Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayathil Oru Theevu!
Aagayathil Oru Theevu!
Aagayathil Oru Theevu!
Ebook141 pages1 hour

Aagayathil Oru Theevu!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Kanchana Jeyathilagar is the author of nearly 60 novels and over 1000 short stories. She and her husband love travelling and with her writing takes her readers to those places too! Kanchana has won various awards for short stories and is one of the leading tamil authors. She lives in Kodaikanal with her family.
Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580109902256
Aagayathil Oru Theevu!

Read more from Kanchana Jeyathilagar

Related to Aagayathil Oru Theevu!

Related ebooks

Reviews for Aagayathil Oru Theevu!

Rating: 4.8 out of 5 stars
5/5

5 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayathil Oru Theevu! - Kanchana Jeyathilagar

    http://www.pustaka.co.in

    ஆகாயத்தில் ஒரு தீவு

    Aagayathil Oru Theevu

    Author:

    காஞ்சனா ஜெயதிலகர்

    Kanchana Jeyathilagar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kanchana-jeyathilagar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    ஆகாயத்தில் ஒரு தீவு

    1

    எழுபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட வீட்டின் விஸ்தாரமான அறை அது.

    அதன் ஏழடி உயர ஜன்னலின் கனமாய் தொங்கிய இரட்டைத் திரைச்சீலையின் இடையே துளி இடைவெளி வழியே காலை சூரியன் நுழைந்து அவளை வருடினான்.

    முக்கால்வாசி உறக்கதிலிருந்தவளின் விழிகள் கால்வாசி திறந்தன. ஜனவரி மாதக் காலையில் இவ்வளவு வெளிச்சம் அபூர்வம். கடந்த இரண்டு மாதங்களாய் காலை ஏழரைக்கு மேல்தானே விடியல்?

    மலைச்சரிவில் மேகங்களின் ஊடே பொதிந்திருக்கும் இந்த எஸ்டேட்டின் பருவநிலை அலாதியானது. சூரியன் உச்சிக்கு வந்த பிறகும் காற்றின் சன்னமாய் ஒரு குளிர் இருக்கும். இங்குள்ள சரிவு பாதைகளில் ஏறும் போதும் கூட மூச்சிளைக்குமேத் தவிர, வியர்க்காது.

    திரைச்சிலை சற்றே அசைந்து விலக, சூரியக் கதிர் பளிரென இவளைச் சீண்டியது.

    நேரமாகிவிட்டதோ? அவசரமாய் போர்வையை விலக்கி விட்டு எழுந்தாள். அறையின் குளிர் அவளைச் சூழ்ந்தது போலவே அன்றைக்கான வேலைகளும் அவள் ஞாபகத்தில் முட்டின.

    பின்புறமுள்ள வேலியைப் பழுது பார்க்க இன்று ஆட்கள் வருவார்களே... மூடிக் கிடக்கும் கிணறையும் திறந்து பார்க்க வேண்டும். அதைத் தூர் வாரினால் அனுயாவின் அண்ணன் சொன்னது போல அந்த நிலத்தின் தகுதி, பெறுமானம் கூடும்.

    அவசரமாய் எழுந்தவளுக்கு அம்மாவின் எச்சரிப்பு நினைவிலாடியது -

    ‘உழைப்பின் பலனை நாளை பார்க்கலாம்.

    ஆனால், சோம்பலின் விளைவு உடனே தெரியும்' என்பார்கள்!

    பழனி அருகிலுள்ள பகுதியின் மலைச்சரிவில் இவர்களது, பாரம்பரியமான பெரிய எஸ்டேட்.

    மூன்றாம் தலைமுறையாய் இவர்களது சொத்து. ஆனால் இப்போது அதில் உழைக்க ஆட்கள் கிடைப்பதில்லை. பலர் படித்து, பெருநகரங்களில் ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டு போயாகிற்று.

    ஆக இப்போது மேகவிளையில் எஞ்சியிருப்பவர்கள் பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடந்தவர்கள்... நல்லவேளை தன்னைப் போல இளவயதினரும் சிலர் உண்டு...

