Kaadhalin Kaaladi Satham
4.5/5
()
About this ebook
Read more from Kanchana Jeyathilagar
Kanavin Karaigalil Rating: 5 out of 5 stars5/5Nithamum Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Idhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Ithu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Aagayathil Oru Theevu! Rating: 5 out of 5 stars5/5Thedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Manasellam Malligai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Mullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNinaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Kanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Maaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Pagal Natchathirangal Rating: 5 out of 5 stars5/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Mullai Panthal Rating: 5 out of 5 stars5/5Mannikka Vendugiren Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhalin Kaaladi Satham
Related ebooks
Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Sorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Kannadi Thirai Rating: 4 out of 5 stars4/5Kaandharva Alaigal Rating: 4 out of 5 stars4/5Mazhai Pol Nee Rating: 3 out of 5 stars3/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Theeyena Nee...! Rating: 5 out of 5 stars5/5Adhu Thunbamaana Inbamaanathu! Rating: 4 out of 5 stars4/5Vazhvinul Vasantham..! Rating: 5 out of 5 stars5/5Pallaviye Saranam! Rating: 5 out of 5 stars5/5Thoongatha Vizhigal Irandu Rating: 0 out of 5 stars0 ratingsNila Nesam Rating: 5 out of 5 stars5/5Thithikkum Thee! Rating: 0 out of 5 stars0 ratingsMullai Meeriya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNetru Mudhal Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Adhisaya Raagam... Rating: 0 out of 5 stars0 ratingsThedatha Kaadhal! Rating: 4 out of 5 stars4/5Karumbai Nam Kaadhal Rating: 5 out of 5 stars5/5En Yavana Rani Rating: 5 out of 5 stars5/5Ninaitha Manam Marakkaathu! Rating: 2 out of 5 stars2/5Shenbaga Poove Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Antha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Natchanthirangalin Nadanam! Rating: 4 out of 5 stars4/5Ival Vera Maathiri.. Rating: 5 out of 5 stars5/5Azhage Aaryuire! Rating: 3 out of 5 stars3/5Paartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5
Reviews for Kaadhalin Kaaladi Satham
10 ratings0 reviews
Book preview
Kaadhalin Kaaladi Satham - Kanchana Jeyathilagar
http://www.pustaka.co.in
காதலின் காலடி சத்தம்
Kaadhalin Kaaladi Satham
Author:
காஞ்சனா ஜெயதிலகர்
Kanchana Jeyathilagar
For more books
http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
பெயர் தெரியாத அந்தக் குருவி, இவள் அறை ஜன்னலின் கண்ணாடியைக் கொத்தியது... கூடவே ஷன்மதியின் உறக்கத்தையும் கொத்திக் கலைத்தது...
கண்களைத் துளி பிரித்தவள் நிழலாய் புலப்பட்ட பறவையை நோட்டமிட்டாள்... அதே குருவிதான். சிட்டுக்குருவியின் அளவுதான்... ஆனால் அதைவிட நிறங்களோடு இருந்தது - சிறகுகளில் துளி நீலத்துடன். இப்போது தெளிவாய் தெரியாவிட்டாலும் இவள் தோட்டத்தில் வாசிக்க உட்காரும் போதும் அது குறுக்கும் மறுக்கும் சிறகடிக்கும்.
அப்போது கவனித்திருக்கிறாள்.மாலை மயங்கி இருள் சூழும் நேரமும், தன் கூட்டிற்குப் போய் அடையும் முன் இது ஜன்னல் காண்ணாடியை அலகால் தட்டும், இவளுக்கு 'குட்-நைட்' சொல்லும் தோரணையில். அப்படியானால் இது காலை வணக்கம்!
சில வாரங்களுக்கு முன்பு காலை ஆறரைக்கு கேட்ட இந்த சத்தம் இவளை எரிச்சல்படுத்தியது.
