கொண்டு திரும்பிப் பார்த்தான்... சையது அலியும்... ஸ்டெல்லாவும் நின்றிருந் தார்கள்...

    ஏண்டா... பார்ட்டிக்கு வாங்கன்னு எங்களை யெல்லாம் கூப்பிட்டு விட்டு நீ இங்கே நின்று சூர்யாவின் முதுகைப் பார்த்து ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக் கிறாயே... பார்ட்டி கொடுக்கும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா...?

    இல்லைடா... நம் சூர்யா இப்படி ஆகிவிட்டானே என்று நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்...

    நீ கவலைப்பட்டு விட்டால் மட்டும் அவன் சரியாகி விடுவானா...?

    எனக்குப் பின்னால் அவன் கல்யாணம் பண்ணிக் கொண்டான்... அவன் கல்யாண வேலைகளை நானும் தீப்தியும்தான் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தோம்... தீப்தி அப்போது கர்ப்பிணி வேறு...

    நீங்கள் மூன்று பேரும் ஒரே காலேஜில் படித்தவர்கள் தானே...

    ஆமாம்... அத்தோடு... எங்கள் இரண்டு பேருக்குமே சூர்யா பெஸ்ட் பிரண்ட்...

    ஏறக்குடைய ஒரு வருடமாவது அவன் மனைவி அவனுடன் சேர்ந்திருந்தாளா...?

    ஒரு வருடத்திற்குள்... ஒரு ஜென்மம் முழுவதற்கு மான போராட்டத்தை அவனோடு போராடி முடித்து விட்டாள்...

    அப்படி என்னதாண்டா அவர்களுக்குள் பிரச்சனை...?

    தெரியவில்லை சையத்... என்னதான் குளோஸ் பிரண்டாக இருந்தாலும் கணவன்... மனைவி... விவகாரத்திற்குள் ஒரு அளவுக்கு மேல் நாம் மூக்கை நுழைக்க முடியாது... அது அவர்களுடைய அந்தரங்கம்...

    இப்போது அவன் மனைவி எங்கேயிருக்கிறாள்...?

    யாருக்குத் தெரியும்... அவளுடைய அண்ணனுக்கு பூனா பக்கம் டிரான்ஸ்பர் ஆனதாகவும்... இவள்... அவர்களோடு போய்விட்டதாகவும் கேள்விப்பட்டேன்... சூர்யாவும் அப்போது வெளிநாட்டிற்குப் போய் விட்டானே... இப்போதுதானே திரும்பி வந்திருக்கிறான்...?

    இவனும் திரும்பி வந்து ஆறு மாதங்களாகிறதே... மனைவியிடம் சமாதானம் பேச முயற்சிக்கவில்லையா...?

    இல்லையென்றுதான் நினைக்கிறேன்...

    எதை வைத்து இப்படிச் சொல்கிறாய்...?

    நான் பேச முயன்றபோது... அவள் கிடைக்கவில்லை யென்றான்...

    அப்படியென்றால்...?

    இவன் தேடிப் போயிருக்கிறான்... அவளுடைய அண்ணன் வீட்டு முகவரியில் அவர்கள் இல்லையாம்... அவர்களுடைய பூர்வீக கிராமத்திலும் அவர்களைப் பற்றிய தகவல் தெரியவில்லையாம்...

    இது என்னடா... பெரிய மர்மமாக இருக்கிறது...?

    மர்மம்தான்... அவளுடைய அண்ணனுக்கு கல்யாணம் ஆகியதாம்... அண்ணன் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நர்ஸாம்... அவள் வேலை பார்த்த நாட்டிலேயே கணவனுக்கும் வேலை வாங்கிக் கொடுத்து விட்டாளாம்... இவனுடைய மனைவியும்... அண்ணன் குடும்பத்துடன் சென்று விட்டாளாம்...

    இவன் ஏன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது...?

    வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஓர் முறை தான் என்கிறானே...

    அவனுக்கென்று சொந்த பந்தம்...?

    யாருமில்லை சையத்... அவனுடைய அம்மா மட்டும் தான் இருந்தாங்க... சிறு வயதிலேயே அவனுடைய அப்பா இறந்து விட்டார்... சின்னதாய் இட்லிக்கடை போட்டு இவனுடைய அம்மா வாழ்க்கையை நடத்தினாங்க... இவனை நல்ல முறையில் வளர்த்து... படிக்க வைத்து ஆளாக்கி பெரிய வேலையிலும் சேர வைத்து கல்யாணமும் பண்ணி வைத்தாங்க... ஆனால் அவன் மனைவி... அவனுடைய அம்மாவுடன் ஒத்துப் போக வில்லையாம்...

    அடப்பாவமே...

