Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pookkale Oivedungal!
Pookkale Oivedungal!
Pookkale Oivedungal!
Ebook167 pages1 hour

Pookkale Oivedungal!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அழகான தேவதை தியா. இவள் ஒரு நாள் தன்னுடைய தோழி ஷாலினியின் அக்காவின் திருமணத்திற்க்கு செல்கிறாள். அவள் தங்கி இருந்த அறையில் ஒரு நோட்டு இருந்தது. அதில் யாரோ பென்சில் ஓவியம் வரைந்திருந்தனர். அது யார் வரைந்திருப்பார்? அது என்ன வரைபடம்? என்பதை அறிய வேண்டும் என்பதற்காக குளிர் பிரதேசம் மூணாறு செல்கிறார். அது என்ன ஓவியம் அந்த வரைந்தவரை கண்டுபிடித்தாளா? மிகுந்த ஸ்வாரயம் மிக்க கதையை வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580140906954
Pookkale Oivedungal!

Read more from Lakshmi Sudha

Related to Pookkale Oivedungal!

Related ebooks

Reviews for Pookkale Oivedungal!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pookkale Oivedungal! - Lakshmi Sudha

    https://www.pustaka.co.in

    பூக்களே ஓய்வெடுங்கள்!

    Pookkale Oivedungal!

    Author:

    லட்சுமி சுதா

    Lakshmi Sudha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    வாங்க பேசலாம்!

    இந்தக் கதை எழுதும் பொழுது, விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது. கதை முடியும் வரை அவர்கள் போராட்டம் முடியவில்லை.

    வாடிய பயிரைக் கண்டு வாடிய பட்டினத்தார் பாடல் மனதை நெகிழச் செய்கிறது. ஊருக்கெல்லாம் உணவு வழங்கும் விவசாயியின் வயிறு காய்ந்து கிடக்கிறது.

    அவனுடைய வயலைப் போல் அவன் வாழ்க்கையும் வறண்டு போய் இருக்கிறது. வானம் பொய்த்துவிட்டது.

    அரசை நம்பியிருக்கிறார்கள் விவசாயிகள். அண்டை மாநிலங்களில், மணல் கொள்ளையை அடக்கிவிட்டார்கள்.

    தண்ணீர் மக்களுக்கு எல்லா நாட்களிலும் கிடைப்பதற்கு அண்டை மாநிலங்கள் எல்லா ஏற்பாடும் செய்துவிட்டன. ஆனால் தமிழகம், இன்னும் தண்ணீர் பற்றாக் குறையைச் சமாளிக்க, ஏராளமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.

    நீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலைக்கு வந்து விட்டோம். மாசு இல்லாத காற்றுக்கு ஏங்கும் நிலையில் உள்ளோம் நாம்.

    அடுத்த தலைமுறைக்குச் சுத்தமான நீரும் காற்றும் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி விடும்போல.

    நம்மால் முடிந்ததை இதற்குச் செய்யலாமே. ஷவரில் குளிக்காமல், குளிப்பதற்கு வாளியை உபயோகப்படுத்தலாமே. வெஸ்டர்ன் கழிப்பறைக்குப் பதிலாக, இந்தியன் கழிப்பறையை உபயோகப்படுத்தலாமே. குழாய்களில் கசிவு இருந்தால் அதைச் சீர்செய்து வைக்கலாமே!

    என்னுடைய நாவல்களைத் தொடர்ந்து படித்து ஆதரவு தெரிவித்து வரும் ஆதரவாளர்களுக்கு என் நன்றி.

    விமர்சனங்களை வரவேற்கிறேன்.

    அன்புடன்,

    லட்சுமி சுதா

    lakshmisudha2010@yahoo.com

    1

    நீ உன் விழிகள்

    எனும்

    தூரிகையால்

    என்

    மனம்

    எனும் வெள்ளைத்

    தாளில்

    போட்ட

    வண்ணக் கோலம்

    என்னை

    ஏதேதோ

    செய்கிறது.

    உன்

    கண்கள்

    பின்னிய

    வலையில்

    நான்

    முழுமையாகச்

    சிக்கிக் கொண்டேன்.

    என்னை விடுதலை செய்.

    டெல்லியின் குளிர் தாங்க முடியாமல், மக்கள், சாலையோரம் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தபடி இருந்தனர். வருடா வருடம் குளிர் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை... எனப் புலம்பியபடியே குளிரை எதிர் கொண்டு இருந்தனர் மக்கள்.

    டெல்லியின் சாந்தினி சவுக் அருகே உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சூடு பறக்க விவாதம் நடந்து கொண்டு இருந்தது, தியாவிற்கும், அவள் தாயார் கங்காவிற்கும்.