    ஏன் தனக்கு அப்பா, அக்கா, அண்ணனும் உண்டே... இருந்தும் இப்போது மிஞ்சியது இந்தத் தனிமைதான்!

    அம்மா உயிரோடு இருந்தவரை வீடு நிரம்ப சந்தோஷமிருந்தது. எழுந்த பிரச்சனைகளை அம்மா திறமையாய் சமாளித்தார்கள்.

    ஆனால் அப்பாவை சமாளிப்பதில் எப்போதும் திணறல்தான்...!

    ஒரே வாரிசான அம்மாவின் பூர்வீக சொத்து இந்த பண்ணை வீடு.

    சில வருஷங்கள் முன்பே தொழிலாளர் பஞ்சமும் பிரச்சனையும் ஆரம்பித்து விட, அப்பா உடனடியாய் அதற்கொரு தீர்வை கண்டுபிடித்தார்.

    ‘பேசாமல் இதை வித்துட்டு, ஸிட்டியில ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ஆரம்பி மாதவி’.

    காலாட்டியபடி கருத்து சொன்னார்!

    'சரி - எந்த ஸிட்டியில்?

    'அங்கே எந்த இடம் சரிவரும்? எவ்வளவு இடம் தேவைப்படும்... முதலீடு எத்தனை?'

    இப்படி அம்மா அடுக்கும் கேள்விகளில் அப்பாவின் காலாட்டல் நின்று விடும்!

    அவருக்கு புத்தியை வருத்துவதோ உடம்பை வளைப்பதோ அறியாத, ஆகாத வேலைகள்!

    ஆக குத்தலாய் ஒரு பதில் வரும்.

    'இங்கே வெறும் பச்சை... ஸிட்டியில் நான் கலர் கலராய் பார்க்கலாம்? ம்ப்ச்'

    தம்பதியருக்கு'ள் எதிலும் ஒத்துப் போய் மகளான இவள் கண்டதில்லை.

    எப்படி இருந்தாலும் ஒரே கூரையின் கீழ் வாழ்நாளெல்லாம் குடித்தனம் செய்யும் குடும்பங்கள் எத்தனை?

    ஆனால் இவர்கள் பிரிவதிலேயே நின்றார்கள்.

    'இந்தக் காட்டில் என்னால கிடக்க முடியாது...' அப்பா கத்தினார்.

    ‘எனக்கு பெரியகுளத்தில் இருக்கும் வீட்டை விற்று, காசை உங்களுக்குத் தந்துடறேன் - பரஸ்பரமாய் விவாகத்தை ரத்து செய்துடலாம்.'

    அம்மா முடிவெடுத்தார்.

    ஒரு மாற்றத்தோடு அப்பா இதற்கு சம்மதித்தார்.

    'எதுக்கு விற்கணும்? மாடியிலிருக்கும் ரெண்டு அறை எனக்குப் போதும் - கீழ் போர்ஷனை வாடகைக்கு விட்டால் கைச் செலவுக்கு காசு வரும். உன் பிடுங்கல், பேச்சில்லாம நிம்மதியா இருந்தால் போதும்.'

    அப்பாவிற்கு, குடிச் செலவுதான்... வேறென்ன?

    போதையில் அவர் பிற பெண்களைக் கொச்சையாய் வர்ணிப்பதைக் கேட்காததில் இவர்கள் வீடும் நிம்மதியானது.

    ஆனால் அந்த அமைதி அம்மாவின் இறப்பில் புதையுண்டு போனது...

    தொழிலிலும் உறவிலும் ஏகக் குழப்பம்...

    வெளிநாடு போய் மேற்படிப்பை முடித்த அண்ணன் மஹேந்தர் -' இந்தக் காட்டில் வாழறதா... அதற்கு சாவது மேல்' - என்றான் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில்!

    அப்பாவைப் போலவே இவனும் வீட்டின் குழப்பத்திற்கு ஒரு சுலபமான தீர்வை வைத்திருந்தான்.

