Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Solai Malaroliyoo!
Solai Malaroliyoo!
Solai Malaroliyoo!
Ebook216 pages1 hour

Solai Malaroliyoo!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

சோலை மலரொளியோ
சிறுவயதிலே அப்பாவின் பாசத்தை இழந்தவள், அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவள், தம்பியின் படிப்பிற்காக சிறுவயது முதல் அயராது உழைப்பவள். அம்மாவின் மறைவிற்கு பிறகு தனித்து விடப்பட்டவள். தன் உழைப்பினால் படிப்படியாக முன்னேறிய அவள் வாழ்க்கையில் நுழைந்த சசிகாந்தன், அவளை காதலித்து திருமணம் செய்தானா? அவள் வாழ்க்கை சோலை மலரொளியாய் ஒளிர்ந்ததா? படிக்கலாமா…
Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580140906961
Solai Malaroliyoo!

Read more from Lakshmi Sudha

Related to Solai Malaroliyoo!

Related ebooks

Reviews for Solai Malaroliyoo!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Solai Malaroliyoo! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    சோலை மலரொளியோ!

    Solai Malaroliyoo!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    "நீ சிரிக்கும்போது

    வானத்தில் கோடி நிலாக்கள்

    உதிக்கின்றனவே!

    அது எப்படி?"

    விடியலில் சூரியனின் வரவை எதிர்பார்த்து சோம்பல் முறித்து வரவேற்பது போல் மென்மையாக மரத்தின் கிளைகள் அசைந்து கொண்டிருந்தன. இரண்டு அணில்கள் மாமரத்தின் மேல் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு ஒற்றை குயில் தன் துணைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

    அந்த இனிமையான ஏக்கம் தோய்ந்த குரல் நூதனாவின் உறக்கத்தைக் கலைத்தது. இறைவனே இந்த நாளை நான் உனக்குச் சமர்ப்பிக்கிறேன். என்னை நல்லபடியாக வழி நடத்து என்று வேண்டியவாறு படுக்கையிலிருந்து எழுந்தாள். பல் துலக்கி குளித்து விட்டுத் தோட்டத்துப் பக்கம் சென்றாள்.

    'தோட்டத்தில் இருக்கும் பூச்செடிகளைக் காலையில் பார்க்காவிட்டால் தலை வெடித்து விடும் நூதனா உனக்கு' அம்மா என்றோ ஒரு நாள் கூறியது சட்டென நினைவில் வந்தது.

    'ம்ம் அம்மா எவ்வளவு அற்புதமான பெண். எவ்வளவு வைராக்கியம்' அம்மாவைப் பற்றி நினைக்கும் போது நூதனாவிற்கு கண்கள் கலங்கின.

    அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் அம்மாவைப் பற்றிய எல்லா நினைவுகளும் மனதில் ஆழமாக அழகாக பதிந்து உள்ளன. நூதனாவின் மனம் அவளையறியாமல் பின்நோக்கிச் சென்றது.

    அம்மா என்னம்மா எப்ப பார் இந்த தையல் மெஷினோடயே இருக்க. மணி பதினொண்ணு ஆயிடுச்சு. தூங்கலாம் வாம்மா. நாளைக்குக் காலையில் கண்டினியூ பண்ணும்மா ப்ளீஸ் என்றாள் நூதனா.

    அப்போது அவள் ஐந்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். அதற்கு அவள் அம்மா கண்ணா, தையலை ஒரு வேலையாக நான் நினைத்தால் தான், அப்பாடா முடிச்சா போதும் அப்படிங்கற நினைப்பு வரும். மனம் உடல் இரண்டும் ஓய்வுக்கு ஏங்கும். ஆனால் நான் அதை அனுபவிச்சுச் செய்யறேன்டா. நான் ஒரு படைப்பாளி. நாளை என் படைப்பை ஒரு குட்டிப் பாப்பா, அதோட பிறந்த நாளைக்குப் போடப் போகுது. இந்த பட்டுப் பாவாடை சட்டையில் அவள் ஒரு தேவதையாக ஜொலிப்பாள் என்பதை நினைத்தாலே சுகமாக இருக்குதுடா. நீ கூட நீ செய்யற எல்லாத்தையும் அனுபவிச்சு, ரசிச்சு செய்து பார் கண்டிப்பாக உனக்கு ஒரு இனிமையான அனுபவம் கிடைக்கும் பொறுமையாகச் சொன்னாள்.