    அதுவும் சூர்யாவிற்குக் கல்யாணமான ஏழாம் மாதமே... அவனுடைய அம்மா ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டாங்க... அதன் பின்னால்தான் சூர்யா தன் மனைவியை முழுதாக வெறுத்து விட்டான்...

    அவன் மேல் குற்றம் இல்லை...

    என்னத்தைச் சொல்லி என்ன பண்ண...? இவன் இப்படி எதிலும் பற்றில்லாமல் அநாதை போல் அலைவதைப் பார்த்தால்... எனக்கும்... தீப்திக்கும் கஷ்டமாக இருக்கிறது... நாங்களும் ஆனமட்டும் முயன்று விட்டோம்... இவனை மாற்ற முடியவில்லை...

    மகராசி... இவனுக்கென்று மனைவியை வந்து வாய்த்தாளே... அவள் பெயர் என்ன...?

    ஷாலினி...

    அப்போது தன் கார் கதவைத் திறந்து ஏறிக் கொண்டிருந்த சூர்யாவின் மனமும் அவள் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருந்தது...

    ‘ஷாலினி’ அழகு தேவதை...! அவளைக் கண்டதும் சூர்யாவின் மனைவியாக்க விரும்பியது சூர்யா அல்ல... சூர்யாவின் தாய் கமலம்...!

    கண் நிறைந்த கணவனைத் திருமணம் செய்து கொண்டவள்... அவனது மறைவிற்குப் பின் தனி மனுஷியாக வாழ்க்கையெனும் போர்க்களத்தில் தினம் தினம் போராடி... தன் மகனை வளர்த்து ஆளாக்கினாள்... அழகும் கம்பீரமும் நிறைந்த மகனிற்கு ஏற்ற பெண்ணாய் தேடிக் கொண்டிருந்தவள் ஒரு திருமணத்தில் ஷாலினியைப் பார்த்தாள்... தன் மகனுக்கு ஏற்ற பெண் இவள்தான் என்று பார்த்த மாத்திரத்தில் முடிவு செய்து விட்டாள்...

    ‘வெறும் முக அழகு மட்டும் போதாது என்று ஏன் அன்று அம்மாவிற்குத் தெரியாமல் போனது...?’ சூர்யா பெருமூச்சு விட்டான்...

    ‘அவள் என்னிடம் அன்பாக இருந்திருக்கா விட்டாலும் பரவாயில்லை... என் அம்மாவிடமாவது அனுசரணையாய் இருந்திருக்கக்கூடாதா...’ அவன் கண்களில் நீர் மல்கியது...

    ‘அம்மா...’ மனதிற்குள் கூறிக் கொண்டான்... ‘எப்படிப் பட்டவள் அவள்... பொறுமையில் பூமாதேவி... மருமகளை மகளாய் நினைத்தவள்... ஒருநாள்... ஒரு பொழுதாவது... தன் மருமகள் சமைத்து தான் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருப்பாளா...? காலையில் காபியுடன் மருமகளை எழுப்புவாளே... அதற்கும் ஓர் நாள்... அந்த அகங்காரி என் அம்மாவை வார்த்தைகளால் சுட்டாளே...’

    சூர்யாவின் நினைவலைகள் எழுந்தன...

    இது என்ன பழக்கம்...?

    என்னம்மா இது... காலையில் காபி சாப்பிடுவது தானே உன் பழக்கம்...?

    ஆமாம்... அதை நான் வந்து சாப்பிட்டுக்கொள்ள மாட்டேனா...? பெட்ரூம் கதவைத் தட்டிக் கொடுப்பது என்ன பழக்கம்...? ஒரு மேனர்ஸ் வேண்டாமா...? சேச்சே...

    கமலம் விக்கித்துப் போய் விட்டாள்... இப்படிப்பட்ட வார்த்தைகள் ஷாலினியின் வாயிலிருந்து வரும் என்று கொஞ்சம்கூட அவள் நினைத்துப் பார்க்கவில்லை...

    ‘என்ன வார்த்தைகளைச் சொல்லி விட்டாள் இவள்...?’

    அவள் அதிர்ந்து போய் திரும்பும்போது அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த சூர்யா பளாரென்று ஷாலினியின் கன்னத்தில் அறை விட்டான்...

    யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லுகிறாய்...? என் அம்மா என்ற மரியாதை கொஞ்சமாவது வேண்டாமா...? மன்னிப்புக் கேளுடி முதலில்...

    நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்...? நான் பேசியதில் என்ன தப்பு...?

    மன்னிப்புக் கேட்கா விட்டால் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை...

    திரும்பவும் சொல்கிறேன்... நான் பேசியதில் தப்பில்லை... ஹஸ்பெண்ட் அன்ட் வொய்பிற்குள் வரயாருக்கும் உரிமையில்லை...