    "பெண்கள் நீங்க ரெண்டு பேரும் கல்யாணமாகி எங்கேயோ போகப் போறீங்க. எனக்கும் இதில் நோக்கமில்லை. ஆக பண்ணையை விற்று அதில் வருவதைப் பிரிச்சு எடுத்துக்குவோம் - அதில் உங்க கல்யாணமும் என் வாழ்க்கையும் நடக்கட்டும் - என்ன?'

    இவள் அசராமல் அண்ணனுக்கு ஞாபகப்படுத்தினாள் -

    ‘அம்மா உன் படிப்பிற்காய் ஏற்கெனவே நாற்பது லட்சம் வரை செலவழிச்சிருக்காங்க. ஆக உனக்கிதில் பங்கு கிடையாது.'

    அவன் நாலு கெட்ட வார்த்தைகளை வீசி விட்டு,

    'அப்படி யார் சொன்னது?’ என்று கேட்டான்.

    'அம்மா அப்படித்தான் உயிலில் எழுதினாங்க. பின்புறம் இருக்கும் பயிர் செய்யாத நிலத்தை விற்றால், ஒருவேளை உனக்கு அதில் நாங்க பங்கு தரலாம்.'

    இப்படி இளையவள் சொன்னதிலிருந்து மஹேந்தர் அதைப் பிடித்துக் கொண்டான்.

    'நான் சொந்தமாய் கம்பெனி ஆரம்பிச்சுட்டேன் 一ஐ நீட் மணி.’

    அவன் நச்சரிப்பு தாங்காமல்தான் இந்த வேலையை ஆரம்பித் திருந்தாள். பண்ணையின் எல்லையைத் துல்லியமாய் அளந்து அதற்கு வேலியிட்டு விற்பதற்கான இடத்தைப் பிரித்தெடுப்பது.

    செய்வனத் திருந்தச் செய்வதற்கான ஆரம்பம் இது.

    இங்கு பண்ணையுள்ள மற்றவர்கள் திணறுவதைப் பார்த்த இவள் எடுத்த முடிவுதான் இது.

    இது பற்றிக் கலந்து பேச, அக்கா இங்கே இல்லை.

    மஹிமா இருக்கும் விலாசம் கூட இவளுக்குத் தெரியாது. எப்போதாவது ஒரு ஃபோன் அழைப்பு வரும்.

    அதில் உடன் பிறந்தவள் உயிரோடு இருப்பது தெரிந்து நிம்மதி பட்டுக் கொள்வாள். ஆனால் அவளைப் பார்க்கும் ஆசை துளிர்த்ததே இல்லை.

    அப்படியொரு விரிசல் விட்டிருந்தது சகோதரிகளின் உறவில்!

    பண்ணையின் முன்புறம், சாலைப் பக்கமாய் இவள் ஆரம்பித்த கடை மட்டும் இல்லையெனில், வாழ்வு வனாந்திரமாய் போயிருக்கும். சுற்றிலும் இத்னை பசுமை இருந்தாலும், உறவின் பிணைப்பில்லாத வாழ்வு வறண்டதுதானே?

    அம்மா இருந்தவரை, குடும்பம், இரவு உணவை சேர்ந்தே சாப்பிட்டது.

    அம்மாவிற்கு இனிமையான குரல். அந்தப் பேச்சை, சிரிப்பைக் கேட்டபடி சாப்பிடுவது அலாதி சுகம்.

    தகப்பனின் தலைமை இல்லாத பிள்ளைகள், பிரிந்து போய் விடக் கூடாதென்பதில் அம்மா வெகு முனைப்பு...

    அதற்கேற்ற கதைகளைகூட சொல்லுவாள்.

    ‘எங்க காலத்தின் இரும்பு, வெள்ளி, தங்கக் கோடரி கதை - இப்போ மொபைல் ஃபோன் கதையாய் உருமாறிடுச்சு... ஆனா கருத்து ஒன்றேதான். படகில் போன வியாபாரி தன்

    Enjoying the preview?
    Page 1 of 1