    போம்மா எனக்கு தூக்கம் வருது என்ற நூதனா அப்போது தூங்கினாலும் அவள் மனதில் இது ஆழமாகப் பதிந்தது.

    இப்போது மேனேஜ்மெண்ட் குழுக்கள் சொல்லுகின்ற விஷயத்தை அம்மா அன்றைக்கே புரிந்து நடைமுறைப்படுத்தியது ஆச்சரியம்தான். அம்மாவுக்கு அந்தக் காலனி முழுவதும் கஸ்டமர்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆடை தயாரிப்பதில் அம்மா தனக்கென ஒரு அழகான முத்திரை பதித்திருந்தாள். அவள் உழைப்பினால் உருவானது தான் இந்த வீடு தோட்டம் எல்லாம்.

    'அம்மா எப்படி தன்னையும் தம்பியையும் படிக்க வைத்தாள்? அப்பா செய்த நம்பிக்கை துரோகத்திலிருந்து எப்படி வெளியே வந்தாள்? ஒரு வயது நிரம்பிய மகனையும், ஆறு வயது நிரம்பிய மகளையும் விட்டு விட்டு அப்பாவால் எப்படி இன்னொரு பெண்ணைத் தேடி கேரளாவிற்குப் போய், குடித்தனம் நடத்த முடிந்தது?' விடை தெரியாத கேள்விகள் நூதனாவின் மனதைக் குடைந்தன.

    அம்மாவை பெற்றோரின் வற்புறுத்தலுக்காகத்தான் அப்பா மணந்தாராம். திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணைக் காதலித்தாராம். ஆனால் வீட்டில் ஒத்துக் கொள்ளாததால் வேறு வழியின்றி அம்மாவை பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மணந்தாராம்.

    அப்பாவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்தவுடன் தன் பழைய காதலியைத் தேடித் திரும்பப் போய்விட்டார் அப்பா. அம்மாவிற்கு ஒரு கடிதம் மூலம் இதைத் தெரியப்படுத்தி விட்டு கேரளாவுக்கு இரவோடு இரவாக ஓடிப் போய் விட்டார்.

    காலையில் கண் விழித்த அம்மாவின் அருகில் இருந்த தலையணைக்கடியில் அப்பா எழுதிய கடிதம். அதைப் படித்த அம்மாவின் மனம் எப்படி நொறுங்கியிருக்கும் இப்போது நினைத்தாலும் நூதனாவின் உடல் நடுங்கியது அவளையறியாமலேயே.

    இதையெல்லாம் அம்மா அவளிடம் சொல்லும்போது நூதனா பத்தாம் வகுப்பு அரை இறுதித் தேர்வு முடித்து லீவில் இருந்தாள். சொல்லி முடித்த அம்மாவின் கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர்.

    நூதனாவால் அந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை.

    'கடவுளே! இவ்வளவு நாள் அப்பா வெளிநாட்டில் இருப்பதாகத்தானே அம்மா சொன்னார். ஆனால் இன்றைக்கு இப்படிச் சொல்கிறாளே. இந்தக் கொடுமையை எப்படி இவ்வளவு நாள் தனியாக மனதில் பூட்டி கஷ்டப்பட்டிருப்பாள்' என்று நினைத்து அழுதவாறே ஓடிப்போய் அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

    அம்மா நான் இருக்கிறேன் அம்மா உனக்கு. உன்னை நான் இனிமேல் எப்படியெல்லாம் தாங்குகிறேன் பார் அம்மா என்று அம்மாவின் கையைப் பிடித்து ஆதரவாக முத்தம் கொடுத்தாள்.