    நோ தியா, நீ போகக் கூடாது... கண்டிப்பாகச் சொன்னாள் கங்கா.

    மாம், இது என்ன கோர்ட்டா...? நீ என்ன ஜட்ஜ்ஜா, நீ போகக் கூடாது என்றால், போகக் கூடாதா...? நான் சென்னைக்குப் போவேன். நான் முடிவு செய்திட்டேன்... உறுதியாகச் சொன்னாள் தியா.

    தியா, இது வீடு, கோர்ட் இல்லை என்று உனக்கு நன்றாகவே தெரியும். அதனால் முட்டாள் மாதிரி உளறாதே. நீ சென்னை போவதில் எனக்குத் துளிகூட விருப்பம் இல்லை. நீ என் பேச்சை மீறக்கூடாது, ப்ளீஸ்... என்று சொல்லும் பொழுது அவள் குரல் தழுதழுத்தது.

    தியாவிற்கு அம்மாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

    அம்மா, ஸாரி. ப்ளீஸ், நீ உணர்ச்சிவசப்படாதே... என்றபடி அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் அவள்.

    தியா, உங்க அப்பா இறந்தது சென்னையில்தான். விபத்தில் அவர், அங்கே இறப்பார் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அங்கு நடந்த குண்டு வெடிப்பில், எந்தத் தப்பும் செய்யாத உன் தந்தையும் கொல்லப்பட்டார். அன்றில் இருந்து சென்னை என்ற பெயரே, எனக்கு அலர்ஜியாகிவிட்டது தியா. ப்ளீஸ், புரிந்துகொள் என்னை... என்று அழத்தொடங்கினாள் அவள்.

    அம்மா, ஸாரி. அழாதே. உன் உணர்ச்சிகள் எனக்குப் புரிகிறது. அப்பா விபத்தில் இறந்தது துரதிர்ஷ்டமே. ஆனால், அதற்காக அந்த ஊரைப் பழிக்க வேண்டாம். உன் சென்ட்டிமென்ட்ஸ் எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த வியூகத்தை நான் உடைக்க விரும்புகிறேன். சென்னை என்றவுடன் உன் மனதில் தோன்றும், இந்த எதிர்மறையான எண்ணங்கள் உடைய வேண்டும்.

    "அதற்காக மட்டும் நான் அங்கே போக விரும்பவில்லை. ஷாலினி என்னோட பெஸ்ட் பிரண்ட். அவளோட அக்கா கல்யாணம் இது. அதுக்குத்தான் அவள் நம்மை இன்வைட் செய்து இருக்கிறாள்.

    உனக்கு, அப்போ முக்கியமான கிளையண்ட் விஸிட் இருக்கு. அதனால உன்னாலே வர முடியாது. ஆனால் எனக்குப் போகணும்னு ஆசையா இருக்கும்மா. ப்ளீஸ், கல்யாணம் முடிஞ்ச பின்பு ஊரைச்சுத்திப் பார்த்துட்டு, பத்து நாளில் வந்துடுவேன்மா ப்ளீஸ், ப்ளீஸ்... என்று தாயின் கன்னத்தைப் பிடித்துக்கெஞ்சிக் கொஞ்சினாள் அவள்.

    தியாவிற்குத் தாயின் மனதை எப்படிக் கரைப்பது என்று தெரியும். சரியான டேக்டிக்ஸை உபயோகப்படுத்திக் காரியத்தைச் சாதிப்பதில் அவள் கில்லாடி.

    சரி தியா. ஆனால் பத்து நாள் ரொம்ப அதிகம்.

    அம்மா, பத்து நாள் கம்மி. எனக்கும், ஆபீஸ்ல லீவ் கிடைச்சிருக்கு. ஸோ, நீ கவலைப்படாதே. நான் டெய்லி உனக்கு மெஸேஜ் செய்வேன். அதோடு உன்னிடம் நான் பேசப்போகிறேன் தினமும். அதனால் கூலாக இரும்மா. பட் ஐ வில் மிஸ் யூ மாம்... என்று அம்மாவை அணைத்து, கன்னத்தில் முத்தம் வைத்தாள் தியா.

    ம்... சரி தியா. உன் நெருங்கிய பிரெண்ட் என்பதால் நான் இதற்குச் சம்மதிக்கிறேன். நீ தினமும் போன் செய்ய வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். தூங்க வேண்டும். பிரெண்ட்ஸோடு எப்பவும் அரட்டை அடித்துக் கொண்டு, தூக்கத்தைத் தொலைத்துக் கொள்ளாதே.