'டேம் யூ' என்று கூச்சலிட்டு, தன் 'டூவே' போர்வையை தலைக்கு மேல் இழுத்துவிட்டு சுருளுவாள்.
ஆனால் கிளம்பிய எரிச்சல் சுலபமாய் தணியாதே?
அதற்கேற்றாற்போல வர்ணக் குருவியும் மீண்டும் பாய்ந்து பறந்து, வந்து கொத்தும்.
ஷன்மதி சிறு வட்ட தலையணையை எடுத்து ஜன்னல் முகட்டில் விசிறுவாள்.
இந்த களேபரத்தைக் காண அறைக்குள் வரும் ஆயா அடுத்த தொல்லை!
'அது உன் ஃபிரண்ட் பாப்பா, எழுப்புது பாரு, எழுந்துக்கோ' - ஏதோ ஏழு வயது சிறுமியை சமாதானப்படுத்துவது போல கெஞ்சுவாள்.
"ப்ளீஸ்... நிம்மதியாத் தூங்க விடுங்க ஆயா'.
இவ்வளவு கத்தின பிறகுமா உறக்கம் பக்கத்தில் இருக்கும்..? அதுவும் எட்டிப் போய்விட, எழுந்து கொள்ள வேண்டியதுதான்.
இரவு வெகு பொழுது வாசித்து விட்டு கண்கள் கனத்த பிறகுதான் அவள் படுப்பது. ஆனாலும் சற்று நேரம் புரளத்தான் நேரும்.
'இரவு எப்படி படுத்தாலும் வராத உறக்கம், காலையில் எப்படி படுத்தாலும் எப்படி தொடர்கிறது?’ என்று ட்விட்டரைக் காணவும்தான், சகலருக்கும் அதே அனுபவம் என்பது புரிந்தது.
எந்த கோணத்தில் புரண்டாலும் தூக்கம் சொக்கி இழுக்கும் இளங்காலையில் நேரம், 'டொக் டொக்' என்ற கூரிய தட்டல்... இப்போது அதாவது சில வாரங்களில் பழகி விட்டது!
காலம் நம்மைப் பலவற்றுக்கு பழக்கி விடுகிறது.
முன்பு உறக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலில் எழுந்து வருபவளுக்கு கச்சிதமான எலுமிச்சம் தேநீர் பரிமாறப்படும். பால் சேராத சூடான இளம் தேநீரில் சிறிது தேன் கலந்த பானம். 'தாங்க்ஸ் ஆயா' என்று புன்னகைப்பவளை கண்ணெடுக்காமல் பார்ப்பாள் மூத்தவள்...
கோதின கூந்தலும் கழுவித் துடைத்த முகமும் ஷன்மதியை இன்னும் சிறுமியாகவேக் காட்டின.
இளம் நிற நைட்டிகள் அவளை பள்ளிப் பெண்ணாகவே உறைய வைத்திருப்பதாய் படும்.
உயர்தர லேஸ்கள் வைத்துத் தைக்கப்பட்ட வெளிர் நிற இரவு உடைகள் துளி ஒப்பனை இல்லாத அழகு முகத்தோடு சேர, ஷன்மதியின் இருபத்தி மூன்று வயது பாதியாகி விடும்...
கடந்த மூன்று வாரங்களில் அந்த சிறுபிள்ளைத்தனம் சற்று மாறியிருந்தது.
தவிர நின்று இருவரும் பேசிக் கொள்வதும்தான்... முன்பானால் - 'ஸ்வீட் ஆயா, ரைட் டைமிங்' என்றபடி ஷன்மதி தேநீரைப் பருக ஆரம்பிப்பாள். –
படுக்கையைச் சீராக்கி விட்டு, 'குளிக்க வெந்நீரை விளாவி வைக்கவா? 'ஆயா கேட்க,
'கொஞ்சம் நேரமாகட்டுமே.' பதில் வரும்.