    சொன்னபடியே நடந்தும் காட்டினாள்.

    வெறி பிடித்தவள் போல் படித்தாள். ஸ்கூலிலேயே பத்தாம் வகுப்பில் முதலாவது மாணவியாக தேர்ச்சியடைந்தாள். மேற்படிப்பிற்கு உபகாரச் சம்பளம் கிடைத்தது. சனி, ஞாயிறின்போதும், விடுமுறை நாட்களின் போதும் சிறு வகுப்பு குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தாள். தம்பியின் படிப்பு செலவிற்கு அது மிகவும் கை கொடுத்தது. ப்ளஸ் ஒன்னில் கம்ப்யூட்டரை விருப்பப் பாடமாக எடுத்தாள். ப்ளஸ் டூவிலும் ஸ்கூலிலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றாள்.

    பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த போதும் சேர மறுத்தாள்.

    நான்கு ஆண்டுகள் படித்துப் பின் வேலைக்குச் செல்வதில் அவளுக்கு உடன்பாடில்லை. அதனால் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஈவினிங் காலேஜில் சேர்ந்தாள். காலேஜ் நேரம் போக மீதி நேரம் டியூஷன் எடுத்தாள். அதனால் தம்பியின் படிப்புச் செலவை அவள் எற்றுக் கொண்டாள். அவள் படித்த கல்லூரி அந்த வட்டாரத்திலேயே தரமான பெண்கள் கல்லூரி என்பதால் நிறைய பணக்காரப் பெண்களும் அதில் படித்தனர். அவர்களுக்கு கஷ்டமான பாடங்களில் படிப்பதற்கு நூதனா நிறைய டிப்ஸ் தருவாள்.

    தேர்வு முடித்து பாஸ் பண்ணியவுடன் சந்தோஷம் மிகுந்து அவர்கள் நூதனாவிடம் என்ன கிப்ட் வேணும்டி உனக்கு. கோல்ட் செயின் மோதிரம் எது வேணும்னாலும் கேளுடி. உன்னால தாண்டி பாஸே பண்ணோம் சொல்லுடி என்று வற்புறுத்தும்போது அதையெல்லாம் மறுத்து, தம்பி படிப்பு செலவுக்கு பணம் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று சொல்லுவாள் நூதனா.

    அவர்களும் அதைப் புரிந்து கொண்டு நாளடைவில் அவளை என்ன வேண்டும் என்று கேட்காமலேயே அவளுக்கு அவ்வப்போது பெரிய தொகை பணமாகத் தருவது உண்டு. அதைத் தம்பி பெயரிலேயே தனியாக வங்கியில் சேமித்து வைத்தாள் நூதனா.

    காலேஜ் முடித்தவுடன் காம்பஸ் செலக்ஷன் வழியாக ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் எம்.டி.க்கு செயலாளராக உடனே வேலையும் கிடைத்தது.

    மாதச் சம்பளம் சுமார் இருபதாயிரம். அதனால் தம்பியும் அம்மாவும் நிம்மதியாக இருந்தார்கள்.

    அம்மா அப்போதும் தையலை விட முடியாது என்று பிடிவாதமாக இருந்ததால், குரோஷா, கண்ணாடித் தையல் என அலங்காரத் தையல் முறைகளை, அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் சொல்லிக் கொடுக்க நூதனா ஏற்பாடு செய்தாள்.

    ஆபீஸ் வேலை முடித்த பின் தானும் அவர்களோடு சேர்ந்து அம்மாவிடமிருந்து ஆர்வமாக கற்றுக் கொண்டாள். வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் அழகாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் விதி அவள் வாழ்க்கையில் விளையாட முடிவு செய்தது அவளுக்கு எப்படித் தெரியும்?

