Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Brindhavanamum Premakumaranum
Brindhavanamum Premakumaranum
Brindhavanamum Premakumaranum
Ebook116 pages1 hour

Brindhavanamum Premakumaranum

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

யாரும் இன்றி அநாதையாக இருக்கும் பிருந்தாவிற்கு உறவாக வந்தவள் பிரீத்தா. பிரீத்தாவின் பிரச்சனை காரணமாக பிருந்தாவை கின்னளெர் அழைப்பி வைத்தாள். ப்ரீத்தாவிற்கும் பிருந்தாவிற்கும் இடையே இருக்கும் உறவு என்ன? பிருந்தாவிற்கு கின்னளெரில் ஏற்படும் நிகழ்வுகள் என்ன? ப்ரீத்தாவின் பிரச்சனை என்ன?

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580109909459
Brindhavanamum Premakumaranum

Read more from Kanchana Jeyathilagar

Related to Brindhavanamum Premakumaranum

Related ebooks

Reviews for Brindhavanamum Premakumaranum

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Brindhavanamum Premakumaranum - Kanchana Jeyathilagar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பிருந்தாவனமும் பிரேமகுமாரனும்

    Brindhavanamum Premakumaranum

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    என்னால் அப்படி செய்ய முடியாது ஸர்... என்று பிருந்தா சொன்னது ‘சட்’டென வரதராஜனுக்குப் புரியவில்லை...

    விளிம்பற்ற கண்ணாடி வழியே அவரது விழிகள் எரிச்சலாய் தன் முன்னே நின்றவளை ஏறிட்டன. அது புரிந்தவள், மேலும் தைரியமாகச் சொன்னாள்:

    தப்பான ரிப்போர்ட் தர வேண்டாம் ஸர்... முதலாளியின் கண்கள் கூர்மையாக, இதெல்லாம் தன்னைக் கூறுபோட முடியாதென்ற இயல்பில் நின்றாள் பிருந்தா.

    இந்த அனுபவம் இல்லாத இளசுகளை இதனால்தான் வேலைக்கு எடுக்கிறதில்லை. ஆனா என் மகள் ப்ரீத்திக்காக பார்த்து பி காம். முடிச்ச உனக்கு வேலை தந்தது இப்போ தொல்லையாயிடுச்சு பாரு... சலிப்பும் சினமுமாய் குற்றம் சாட்டினார்.

    C.A. பண்றேனே ஸர்... அக்கௌண்ட்ஸை நான் நல்லபடி கவனித்ததாய்தானே நீங்களும் சொன்னீங்க... இதுவரை...

    இது என் கம்பெனி... இனியும் நான் சொல்றதைத்தான் நீ செய்யணும்...

    ஸாரி அங்... ஸர்... குறுக்கு வழியில் போகாம இருப்பதுதான் வியாபாரத்துக்கு நல்லது.

    அனுபவம் இல்லாம உளர்றே...

    "நேர்மைக்கும் அனுபவத்திற்கும் சம்பந்தம் உண்டா இல்லையான்னு தெரியாது ஸர்... ஆனால் பிசினஸை நேர்வழியில் செய்தால் நல்ல பேர் கிடைக்கும். கூடவே தொழில், நிலைக்கும்... வளரும்...

    பிரசங்கம் பண்ணாத நீ... ப்ரின்டா... இதெல்லாம் ஒத்து வராது... இந்தக் காலத்துக்கும், எனக்கும்...

    என் பேர் பிருந்தா, ஸர்...

    தமிழ் தெரியாதவர்களின் உச்சரிப்பை இவள் பொருட்படுத்துவதில்லை என்றாலும், தமிழர் ஒருவரின் கொச்சைப் பேச்சைப் பொறுப்பதாகவுமில்லை.

    Proper Names அதாவது பெயர்களை நாம எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் என்றவரின் தொனியில் ஏளனமிருந்தது.

    பிறருக்கு ஃபைன் ஸர். தமிழர்கள் ஏன் நம் மொழியைக் குதறணும்?

    உன் பேரைச் சரியாய்... அதரவது உன் காது ஏற்கும்படிதான் உச்சரிக்கணும்றே... ரைட். அதே போல என் வியாபாரத்தை எனக்குத் திருப்தி படறது போல நீயும் நடத்தணுமில்லையா?

    உள்ளபடி இல்லாமல் உருட்டினால், பிரச்சனையாகுமே ஸர்…

    அசராமல் பதில் சொல்லியபடி நின்றாள் இவள்.

    நான் யார் பணத்தையும் கையாடல் பண்ணலை. நம் விற்பனை அபாரமாய் இருப்பதாகச் காட்டணும். ஸிம்ப்பிள்...

    Inflated Revenue அதாவது வருமானத்தைக் கூட்டிக் காட்றது எதற்காய் ஸர்...?