'சரி... அப்ப நான் ஒன்னு சொல்லுவேன்... அதை நீ கேக்கணும் பாப்பா.'
'ஆனா நீ ஏன் ஆயா நான் சொல்றதைக் கேட்கவே மாட்டேங்கறே?’ இளையவளின் முகம் செல்லமாய் மிரட்டும்.
'எதை? '
"நான் ஐஞ்சடி ரெண்டு அங்குலம், நாற்பத்தேழு கிலோ இன்னும் பாப்பான்னா எப்படி? சிரிப்பாங்க.'
'யாரிருக்கா இங்க சிரிக்க? கேலி பேசக் கூட உங்கூடப் பிறந்ததுக யாருமில்லையே பாப்... மதிம்மா.'
'ஷன்மதி... பேரைப் பிய்க்காதேங்களேன்... குட் டீ. ஆக நீங்க சொல்ல வந்ததைச் சொல்லலாம்.'
'காலைல எழுந்ததும் நல்ல வார்த்தைப் பேசணும் பாப்பா. கடவுளுக்கு நன்றிங்கலாம்...'.
'ஓஹோ? இதெல்லாம் யார் போட்ட சட்டம்? '
மேலாக சீவிய கூந்தல் விலகி, ஷன்மதியின் முக வெண்மை, வனப்பைக் காட்டியது.
கூர் மூக்கும், நீள கண்களும் அவள் குணத்தைக் காட்ட, புருவங்களும் உதடுகளும் வளைந்து மிருதுவான கவர்ச்சியில் இருந்தன.
மெல்லிய கச்சிதமான உடல்.
முன்பு அது அல்லித் தண்டு என்று வர்ணிக்கப்பட்டிருக்கலாம். இப்போது அது 'சைஸ் ஸீரோ!'
ஆனால் அது வாய், வயிறைக் காட்டாமல் அவளுக்கு இயல்பாய் வாய்த்திருந்தது – ஸும்பா நடனம், நீச்சலை விரும்பி செய்வதால் போலும்.
'நல்ல பழக்கம்ப்பா - அதை நாமாய் பழகிக்கணும்.'
'நான் என்ன சொன்னேன்...? தாங்க்ஸ் - ஸ்வீட் ஆயா - இப்படித்தானே - ந-ல்-ல வார்த்தைஸ்?’ நிதானமாய் சீண்டுவாள்.
மூத்தவளும் இந்த டபாய்ப்பிற்கு தயாராகித்தான் வந்திருப்பாள் - ஆக அசராமல் -
'கண்ணு முழிச்சதுமே நீ குருவியப் பார்த்து ஏசலை? '
'ஓ?’ சிரிப்பில் ஷன்மதியின் பற்கள் மின்னும் - 'அதொன்னும் மோசமான பேச்சில்லையே? ''
'அ... என்னைய ஏமாத்த முடியாது பாப்பா. நாந்தான் ஐயாட்ட கேட்டுட்டேனே? '
'அது வேறயா? '
‘டேம்ன்னா என்னன்னு கேட்டேன் அணை -அணைக்கட்டுன்னாரு.'
'வாவ்..! அது ஓ.கே. தானே? '
இப்போது இளையவளின் கண்களும் சிரிப்பில் மின்னும்.
'நான் விடாமல் கேட்டேன் - வேற 'டேம்' இல்லைய்யான்னு - பொண்ணு - அதாவது பொம்பளை
ன்னும் கொள்ளலாம்னாரு ஐயா.'
'அதுவும், நாட் பேட்!'
'நீ அது ரெண்டு அர்த்தத்திலேயும் சொல்லலைன்னு எனக்குப் புரியுதாடா? வேற ஏதோ... இங்கிலீஷ்காரனுக்கு வார்த்த பஞ்சம் போல - ஒரே வார்த்தைக்கு மூணு நாலு அர்த்தம் வச்சிருக்கான்.'