    அன்றும் அலுவலகம் முடிந்து வழக்கம்போல் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவள். அவள் பேசுவதையே ஆர்வமாகக் கவனித்துக் கொண்டிருந்த அம்மா குடிக்கத் தண்ணீர் கொண்டு வருமாறு அவளிடம் சொல்லிவிட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள். வேகமாக உள்ளே சென்ற நூதனா தண்ணீர் எடுத்து வந்து குடிக்கச் செய்தாள். குடித்த பின் கண்களை மூடி சோபாவில் தலை சாய்த்து அமர்ந்த அம்மா ‘டயர்டாக தூங்குகிறாள்’ என்று தான் முதலில் நினைத்தாள் அவள்.

    ஏதோ மனதில் நெருட அம்மா அம்மா என்று அழைத்துப் பார்த்தாள். எவ்வளவு தடவை சொன்னாலும் அம்மா இனிமேல் வரமாட்டாள் என்பதை அவள் ரொம்ப நேரம் கழித்துத் தான் உணர்ந்தாள்.

    பக்கத்து வீட்டிலிருக்கும் டாக்டர் 'ஹார்ட் அட்டாக்' என்று இறப்பை உறுதிப்படுத்தினார். அம்மாவின் விருப்பப்படி அம்மாவின் கண்களைத் தானம் செய்தாள். அதன் பின் மனம் லேசாக நிம்மதியானது.

    காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. இப்போது அவளுடைய செல்லத் தம்பி கல்லூரியில் பெங்களூரில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறான்.

    அதனால் நூதனா மட்டும் சென்னையில் அம்மாவின் வீட்டிலிருந்தவாறே அலுவலகம் சென்று வந்தாள்.

    "சுவர் கடிகாரம் ‘டிக்டிக்’ என்று அடித்தவுடன் மணி எட்டு ஆனதை உணர்ந்தாள் நூதனா. 'சேச்சே, காலையிலேயே கிணற்றடியில் உட்கார்ந்து பழசையெல்லாம் அசை போட்டுக் கொண்டிருக்கிறேனே இன்றைக்கு புது எம்.டி. வேறு வருகிறார் சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்பதை மறந்து விட்டேனே' என்று தன்னையே கடிந்தவாறு பீரோவிலிருந்து தனக்குப் பிடித்த ரோஜா இதழ் நிறத்தில் வெள்ளைப் பூக்கள் பதித்திருந்த சுடிதாரை அணிந்து கொண்டு, தலையை போனி டெயில் போட்டுக் கொண்டு அம்மாவின் படத்தைக் கும்பிட்டு விட்டு, வீட்டைப் பூட்டி விட்டு, ஸ்கூட்டியை உதைத்தாள்.

    2

    "சூரியனையும் குனிந்து பார்க்கும்

    உயரத்தில் நீ

    புல்லையும் அண்ணாந்து பார்க்கும்

    பள்ளத்தில் நான்."

    அன்று திங்கட்கிழமை என்பதால் டிராபிக் ரொம்ப அதிகமாக இருந்தது. பல்லாவரத்திலிருந்து மவுண்ட் ரோடு இருக்கும் அவள் அலுவலகம் செல்வதற்கு, வழக்கமாக முப்பது அல்லது முப்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். ஆனால் இன்றைக்கு என்ன காரணம் தெரியவில்லை. எல்லா வண்டியும் நத்தை மாதிரி ஊர்ந்து சென்றன.

    இன்னிக்கு லேட். கண்டிப்பாக லேட்தான் என்று மனம் ரெட்லைட் போல் அபாய அறிவிப்பு கொடுத்தது அவளுக்கு. அலுவலகம் அருகே செல்லும்போது மணி பதினொன்று அடிக்க ஐந்து நிமிடங்களே இருந்தது.

    முகத்தை ரிலாக்ஸ்டாக வைத்துக் கொண்டு லிப்டில் ஏறும்போது செல்போன் ஒலித்தது. மறுமுனையில் லிசா எங்கடி இருக்க சீக்கிரம் வா. இப்பதான் நாங்க எல்லாரும் எம்.டி. கிட்ட எங்களை அறிமுகப்படுத்திக்கிட்டோம். பழைய பாஸ் இராகவன் சாரும் உனக்காகத் தான்டி வெயிட் பண்றார். நீ கண்டிப்பா வந்துடுவே. லீவ் போட மாட்டன்னு சசிகாந்தன்கிட்ட அதான்டி புது எம்.டி. கிட்ட சொல்லிகிட்டு இருக்கார். நீ போனவுடனே பாஸ் ரூமுக்கே போ. பை டி என்று போனை துண்டித்தாள்.