    ஐந்தேகால் அடி உயரமும், அதற்கேற்ற சித்து உடலுமான சின்னப் பொண்ணொருத்தி விறைப்பாய் தன் எதிரே நின்று தன்னைக் கேள்வியால் குத்துவதை, சம்பளம் தருபவரால் தாங்க முடியவில்லை.

    சொன்னதைச் செய்யத்தான் உனக்கு சம்பளம். முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்பவங்களுக்கு இங்கே இடமில்லை.

    சரி ஸர்... ஐ ரிஸைன்...

    யோசிச்சு பேசு... உனக்கு உதவ யாருமில்லாததால்தான் எம் மக உனக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கித் தந்தாள். பாதுகாப்பான இடம்... இப்படி நினைச்சபடி பேசும் சுதந்திரம் வேறு. இதை ராஜினாமா செய்தால், நீ எங்கே போய், எப்படி சமாளிப்பே...?

    பார்க்கணும் அங்கிள்...

    சிநேகிதியின் தந்தை நிர்வாகத்தில் வேலைக்குச் சேர்ந்ததும், அவரை ‘ஸர்’ என்று அழைக்க ஆரம்பித்தவள், அதை மாற்றியதின் மூலம் தன் முடிவை அவருக்காக சூசகமாய் மேலும் தெளிவாக்கினாள்.!

    குறுக்கு வழியில் போவது, தான் போக விரும்பாத ஊருக்குத்தான் தன்னைக் கொண்டு போய் சேர்க்கும் என்றவளின் பெற்றோர் காட்டிய வழியை இவரிடம் சொல்ல முடியாது. ஏற்க மறுப்பவருக்கு இதெல்லாம் வறட்டுத் தத்துவம்தானே...?

    தான் எடுத்தது சரியான முடிவுதான் என்று பட, அதைத் தன் சிநேகிதியிடமும் சொல்ல முடிவெடுத்தாள்.

    ***

    அவர்கள் இருவரும் சந்தித்தது ஒரு உணவகத்தில்.

    தகவல் வரவுமே ப்ரீத்திக்கு பிருந்தா பகிரப் போகும் விவரம் சுகமானதல்ல என்பது புரிந்தாலும், அது பற்றி ஏதும் விசாரிக்கவில்லை.

    இப்போதும் அவள் பேச்சு, சாப்பிடும் பதார்த்தத்தைப் பற்றித்தான் போனது.

    டிப்டிக்கல் மைசூர் மசாலா தோசை... கனமாய் இருந்தாலும் மொறுமொறுப்பாய் இருக்குது பாரேன்...

    ம்... ம்...

    காரம் ஜாஸ்தியா ப்ருந்தா? உம் மூக்கு நுனி சிவந்திருக்குது…

    இல்ல...

    கண்ணும் கூட டல்தான். சொல்ல வந்த விவரத்தை ஆரம்பி மை செல்ல ஃப்ரண்டே...?

    துறுதுறுப்பான விழிகளில் கரிசனையையும் சேர்த்துக் கொண்டு கேட்டாள் ப்ரீத்தி.

    இனி வேற வேலை தேடணும் ப்ரீத்தி.

    நீயாய் ரிஸைன் பண்ணும் வரை, அதற்கென்ன தேவை? இது உன் கம்பெனி போல செல்லம்...

    நான் ரிஸைன் பண்ணிட்டேன்.

    யார் பிரச்சனை பண்றா? அப்பாட்ட சொல்லிடலாம்...

    சிறு பெண் போல ஆறுதல் பேசிய தோழியை, நீரேறிய விழிகளுடன் ஏறிட்டாள் பிருந்தா.

    அந்த நீரோட்டத்தில் நேர்மை மிதந்தது.

    அவ்வப்போது சாப்பிட்டபடி சொல்லப்பட்ட விவரத்தைக் கவனமாய் கேட்டவள், ஆக வருஷ ரிப்போர்ட்டை பிரமாதம்னு காட்டணுமா? அப்போ நம் கம்பெனி ஷேர்ஸின் விலை...? டிமாண்ட் கூடும்னு ஒரு நம்பிக்கை.?

    முன்பு ஆடிட்டரோடு அமர்ந்து, தன் நிறுவனத்தில் லாபமே காணாதது போல சோக கணக்குகளை அப்பா உருவாக்கியதைப் ப்ரீத்தி அறிவாள்.

    இப்போது வேறு கதைக்கு மாறிக் கொண்டார் போலும்.

    ஆனால் அதில் தன் தோழிக்கு இடமில்லை என்பது வருத்தந்தான்.

    கை கழுவிய இருவரும் மெளனமாய் தண்ணீர் பருகியபடி உட்கார்ந்திருந்தார்கள்.

    வழக்கமான பேச்சும் சிரிப்புமாய் இப்பெண்கள் இல்லாததோடு, அவர்களின் வாடிய முகங்கள் அங்கிருந்த பலரின் கவனத்தைச் சுண்டியிழுத்தது... ஆனால் பார்த்த விழிகள் வேறு ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1