    பெற்ற தாய்க்கும் மகனுக்கும் இடையில் வர உனக்குத்தான் உரிமை இல்லை...

    என்ன சொன்னீர்கள்...? எனக்கு உரிமையில்லையா...? எனக்கு உங்கள் மேல் உரிமையில்லையா...? நீங்கள் என் புருசனில்லையா...?

    ஆமாண்டி... நான் உன் புருசன்தான்... அதற்கு முதலில் என் அம்மாவிற்கு மகன்... அதற்கு அப்புறம்தான் உனக்கு புருசன்...

    எனக்கு முதல் உரிமையில்லையா...?

    இல்லை...

    ஷாலினி அப்போது பிறந்த வீட்டிற்கு பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக ஆரம்பித்தவள்தான்... அதற்குப் பின் அது தொடர்கதையாகி விட்டது... ஷாலினியை அழைத்துக் கொண்டு வரச் சொல்லி அன்று கமலம் கண்டித்தது இன்றும் அவன் நினைவில் நிற்கிறது...

    சூர்யா... ஆயிரம்தான் இருந்தாலும் அவளைக் கைநீட்டி நீ அடித்தது தப்பு...

    அவள் எப்படியெல்லாம் பேசுகிறாள்...? அதைக் கேட்டுக் கொண்டு என்னை சும்மா இருக்கச் சொல்கிறீங்களா...?

    டேய்... உன் மேலிருக்கும் உரிமையினால்தானே அவள் அப்படிப் பேசினாள்...?

    மழுப்பிப் பேசாதீங்கம்மா... அவள் பேசியதை நியாயப்படுத்தாதீங்க...

    சூர்யா... அவள் பேசியது தப்பாகவே இருந்தாலும்... நீ அவளை மன்னித்து விடுடா... அவளைப் போய் கூப்பிட்டுக்கொண்டு வா...

    அவள்தானே போனாள்...? அவளே வரட்டும்...

    நீதானே அவளைப் போகச் சொன்னாய்...?

    மன்னிப்புக் கேட்காவிட்டால் போய் விடுன்னேன்... நான் உன்னை விட்டுப் போகவும் தயார்... ஆனால் உன்னைப் பெற்ற தாயிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன்னு சொல்லாமல் சொல்லிவிட்டு அவள் போயிருக்கிறாள் அம்மா... அவளைப் போய் வெற்றிலை பாக்கு வைத்துக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொல்கிறீர்களா...?

    ஆமாம்... அப்படித்தான் வைத்துக் கொள்.

    அதுதான் ஏன்...?

    ஏன்னா... அவள் உன் பெண்டாட்டி... உன்னோடு வாழ வந்தவள்... கல்யாணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை... அதற்குள் அவளைப் பிறந்த வீட்டிற்கு துரத்தி விட்டு விட்டாய்...

    இந்த ஒரு மாதத்திற்குள் அவள் உங்களோடு எந்த அளவுக்கு மல்லுக்கு நின்றாள் என்பதை மறந்து விட்டுப் பேசுகிறீர்களே அம்மா...

    நாங்கள் பெண்கள் எதையாவது பேசிக் கொண்டிருந்து விட்டுப் போகிறோம்... உனக்கென்னடா வந்தது...? நீயேன் தலையிடுகிறாய்...?

    இது என்னம்மா இப்படிச் சொல்கிறீங்க... அவள் எப்படி என் முன்னால் உங்களைத் திட்டலாம்...? அதைக் கேட்டுக் கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள்... உங்களை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ளத்தான் நான் கஷ்டப்பட்டுப் படித்து இந்தப் பெரிய வேலையில் சேர்ந்தேன்... நான் கை நிறைய சம்பாதிப்பது உங்களை உட்கார வைத்துக் காப்பாற்ற... கல்யாணம் பண்ணிக் கொண்டு என் பெண்டாட்டியுடன் உல்லாசமாய் வாழ்வதற்காக இல்லை...

    கமலம் நெஞ்சம் நிறைய புன்னகைத்தாள்... மகனின் பாசம் கண்டு அவளது கண்கள் கலங்கின...

    சூர்யா... நீ நல்லா வாழணும்டா... அதுதான் எனக்கு வேண்டும்... கண் நிறைஞ்ச மருமகள்... அவளை நல்லபடி வைத்துக்கணும்னுதான் நான் நினைக்கிறேன்... சின்னப் பெண்... புரியாமல் பேசுகிறாள்... நீ போய் கூட்டிக்கிட்டு வாடா ராஜா... எனக்காக இந்த அம்மாவிற்காக இதைச் செய்டா தங்கம்...