    நூதனா இயல்பாகவே வேகமாக நடப்பாள். அன்று இன்னும் கூடுதல் வேகத்தோடு நடந்து சென்றாள்.

    குட்மார்னிங் மேடம். பாஸ் உங்களை உடனே அவர் ரூமிற்கு வரச் சொல்றார் மேடம் என்று சொன்ன செக்யூரிட்டியிடம்கு குட்மார்னிங். தேங்க்ஸ் நான் போய் மீட்பண்றேன் என்று சொல்லி விட்டு எம்.டி.யின் கண்ணாடி அறையின் கதவைத் தட்டினாள். யெஸ் கம் இன் என்ற புதிய கம்பீரமான குரல் அவளை வரவேற்றது.

    உள்ளே நுழைந்தவள் சோபாவில் இருந்த ராகவன் சாருக்கும், எம்.டி. நாற்காலியில் உட்கார்ந்திருந்த காந்தனுக்கும் பொதுப்படையாக குட்மார்னிங் சார் என்றாள்.

    குட்மார்னிங் நூதனா என்றான் பதிலுக்கு. விஷ் செய்தார் இராகவன்.

    நூதனா. என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? ஏன் லேட்? எப்பவும் ஒன்பதரை மணி ஆபீஸுக்கு ஒன்பது மணிக்கே வந்து விடுவியேம்மா என்ற அவர் குரலில் இருந்த கரிசனம் அவளை மேலும் கில்டியாக்கியது.

    ஸாரி சார் என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.

    நேற்று சண்டே இல்ல சார். யாராவது பாய் பிரண்டோட நைட் ஷோ பார்த்துட்டு டின்னர் முடிச்சுட்டு லேட்டா தூங்கியிருப்பா. அதனால காலையில எழுந்தது லேட். ஸோ மகாராணி ஆபீசுக்கு லேட் என்ற சசிகாந்தனின் குரலில் இருந்த நக்கல், கோபம் நூதனாவிற்கு மனதில் கோபத்தை வரவழைத்தது.

    'மிஞ்சி மிஞ்சிப் போனா முப்பது வயசு இருக்குமா? என்னை எப்படி ஒருமையில் அழைக்கலாம்? இராகவன் சார் வயசானவர். அதனால் அவர் கூப்பிட்டா பரவாயில்ல. இவன் எப்படி?' என்று மனதிற்குள் படர்ந்த கோபம் சுள்ளென்று வார்த்தைகளாக வெளி வந்தன.

    இதுக்கு பெயர் தான் சார், தான் திருடி பிறரை நம்பாள் அப்படிங்கறது என்று வெறுப்பாக புதியவனை நேராகப் பார்த்துச் சொன்னாள்.

    நேற்று அம்மாவின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள். ஹாஸ்டலில் இருந்து தம்பியும் வீட்டுக்கு வந்திருந்தான். ரொம்ப நாள் கழித்து பார்ப்பதால் ரொம்ப நேரம் பேசிவிட்டு, அவனை ஊருக்கு வழியனுப்பிவிட்டு, வீட்டுக்கு வரும்போது, இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது.

    அதற்குப் பிறகு எப்போது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவளைப் போய் 'நைட்ஷோ, பாய் பிரண்ட் என்று சொல்கிறானே! சே என்ன மனிதன் இவன்' என்று மனதிற்குள் நினைத்தாலும் சுயபச்சாதாபத்தில் அவளையறியாமல் கண்கள் கலங்கின.

    சசிகாந்தன் உடனே "சபாஷ்! உன்

    Enjoying the preview?
    Page 1 of 1