    ஓ.கே. மாம். அப்புறம் இன்னும் நிறைய அட்வைஸ் கைவசம் வெச்சிருப்பியே, டெல்லி மாதிரி இல்லை சென்னை. டிரஸ் எல்லாம் பார்த்துப் போடு, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் போடாதே. டைட்ஸ் வேண்டாம், எக்ஸெக்ட்ரா... என்று தாயின் குரலில் பேசிக்காட்டினாள் தியா...

    போடி வாயாடி, சரி, பேக்கிங் செய்துவிடு. கல்யாணத்திற்கு என்ன டிரஸ் உடுத்திக்கொள்ளப் போகிறாய்...? காக்ரா சோளியா, இல்லை லெகன்காவா...?

    அம்மா, பேக்கிங் எல்லாம் அல்மோஸ்ட் டன்.

    அடிப்பாவி, உனக்குப் பெர்மிஷனே நான் இப்பத்தான்தரேன். ஆனால் அதுக்குள்ளே பேக்கிங்கை முடிச்சிட்டியா...? உன்னை... என்று செல்லமாக முதுகில் அடிவைத்தாள்.

    ஹி... ஹி... அம்மா, நீங்க எப்படியும் ஓ.கே. சொல்லிடுவீங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனாலேதான் நான் முன்கூட்டியே பேக் செய்துவிட்டேன்.

    ம்... சரி. எல்லாம் முன்னேற்பாடோடுதான் ஜரூராக நடக்கிறது. ஷாலினி பிரெண்ட்ஸ் வேற யாரெல்லாம் வராங்க...?

    ம்... நந்திதா, அப்புறம் ஹரிணி, தென் சாதனா, எல்லாமே வராங்க அம்மா. பயங்கர ஜாலியாக இருக்கப் போகுது. வீ ஆர் ஆல் எக்ஸைட்டட் மாம்... என்றாள் உற்சாகமாக தியா.

    ம்... ஸோ, எல்லா கேர்ள்ஸும் போய் சென்னையை அதிர வைக்கப்போறீங்க. தட் இஸ் நைஸ். ஆனால் பத்திரம் தியா, ஜாக்கிரதை.

    அம்மா, கடைசியில் இதே இடத்திற்கு வருவதைக் கவனித்தாள் தியா. அம்மாவைப் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

    அம்மா தன் மேல் கொண்டுள்ள அதீத அன்புதான் இதற்குக் காரணம் என்று அவளுக்குப் புரிந்தது. அப்பா இறக்கும் பொழுது எனக்கு வயது பத்து. அந்தப் பேரிடியில் இருந்து எப்படியோ சமாளித்து மீண்டும் எழுந்து வந்துவிட்டோம். அதற்குக் காரணம் அம்மாவின் உழைப்பும், இந்த நகரமும்தான்.

    அம்மா தனி ஒருத்தியாகத் தன்னை வளர்ப்பதற்கு எவ்வளவு சிரமமப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கும் பொழுது அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது.

    இந்தத் தைரியமும், வைராக்கியமும் எப்படி அம்மாவுக்கு வந்தது என்று அவள் பல முறை தனக்குத் தானே ஆச்சரியப்படுவதுண்டு.

    சூழ்நிலைதான் இதற்குக் காரணமா...? வேறு வழி ஏதும் இல்லை என்று தள்ளப்படும் நிலை வரும் பொழுது, மெல்ல மெல்ல அங்கு இருந்து வேறு இடத்திற்குப் பறந்து செல்லும் பறவைபோல் அம்மா மாறிவிட்டாள் போல, எனத் தனக்குத்தானே யோசித்தபடி இருந்தாள் அவள்.

    இன்னிக்கு ஆபீஸ் போறதானே தியா...? என்ற தாயின் குரல், அவளை மீண்டும் உலகிற்கு அழைத்து வந்தது.

    யெஸ் அம்மா. போறேன்.

    சரி, லஞ்ச், சப்பாத்தி, டால் ஓ.கே.வா...?

    ம்... உன் கையால் எது கொடுத்தாலும் டபுள் ஓ.கே... என்று சமையல் அறை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

    போதும் போதும் உன் ஐஸ். சென்னைக்குப் போகத்தான் ஓ.கே. சொல்லிட்டேனே, அப்புறம் எதுக்கு அநாவசியமா ஐஸ்...? என்று பொய்யாகக் கோபப்பட்டாள் அவள் தாய்.

    ஐஸ் இல்லை, நான் சொல்வதெல்லாம் உண்மை... என்றாள் நாடகப் பாணியில் தியா.

    "ம்...

    Enjoying the preview?
    Page 1 of 1