'ம்ம்... ஆக மூணாவது 'டாம்'மிற்கு ஆண் பூனைன்னாங்களா அப்பா? '
'உன்னைய மாதிரியே சொல்லிக் காட்டினேம்ப்பா - 'டேம் யூ'ன்னு. உடனே ஐயா 'நாசமாப் போ'ன்னு சரியாய் சொல்லிட்டாரு!'
ஷன்மதி முகத்தைச் சோகமாக்கிக் கொள்வாள்.
'இனி அந்தப் பேச்செல்லாம் வேணாம் - 'இந்த வாழ்வுக்கு நன்றி, கடவுளே, எங்களையும் உலகத்தையும் காப்பாத்தப்பா'ன்னு... ஓ அப்படிச் சொன்னால்... அந்தக் குருவி நம்மைத் தொல்லைப் பண்ணாமல் போயிடுமா? '
'குறும்பு...' என்றபடி காலி கோப்பையுடன் மூத்தவள் நகர, இவள் செய்தித்தாளைப் புரட்டும் அப்பாவிடம் போய் பேச்சுத் தருவாள்.
அவரும் உலகப் பொருளாதாரம், நாட்டு அரசியலை மேம்போக்காய் அலசுவார்.
சற்றுத் தொலைவில் அலையடிக்கும் கடலும்கூட தங்களோடு பேசுவது போலிருக்கும் இவளுக்கு...
இப்போது புல்தரையில் கிடந்த பிரம்பு நாற்காலிகளில் யாருமில்லை. அப்பா இல்லை... உலகத்திலேயே இல்லை.
ஈ.ஸி.ஆர். சாலையின் இந்த வசதியான பங்களாவும் இனி இராது. இது விற்பனையான பிறகும் அந்தக் குருவி, தன்னைத் தேடி வருமோ?
இல்லை ... அதன் ஈர்ப்பு கண்ணாடியில் தெரியும் தன் உருவம். இங்கு புதிதாய் குடி வருபவர்கள் குருவியை விரட்டலாம், அல்லது ரசிக்கலாம்...
இவளுக்குள் வேதனை நிரம்பியது.
ஆயா சொன்னது போல நல்ல வார்த்தைகளை நன்றியுடன் சொல்லி எழுந்திருந்தால்... தனக்கு இந்த அவல நிலைமை வந்திருக்காதோ?
எழுந்ததும், அப்பாவின் அறைக்குப் போய், அவர் விட்டுப் போனவைகளை எல்லாம் பிரிக்க வேண்டும்.
வேண்டிய சிலவற்றை மட்டும் பெட்டி ஒன்றில் நிரப்பி, பண்ணை வீட்டிற்கு அனுப்ப வேணும்... இனி அதுதான் தன் வீடு.
மற்றொரு அறையிலிருந்த அம்மாவின் உடைமைகளுக்கும் இனி இங்கே இடமில்லை .
அம்மா இறந்தபோது ஷன்மதிக்கு 14 வயது... அதாவது ஒன்பது வருஷங்களுக்கு முன்பு. அம்மா இருந்தவரை ஷன்மதி வேறு மாதிரி வளர்ந்தாள்... தாய் சொல்லைத் தட்டாமல்!
தாயில்லாமல் போன பிறகு அப்பாவின் செல்லம், சலுகைகள் பெருகி விட்டன!
வேலையூடாக மகளை சமாளிக்க முடியாதவர் இவளை பிரபல பள்ளியின் விடுதியில் சேர்த்து விட்டார். அங்கே அமரிக்கையான பெண்பிள்ளைகளும் இருந்தார்கள்தான். ஆனால் ஷன்மதி ஆர்ப்பாட்ட குழுவில் சேர்ந்து கொண்டாள்!
அலட்சியமாய் ஆங்கில வார்த்தைகளை வீசி, அகம்பாவத்தைத் தன் உடை, நடையில் காட்டப்