    தாயின் வற்புறுத்தலுக்காக மனைவியைக் கூப்பிட்டச் சென்னையிலிருந்த அவளது பிறந்த வீட்டிற்குச் சென்றான் சூர்யா...

    அவர்கள் குடியிருந்த அபார்ட்மென்டின் வாசலில் காலிங் பெல்லை அடித்து விட்டு காத்து நின்றான்... கதவு திறந்தது... ஷாலினியின் அண்ணன் நவீன் இறுக்கமான முகத்துடன் சூர்யாவை எதிர் கொண்டான்...

    வாங்க... என்ன சென்னைக்கு வந்திருக்கீங்க... எதுவும் வேலை விஷயமாய் வந்தீங்களா...?

    ‘வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு தரும் வரவேற்பைப் பார்...’ சூர்யா பல்லைக் கடித்தான்...

    ஆமாம் மிஸ்டர் நவீன்... உங்கள் வீட்டிலிருக்கும் என் பெண்டாட்டியை கூப்பிட்டுக் கொண்டு போகும் வேலையாய் வந்தேன்... அவளைக் கூப்பிடுகிறீர்களா...?

    பெண்டாட்டியா...? அது கூட உங்களுக்கு நினை விருக்கிறதா...?

    நினைவில்லாமலா அழைத்துப் போக வந்திருக்கிறேன்...?

    கல்யாணமாகி ஒரு மாதம் ஆவதற்குள்ளேயே... என் தங்கையை மாட்டை அடிப்பதைப் போல அடித்து வீட்டை விட்டு விரட்டி விடுவீர்கள்... நீங்கள் வந்து கூப்பிட்டவுடன் நான் அனுப்பி விடவேண்டுமா...?

    ‘அனுப்பாமல் உன் வீட்டிலேயே நீ வைத்திரு...’ என்று சொல்லிவிட்டு எழுந்து விடத்தான் மனதிற்குள் ஆசைப்பட்டான் சூர்யா...

    ஆனால்... கமலத்தின் இறைஞ்சிய முகம் நினைவில் வந்ததும்... பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான்...

    மாட்டை அடிப்பதைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள் போல... நான் கேள்விப்பட்டதில்லை... நான் என் மனைவியைத்தான் கை நீட்டி அடித்தேன்...

    மனைவி என்பதால் கை நீட்டி அடிக்கலாமா...?

    மிஸ்டர் நவீன்... அது சரியா... தவறா என்று வாதாட நான் வரவில்லை... உங்கள் தங்கை பேசும் விதமும் நடந்து கொள்ளும் முறையும் சரியில்லை... அவளுக்கு புத்தி சொல்லி நீங்கள் வளர்க்கவில்லையா...?

    நாங்கள் வளர்த்த விதமெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது... உங்கள் அம்மாவும் நீங்களும்... செய்யும் கொடுமைதான் சரியாக இல்லை...

    கொடுமையா... அப்படியொரு வார்த்தையைப் பற்றி நீங்கள் சொல்லித்தான் நான் கேட்கிறேன்... எங்களுக்கு அது தெரியாது...

    பொறுமையிழந்தவனாக சூர்யா எழுந்து கொண்டான்... அதுவரை கண்ணில் படாமல் உள்ளறையில் இருந்த ஷாலினி அறையை விட்டு வெளியே வந்தாள்... கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான் சூர்யா... கையில் காபி தம்ளர் இருந்த டிரேயோடு சமையலறையை விட்டு வெளியே வந்த ஷாலினியின் தாய் ஜானகி... மருமகனிடம் காபியை நீட்டியவாறு பவ்யமாய் கூறினாள்...

    அவளே சின்னப் பெண்... அவளுக்கு என்ன தெரியுமுன்னு உங்க அம்மா அவளிடம் சரிக்கு சரியாக போராட்டம் பண்றாங்க...? இதை நீங்க ஏன்னு கேட்க மாட்டீங்களா...?

    ‘கெட்டிக்கார பெண்மணி... இவ்வளவு நேரமும் மகனைப் பேச விட்டுவிட்டு... வந்த மருமகனை ‘வா’ வென்று கூப்பிடக் கூட வராமல் சமையலறையில் ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்டு விட்டு மருமகன் கிளம்புவது போல் தெரியவும்... மகளை வெளியில் தள்ளிவிட்டு பின்னாலேயே காபியோடு வந்து நிற்கிறாங்களே... இந்தக் கெட்டிக்காரத்தனம் என் அம்மாவிற்கு வருமா...?’

    சூர்யா தன் மாமியாரைப் பார்த்துக் கண்டிப்புடன் கூறினான்...

    "பாருங்க... உங்க மகள்... என் பெண்டாட்டி... என்னுடன் வாழ வந்தவள்...

    Enjoying the preview?
    Page 1 of 1